About Me

Showing posts with label குறுங்கவிதை. Show all posts
Showing posts with label குறுங்கவிதை. Show all posts

2021/05/16

வாசிப்பை நேசிப்போம்


நவீனத்தின் தேடலுக்குள் நகரும் வாழ்வில் 

அறிவின் மொழி நல்ல புத்தகங்களே 

வாசிப்பை நேசிப்போம் சிந்தனையை மேம்படுத்த 

ஓய்வின் மணித் துளிகளில் மலர்கின்ற 

ஓப்பற்ற ஆற்றல்களால் வளமாகட்டும் வாழ்க்கையும் 

- ஜன்ஸி கபூர் - 16.5.2021

காஸா

 

வெடி குண்டுகள் சுவைக்கின்ற காஸாவின் இரத்தத்துளிகள்/

நம் இருதயத்தின் துடிப்புக்களிலும் உறைந்து நிற்கின்றதே இப்போது/

விடியல் தொடாத மேகங்களை/

உரசுகின்ற தீ உமிழும் விமானங்கள்/

விளையாடுகின்றன இங்கே மனித வாழ்வோடு!

இடிபாடுகளில் முணங்குகின்ற மூச்சுக்கள்/

தேடுகின்றன மனிதங்களை!

வழிந்தோடும் நீரும் அழித்திடுமோ/

அங்கு தெறிக்கின்ற அவலங்களின் வலிதனை!


ஜன்ஸி கபூர் - 16.5.2021


2021/05/01

உழைப்பு.

 


உழைக்கும் கரங்கள்

உயர்வின் உரங்கள்

வாழ்வும் செழிக்க

வாழ்வோம் உழைத்தே

ஜன்ஸி கபூர் - 01.05.2021


ஐந்தறிவும் அன்பால்

 


சொல்லும் கேட்கும் ஐந்தறிவும் அன்பால்
துள்ளும் கன்றும் உணர்வை வருடுமே
அள்ளும் விழிகளின் அழகை மறந்தே
கொல்லும் மானிடர் வதைத்தே புசிப்பினும்
வெல்லும் காருண்யம் மாக்களும் நலமாக

ஜன்ஸி கபூர் - 01.05.2021


2021/04/30

உழைப்பின் மகிமை

 


 தொழிலாளர் சிந்துகின்ற வியர்வைத் துளிகள்

வழியும் செல்வங்களாக நாட்டின் அபிவிருத்தியில்

ஆற்றலும் அர்ப்பணிப்பும் முயற்சியும் வலியும்

குவிக்கும் வெற்றிகளால் உழைப்பும் பெருமையுற

வையகத்தில் புகழும்  என்றும் ஓங்கும்


ஜன்ஸி கபூர் - 30.04.2021

2021/04/24

பொறாமை

 


பொறாமை எண்ணம்//

பெருமையைக் கொல்லும்//

சிறுமையும் தந்தே//

நம்மையே வருத்தும்//


ஜன்ஸி கபூர் - 24.04.2021


2021/04/22

தாயும் கன்றும்

 கட்டிய கயிற்றை அவிழ்த்தே கன்றும்

ஒட்டியும் உறவாடி ஒன்றுக்கொன்று மகிழுதே 

முட்டியே மோதி முற்றத்தில் விளையாடுகையில்/

கிட்டிடும் அன்பினை கண்களால் ரசித்திட/

எட்டிடும் தூரத்திலே தாயது இல்லையே/ 


ஜன்ஸி கபூர்  

கல்வியே சிறப்பு


ல்வி கற்கையில் எதிர்காலம் பலமே/
ந்ததி தோறும் ஆரோக்கிய சுகமே/
பட்ங்கள் பதவிகள் நமது அடையாளம்/
ரணியும் வாழ்த்துமே நமது புகழை/  
ணிவுடன் சேரும் அறிவே அழகு/
ஆற்லும் வளர்த்தே வாழ்வினில் சிறப்போம்/

ஜன்ஸி கபூர்  

கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?

  

 
ரும்பின் சுவையில் இனித்திடுவார் நல்லோர்
பெருமனதோடு நற்காரியங்களையும் ஆற்றுவார் சிறப்பாக
அன்பினைப் பிழிந்தும் ஊற்றுவார் அமிர்தமாக
இனிப்பான இன்பத்தினைச் சுவைத்திடச் செய்வார்
கனிவான மாந்தர் தருகின்ற நட்புக்கும்
விலையும் உண்டோ இவ்வையக வாழ்வினில் 

ஓட்டுரிமை

நல்லாட்சி விதைத்திட நாமேந்தும் ஆயுதமே/
நல்லவர்கள் நாடாள நாமிடும் அங்கீகாரமே/

தொட்டதுமே பதினெட்டை வந்துவிடுமே அடையாளம்/
தெரிவுக்கான உரிமைக்காக உறவாவார் பலருமே/

சிந்தித்தே இடும் வாக்குப் பலத்தில்/
விரல்களும் எழுதிடுமே புரட்சி மாற்றங்களையே/

ஜன்ஸி கபூர் 

2021/04/11

காத்திருப்பு

 


உஷ்ணம்...!🌞🌞🌞

கஷ்டம் கொடுக்கவில்லை போலும்!!

கொந்தளிக்கும் கடற்கரையோரத்திலும்

முளைத்திருக்கின்றன குடைகள்☂☂☂ 

காதலுடன்....🧡🧡🧡

-ஜன்ஸி கபூர் -11.04.2021 -

2020/11/03

பூஞ்சோலை


செவ்விதழ் விரித்தே 

.......செதுக்கும் குரலினில்/

சொக்கித்தான் போனேனே 

......என்றன் சோலைக்கிளியே/


பக்கத்தில் உனையிருத்தி 

........வாழ்கின்ற வாழ்வினில்/

தினமும் காதல் 

........வாசம் வீசுதே/


ஜன்ஸி கபூர் - 7.11.2020

------------------------------
இணைக்கின்றேன் அன்பே உன்னை வாழ்வில்
இதயத்தில் மகிழ்வேற்றி உலாவுகின்றேன் நிதம்
இன்னலும் தடைகளும் புயலென மோதுகையில்
வலிக்குள் மூழ்காமல் காக்கின்றாய் என்னையே

ஜன்ஸி கபூர் - 13.11.2020
-------------------------------------------------------------- 

5.  நினைவெல்லாம் நீயே
************************** 
காலம் ஓடிக்கொண்டேதான் இன்னும் இருக்கின்றது/
ஆனால் நீயோ என்னிலிருந்து தொலைவாகின்றாய்/

தினமும் உன்னை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்/
விரல்களால் என் கண்களைக் குத்துகின்றாய்/

வலிதான என் வலி புரிந்துமா/ 
மௌன முடிச்சுக்குள் ஒளிந்து கொள்கின்றாய்/

தவிப்புக்கள் நீள்கின்றன உனை நோக்கியதாக/
நீயோ தரிசனப் பாதைகளை மறைக்கின்றாய்/

என் கண்ணீரும் தீண்டாமல் காக்கின்றேன்/
விழிக்குள் விம்பமாக மலர்ந்திருக்கின்ற உன்னை/

இருந்தும் காத்திருக்கின்றேன் நீ வருவாயென/
உனதான நினைவுகளைப் பத்திரமாகச் சேமித்தபடி/

ஜன்ஸி கபூர் - 14.11.2020
-------------------------------------------------------- 
6. பண்பாட்டு வாழ்க்கை
***********************
பண்போடு வாழ்ந்திடும் வாழ்வில் என்றுமே/
இன்பமே பெருகும் மனமது மகிழும்/
உறவும் ஊரும் இணைந்தே வாழ்த்தும்/
வரலாறும் நம்மை இணைத்தே பேசும்/

ஜன்ஸி கபூர் - 16.11.2020
-------------------------------------------------------- 




நம்பிக்கை வாழ்வு
-------------------------
நம்பிக்கை கொள்வோர் வாழ்வில் தோற்கார்/
தெம்புடனே ஏற்பார் வாழ்வியல் போராட்டங்களை/
துன்பமும் தடைகளும் தகர்த்தே வெல்வார்/
அன்பும் அறமும் கொண்டே வாழ்ந்திடுவார்/
ஜன்ஸி கபூர்
----------------------------------------------------------------------------------


Azka Sathath
வாழ்ந்திடுவார் என்றுமே சுக வாழ்வினை//
செய்திடுவார் நற் செயல்கள் பல//
வென்றிடுவார் இலக்கு வழிப் பயணங்களை//
கண்டிடுவார் தினம் அன்பான உறவுகளை//
அஸ்கா சதாத்
--------------------------------------------------------------------------------------------------------


2020/10/09

Azka Poem

 தாய் பாடும் தாலாட்டில்

சேய் தூங்கி போவது போல்

பொய் பாடும் தாலாட்டில்

மெய் தூங்கி போகிறதே

வேருரிஞ்சும் நீராலே

மரம் செழித்து நிற்பது போல்

உழைப்பாளி வியர்வையால்

முதலாளி வளர்கிறார்

அறியாமையில் ஆழ்ந்து

தூங்கியது போதும்

துயரைத் துடைக்க

Azka - 09.10.2020




tsul;Lk; xU ey;;y Njrk;

   J}a;ik NgZk; xU tsk;

ey;yij NgRk; jha; kf;fs;

   Kfj;jpy; re;Njhrk; nghope;J kyul;Lk;

Azka-2020.11.01

2020/10/02

பூக்கள் விடும் கண்ணீர்

 

இயற்கை மடியினில் தவழ்கின்ற பூக்களின்

இறகினைக் கொய்திடுவார் இதயம் அற்றோர்

பசுமைக்குள் தீயினை ஊற்றும் மாந்தர்

பறித்திடுவார் மகரந்த உயிர்ப்பினைப் பாரினில்

சூழல் மாசுக்குள் ஊறிடும் மலர்கள்

சூடுதே கண்ணீரை தன் அழிவுக்காக


ஜன்ஸி கபூர் - 02.10.2020

-----------------------------------------------------------------------

2. உறவுகளோடு உரையாடுவோம்

---------------------------------------------------------

இதயத்தின் உணர்வுகள் உதயமாகும் உறவினில்/

இன்பமும் படர்ந்திடும் இன்னலைத் துரத்தியே/


இயந்திர மொழியினில்  வேண்டாமே தனிமையும்/

இழைந்தோடித் தழுவட்டும் அன்பான சொல்லாடல்/


பேசிடும் வார்த்தைகள் நீக்குமே பேதத்தை/

பேணுவோம் உறவுகளை மகிழ்ந்திடலாம் உரையாடி/


ஜன்ஸி கபூர் - 07.10.2020


-------------------------------------------------------------------
3. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கும் அனுபவம்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020

---------------------------------------------------------
4. தமிழை அரங்கேற்று தமிழா
----------------------------------------------------
நாவும் மொழிந்திடும் இனிமைத் தமிழை/
நானிலம் போற்ற அரங்கேற்று தமிழா/

சுருங்கிடும் உலகின் உணர்வின் வழியாக/
வருங்காலம் ஏந்தவே செதுக்கிடுவோம் அழகாக/

தாய்மையை மதிக்கும் பண்பாட்டின் சுவடாய்/
வாயும் உதிர்க்கட்டும் செந்தமிழைத் தினமும்/

ஜன்ஸி கபூர் - 08.10.2020



----------------------------------------------------------------------- 

5. கனவிலும் கவி பாடு
--------------------------------- 
கனவிலும் கவி பாடு நிதமும்/
கற்பனைச் சுவையுடன் யதார்த்தமும் பிசைந்தே/

சொற்களை அழகில் கோர்த்தே தினம்/
வடித்திடு கவிதனை வனப்பை ரசித்திடு/

தூரிகை நீயேந்தி துடித்திடும் உணர்வால்/
உயிர்த்திடு உலகமும் விரும்பிச் சுவைத்திட/

ஜன்ஸி கபூர் - 13.10.2020


------------------------------------------------------------------------------------- 
6. தாயே தெய்வம்
------------------------------
பத்துத் திங்கள்  பக்குவம் காத்து/
பண்பான வாழ்வுதனைக் கற்றும் தந்து/

பாசம்தனை தினமும் உறவிலே கோர்த்து/
உயிரினைப் போர்வையாக்கி 
 உள்ளத்தைத் தொட்டிலாக்கி/

உணர்வுக்குள் வலியினை மெல்ல உறிஞ்சும்/
உன்னத தாயே அன்பின் தெய்வம்/

ஜன்ஸி கபூர் - 15.10.2020

------------------------------------------------------------- 
7. வானம் எழுதிய கவிதை
-----------------------------------------
வெம்மையும் கிழித்ததே
.......... தரையினில் கோடுகள்/
வெந்ததே வாழ்வும்
.......... பஞ்சத்தின் கோரத்தில்/
புண்பட்ட மனங்களில்
........... இன்பத்தினை வார்க்கவே/
விண்ணெங்கும் பூத்ததே
............ கார்மேகப் பூக்களும்/
எண்ணமும் சிலிர்த்திட
.......... பொழிந்ததே பூமழை/
இரசித்தேனே நானும்
........... மழைக் கவிதையை /

ஜன்ஸி கபூர் - 16.10.2020


--------------------------------------------------------------------------------- 
8. பிணைத்திடும் வாழ்க்கை இணைந்திடும் இறுதிவரை

ஜன்ஸி கபூர் - 20.10.2020


--------------------------------------------------------------------------- 

9. ஓயாத மரணங்கள்
---------------------------------
மரணச் சுழற்சிக்குள்
..........மண்டியிடுகின்றன உயிர்கள்/
பிணிக்குள் தேகம்
.........பிணைக்கின்றதே இழப்புக்களில்/

விபத்தும் அனர்த்தமென்றும்
...........விளையாடுகின்றதே விதியும்/
கொலையும் தற்கொலையும்
..........கொல்கின்றதே நேயத்தினையும்/

கலப்பட உணவும்
..........கலக்கமே ஆரோக்கியத்திற்கே/
ஓலமிடும் இறப்புக்கள்
...........ஓயாது தொடர்கின்றனவே/

ஜன்ஸி கபூர் - 21.10.2020

  

--------------------------------------------------------- 
10. நிம்மதி தேடும் மனிதர்கள்
------------------------------------------------
சுருங்குகின்ற வாழ்வில் 
.......விருப்பங்களோ மலைபோல்/
சுகமிழக்கும் உழைப்பு 
.......சுமையோ உடலுக்கே/

உலக மாற்றங்கள் 
.......சுழற்றும் தேவைகள்/
உணர்வுகளுக்கு வலியே 
......உளத்திற்கேது அமைதி/

நவீனத் தேடலின் 
.......நாகரிக வாழ்க்கையில்/
நனைந்திடத் துடிக்கையில் 
......நிம்மதியும் தொலைகிறதே/

ஜன்ஸி கபூர் - 26.10.2020

  
-----------------------------------------------------------
 
11.கொஞ்சும் காதல்
-------------------------------
நெஞ்சத்து அன்பில் கொஞ்சும் காதல்/
அஞ்சாதே வாழ ஆருயிர் தழுவி/
ஆசைகள் வருடும் கனவின் விரல்களை/
அணைக்கின்றேன் தினமும் இனிக்கின்றாய் நினைவாக/

எனை ரசித்தே நீயிடும் திரை/
எழில் வதனம் மையிடும் நாணமாக/ 
கட்டிக்கரும்பே உன்றன் புன்னகையும் அமிர்தமே/
வெட்கப்படும் கண்கள் மின்னுதே மின்னலாக/
 
உணர்வுகள் துடிக்கின்ற இளமைப் பருவம்/
உறவாக்க நினைக்குதே மெய்க்காதல் பண்பினாலே/  

ஜன்ஸி கபூர் - 27.10.2020



--------------------------------------------------------------- 
12.கவிதைக்கு உயிர் கொடுப்போம்
-----------------------------------------------------------
விழிகள் காணுகின்ற  
........யதார்த்தங்களை இணைத்தே/
அழகான எண்ணங்களை 
.......அதில்ப் பிசைந்து/

வழிகின்ற கற்பனைகளால் 
.......அழகினைக் கோர்த்து/
வடிக்கின்ற கருவை 
........உயிர்க்குமே விரல்கள்/

பிறந்திடும் கவியும் 
.......பறந்திடும் உலகில்/
சிறந்த வாழ்வின் 
.......பிம்பமாகி வருடுமே/

ஜன்ஸி கபூர் - 27.10.2020




------------------------------------------------------------------------------------------
13.சோகமான சுமைகள்
-------------------------------------
உருளும் வாழ்வில் 
........உறவுகளின் இழப்புக்கள்/
உணர்வின் வலியே 
.......உள்ளத்தின் சுமையாகும்/

கொரோனாத் தொற்றும் 
........கொல்லுதே வாழ்வை/
கொடூர வறுமையின் 
.........கொடுமையும் தாக்குதே/

வாழ்க்கைப் போராட்டங்கள் 
........சந்திக்கும் சுமைகள்/
விரட்டாதே சோகங்களை 
.......நீளுகின்ற பொழுதுகளில்/

ஜன்ஸி கபூர் - 28.10.2020




--------------------------------------------------------------------------------------------------
14. இணைக்கும் உறவுகள்
----------------------------------------
அணைப்பார் பெற்றவர்
............அன்பால் உவந்தே/
பிணைப்பார் கரங்களை
...........உடன்பிறந்தோரும் கனிந்து/
துணைக்கும் வருவார்
...........நட்பினரும் நிழல்போல்/
பிணக்கும் கொள்ளா
...........சுற்றமும் ஊரும்/
முரண்களைக் கலைத்தே
............தாங்கிடுவார் தூண்களாகி/
இணைக்கும் உறவுகளால்
............இனித்திடுமே வாழ்வும்/

ஜன்ஸி கபூர் - 29.10.2020 

--------------------------------------------- 
15. வீழ்ந்தாலும் கலங்காதே 
------------------------------------------- 
வீழ்ந்தாலும் கலங்காதே  
..........விதியென்றே நினைக்காதே/
வீழ்கின்ற பொழுதெல்லாம் 
..........எழுதலே உந்தலாம்/

வாழ்க்கைத் தளத்தில் 
...........ஏற்றமும் இறக்கமும்/
வாழ்வியல் நெறிதானே 
.........உணர்ந்தவர் வென்றிடுவார்/

வீழ்கின்ற பொழுதெல்லாம் 
.........ஊக்கமே உயர்வாம்/
எழுந்திடும் முயற்சியே 
.........ஏற்றத்தின் சுவடாம்/
 
ஜன்ஸி கபூர் - 30.10.2020









2020/09/21

சிசுக்கொலை

பெண்ணழிப்பும் பெருஞ்சாபமே மானுட வாழ்விலே/

இன்னுயிர் அழித்திடும் இழி செயலதே/

கற்ற கல்வியும் சுவீகரித்த நாகரிகமும்/

கள்ளிப்பால் பிழிந் தூற்றுகின்ற கலியுலகில்/

அழுகின்றதே விழி திறக்காத சிசுவும்/

பழி வேண்டாமே காத்திடுவோம் பெண்மையினை/


ஜன்ஸி கபூர் - 21.09.2020




 


2020/09/19

முயற்சியின் வெற்றி

 

 பழமொழி - எறும்பூரக் கல்லும் தேயும்

----------------------------------------------------------- 

துல்லிய கண்கள் எண்ணியதைச் செய்யும்/

துலங்கும் சுறுசுறுப்பு இலக்கினை நோக்கும்/


வலிதான கல்லும் பலம் குன்றுமே/

நுண்ணிய எறும்பின் முயற்சியும் வெல்லுமே/

   

ஒற்றுமை இறுக்கத்தில் ஒழியும் தொல்லையே/

கற்கலாம் பாடங்கள் வாழ்வின் வெற்றிக்கே/


ஜன்ஸி கபூர் - 19.09.20





கண்ணீர்

 


கவலையின் வலி/

கண்ணீரில் கரைகின்றதே/

வஞ்சியரின் நெஞ்சத்து அழுகை/

கொஞ்சம் அழகுதான்/


ஜன்ஸி கபூர்  





2020/09/18

அன்பின் ஆளுகை

 

மாற்றம் செய்தால் பழமைக்குள் புதுமையே/

ஏற்ற வாழ்வுக்குள் சுற்றிடுமே நம்முலகும்/

சீற்றம் காணாத இயற்கையைக் காத்திடவே/

சுற்றத்தின் கரங்களை பற்றுவோம் வலுவோடு/

ஆற்றலுடன் பிணைந்த அன்பின் ஆளுகையால்/

அவனிக்குள் நாமும் சாதனைகளை நிகழ்த்தலாமே/


ஜன்ஸி கபூர்  





2020/09/17

கல்லறையின் ஈரலிப்பில்

 கவிதாஞ்சலி வடிக்கையில் வழிகின்றதே கண்ணீரும்

கலங்கிய விழிகளின் ஈரலிப்பில் கல்லறையும்

உயிர்த்திடுமோ அன்பின் நினைவுகளையும் சுமந்தே

உணர்வும் துடிக்கின்றதே ஆத்மா சாந்திக்காக


ஜன்ஸி கபூர் - 17.09.20




மாட்டுவண்டிப் பயணம்

மாட்டுவண்டிப் பயணம்
-------------------------------------------

 அழகிய கிராமத்தின் ஆனந்தச் சுவடுகளில்/

அலைகின்றதே மாட்டுவண்டிப் பயணமும் பரவசத்தில்/

துள்ளுகின்ற மனங்களும் வண்டியோட்டத்தில் இசைய/

தூவுகின்ற புன்னகைகள்  இயற்கைக்கும் அழகே/


ஜன்ஸி கபூர் - 17.09.2020