வறண்ட பூமி வரைந்த பிளவுகள்
வறுமைக் கீறலாய் வாழ்வைச் சிதைக்கையில்
கார்கால வானம் களித்ததே மழையாகி
வயலின் பசுமை வனப்பாகி பூக்கையில்
இதயமும் மகிழ்ந்ததே இயற்கையின் அழகில்
ஜன்ஸி கபூர் - 29.04.2021
வறண்ட பூமி வரைந்த பிளவுகள்
வறுமைக் கீறலாய் வாழ்வைச் சிதைக்கையில்
கார்கால வானம் களித்ததே மழையாகி
வயலின் பசுமை வனப்பாகி பூக்கையில்
இதயமும் மகிழ்ந்ததே இயற்கையின் அழகில்
ஜன்ஸி கபூர் - 29.04.2021
அடி வானின்
அழகின் உதயம்
படிகின்றது மனதில்
பரவசப் பேரொளியாக
விடிகின்ற பொழுது
விரிக்கின்ற நம்பிக்கைகள்
மடி தவழ்கின்றன
மகிழ்வையும் ஏந்தியபடி
இரவு கரைந்து
இரக்கத்தின் ஊற்றாகி
வற்றிய வாழ்வும்
வசந்தமாகப் பூக்கட்டும்
தொற்றின் தொல்லை
தொலைவில் கலைந்தே
பற்றாகட்டும் ஆரோக்கியம்
பரவசம் நமதாக
வியர்வையின் விளைச்சலால்
விமோசனம் வரலாறாக
துயரின் நிழலுக்குள்
துளிர்க்கட்டும் மகிழ்வும்
பகைமைகள் மறந்த
பண்பான உறவுகளின்
புன்னகை தேசத்தில்
புலரட்டும் விடியல்
ஜன்ஸி கபூர் - 29.04.2021