About Me

2015/08/25

முகநூல்



உணர்வு தொட்டு
உளம் வருடும் நட்புக்கு ஆயுள் அதிகம்....
------------------------------------------------------------------------------------

வானம் மஞ்சளை அப்பிக் கொண்டிருக்கும் மாலை நேரம்...
சற்று சூடான ஈரக் காற்றில்
ஷாம்பூ தேய்த்து குளித்த கூந்தலை...
சற்று காய வைத்து
தன் மடியில் கிடத்தி உலர்த்தும் அன்னையின் அன்பு...
சின்ன வயதின் பூரிப்பான ஞாபகங்கள்....

------------------------------------------------------------------------------------

எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தெரிந்தவர்கள்.
.வாழ்க்கையின் தடைகளை வெற்றி கொள்கின்றார்கள்.........

------------------------------------------------------------------------------------

அடுத்த நிமிடத்தை பற்றி நினைக்கும்போது....
இந்த நிமிடத்தின் சந்தோஷம் தொலைந்து விடுகின்றது....
------------------------------------------------------------------------------------

பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போதல்
தோல்விகளுக்கான வரவேற்புரை....
----------------------------------------------------------------------------------
ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட, அது தவறிப் போகும் போதுதான் அதன் மதிப்பை நாம் உணர்கின்றோம்.....வலி கொள்கின்றோம்....
------------------------------------------------------------------------------------

வியர்வைக் குளியலோடு..
கொஞ்சம் வயிற்றை நிரப்பும் சில்லறைகளுக்காய்..
போராடி உழைப்போரைப் பார்க்கும்போதுதான்..
வீணாகச் செலவழியும் பணத்தின் அருமை புரிகின்றது.....
----------------------------------------------------------------------------------------------------------------


வானத்தில்.....
ஆங்காங்கு கருந் திட்டுக்களாய் மேகங்கள்..
யன்னலோரம்
உரசி வரும் காற்றில்
லேசா ஈரம்....
ஓஓ...
அதனால்தான்
உடம்பும் மனசும் இதமாக இருக்கின்றதோ...
பயணம் தொடர்கின்றது....


No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!