About Me

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

2021/04/29

கார்கால வானம்

வறண்ட பூமி வரைந்த பிளவுகள்

வறுமைக்  கீறலாய் வாழ்வைச் சிதைக்கையில்

கார்கால வானம் களித்ததே மழையாகி

வயலின் பசுமை வனப்பாகி பூக்கையில் 

இதயமும் மகிழ்ந்ததே இயற்கையின் அழகில்


ஜன்ஸி கபூர் - 29.04.2021

புதிய விடியல்

அடி வானின் 

            அழகின் உதயம் 

படிகின்றது மனதில் 

              பரவசப் பேரொளியாக 


விடிகின்ற பொழுது 

            விரிக்கின்ற நம்பிக்கைகள் 

மடி தவழ்கின்றன 

           மகிழ்வையும் ஏந்தியபடி 


இரவு கரைந்து 

           இரக்கத்தின் ஊற்றாகி 

வற்றிய வாழ்வும் 

          வசந்தமாகப் பூக்கட்டும் 


தொற்றின் தொல்லை 

          தொலைவில் கலைந்தே 

பற்றாகட்டும் ஆரோக்கியம் 

           பரவசம் நமதாக 


வியர்வையின் விளைச்சலால் 

           விமோசனம் வரலாறாக 

துயரின் நிழலுக்குள் 

           துளிர்க்கட்டும் மகிழ்வும் 


பகைமைகள் மறந்த 

         பண்பான உறவுகளின் 

புன்னகை தேசத்தில் 

         புலரட்டும் விடியல் 


ஜன்ஸி கபூர் - 29.04.2021