About Me

Showing posts with label தரிசனம். Show all posts
Showing posts with label தரிசனம். Show all posts

2021/05/26

மனசு

 

,d;W ……….25.05.2021

ah]; Gay; fle;J nrd;whYk;$l ,d;Dk; nfhQ;rk; mjpu;T fhzg;gLfpd;wJ. Fspu;e;j fhw;W Njhypd; cNuhkf; fz;fSf;fpilapy; GFe;J tpj;jpahrkhd czu;Tld; tPl;bd; gpd;Gwk; fhzg;gLfpd;w kur;Nrhiyf;Fs; nrd;W mku;e;Njd;.

nkypjhd Gd;difAld; vidg; ghu;j;Jf; nfhz;bUe;j rpd;dr;rpd;dg; G+f;fs; gw;wpa urid kdij tUbf; nfhz;bUe;jJ.

vdJ jhahUk; gf;fj;jpy; te;jku;e;jhu;.

ePz;l ehl;fspd; gpd;du; kdk; tpl;L jhahUld; epiwaf; fijj;Njd;. mk;kh MtYld; $wpa mtupd; fle;j fhy epidtiyfis vd;dhy; urpf;f Kbe;jJ.

,j;jidf;Fk; fhuzk; ........................

kdRjhd;!

vg;Ngh ghu;j;jhYk; Ntiy Ntiy vd Vjhtnjhd;iwr; Rw;wp jdpikf;Fs; RUz;L ,oe;j me;j mikjpahd moif kdJ ,g;NghJjhd; nfhQ;rk; czu;e;jNjh.

,Uz;Lk; ePz;l Neukhf me;j ,aw;ifapd; ,dpikahd czu;it ,d;W ehd; urpj;jjpy; kdk; kfpo;r;rpahf ,Ug;gij czu;fpd;Nwd;.

[d;]p fG+u; -


2021/05/14

மன(ரத்)தின் வலி

 

இந்த மரத்திற்குள்ளும் வலி இருக்கின்றது. அந்த வலியினை என் உணர்வுகளால் உள்வாங்கியதால் அதனை இங்கு பகிர்கின்றேன்.

அன்று...........வைகாசி............முதல் வாரத்தின் ஞாயிற்றுக்கிழமை

வீட்டின் கொல்லைப்புற நுழைவாயிலில், இந்த ஐந்து வருட தென்னை மரம் வரவேற்பாளர்போல காற்றில் அசைந்து கொண்டிருக்கும். திடீரென ஒரு நாள் அந்த மரத்தின் அருகில் குளவிக் கூடொன்று தொங்குவதைக் கண்டேன். அது சற்று பெருத்துக் காணப்பட்டதால், அம்மரத்தைக் கடக்கும்போதெல்லாம் குளவி பற்றிய கிலி பற்றிப் பிடித்துக் கொள்ளும்.

இப்போதுள்ள பிரச்சினை அக்குளவிக் கூட்டைக் கலைப்பது எப்படி?

ஒருவாறு இப்பிரச்சினைக்கான தீர்வாக பக்கத்து வீட்டு ஐயாவைத் தெரிவு செய்தோம். அவர்தான் எங்கள் வீட்டு சிறு சிறு தோட்ட வேலைகள் செய்து தருவார்.  அதற்கேற்ற கூலியைக் கொடுப்போம். 

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எங்க வாப்பா அவர் மூலமாகத்தான் அந்தத் தென்னை மரத்தை அவ்விடத்தில் நட்டியிருந்தார். 

அந்த ஐயா குடிகாரர் என்பதால் வேலைக்கு அவராக வரும்வரை  காத்திருப்போம்.

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அந்த ஐயா குளவிக்கூடு உடைப்பதாக அன்றுதான் வந்திருந்தார்.  குளவிக்கூடெல்லாம் மாலையில்தான் கலைக்க வேண்டும் என்ற தோரணையில் ஆறு மணிக்கு பந்தத்துடன் ஆயத்தமாக வந்திருந்தார்.  

ஆனாலும் அவரிடம் சாராய நொடி வீசவே வேண்டாம் என்றோம்.

ஆனாலும் அவர் வலுக்கட்டாயமாக குளவிக் கூட்டை கலைக்கின்ற வேலையில் இறங்கினார்.

உயரமான தென்னை மரத்திலுள்ள குளவிக்கூடினை விரட்ட சிறு தடியினுள் தனது புது சேர்ட்டை சுற்றிக் கட்டியிருந்தார்.

"ஐயோ.........ஐயா.! இது உங்க புது சேர்ட் போல இருக்கு. கழற்றுங்கோ. உங்க மனுசி கண்டா எங்களைத்தான் ஏசுவா"

என்றவாறு பழைய துணி கொடுத்தோம். அதனைக் கழற்றி விட்டு நாங்கள் கொடுத்த தடியில் புதுத் துணியைச் சுற்றிக்கட்டி எரியூற்றினார்.

மெது மெதுவாக மரத்தை நோக்கி தீப்பந்தம் ஏற்றிய அவர் கைகள் உயர்ந்தபோது, 

குளவியும் கலையும் எனும் பீதியில் நாங்கள் மறைந்து கொண்டோம்.

சில நிமிடங்கள் சென்றன. ஆனால் குளவிகள் வெளியே பறப்பதாகக் தெரியவில்லை.

குளவிக்கூடு தொங்கிக் கொண்டிருக்கின்ற மரத்தை அண்ணார்ந்து பார்த்தேன்.

காற்றில் குளவிக்கூடு இன்னும் அசைந்து கொண்டுதான் இருந்தது. 

ஆனாலும் தென்னை மரத்தின் உச்சிப் பகுதியில் வேகமாக தீப்பந்தம் பரவிக் கொண்டிருந்தது.

"ஐயோ தென்னை மரம் எரியுதே ஐயா"     கத்தினேன்

சிரித்தார். 

"இல்ல ரீச்சர். அந்த நெருப்பில குளவி கலைஞ்சிடும்"

 என்றார் பொறுமையாக.

எனக்குள் ஆத்திரம் தலைக்கேறியது 

"தென்னை மரம் பற்றி எரியுது. உங்களுக்கு தெரியவில்லையா. முதலில் தண்ணீரை ஊற்றி அணையுங்கோ." 

எனது சப்தம் கேட்டு மச்சானும் அந்த இடத்திற்கு வரவே,

பெரிய போராட்டத்தின் பின்னர் நீர் ஊற்றி மரத்தின் தீயை அணைத்தோம். தீயில் தென்னை மரம் உஷ்ணமேறிய அந்த அரை மணித்தியாலம் எனக்குள் உயிர் பறிபோன உணர்வு.

இழப்புக்கள்தானே இருப்பின் அருமையை உணர்த்துகின்றன.

இன்னும் முதல் காயே அறுவடை செய்யப்படாத அந்த தென்னை மரம், தீப்பற்றி எரிகையில் நானே எரிவதைப் போன்ற உணர்வு. மனது முழுதும் வலி நிரம்பிக் காணப்பட்டது. தீக்காயங்களுடன் கீழே விழுந்த குறும்பைகளைக் கண்டதும் ஏதோ ஒரு வலி. வேதனையுடன் பொறுக்கிக் கொண்டேன்.

நல்லவேளை மரம் பெரியளவில் சேதப்படவில்லை. ஆனாலும் அதனின் தாக்கம் எதிர்காலத்தில்தான் வெளிப்படும்.

தீயுடன் தென்னை மரம் போராடிய அந்தக் கணங்கள் இன்னும் என்னுள் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


இணைந்த கரங்கள்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பார்கள். 

உண்மையில் ஒவ்வொரு ஆசானும் தான் உருவாக்குகின்ற மாணவர்களின் உயர்வான முன்னேற்றம் கண்டு தனக்குள் பெருமை கொள்கின்ற தாய்மைக் குணத்தை தமது  உணர்வுக்குள் தேக்கி வைத்திருக்கின்றார்கள்   என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இச்சம்பவம் முகநூல் வாயிலாக அறியக் கிடைத்த விடயம். இச்சம்பவக் கருவினை எனது பார்வையில் பதிவிட்டுள்ளேன்.  

அது......

கேரளா மல்லாபுரம் புகையிரத நிலையம்.

பரபரப்பு மிக்க அந்த பொழுதொன்றில் அவளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றாள். எதிரே வயதானவர் ஒருவர் அவள் கவனத்தை சற்றுக் கலைக்க நிதானித்து நிற்கின்றாள்.

'அம்மா...தாயீ...ஏதாவது ...தாம்மா...பசிக்குது'

அந்தக் குரல் எங்கோ........எப்போதோ கேட்ட குரல்...

யோசித்தாள். தனது கணித ஆசிரியையின் சாயல். தனது கணித ஆசிரியர் இரயில் நிலையத்தின் அருகே பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை அவளால் நம்ப முடியவில்லை.

அவரா....

இருக்காது. அந்த அன்பும் நொடிப் பொழுதில் தோன்றி மறைந்தது.

அந்தக் குழப்பம் வீடுவரை தொடர்ந்தது.

வீட்டுக்குச் சென்றதும் தனது பாடசாலைப் பருவ புகைப்படங்களை ஆராய்ந்தாள். அதே முகம்தான்.. இப்போது வறுமையும் முதுமையும் முழுமையாக நிரம்பியிருந்தன.

மறுநாள் அவரைத் தேடி அதே புகைவண்டி நிலையம் சென்றாள் மாணவி.

ஆனால் அந்தப் பெண்ணால் மாணவியை அடையாளம் காணமுடியவில்லை. இருந்தும் தன்னைப் பற்றிய விபரங்களை மாணவியிடம் பகிர்ந்து கொண்டார்.

 "நான் ஓய்வு பெற்ற பிறகு எனது குழந்தைகள் என்னை  விட்டு விலகி  போய் விட்டாங்க. அவர்கள் எனது வாழ்வாதாரத்தைப் பற்றி எந்த வகையிலும் கவலைப்படவில்லை.   அதனாலேயே  நான் இந்த முடிவுக்கு வந்தேன்" என்றார்.

அதனைக் கேட்டதும் அம்மாணவியின் மனம் வருந்தியது. பின்னர் ஆசிரியரின் எதிர்கால வாழ்க்கையைத் திட்டமிடுவதற்காக தான் படித்த மற்ற எல்லா நண்பர்களையும் தொடர்பு கொண்டார். மேலும் அன்பான ஆசிரியருக்கு சுதந்திரமாக வாழ ஒரு சிறந்த இடத்தையும் தயார் செய்து, ஆசிரியரை தனது சொந்த தாய் போலவே நடத்தினார்.   

பெற்ற  பிள்ளைகள் கைவிட்டாலும்கூட கற்பித்த குழந்தைகள் அவர்களை விடவில்லை. 

இது ஆசிரியர்- மாணவர் தலைமுறையின் சிறப்பின் பிரதிபலிப்பாகும்.

தேவைப்படுகின்றபோது செய்கின்ற சின்னச் சின்ன உதவிகளுக்கான பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சிறு புள்ளிகள்தானே கோலங்களாகின்றன. அவ்வாறே பல தனிக் கரங்கள் ஒன்று சேர்கையில் வலுவான நம்பிக்கையை உருவாக்கக்கூடிய எதிர்காலங்கள் உருவாகின்றன.

ஜன்ஸி கபூர் - 14.05.2021


2021/05/11

உம்மா

 

தாயே

எனது கைவிரல்கள் தொட்டு நீங்கள் பழக்கிய வாழ்க்கைக் கோலச் சுவடுகளைப் பார்த்து இவ்வுலகம் பிரமித்து நிற்கின்றது.

பிறர் அறியாது என்னுள் முகிழ்த்த வலிகளை நீங்கள் இரகஸியமாக உங்கள் கண்ணீரால் பொறுக்கியெடுக்கையில், என் தாயின் சுவர்க்க நிழலின் அருகாமை என் வேதனைகளைக் குறைத்திருப்பதை நீங்கள் அறிவீர்களா?

என் ஏற்றத்தின் ஏணியான உங்கள் தாய்மையின் மானசீக ஆசிர்வாதமும் படைத்த வல்லோனின் அருளும் என் பயணப் பாதையை எவ்வித இடையூறுகளுக்கு மத்தியிலும் தொய்வின்றிக் கொண்டு செல்கின்றது.

தாயே....

உங்கள் அருகாமையுடன் நான் வாழ்கின்ற பிரமாண்டமான உலகம் அழகாக இருக்கின்றது. ஆறுதலாகவும் இருக்கின்றது.

நான் தோள் சாய்கின்ற உங்கள் மடியின் மானசீக விசாலம் யாருக்குப் புரியும்?

உங்கள் அன்பின் மொழியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

என் சாதனைகளின் ஒவ்வொரு வெற்றிகளுக்கும் நீங்கள்தான் தன்னம்பிக்கையின் ஊற்று.

அன்னையர் தின வாழ்த்துக்களை என் அன்பின் மொழி கொண்டு வரைகின்றேன். இனித் தொடர்ந்து வருகின்ற ஒவ்வொரு நாட்களும் உங்கள் ஆரோக்கியப் பேணுதலுடன் தொடரட்டும்.

அன்னையர் தின வாழ்த்துக்கள் உம்மா....

ஜன்ஸி கபூர் -09.05.2021


2021/04/25

பைத்தியம்

 

மெல்லிய கூதல் காற்றும், கருக்கட்டிய மேகமும் மழை வருவதற்கான அறிவிப்புக்களோ... 

வெறிச்சோடிக்கிடந்த வீதியில் அந்த வயோதிபப் பெண் வேகமாக நடந்து வருகின்றார். வயது எழுபதைத் தாண்டிய தோற்றம். கிழிசலும், அழுக்கான ஆடையும் அவருடைய மனநிலை சரியில்லை என்பதை அடுத்தவர்களுக்கு சொல்லக் கூடியனதான்.

"அந்த மனுஷிக்கு கொஞ்சம் மூளை சொகமில்ல. அங்கால போ புள்ள"

 என தன் மகளை விரட்டும் பக்கத்து வீட்டு ஆன்டியின் குரல் கேட்டு நானும் அம்மணியைப் பார்க்கின்றேன். 

அடுத்தவர்கள் சொல்லிச் சொல்லியே எனக்கும் அவர்மேல் சற்றுப் பயம்தான். தலையை வாசல் கேற் உள்ளுக்குள் இழுத்து மறைகின்றேன். ஆனாலும் பாவம் எனது அம்மா தெரு வாசல் பக்கம் துப்பரவு செய்து கொண்டிருந்தார். அம்மாவைத் தாண்டித்தான் அப்பெண் தன்னிருப்பிடத்திற்குச் செல்ல வேண்டும். 

எல்லோரும் பயந்து ஒதுங்கும்போது அம்மாவோ எந்தப் பதற்றமும் இல்லாமல் வாசல் பெருக்கிக் கொண்டேயிருக்கவே மெல்லத் தலையை நீட்டி வெளியே பார்த்தேன். அம்மாவைக் கடந்து சென்ற அப்பெண் திடீரென நின்றார். திரும்பி அம்மா அருகில் வந்து நின்றார். அம்மாவுடன் ஏதோ பேச்சுக் கொடுக்க, அம்மாவும் இயல்பாக பேச ஆரம்பித்தார். எனது விழிகளோ ஆச்சரியத்தில் விரிந்தன.

எல்லோரும் பைத்தியம் என முத்திரை குத்திய பெண் இப்பொழுது,போக மனமின்றி அம்மாவுடன் பேசிக் கொண்டே நின்றா.

அம்மா மாட்டிக் கொண்டாவோ?

சற்று தைரியத்துடன் அம்மாவின் அருகில் சென்றேன்.

"புள்ள உன்ர முகம் மகாலக்ஷிமிகரமா இருக்கு. உனக்கு என்ன உதவி வேணுமோ கேள். செய்து தாரேன். கைவிளக்குமாறு செய்து தாரேன். அதால தெரு வாசலக் கூட்டினா வடிவாயிருக்கும்."

அப்பெண் பேச்சு தொடர்ந்தபோது அதிர்ந்தேன். 

அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அம்மாவின் முகத்தில் புன்னகை மாறவேயில்லை.

அந்தப் பெண் சென்றதும் அம்மாவே சொன்னா,

"அவக்கு பைத்தியம் என்று சொல்றாங்க. ஆனா என்ன மட்டும் றோட்டில கண்டா நின்று கதைப்பா. பாவம் அவ"

  அப்பெண்ணின் மெல்லிய மனமும் உதவி செய்கிற எண்ணமும் தெரியாமல் வெளியே நின்று விமர்சிக்கும் பலரே எனக்குள் பைத்தியங்களாகத் தெரிகின்றார்கள் இப்போது.

ஜன்ஸி கபூர் - 25.04.2021


2021/04/11

பயணம்

சின்ன வயதில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்வதென்றால் மகிழ்வினை வார்த்தைகளில் வர்ணிக்கவே முடியாது. அதிலும் புகைவண்டிப் பயணம் என்றால் .......... 

கனவுகளைச் சுமந்து எதிர்பார்ப்புக்களை நெஞ்சில் தாங்கி சின்னச் சின்ன விடயங்களையெல்லாம் இரசித்து வாழ்ந்த அந்த பட்டாம்பூச்சிக் காலம் மறக்கப்பட முடியாத வசந்த காலம்...

வெளிநாடு செல்வதுபோல் கொழும்பு போவதற்காக புதிய ஆடைகள் தைத்து பல நாட்கள் ஆயத்தப்படுத்தலை மேற்கொண்ட அந்த சின்ன வயதுப் பருவம் இன்றும் கண்களில் மெலிதான விம்பம்போல் தெறித்துச் செல்கின்றது.

தந்தை அரச உத்தியோகத்தர் என்பதால் புகையிரத ஆணைச்சீட்டுப் பயணம். வுழமையாக கொக்குவில் புகையிரத நிலையத்தில் வைத்தே ஏறுவோம். எனக்கு எப்பொழுதும் ஜன்னல் அருகிலான இருக்கையே வேண்டும் என்பதால் என் பெற்றோர் அதனை ஒதுக்கித் தந்துவிடுவார்கள். நான் கடந்து செல்லும் ஒவ்வொரு ஊர் பற்றிய குறிப்பை எனது பதிவேட்டில் குறித்தவாறு பயணிப்பது எனது வழமை. இயற்கையின் இரசிப்பை மனதினுள் படரவிட்டவாறு பயணிப்பது அலாதி சுகம்தானே...

பிரம்மாண்டமான கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இறங்கியதும், அந்த பரபரப்பினை நுகர்ந்தவாறு முன்னே செல்கின்ற தந்தையைப் பின்தொடர்ந்து செல்வதும், அந்த நகரத்தின் நகர்வை அதிசயமாக உள்வாங்கிக் கொண்டதும் இன்றும் மறக்கப்படமுடியாத அழகிய கனாக்கள் போல்தான் இருக்கின்றது.

அப்பொழுது கொழும்புத் தண்ணீரைக் குடிக்கும்போது கசப்பதைப் போன்ற உணர்வு. வாப்பாவிடம் சொல்லி கடைகளில் சுடுநீர் வாங்கிப் பருகுவோம்.

ஆனால் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வேறு மாவட்டங்களில் வாழப் பழகிய பிறகு, அந்தக் கனவுப் பயணம் சுவையற்று இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. தண்ணீர் சுவையில்கூட மாற்றம் தெரியவில்லை. இரசிப்பின் வருடலை மனம் இழந்துவிட்டது போலும்..

காலம் மனதை மட்டுமல்ல வாழ்வையும் மாற்றிவிடுகின்றது..

ஜன்ஸி கபூர் -11.04.2021  


2021/04/08

உலராத நினைவுகள்

                                           

எத்தனை வருடங்கள் கடந்து போனாலும் நினைவை விட்டு நீங்காத பதிவு இது.

அன்று ....2017.04.05 ஆம் திகதி இறையடி சேர்ந்த எனது அன்பு தந்தையார் பற்றி நான் மதிக்கின்ற ஆசான் அன்பு ஜவஹர்ஷா அவர்கள் மீட்டிய பதிவு இன்று முகநூல் திரை வழியாக என்னை எட்டிப் பார்த்தது. கூடவே கண்ணீர் ஈரம்பட்டும் கரையா இந்நினைவினை இத்திரையில் பதிவது மனதிற்குள் தந்தையுடன் இருப்பதைப் போன்ற ஆறுதல்....

வாப்பா.....

உதிர்கின்ற ஒவ்வொரு வருடங்களிலும் உலராத உங்கள் நினைவுகள் என் பொக்கிசமாக என்னுடனே பத்திரப்படுத்தப்படும்.

------------------------------------------------------------- 

ஓய்வுபெற்ற  அதிபர் O.S.M.A கபூர் சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த  ஓய்வுபெற்ற அதிபர் யாழ் வைத்தியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் இறையடி சேர்ந்துள்ளார். 82 வயதில் காலமான இவர் 1990ஆம் ஆண்டு வட பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தொடக்கம் 2015 வரை அநுராதபுரத்தில் வசித்தவர் ஆவர்.  

முதலாம் வகுப்பு அதிபரான இவர் அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயம், வட மத்திய மாகாண கல்வித் திணைக்கள தமிழ் பிரிவு போன்ற நிலையங்களில் 1995ஆம் ஆண்டு ஓய்வுபெறும் வரை இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வந்துள்ளார். அதிபர் ஜன்ஸி கபூர், ஆசிரியை ஒஸ்லி கபூர், வைத்தியர் ஜனோஸ் கபூர் ஆகியோரின் அன்புத் தந்தையர் ஆவர்.

----------------------------------------------------------------- 

ஒரு நிறுவனத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஒரே தினத்தில் நல்லடக்கம்.

--------------------------------------------------------------- 

வடமத்திய மாகாண கல்வித்திணைக்களத்தில் தமிழ் பிரிவுக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமை பார்த்த , இக்கிரிகொள்ளவையைச் சேர்ந்த ஏ .பி .எஸ் .ஹமீட் அவர்களும், இந்தப் பிரிவில் இணைப்பு செய்யப்பட்டு கடமையாற்றி வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அதிபர் ஓ .எஸ்.எம்.ஏ .கபூர் அவர்களும் ஓய்வு பெற்று நீண்ட காலத்தின் பின்னர் சில மணி நேர இடைவெளியில் இறையடி சேர்ந்து 06.04.2017 அன்று நல்லடக்கம் செய்யப்பட்டது அபூர்வமான விடயமாகும்.

கொழும்பில் தவிர்க்க முடியாத பணியொன்றின் இருந்தமையால் மிக நெருக்கமாக பழகிய இவர்கள் பிரிவில் பங்கு கொள்ள முடியாத கவலையை வாழ்க்கை முழுக்க சுமக்க வேண்டி இருக்கும்

                                                                                  -  அன்பு ஜவஹர்ஷா - 


Jancy Caffoor - 08.04.2021


 

அன்பின் தித்திப்பு

 கீச் கீச்.......

நிசப்தத்தை கலைத்தவாறே அணிலொன்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அது தன் வாயில் தும்புகளைக் கௌவியவாறு தான் அமைத்து வைத்திருக்கின்ற கூட்டினை நோக்கி ஓடியது.

 மறுபுறமோ வெளிப்புற தென்னை மரத்தின் ஓலைக் குச்சிகளை தன் வாயால் இழுத்துக் கிழித்துக் கொண்டிருந்தது காகமொன்று....

அக்காட்சியைக் கண்ணுற்ற சின்னவள் சஹ்ரிஸ் அவசரமாக என்னை அழைத்து அதனைக் காட்டினாள். அவளின் விழிகளில் பிரமிப்பு பூத்திருந்தது. இன்றுதான் அதனைப் பார்த்திருக்கிறாள் போலும். காகம் கூடு கட்டும் கதையையும் குயில் அதனுள் முட்டையிடும் இரகஸியத்தையும் நான் கூறி முடித்ததும், அவளது குழந்தை அறிவுக்கு அவ்விடயங்கள் பிரமாண்ட அடையாளங்கள்தான் போலும்...அதிசயித்தாள்.


மெல்லிய காற்று நிமிடங்களை விழுங்கிக் கொண்டிருந்த நேரம்...........

சுவரில் ஓடிக்கொண்டிருந்த குட்டி எலியொன்றைத் துரத்திப் பிடித்த பூனையொன்று அதனை தன் வாயில் கௌவியவாறே வீட்டுச் சுவரில் நடந்தது. அதன் பிடியிலிருந்து எலியை விடுவிக்க நான் முயன்றும் தோற்றுப் போனேன். அதன் பின்னால் அதன் குட்டிகளும் ஓடின. 

சிறிது தூரம் சென்றதும் பூனை நின்றது. அதன் வாயில் கௌவியவாறு இருந்த எலிக்குட்டியும் கீழே விழ குட்டிப் பூனைகள் பாய்ந்து அதனை தமது வாயில் கௌவிக் கொண்டு ஓடின. தாய்ப் பூனையோ தான் பிடித்த எலியைத் தன் குட்டிகளுக்கு கொடுத்த திருப்தியில் தரையில் கால்களை நீட்டி மெதுவாக உறங்க ஆரம்பித்தது.

 ஐந்தறிவு ஜீவன்களின் பாச உணர்வுகளின் விம்பங்கள் என் பார்வையில்பட்டுத் தெறித்தபோது அந்த அன்பின் ஆழப் பெறுமானம் கண்முன்னால் மலையளவு உயர ஆரம்பித்தது. தாய்மையின் அன்புக்கு ஐந்தறிவும் விதிவிலக்கல்ல...........

ஜன்ஸி கபூர் - 8.4.2021 



2021/04/06

உதிரா விழுமியம்

அந்த நீளமான வீதி வாகன இரைச்சலை விழுங்கிக் கொண்டிருந்தது. வெயிலை உறிஞ்சி வியர்த்துக் கொண்டிருந்த மரங்களை மெதுவாக தன் சிறகுகளால் வருடிக் கொண்டிருந்தது காற்று. இயற்கையின் மானசீக ஸ்பரிசங்களை நான் உள்வாங்கிக் கொண்டவளாக இல்லை. 

என் எதிர்பார்ப்பில், "இன்று எப்படியாவது மின்சாரக் கட்டணத்தை செலுத்த வேண்டும்"  எனும் எண்ணமே நிறைந்திருந்தது. 

 உரிய இடத்தினை கண்டுபிடித்து பணத்தை செலுத்துவதற்காக கவுண்டரை நோக்கி நகர்கின்றேன். கையிலோ காற்றையும் உரசிக் கொண்டிருந்தன பண நோட்டுகள்...... 

 'அக்கா' 

 பின்னால் வந்த இளைஞனின் குரல் எனது வேகத்தை சற்று மந்தப்படுத்தியது. நான் அவனைப் பார்க்கையில் அவனது கைகள் சைகை பாஷையில் எனக்கு எதனையோ உணர்த்திக் கொண்டிருந்தன. அவன் சுட்டிய திசையில் எனது பார்வையும் மொய்த்தது. மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்காக கைகளிலிருந்த ஆயிரம் ரூபா நோட்டுக்கள் அங்கே விழுந்து கிடந்தன. 

 எனது நன்றியெனும் வார்த்தைகளை கூட எதிர்பார்க்காதவாறு அந்த இளைஞன் தனது வழியில் நகர்ந்து கொண்டிருந்தான். 

வறுமைக்குள்ளும் ஒளிந்திருந்த அந்த மனிதாபிமானத்தின் உயர் பெறுமானத்திற்கு பெறுமதிதான் ஏது? 

 ஜன்ஸி கபூர் - 06.04.2021

2020/05/30

காலங்கள் மாறும்

எல்லாவற்றையும் நாம் ஞாபகத்திலிருத்துவதில்லை. மறந்து விட்டதாகத்தான் நினைக்கின்றோம். ஆனாலும் அந்த மறதிகள் சிற்சில சந்தர்ப்பங்களால் உடைகின்றன............. உயிர்ப்படைகின்றன.......புதிய நிகழ்வுகள் போல மீள நமக்குள் நிழலாடுகின்றன....

2015 ......... 

நான் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் பெண்கள் கல்லூரிக்கு அதிபராகப் பொறுப்பேற்றுச் சென்ற ஆரம்ப காலம். சோனகதெரு யுத்த வடுக்களால் தன் உருக்களை இழந்திருந்தது. சொந்த ஊரிலேயே அந்நியமான பிரம்மை. மகிழ்வும் கவலையும் கலந்த கலவையாய் நான். 

அந்நாட்களில் சவால்களும் வலிகளுமே நாம் அதிகம் உணர்ந்த மொழியாக இருந்தது. துன்பங்களைத்தான் அதிகம் பரிமாறினோம். சொத்து இழப்புக்களை மீண்டும் ஈடு செய்ய நிறைய பொருளாதார பலம் தேவைப்பட்டது. வெளி உதவிகளற்ற நிலையில் மனதிலும், வாழ்விலும் கௌரவமான வறுமை வாழ்வைப் பின்னடித்துக் கொண்டிருந்தது. பிறப்பிடமே அகதி வலியோடு வாழ வைத்துக் கொண்டிருந்த காலமது.

வளங்கள் எதுவுமற்ற நிலையில் எனது தலைமையின்கீழ் பாடசாலை மீள ஆரம்பித்தல் என்பது கடினமான சவாலானது. அபிவிருத்தி காணாத பாடசாலையின் பெறுமானம் பூஜ்ஜியமாயிருந்தது. பல்வேறு மனக்கஷ்டத்தில் சொந்த வாழ்க்கையையும் அதிபர் பணியையும் சமாந்தரமாகவே நகர்த்திச் சென்றேன். மனம் உடையும்போதெல்லாம் தாய் தந்தையர் துணைக்கு நின்றார்கள்.

சிதைந்த மனை.........!
உருக்குலைந்திருந்த பாடசாலை ..............!

இரண்டினதும் புதிய நிர்மாணத்தில் நான் அதிக சிரமங்களை எதிர்கொண்டேன். இன்றுவரை அச்சுழியிலிருந்து வெளிவரவில்லை.

யாழ் வலயக் கல்வித் திணைக்களத்தில் இணைந்திருந்த ஒரேயொரு முஸ்லிம் பெண் அதிபர் நானே!  இந்த மனநிலையில் மாதந்தோறும் நடைபெறும் அதிபர் கூட்டங்களுக்குச் செல்வேன்.. நூற்றுக்கணக்கான தலைமைகள் இருக்கும் அந்த மண்டபத்திலும் நான் தனித்திருக்கும் வெறுமை...

பல முகங்களுடன் வெற்றுப் புன்னகை!
அருகிலிருப்போருடன் சில சம்பிரதாய வார்த்தைகள்..!!

பல காலம் இந்த சுழற்சியிலிருந்து  என்னால் மீள முடியவில்லை. இயல்பிலேயே நான் யாருடனும் அதிகம்  கதைப்பதில்லை. 

பெரும்பான்மை சிங்கள மொழி பேசும் அநுராதபுரச் சூழலில் பல வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த என்னால், தமிழ்மொழி பேசும் யாழ்ப்பாணச் சூழலுடன் உடனேயே ஒன்றித்துப் போக முடியவில்லை. அநுராதபுர நிழல்களின் அலைவுகள் என்னை அதிகம் ஆக்கிரமித்திருந்ததால், யாழ்ப்பாண நிகழ்வுகளில் மாறுதல்கள் தெரிந்தன.  இவ்விரண்டு ஊர்களின் வேறுபாடுகளின்  வெடிப்பிலிருந்து நான் மீண்டெழ சில காலம் தேவைப்பட்டது.

அதிபர் பதவி ...........வெறும் பணியல்ல...... வாழ்க்கை.......!

சொந்த வாழ்க்கைக்குள் அந்தக் கடமைகளையும் பிணைத்து  வாழ கற்றுக் கொண்டபோது சில சவால்கள் உடைந்து காணாமல் போயின. 

இருந்தும்......... 

எனக்கும் இங்குள்ள ஏனைய பாடசாலை அதிபர்களுக்கும் இடையிலான இடைவெளிகள் நீண்டு கொண்டே இருந்த சமயத்தில்...

அப்போதைய யாழ் வலயக்கல்விப் பணிப்பாளராக இருந்த திரு தெய்வேந்திரராஜா சேர் அவர்கள், யாழ் வலய பாடசாலை அதிபர்கள் பங்குபற்றும் 3 நாள் கல்விச்சுற்றுலா ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் நானும் பங்குபற்றினேன்...

பல மனிதர்கள்........... பல பாடங்கள்....அனுபவங்களாகி என்னுள் நிறைந்தன. 
நாங்கள் தலைவர்கள் எனும் முடியையிறக்கி சுதந்திரமானோம். சுவாரஸியங்களும் வேடிக்கைகளும் மெல்ல மெல்ல.......... அந்த இடைவெளியைக் குறைத்தபோது என்னையும் யாழ் மண் உரிமையுடன் உள்ளிழுத்துக் கொண்டது. அதுவரை மனதில் இறுகிக் கிடந்த 'அந்நியம்' காணாமல் போனது. 

அந்த சுற்றுலாவில் பல நல்லதிபர்களை நான் அடையாளம் கண்டேன். கடமைசார் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டோம். அதிபர் பதவிக்குள் சிறு மழலையாக இருந்த நான் என்னை நானே இயக்குமளவிந்கு அனுபவங்களையும்,  தற்றுணிவையும் பெற்றுக் கொண்டேன்.

அச்சுற்றுலாவில் நான் கண்டு கொண்ட இன்னொரு முகத்தின் சொந்தக்காரர் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் அதிபர் வணக்கத்திற்குரிய திருமகன் சேர்தான் ...அவர் தன் மதம் கடந்து பிற மதங்கள் மீதான கூர்மையான அறிவைப் பெற்றிருந்தார். ஆச்சரியப்பட்டேன். என்னுடன் இஸ்லாம். குர்ஆன் பற்றிய நிறைய விடயங்களைப் பகிர்ந்தார்;. இஸ்லாமிய நாகரிகம் பாடத்திலுள்ள பல விடயங்களைக்கூட ஞாபகப்படுத்தினார். புல்லரித்துப் போனேன். ஒருவரின் கலாசார ஆடைகளை அடிப்படையாக வைத்து அவர் தன் மதத்தை சார்ந்தே அறிவை உள்வாங்குகின்றார்  எனும் எனது எண்ணம் முதன் முறையாக உடைந்து போனது. மரியாதை கலந்த பெருமதிப்பேற்பட்டது அவரில்...

சுற்றுலா நிறைவுற்ற பிறகு...............பல நாட்கள் !

எல்லாம்  தொலைவாகிப் போனது.. வாழ்க்கையுடன் ஒன்றித்துப் போன கடமைகளுக்காக வெவ்வேறு திசைகளில் அதிபர்கள் நாங்கள் உழைத்துக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான மேற்பார்வைப் பணியின் பொருட்டு அவர் பாடசாலைக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. பாடசாலையின் காட்சிப்புலங்களிலிருந்து நிறைய அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டேன்.

அந்த நீண்ட இடைவெளியின் பின்னர்........ 

24.05.2020 அன்று .........நோன்புப் பெருநாள் தினத்தில் வணக்கத்திற்குரிய திருமகன்  சேரின் பெருநாள் வாழ்த்துக்களை என் கைபேசி உவகையுடன் உரத்து வாசித்தது.

அவர் ஆளுமையுள்ள அதிபர் மாத்திரமல்ல. பிற மதங்களை கண்ணியப்படுத்தும், நேசிக்கும் சிறந்த மனிதர். மதம் கடந்த சகோதரர்.........    
அவர் வாழ்த்துக்களை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டிருக்கின்ற நேரம் தனியார் தொலைக்காட்சியொன்றில் .................

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு பாகிஸ்தான் அரசின் கற்றல்சார் உதவிகளை அந்நாட்டு அதிகாரி வழங்கும் காட்சியும், திருக்குமரன் சேரின் உரையும் பதிவாகிக் கொண்டிருந்தன. அக்காட்சியில் மனம் நிறைந்தது. 

மதம் கடந்த மனிதாபிமானங்கள் தொடர்ந்து கொண்டே இருக்குமானால் இப்பூமியில் வசந்தமே மொழியாகும்.

இவ்வாறாக மதங்களைத் தாண்டிய   ஈர்ப்புக்கள் இவ்வுலகைப் பிணைத்து வைத்திருக்குமாயின்......வன்முறையற்ற வாழ்க்கை மனிதர்களுக்கான சிறந்த பொக்கிசமாகக் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

[d;]p fG+u; - 31.05.2020


Aj;jj;jhy; rpijtile;jpUe;j kid - 2015


Gjpjhf mikf;fg;gl;bUf;Fk; ghlrhiy - 2020


- ஜன்ஸி கபூர் -
- 31.05.2020

அனுபவப் பகிர்வு -1


'அம்மா .........அம்மா'

வாசலோரம் அந்த ஐயாவின் குரல் கேட்க கதவைத் திறந்தேன்.

அவருக்கு என் வாப்பாவின் வயதிருக்கும். முதுமையிலும் தான் உழைத்து வாழ வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் இன்னும் உழைத்துக் கொண்டிருக்கின்றார். எமது வீட்டுக்கு அருகிலுள்ள சந்தையொன்றுக்கு தினமும் பழங்கள், மரக்கறிகள் கொண்டு சென்று விற்பார். இவை விற்காமல் மிஞ்சியிருந்தால் எமது வீட்டிற்கு கொண்டு வந்து தருவார். பொருளுக்காக இல்லாவிட்டாலும் அந்த வயோதிபத்தின் உழைப்புக்காக ஏதாவது வாங்குவோம்.

அன்றும் வந்திருந்தார்......................

சில எலுமிச்சம்பழங்களை எமக்கு விற்று அதற்கான பணத்தைப் பெற்றுக் கொண்டார். 

துருப்பிடித்த பழைய சைக்கிளின் முன்புறம் மரக்கறி மூட்டையைக் கட்டிக் கொண்டு வருவார். கால்களில் செருப்புக்கள் இருக்காது. சுட்டெரிக்கும் யாழ்ப்பாண வெயிலில்கூட சைக்கிளை உருட்டிக் கொண்டே வெறுங் காலுடன் செல்வார்.

அந்தக் காட்சி............

என்னுள் கசிவைக் கொடுக்க ஒரு நாள் "போடுங்கள் ஐயா" என்று புதிய செருப்புக்களை வாங்கிக் கொடுத்தேன்.

'வேண்டாம் புள்ள...............'

மறுத்தார். 

"செருப்பைப் போட்டா சைக்கிள் ஓட முடியாதும்மா."

 அவர் பக்க நியாயம் ஜெயித்தது.

அந்த ஐயாவை எனக்கு ஐந்து வருடங்களாகத் தெரியும்.   வாப்பா அவரின் வாடிக்கையாளர். எந்நாளும் அவரிடம் வாப்பா பழங்கள் வாங்குவார். சில நேரங்களில் அவரின் இந்த தினசரி விற்பனையால் எமக்கு கோபம் வரும்.   அதிக விலைக்கு விற்கின்றாரோ என நினைப்பதுமுண்டு. சில நேரங்களில் வாப்பா அறியாமலே எதுவும் வேண்டாமென்று அவரை விரட்டி விடுவேன். அந்த நாட்களில் அந்த ஐயா மீது எனக்கு கோபம் கொப்பளித்து வரும். அடக்கிக் கொள்வேன்.

காலவோட்டத்தில் எங்கள் வாப்பா மௌத்தாகிய பின்னர் அந்த ஐயா வீட்டுக்கு வந்தார். வாப்பா மரணித்த செய்தி அவரைத் துன்பப்படுத்தியிருக்க வேண்டும். அழுதார். நிறைய அழுதார். வாப்பாமீது அவர் வைத்திருந்த பாசத்தை அன்று நான் கண்டு கொண்டேன். அவரின் கண்ணீர் எங்களை ஈரப்படுத்தி அவர் மீதான கோபத்தையும் கரைத்தது.

அன்றிலிருந்து அவரைக் கண்டால் வாப்பா நினைவுக்கு வருவார். வாப்பாவின் நினைவாக ஏதாவது பழங்களை ஐயாவிடம் வாங்குவோம். புணத்தை கையில் வாங்கும்போது 'சரி புள்ள' புன்னகைப்பார். 

தள்ளாடும் நடை ............. முதுமையில்கூட அவரின் புன்னகையில் கபடமற்ற பாசம் தெரிந்தது.

வைகாசி 2020 ...... 

கொரொனா ஊரடங்கு நீங்கி அன்றும் வீட்டுக்கு வந்திருந்தார். வியாபாரியாக அல்ல. அறிந்த மனிதராக!

'கனநாள் வரல புள்ள............அதான் உங்கள எல்லாம் பாத்துட்டு போகலாமென்று வந்தேன். சுகமாக இருக்கிறீங்களா'

கேட்டார். அதே மாறாத புன்னகை! இன்னும் அவரிடம் அப்பிக்கிடந்தது.

'ஓம் ஐயா' 

நலங்களைப் பரிமாற்றிக் கொண்டோம். விடைபெற்றார்.

'நில்லுங்கள் ஐயா' 

வீட்டுக்குள் சென்று என்னாலான சிறு பணத் தொகையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் அவரின் கஷ்டம் துடைக்க சிறு பங்களிப்பாவது செய்ய நினைத்தேன். வாங்கிக் கொண்டார் மகிழ்ச்சியுடன்....

'வாரன் புள்ள'

எல்லோரிடமும் விடைபெற்றார். அவரின் அந்தப் புன்னகை மட்டும் மாறவேயில்லை.ஒளிர்ந்து கொண்டே இருந்தது.

மனிதர்களின் அன்பைச் சம்பாதிப்பதே மிகச்சிறந்த செல்வம்.   திருப்தியில் மனதை நிரம்பிக் கொண்டேன்.

- ஜன்ஸி கபூர்  

2020/05/29

நான் நானாக

கொரோனா............

நீண்ட விடுமுறை!

எதிர்பாராத வாழ்க்கை மாற்றம்!

எதனையும் எதிர்கொள்ளும் மன தைரியம்!

இவை நமக்குள் வரவான சில விடயங்கள்!

இக்கொரோனாக் காலம் நிதானமாக நம்மை நாமே திரும்பிப் பார்க்க களம் அமைத்துத் தந்துள்ளது. வழமை எனும் ஒரு பொறிக்குள் நம்மைத் திணித்து நாம் வாழ்கின்ற அந்த வாழ்க்கை வட்டத்தை மெல்லக் கலைத்து நிதானத்துடன் மீள நம்மைத் திருப்பிப் பார்க்க வைத்துள்ளது. ஆரோக்கியம் தேடும் இலக்கில் நாம் ஓடிக்கொண்டிருக்கின்றோம். இருந்தும் நம்மை விரட்டுபவை நம்மோடு பயணித்திருந்த நமது பிம்பங்களே !

கடமை ........ கடமை

எனும் சுழியிலிருந்து மெல்ல விலகி நான் இயற்கையோடு இணைந்து கொண்டேன் இந் நாட்களில்....! இயற்கையின் பிரமிப்பில் சிந்தையுருகி கற்பனைகளும் மீளக் கருக்கட்டத் தொடங்க எழுதுகோல் என் கரம் பற்றுகின்றது!

நீண்ட நாட்கள்.........!

என் இயல்பிலிருந்து நான் விலகியிருக்க வேண்டும். மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அடங்கிக் கிடந்திருக்க வேண்டும். பலத்தை மறைத்த பலகீனங்களால் நான் தொலைந்திருக்க வேண்டும். சுருங்கிப்போன இயலுமையானது இயலாமைக்குள் மூடப்பட்டிருக்க வேண்டும். மூச்சடைந்து கிடந்தேன் பணிச் சுமையும் விதிச் சுமையும் ஓர் நேர்கோட்டில் பயணித்ததால்  

இந்த நீண்ட விடுமுறை 

ஆசுவாசித்தது என்னை! வெந்நீர் கசிவுகளுக்கு ஒத்தடம் தந்தது. மீளத் திரும்பிப் பார்க்கின்றேன்!

மனசுக்குள் நிம்மதிப் பெருமூச்சு!

காற்றின் மொழி  
அரும்புகளின் வளர்ச்சி
இயற்கையின் சுவை 
பொழுதுகளை மீட்டும் வினோதங்கள்  

என அனைத்தையும் நுகர்ந்தே மனசை நிரப்பிக் கொள்கின்றேன் ரம்மியமாய்!

Jancy Caffoor
 

2020/04/03

கொரோனா........!


மிகச் சிறு நுண்ணங்கியின் பிடியிலின்று இந்த உலகம் சிக்கித் திணறிக் கொண்டிருக்கின்றது. ஊரடங்கு மூலம் நோய்த் தொற்றுக்கான சந்தர்ப்பங்கள் விலக்கி வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

பாடசாலைகள் பல நாட்களாக விடுமுறை. கடமைகளிலிருந்து சற்று ஓய்வு. வீடுகளே...............இப்போ .................பல நாட்களாக நம்மை உள்வாங்கி ஏந்திக் கொண்டிருக்கின்றன. 

வழமையான செயல்கள் முடக்கப்பட்டதில் நம்மை நாமே கொஞ்சம் திரும்பிப் பார்க்கக் கூடியதாக உள்ளது. கடமையின் பொருட்டு சுழன்று கொண்டிருந்த வாழ்க்கை........ இப்போது  கொஞ்சம் வீட்டு வேலைகளிலும் எட்டிப் பார்க்கின்றது.

நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கைக்கு சற்று ஓய்வு கிடைத்துள்ளது. இருந்தும் எல்லோர் மனங்களிலும் கொரோனா பற்றிய அச்சம் எரிந்து கொண்டுதான் இருக்கின்றது. 

03.04.2020

2020/01/02

யாழ் முஸ்லிம்கள்



இஸ்லாம் முஸ்லிம் மக்களின் சமூக வாழ்வின் அடிப்படை. இஸ்லாத்தையும்,  இஸ்லாமிய ஷரியத் முறையையும் அடிப்படையாகக் கொண்டு வாழும் முஸ்லிம்கள் தம்முடைய மொழி,  மத,  பண்பாடு கலாசார  விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்து வாழ்வதன் மூலமாக தமது தனித்துவத்தை தாம் வாழும் பூமியில் நிலைப்படுத்த முடிகின்றது.

8 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் கலீபாவாக இருந்த அப்துல் மலீக் பின் மர்வின் என்பவரால் நாடு கடத்தப்பட்ட ஹாஸிம் வம்ச வழியினரின் குடியேற்றமே முதலாவது முஸ்லிம் குடியேற்றமாக இலங்கையில்  காணப்படுவதாக  வரலாறு கூறுகின்றது. இவர்கள் யாழ்ப்பாணம்,  மன்னார் உள்ளிட்ட சில இடங்களில் குடியேற்றங்களை அமைத்து தாய்மொழியாக தமிழை தமது வாழ்வோடு பின்னிப் பிணைத்து வாழ்ந்து வந்துள்ளனர். 

தென்னிந்தியத் துறைமுகப் பட்டினங்களில் வணிகத் தொடர்புகளைப் பேணிய அரேபியர்கள்,  பாரசீகர்கள்,  மொரோக்கர்கள்,  துருக்கியர்கள் போன்றோர் தாய்மொழித் தமிழுக்கு அச்சாணியாக விளங்கியுள்ளார்கள். தமிழ்மொழி பண்பாட்டுக் கோலங்களின் பரவல்களை அவதானிக்கும்போது ஈழத்தில் முதன் முதலாக அரேபியர்கள் குடியேறியது வடபகுதியாக அடையாளம் காட்டப்படுகின்றது. 

கி.மு 2 ஆம் நூற்றாண்டிலிருந்து ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம்  முத்துக் குளித்தல்  அம்பர் சேகரித்தல்  சங்கு குளித்தல் போன்ற செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக தென்கிழக்காசிய வணிகத்தில் தொடர்புகளை ஏற்படுத்திய அராபிய முஸ்லிம்கள்  14 ஆம் நூற்றாண்டு வரை தமது வணிக மத்திய தலமாக மன்னாரையே பயன்படுத்தினார்கள் என்பதற்கான சான்றுகளை வரலாறு முன்வைக்கின்றது. 

ஒவ்வொரு சமூகத்தின் வாழ்வியல் சூழலும்  சுற்றுப் புறங்களும் அவர்களின் தொன்மையைப் பறைசாட்டுவனவாக இருக்கின்றன. அந்தவகையில் 1477 ஆம் ஆண்டளவில் அரேபியக் கடலோடிகளால் மன்னாரில் நாட்டப்பட்ட பெருக்கு மரங்களின் பரம்பல்,  உடை, மரம்  வெளிச்ச வீடுகளான மினாராக்கள் போன்ற சான்றுகள் போத்துக்கேயருக்கு முந்திய காலகட்டத்திலேயே மன்னார் பிரதேசத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் தொன்மையைக் காட்டி நிற்கின்றது. அதுமாத்திரமன்றி இஸ்லாமியக் கொள்கைகளை முன்வைக்கும் தஃவாப் பணியில் ஈடுபட்ட சமயப் பெரியார்கள் எங்கெங்கே வாழ்ந்து மரணமடைந்தார்களோ  அங்கெல்லாம் அடக்கஸ்தலங்கள்  சியாரம்  தர்ஹா போன்றவை காணப்பட்டன. 

லெப்பை ஆலிம் அப்பா வம்சத்தினர்களின் சமாதிகள் மன்னாரிலும், சுல்தான் அப்துல் காதர் வலியுல்லா அவர்களின் சமாதி மண்கும்பானிலும்,  அவர்களின் தங்கையின் சமாதி நயினாதீவிலும் காணப்பட்டமை கூட முஸ்லிம்களின் தொன்மை இருப்புக்களுக்கான அடையாளங்களாகும்.

 பாரசீகக்குடாத் துறைமுகங்களுடன் வர்த்தகரீதியில் இணைக்கப்பட்டிருந்த மாதோட்டம், மன்னார்த் தீவில் கண்டெடுக்கப்பட்ட 12 ஆம், 14 ஆம் நூற்றாண்டுகளுக்கான மீஸான் கற்கள் என்பனவும் முஸ்லிம்களின் வணிகத்தின் ஏகபோக உரிமையைப் பறைசாட்டுகின்றன. 

யாழ்ப்பாணத்தில் இஸ்லாம் கி.பி 630களில் அறிமுகமாகியதாக சரித்திர ஏடுகள் குறிப்பிடுகின்றன. யாழ்ப்பாணப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆதிக் குடியேற்றமாகிய முஸ்லிம்கள் தமது சமுதாய சூழ்நிலை  மரபுவழிப் பாரம்பரியம் என்பவற்றைப் பேணியவாறே வாழ்ந்து வந்துள்ளார்கள். 'சோனகன் வடலி' என தாய் உறுதி அழைக்கப்படுகின்ற மரபானது முஸ்லிம்களின் ஆதி இருப்பை பறைசாட்டுகின்றது. யாழ்ப்பாணம்,  கொடிகாமம்,  பருத்தித்துறை,  கிளிநொச்சி,  பள்ளிக்குடா,  நாச்சிக்குடா போன்ற வெளிப் பகுதிகளிலும், நயினாதீவு,  மண்டதீவு,  மண்கும்பான்,  காரைதீவு  போன்ற  கடலோரம் சார்ந்;த கரைகளிலும்,  தமது கலாசாரங்களை மையப்படுத்தி குடியிருப்புக்களை ஏற்படுத்தி வாழ்ந்து வந்தார்கள். 1258 ஆம் ஆண்டளவில் சுல்தான் தக்கியுத்தீன் அப்துல் ரஹ்மான் யாழ்ப்;பாணத்தை கைப்பற்றியதற்காக ஆரியச் சக்கரவர்த்தியால் பரிசாக வழங்கப்பட்ட பிரதேசமே சோனகதெரு என்பது வரலாறாகும்.

1811 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணம் பதுறுத்தீன் புலவரால் பாடப்பட்ட 4000 பாடல்களைக் கொண்ட முதற் தமிழ் காப்பியமான முகியித்தீன் புராணம்  1713 இல் ஒல்லாந்தர் கோட்டையைக் கட்டும் போது அமைக்கப்பட்ட முஸ்லிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஜூம்ஆ பள்ளிவாசல், 1822 இல் அமைக்கப்பட்ட முஸ்லிம் கல்லூரி வீதி (ராப்ஸ் வீதி), டச்சுக்கோட்டை பண்டகசாலையை நிறுவிய அராபிய வணிகரின் பரம்பரையினர் பயன்படுத்திய கொட்டடி மையவாடி என்பனவும் முஸ்லிம்களின் தொன்மையை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்தான்.

மன்னாரைப் பொறுத்தவரையில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழிலில் முஸ்லிம்கள் நாட்டங் கொண்டிருந்தாலும்கூட  யாழப்பாண முஸ்லிம்கள் மீனவத் தொழிலில் அக்கறை கொள்ளவில்லை. எனினும் திமிலர் எனப்படும் கூலி ஆட்களைப் பயன்படுத்தி மீன்களைப் பிடித்துக் கருவாடாக்கி ஏற்றுமதி செய்தனர். ஆங்கிலேயர் தமது ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்களுக்கு விவசாயக் காணிகளை வழங்கி விவசாயத்தை ஊக்குவிக்காமையினால் வணிகம்சார் தொழிற்பாடுகளை தமது வாழ்வாதாரங்களோடு பிணைத்து வாழ்ந்தார்கள். எனினும் போத்துக்கேயரின் வருகையின் பின்னர் தொழிற் சமுகமாக உருமாறிக் கொண்டார்கள்.

அறிவு வளர்ச்சி குன்றிய சமூகமானது காலவோட்டத்தில் நிலைத்திருக்காமல் நலிவடைந்து விடுகின்றது. மொழிப் பிணைப்பும்,  மதப்பற்றும் மிக உறுதிநிலையில் காணப்பட்டால்தான் அறிவும் வலிமையடைந்து பல சவால்களை வென்று நிலைத்து நிற்கக்கூடிய சமூகக் கட்டமைப்பும் உருவாகும். முஸ்லிம்கள் தமது தனித்துவத்தை நிலைப்படுத்த வேண்டுமானால் தான் சார்ந்தும் தன் சமூகம் சார்ந்தும் கல்விமுறைகளினூடாகச் சிந்திக்க வேண்டும். யாழ்ப்பாண முஸ்லிம் மக்களிடையேயும், 'சமயக்கல்வி பெறுதலே கல்வி' எனும் எண்ணக்கரு நிலவி வந்ததனால் சமயக் கொள்கைகள்  நடைமுறைகளை அறபுமொழியில் போதிக்கும் மௌலவிமார்களே ஆசிரியர்களாகக் கற்பிக்கும் மதரசாக்கள்,  மக்தாப் போன்ற கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. மதரஸதுல் மன்புஉல் உலும், மதரஸதுல் மஸ்ற உத்தீன்,  மதரஸதுல் முஹம்மதிய்யா போன்ற ஆரம்ப கல்விக்கூடங்கள் யாழ்ப்பாணத்தில் காணப்பட்டன. காலப்போக்கில் முஸ்லிம் மக்களிடையே ஏற்பட்ட மறுமலர்ச்சி, கல்விச் சிந்தனைகளின் விரிவாக்கம் காரணமாக தமது சமயச் சூழலிலே கல்வி பெறும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக யாழ் முஸ்லிம்களின் இரு கண்களாக யா/ ஒஸ்மானியாக் கல்லூரி, யா / கதீஜா மகா வித்தியாலயம் என்பன தோற்றம் பெற்றன. 

பல்லினச் சமூகம் வாழும் சமூகக் கட்டமைப்பினுள் கல்வி,  அரசியல்,  பொருளாதாரம் என்பனவற்றில் பலம் குன்றிய சிறுபான்மை இன மக்கள் தமது சுய கௌரவத்தைப் பேணியவாறு பெரும்பான்மை இனத்தவர்களுடன் சம அந்தஸ்தோடும் பூரண உரிமைகளைப் பெற்றும் வாழும்போதே உறுதியான பல்லினச் சமூகக் கட்டமைப்பு ஏற்படுகின்றது. எனினும் துரதிஷ்டவசமாக பெரும்பான்மையினர் தாம் வரையும் சட்ட திட்டங்களாலும், அதிகாரத்தாலும் சிறுபான்மைச் சமூகத்தினரின் சுதந்திரமான செயற்பாடுகளை நசுக்கி அவர்களை தாக்க முற்படும்போது குறித்த ஈர் சமூகங்களுக்கிடையிலான ஒத்திசைவு குலைந்து முரண்பாடுகள் எழுச்சியடைகின்றன. அவலங்களும்,  குருதிப் பாய்ச்சலும்,  கண்ணீர்க் காயங்களுமே பேசு பொருள்களாக மாற்றப்படும்போது சிறுபான்மையினரும் அகதிகளாக தமது இருப்பை நகர்த்;தி வௌ;வேறு பிரதேசங்களில் நிலையூன்றி விடுகின்றார்கள். 

13 ஆம் நூற்றாண்டில் நல்லூரில் குடியேறிய முஸ்லிம் மக்கள் மீதும் பண்பாட்டுக் கலாசார சிதைவுகள் ஏற்பட்டதனால் நாவாந்துறையை அண்டிய பிரதேசங்களில் தமது இருப்பை மாற்றிக்; கொண்டார்கள். விரட்டப்பட்ட முஸ்லிம்கள் தம் வாழ்விற்காக தேர்ந்தெடுத்த இடங்களிலெல்லாம் ஐந்து நேரத் தொழுகைக்கான மஸ்ipத்துக்கள் எனப்படும் அழகான இறையில்லங்களை நிறுவிக் கொண்டார்கள். யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்ற பல அழகான இறையில்லங்கள் அவர்களின் தனித்துவமிக்க தொன்மையைப் பறைசாட்டி நிற்கின்றன. வேற்றுமையிலும் ஒற்றுமை நிறைத்து வாழ்வை இரசித்தார்கள். ஆடல்,  பாடல்,  நாடகம் போன்ற கலைகளை வளர்ப்பதிலும்,  களிகம்புப் பாடல்களை இயற்றுவதிலும் சிறந்த இலக்கியவாதிகளாக விளங்கினார்கள்.

போளை சுண்டுதல்,  நொண்டிக் கோடு,  கீச்சுக் கீச்சுத் தம்பளம், பாண்டி,  புலியும் வெள்ளாடும் போன்ற பல விளையாட்டுக்கள் மூலம் பொழுதை மகிழ்ச்சியால் நிறைத்தார்கள். கழிகம்பு வீசுதல்,  சீனடி விளையாட்டு,  புலிவேசம்,  கோலாட்டம் போன்ற கலைநிகழ்வுகள் மூலம் தமது உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். யாழ்ப்பாண மண் வாசனையுடன் சிறந்த கலை நுணுக்கச் சிற்பி  இலங்கையின் முதல் முஸ்லிம் வழக்கறிஞர்  முதல் முஸ்லிம் மேயர்  அறிஞர்கள்  புலவர்கள் என வாழ்ந்து கொண்டே பலர் பிறருக்கும் வாழ்வைக் கற்றுக் கொடுத்தார்கள்.

அன்றைய ஆரோக்கியமான சமூகங்களுக்கிடையில் இனமுறுகல் ஏற்படவில்லை. முஸ்லிம் சங்கம்,  முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் போன்ற சமூக சேவை இயக்கங்கள்,   சனசமுக நிலையங்கள்,  விளையாட்டுக் கழகங்கள் எனப் பலதரப்பட்ட அமைப்புக்களால் யாழப்பாண முஸ்லிம் சமூகம் தனித்துவத்துடன் வாழும் சமூகமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. வேற்றுமையிலும் ஒற்றுமை காணுதல் அவர்களின் உயரிய செல்நெறியாகக் காணப்பட்டது. தன் மகிழ்வில் பிறரையும் நிரப்பிக் கொள்ளும் தனவந்தர்களால் அன்றைய சோனகதெரு மனநிறைவு கண்டது.

ஒரு சமூகத்தின் கண்ணாடியாகக் கலாசாரத்தைக் கருதலாம். ஏனைய இனக் குழுக்களிலிருந்து தம்மை தனித்துவமாக வெளிப்படுத்திக் காட்ட இக்கண்ணாடி உதவுகின்றது. தனித்துவமான மொழிப்பிரயோகம்,  தொப்பி  முக்காட்டுடன் தொடர்புபட்ட கலாசார உடைகள்,  இஸ்லாம் அனுமதித்துள்ள கீழைத்தேய பண்புகளைக் கொண்டுள்ள வட்டிலப்பம்   அடை   பணியாரம்   பிட்டு   தொதல்   வாடா   கொழுக்கட்டை போன்ற விஷேட உணவுகள்  ஆபரணங்கள்   அறபுத் தமிழ்  விருந்தோம்பலில் வெற்றிலைத் தட்டம் பகிர்ந்தளித்தல்   முஸ்லிம் ஆண் சிறார்களுக்கு செய்யப்படுகின்ற விருத்தசேதனம் எனப்படும் கத்னா போன்ற பல பண்புகள் அவர்களின் கலாசாரத்தோடு இறுகிப் பிணைந்திருந்தது. ஈகைத் திருநாள்  தியாகத் திருநாள்  மீலாத் விழா போன்ற விழாக்களுடன்  ஒவ்வொரு வருடமும் ஸபர் மாதம் கடைசிப் புதனான ஒடுக்கத்துப் புதனை ஒரு சமய விழாவாகக் கொண்டாடினார்கள். பண்டிகைகள் உள்ளத்தின் பண்பாட்டுக் கோலங்களாக விளங்கின.

ஒரு மொழியைக் கற்கும்போது அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களின் கலாசாரமும் கருத்துக்களும் அவர்களை அறியாமலே பிற சமூகத்தினரின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்து விடுகின்றது எனும் யதார்த்தமும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வாழ்வியலில் உயிர்த்தது. தமது சமய நம்பிக்கைகளை சிதைக்காமல் தமிழ் மக்களின் விழாக்களுக்கு ஒப்பான சில சடங்குகளையும் இணைத்துக் கொண்டார்கள். முஹர்ரம் மாதத்தில் அபூபக்கர் வீதியிலுள்ள ரிபாயியா தைக்காவிலிருந்து பக்தி பரவசத்துடன் வாலிபர்கள்;  பல்லக்கினை இழுத்து வருதல்  நாரிஸா வண்டி,  தைக்கியாவில் நிகழும்  கொடியேற்றம்  பெருவிழாவாகக் கொண்டாடப்படும் பெண்கள் பராயமடைதல், சடங்கு,  ஆண்கள் தங்க நகையணிதல்,  கதாப்பிரசங்கமாக இடம்பெறுவதைப் போன்று தனி வீடுகளிலோ அல்லது பொது இடங்களிலோ உமருப் புலவரின் சீறாப் புராணம், பதுறுத்தீன் புலவரின் முஹிதீன் புராணம் போன்ற இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பாடப்படுதல், திருமணச் சடங்கில் பந்தல், மோதிரம்  ஆரத்தி  கூரை  தாலி என சம்பிரதாயங்கள் பேணப்படுதல், பெண் வீட்டார் சீதனம் கொடுத்து திருமணம் முடித்து வைத்தல், குடிமக்கள் எனப்படும் தாழ்த்தப்பட்ட சாதியினர் செய்கின்ற எந்தத் தொழில்களையும் தாமும் செய்யாமை, சில மொழி  உணவு  உடைக் கலப்பு என்பன முஸ்லிம்களின் வாழ்வோடு இரண்டறக் கலந்து பிட்டும் தேங்காய்ப்பூவமாக இசைந்து வாழ்ந்தார்கள்.

ஆனால் காலவோட்டத்தில் .......

  யுத்தங்களும் ஆயுதத் தரிப்பும் அவநம்பிக்கைகளும் வடபகுதியில் அசாதாரண சூழ்நிலைகளைத் தோற்றுவித்தன. இயல்புநிலை மறந்து போனது. தாம் விரும்பாமலே குருதி பிழக்கும் போராட்டங்களால் முஸ்லிம் மக்களும் சூழப்பட்டார்கள். தமது தொன்மை தாயக பூமிப்பரப்பில் தமது சுயத்தைப் பேணியவாறு வாழ்ந்த கௌரவமான வாழ்க்கையும் சுதந்திரமும், மகிழ்வும் காணமற் போயின. போராட்டங்களால் வெடித்துப் போன உணர்வுகளில் தீப்பிழம்புகள் கசிந்தன. இருந்தும் தம் சூழலுடன் பொருந்தி வாழும் சகோதர இனமாகிய தமிழ் மக்களுடன் ஒத்தாசையுடன் பொருந்தி வாழ்ந்தார்கள். 

அந்தக் கரிநாள் .....1990......ஒக்தோபர் ....30.....! 

நாட்காட்டியைக் கிழித்துக் கொண்டு வெளிவந்தது. 

அது யாழ் முஸ்லிம்களின் உணர்வுகளில் அழுத்தத்தைப் பிரயோகித்து  பொருளாதாரத்தை முடக்கி  உடல்  உளத்தை  நலிவுபடுத்தி  சொந்த பூமியிலேயே இருப்பறுத்து  அகதியாக்கி  வாழ்வின் வனப்பை சிதைத்த   நாள்.  

1990......ஒக்தோபர்....30......

அதிகாலையில் காற்றைக் கிழித்தொலிக்கும்   ஒலிபெருக்கிதான் தம் மூச்சைப் பிளக்கும் அதிர்வுகள் என அப்பாவி முஸ்லிம்கள் அறிந்திருக்கவில்லை. 

'  துரத்துவார்கள்... துரத்துவார்கள்' 

என காதுகள் ஏந்தியிருந்த சப்தங்கள் வெறும் வதந்தியே என நம்பியிருந்த முஸ்லிம் மக்கள் தாம் இரண்டு மணித்தியாலத்தில் வெளியேற்றப்படுவோம் எனக் கனவிலும் நினைத்திருக்கவேயில்லை.   போராட்ட வீரியம் யாழ்ப்பாண சோனகதெருவின் அனைத்து ஆண் மக்களையும் ஜின்னா மைதானத்தில் திரட்டியது. அந்தக் கணத்தில்கூட தாம் வெளியேற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையில் கதவுகளை நன்கு இறுக்கி சாத்தி பூட்டி விட்டே சென்றார்கள். காற்றை நனைக்கும் நீர்த் துளிகள் தமது குடும்பங்களின் கண்களில் நிறையும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. தமது தாயக பூமியில் தமது வேரூன்றல் நிலையானதென்ற நப்பாசையில் அக்கூட்டங்களில் தரித்து நின்ற முஸ்லிம் தலைமைகளின் செவிகளில்   தீயினை வார்த்தனர். இன்னும் இரண்டு மணித்தியால காலக்கெடு அவர்களின் பாரம்பரிய இருப்பை அறுக்கும் வாள். அராஜகம்  ஆணவம் கொண்டால் நல் இதயங்கள் இற்று விடுமபோல்;. 

கடிகாரம் காலை ஏழு மணியைக் கூடத் தொடவில்லை. முஸ்லிம்கள் தம் தாயக பூமியிலிருந்து அறுத்தெறியப்பட்டார்கள். ஒரு தொன்மையான சமூகம் நடுத்தெருவில் நடைப்பிணமாகி நடை பயின்றது. ஆயுதங்களுடன் மறுத்துப் பேசாத அப்பாவிகளான முஸ்லிம்களின் உணர்வுகள் கதறின. சோனகதெரு வீதியெங்கும் பெண்கள், குழந்தைகளின் அழுகைகள் வெடித்தன. தாம் வாழ்ந்த தாயக பூமியிலிருந்து தூக்கியெறிப்பட்ட அந்த நொடியில் அகதி வாழ்வும் உரிமையாக்கப்பட்டது. அவலம் இனி நிரந்தரம்.......முஸ்லிம் தெருக்களிலேயே அமைக்கப்பட்டிருந்த   சோதனைச் சாவடிகள் மூலம் மக்கள் தம்மோடு கொண்டு சென்றிருந்த ஆடை ஆபரணங்கள் பணம் உள்ளிட்ட பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நன்கு திட்டமிட்ட முறையில் முஸ்லிம்களின் அசையும்  அசையாச் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 

சில நாட்கள் மனோகரா தியேட்டரில் அடைபட்டு  கேரதீவில் பரிசில்கள் கவிழ்ந்து நீரில்  நனைந்து  சேற்று சகதியில் சில நாட்கள் நகர்ந்து  அந்தரித்து  உறவுகளை இழந்து  பறிகொடுத்து  வறுமைப்பட்டு  வாழ்வின் வனப்பழிந்த அந்த நடைப்பயணங்களை இன்று நினைத்தாலும் கண்களின் மடல்களைக் கிழித்து கண்ணீர்ச் சுரப்பிகள் வெடிக்கின்றன.  அன்று சோனதெருவிற்கு இதயம் இருந்திருந்தால் முஸ்லிம்கள் வடித்த கண்ணீர்க் கனத்தை உலகறியச் செய்திருக்கும்.

முஸ்லிம்கள் வெளியேற விதிக்கப்பட்ட அந்த இரண்டு மணித்தியால காலக்கெடு அவகாசம்..

வலிகள் முட்களாகி தைத்த தருணங்கள் ஆகும்.   தாம் வாழ்ந்த வீடு  தாம் திரிந்த தெருக்களை கைவிட்டுச் சென்ற அந்த அவலம் நிறைந்த தருணங்களை கண்ணீர் மட்டுமே தொட்டு நின்றது.   போர் சார்ந்த அசாதாரண சூழ்நிலையில் தம்மை பலிகொடுத்தும் சொத்திழந்தும் வாழ்ந்து வந்த நிலையிலும்  வடபுல முஸ்லிம்களை அகதியாக்கி அலையவிட்ட அந்த ஒக்தோபர் என்றும் துன்பம் உறிஞ்சிய கரிய நாள்தான். 

கோரமான சோகம் சுமந்து கேரதீவு பரிசில்களில் தம்மை ஏற்றி நடைப்பிணமாக நடைப் பயணத்தில் பல நாட்கள் அலைந்து ஒக்தோபர் ஐந்தாம் திகதியளவில் வவுனியா பூந்தோட்ட முகாமை அடைந்த முஸ்லிம் மக்கள் அன்று சேற்றுப் பாதைகளில் கால் புதைத்து பயணித்த  அவலம் எத்தனை நூற்றாண்டு கழிந்தாலும் அழியாது. நடந்து நடந்து வலுவிழந்த கால்களுக்கெல்லாம் வவுனியா பூந்தோட்ட அகதிமுகாம் பூங்காவனம்தான். அவியாத பருப்பும் கரட்டும் சோறும்கூட அமிர்தம்தான். எங்கு போவது? எப்படி வாழ்வது? இருட்டுக்குள் நின்று தேடும் இந்த விடியல் தொலைபுள்ளிதான்.

தாயகம் துரத்தியடித்தபோது அடுத்தவர் அடைக்கலம் தந்தார்கள் . அரவணைத்தார்கள். ஆறுதல் சொன்னாரகள் . ஆனாலும் இதயத்தின் ஓர் முலையில் வலி. அது பிறப்பிடமில்லையே.. எத்தனை நாள்தான் அடுத்தவர் வீடு. அறியாத முகங்கள்  மொழிப் பிரச்சினை  வாழ்க்கையை  நகர்த்திச் செல்லவிடாமல் முட்டுக்கட்டையிடும் நலிவான பொருளாதாரம், உலர் உணவுக்காக கச்சேரிக்கும்  பலசரக்குக் கடைக்குமிடையில் அலைந்து திரியும் நடைச்சுமை. வேற்று முகம் காட்டும் சில பாடசாலைகள் என அத்தனை சவால்களுக்கும் ஈடுகொடுத்து  ஈடுகொடுத்து வாழ்ந்து .விரைவில் தாயகம் மீளலாம் என்ற நம்பிக்கை வளர்த்து எதிர்பார்ப்புக்கள் நிறைத்து எத்தனை நாட்கள்தான் காத்திருப்பது. 

அரசியல் பலமில்லாத அகதி வாழ்வு வாழ்க்கையைக் கரைத்தது. நம்பிக்கையும் கரைந்தது. பலர் தமது தேவைகளுக்குப் பொருந்தக்கூடியதாக தம்மைத் தாங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலைகளோடு பொருந்திக் கொண்டார்கள். உறவுகளைத் தொலைத்து பல திசைகளிலும் பிரிந்து வாழும் அந்த வாழ்வின் வலியை அகராதியில் தேடினால் அது முஸ்லிம்களைச் சுட்டி நிற்கும்.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக தாயக பூமியில் அனுபவித்த போர் வலிக்கு நிவாரணமோ இந்த அவலம் நிறைந்த அகதி வாழ்வு. இரு தசாப்தங்களுக்கும் மேலாக இழுத்தடிக்கப்பட்ட இந்த அகதி அவலத்தில் பல உயிர்கள் மண்ணறை வாழ்விற்குள் தம்மை அடக்கிக் கொண்டார்கள். இளமையில் நரை திரண்டு வறுமைச் சுமையில் சோபையிழந்த ஆரோக்கியமற்ற சமூகமாக நம் சமூகம் உரு மாறினார்கள். தனிக் குடும்பங்கள் பல குடும்பங்களாகப் பெருகி தேவைகளுக்கான போராட்டங்கள் வெடித்தன. எள்ளளவான வாழ்வாதார உதவிகள் இம்மக்களின் ஏக்கம் தீர்க்க போதியதாக இருக்கவில்லை. தமது தாயக பூமியில் தலைநிமிர்ந்து வாழ்ந்த பல முகங்கள் அடுத்தவரிடம் வாழ்வாதாரங்களுக்காக கையேந்தின. எனினும் கெடுதலிலும் நன்மையிருப்பதைப் போன்று சோனகதெருவின் நாற் சுவருக்குள் வாழ்ந்த பல முகங்கள் நாட்டின் பல பகுதிகளின் காட்சிகளுக்கும் சொந்தமானது. வறுமையை வெல்லும் வைராக்கியத்தில் பல இளையவர்கள் கல்விக்குள் தம்மை நன்கு உட்படுத்தி கற்றோராக வெளியேறத் தொடங்கினார்கள்.  

இரு தசாப்தங்களிற்கும் மேற்பட்ட காலம் ..... 

  காலப்போக்கில் முஸ்லிம் மக்களின் தேவைகளும் பெருகின. சலித்துப் போன அகதி வாழ்விலிருந்து மீண்டெழ காலம் நிர்ப்பந்தித்தது. தாமாகவே தமது தாய பூமியை விட்டொதுங்கினார்கள். தமது பாரம்பரிய காணி,  வீடு நிலங்களை குறைந்த விலைகளுக்கு தமிழ் மக்களுக்கு விற்றார்கள். தாம் வாழ்ந்த இடங்களிலேயே தமது நிரந்த குடியேற்றங்களை அமைத்துக் கொண்டார்கள்.   போராட்ட நிஜ வாழ்வின் ஓர் பகுதியாக தமது பிறப்பிட வாழ்வின் ஞாபகங்களைப் பொருத்திக் கொண்டார்கள்.
 
2010 ஆம் ஆண்டு வடபுல யுத்தம் முடிவுறுத்தப்பட்டதும்  அங்கு நிலப் புலச் சொத்துக்களை வைத்திருந்த முஸ்லிம் மக்கள் மெல்ல மெல்ல மீள்குடியேற்றப்பட்டார்கள். மீள்குடியேறினார்கள். யானைப் பசிக்கு சோளப் பொறியாம்..... போராடி வாழ்வாதாரங்களைப் பெறும் துன்பியல் நிலைக்கு முகங்கொடுத்தார்கள். கொடுக்கின்றார்கள். பிள்ளைகளின் கல்வி  தொழில்  வாழ்வியல்சார் தேவைகள் என்பன ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக மந்த கதியில் மீள்குடியேற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது...கொண்டிருக்கின்றது. மீள்குடியேற்றம் சார்பான அபிவிருத்தியின் விளைவாக இறைகூடங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் இரு கண்களாக விளங்கிய யா/ஒஸ்மானியாக் கல்லூரி, யா/கதீஜா பெண்கள் கல்லூரி மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சோனக தெருவில் பாலர் பாடசாலைகளும் அஹதிய்யாக்களும் மக்தாப்களும் அறிவூட்டிக் கொண்டிருக்கின்றன. 

பழைய இரும்பு வியாபாரங்கள், கூலித் தொழில்கள்,  சில தனவந்தர்களின் வியாபார நிலையங்கள் என்பன மீள்குடியேற்றப்பட்ட யாழ்ப்பாண மக்களின் பொருளாதாரம் சேர்க்கும் வளங்களாக   காணப்படுகின்றன. பாடசாலைகள் இயங்குகின்றன. ஆனால் கற்றலில் நாட்டம் குறைந்த மாணவர் சமுதாயம் இடப்பெயர்வின் விளைவுகளாகக் காணப்படுகின்றனர். வாழ்வாதரங்களை நம்பி வாழும் பலரே இன்றைய மீள்குடியேற்றவாசிகள். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் என்னும் பேசு பொருளில் அரசியல் காய் நகர்த்தப்படுகின்றதே தவிர இன்னும் முழுமையான மீள்குடியேற்றத்திற்கான  நடவடிக்கைகள் முழு மூச்சாக செயற்படுத்தப்படவில்லை. மெது மெதுவாக முஸ்லிம் பெயர்களைத் தாங்கிக் கொண்டிருக்கும் சோனக தெரு வீதியின் தனித்தன்மை கூகுள் வரைபடத்திலிருந்து நீங்கிக் கொண்டிருக்கின்றன. பல கற்றவர்களைக் கொண்ட யாழ் சமூகத்தில் தற்போது தரித்து நிற்பவர்கள் சொற்பமே. இன்று அதிகமானோர் மீள்குடியேறியுள்ள முஸ்லிம் குடியிருப்புப் பகுதியாக பொம்மைவெளியும் அதனைச் சூழ்ந்துள்ள பகுதிகளுமே காணப்படுகின்றன. தாயகப் பற்றை மறந்து வழ்வாதார உதவிகளுக்காக மாத்திரம் வாழும் குடியிருப்புக்களாக முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நிகழுமாயின் அது வெறும் கண்துடைப்பே.! 

 சாம்பர் மேட்டிலிருந்து இம்மக்கள் மீள எழுதல் என்பது வலியும் சவாலுமிக்கதுமானதாகும். இருந்தும் சொற்ப தொகையினராவது மீள்குடியேறியதால் இன்று இறையில்லங்களின் பாங்கொலியோசை முஸ்லிம்களின் இருப்பை பறைசாட்டுகின்றது. இழந்து போன சோனகதெருவின் பிரகாசம் இன்னமும் தோன்றவில்லை. எனினும் மெது மெதுவாக ஓர் தொலைபுள்ளியில் வரலாறு சொல்லக் கூடிய மையப் புள்ளியில் முஸ்லிம் மக்கள் தம்மைப் பொருத்திக் கொள்வார்கள் என்பது நிதர்சனம்.

இரு தசாப்தங்களுக்கும் மேலாக சிதைக்கப்பட்ட மனைகள் பல இன்னும் நிவாரணங்களின்றி கிடக்கின்றன. தொடர் போர்,  இடப்பெயர்வு என்பன ஏற்படுத்திய மன அழுத்தங்களால் பலர் உளநலக் குறையோடு போராடிக் கொண்டிருக்கின்றார்கள். சவால்மிக்க மீள்குடியேற்றம் சந்திக்கும் இன்னொரு பிரச்சினையாக கலாசார சீரழிவுகளுடன் கூடிய போதைவஸ்து பாவனை காணப்படுகின்றது. இங்கு இருக்கின்ற சொற்பமானோர்களுக்கிடையில் காணப்படும் அரசியல் பிணக்குகள் கூட மீள்குடியேற்றச் செயற்பாடுகளை மந்தப்படுத்துகின்றது. உறுதியான அரசியல் பலம் ஏற்படாதவரை திடமான சமூக ஒழுங்கமைப்பும் ஏற்படப்போவதி;ல்லை. மக்களின் பலகீனங்களை தமது பலமாக்கி அரசியல் நிகழ்த்தப்படுமானால் அது ஆரோக்கியமான மீள்குடியேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. தாயக பூமியை மறந்து தமது தற்போதைய இருப்பிடத்திற்கேற்ப வசதியான புதிய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் மீண்டும் வசதியும் வளமும் குறைந்த மீள்குடியேற்ற வாழ்க்கைக்குத் திரும்புவார்களா என்பதும் கேள்விக் குறியே! 

  தமது பிறப்பிட வதிவிடங்களிலிருந்து குடியிருப்புக்களை நகர்த்திச் சென்றவர்கள் எல்லோரும் மீண்டும் தமது தாயக பூமிக்கு தம்மை நகர்த்தாதவரை சோனகதெருவின் மீள்குடியேற்றம் வெறும் வார்த்தைகளோடு மாத்திரமே கலந்திருக்கும். சிதறிச் சென்றவர்களை மீள ஓர் புள்ளியில் இங்கு மையப்படுத்த வேண்டுமானால் ஒத்திசைவுடன் கூடிய சமூக சிந்தனை ,கல்வி, அரசியல் பலம் தொழில்சார் அபிவிருத்தி  பண்பாடு சார் விழுமியங்கள் பேணக்கூடிய வாழ்க்கைமுறை ஏற்படுத்தப்படல் வேண்டும்.

இறையில்லங்களையும்  கல்விக் கூடங்களையும்  வாழ வைத்த மனைகளையும் காத்தவாறும்   சின்னப்பள்ளிவாசல் மையவாடியில் நிரந்தரத் துயில் கொள்ளும் நம் முன்னோர்களைக் காத்தவாறும் சவால்மிக்க இந்த மீள்குடியேற்றச் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் முன்னெடுப்பது   ஆரோக்கியமான ஓரு சமூகப்பணியாகும். இறையாசியுடன் சவால்களை சாதனைகளாக மாற்றும் நம் முயற்சிகளின் பயனாக எதிர்காலத்தில் நமது பசுமையான சோனகதெரு மீள உருவாக்கப்படுமென்பதே இங்கு வாழும் ஒவ்வொரு மக்களின் அவாவும் எதிர்பார்ப்புமாகும். நிகழ்காலத்தில் கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் எதிர்காலத்திற்கான பாடங்களாகும் எனும் எண்ணக்கருவோடு நமது மீள்குடியேற்றப் பயணத்தை வெற்றிகரமாக்குவோம்.  'இனச்சுத்திகரிப்பால் அன்று அறுக்கப்பட்ட நமது இருப்புக்கள் மீண்டும் விதையாகி விருட்சமாகும் காலம் தொலைவில் இல்லை. 

Jancy Caffoor
Jaffna



 

2019/06/28

முரண்பாடுகள்

Image result for முரண்பாடுகள்

பன்மைச் சூழலில் பல்வேறு இனங்கள் வாழும் போது அவர்களுக்கிடையில் ஏற்படக் கூடிய சிறு சிறு பிரச்சினைகள் பாரிய அழுத்தம் தரக்கடிய விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  இனங்களுக்கிடையிலான பரஸ்பர நல்லெண்ணம், ஒற்றுமை, நம்பிக்கை குறைவடையும் போது முரண்பாடுகள் இயல்பாகவே தோற்றம் பெறுகின்றன. பாதிக்கப்படும் சமூகம் அடுத்த சமூகங்களின் விமர்சனங்களுக்கும், அழுத்தங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத நிகழ்வாகியுள்ளது. ஒருவரின் பலம், மற்றையவரின் பலகீனத்தை தீர்மானிக்கிறது. பாதிக்கப்படும் சமூகத்தின் கஷ்டங்களும், நஷ்டங்களும், துன்பங்களும் மற்றைய சமூகத்தின் ரசிப்பாகி போய் விடுகிறது. சந்தேகங்கள் தொடரும் போது சந்தோசங்கள் ஓடிப் போய் விடுகிறது. 

அந்த வகையில் அண்மைக் காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட அழுத்தங்களும், சவால்களும் இன்னும் முற்றுப் பெறாத பனித் தூறல்களாகவே  உள்ளன. அப்பின்னனியில் இன்று (28.06.2019)  நான் சந்தித்த இந்த அனுபவத்தையும்  பதிவிடுகிறேன்.

பணம் வைப்பில் இடுவதற்காக ................ வங்கி சென்றேன். வழமை போலவே படிவங்களையும் நிரப்பியவாறு, கவுண்டரில் வரிசையாக நின்று கொண்டிருந்தேன்.  அப்போது வங்கி பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் என்னைத் தேடி வந்ததும்  எரிந்து விழுந்தார்.

"உங்களுக்கு தெரியாதா?  இங்கு கேமரா இருக்குது. தலையில் மூடி இருக்கும் சீலையைக்  கழட்டுங்கள்" என்றார்.

நான் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம்  எதுவும் கதைக்கவில்லை. "எய்தவர் யாரோ இருக்க அம்பை நோவானேன்". மனம்  கொதிநிலையில் வெந்து கொண்டிருந்தது. என் கோபத்தின் அலைவை நின்று கொண்டிருந்த அந்தப் பாதுகாப்பு உத்தியோகத்திடரிடம் வெளிப்படுத்தாமல், வரிசையில் இருந்து நகர்ந்தேன். என் கால்கள் வங்கி முகாமையாளர் அறையில் போய் நின்றன. அவர் யாருடனோ கதைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னை அழைக்கும் வரை பொறுமையாய் காத்து நின்றேன். 

அவர் என்னை அழைத்ததும் உட்காரச் சொன்னார். என்னை அறிமுகப்படுத்தியவாறே நடந்ததைக் கூறி   முஸ்லீம் பெண்கள் வங்கிக்கு வரும் போது தலையில் முக்காடு போடக் கூடாதா Sir?  அப்படி ஏதும்  சுற்று நிருபம்  இருக்கின்றதா? என்றேன்.  மானேஜர் அதிர்ந்தவாறே, 

"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உங்களுக்கு யார் சொன்னது?"

என்றவாறு அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரைத் தேடி வெளியே சென்றார். நானும் அந்த பாதுகாப்பு அதிகாரியை காட்டினேன். வங்கி முகாமையாளர் அந்த ஆளைப் பெயர் சொல்லி அழைத்தார். அந்த நபர் ரூமுக்கு வந்ததும் என் முன்னிலையில் நடந்ததை விசாரித்தார்.

 "அவ முகத்தை மூடியா  வந்திருக்கிறார். முகம் தெளிவாத் தெரியுதுதானே?  எத்தனை தடவை விளக்கி சொல்லியும் இப்படி இருக்கிறீர்.  இனி இப்படி செய்தால் உம்மை இங்கே வைத்திருக்க மாட்டேன்"

 என்று  சற்றுக் கடுமையாக நியாயத்தின் பக்கம் நின்று பேசினார். ஏசினார். முகாமையாளர் தொனி உயர்ந்ததும் பா.ஊ குரல் பணிந்தது.

"மன்னியுங்க  Sir"

 என்றவாறு பாதுகாப்பு ஊழியர் வங்கி முகாமையாளரிடம் மன்னிப்புக் கேட்டதும், மனேஜரோ "என்னிடம் சொல்லாமல் அவரிடம் கேளும்" என என்னைச் சுட்டிக் காட்டினார்.

 நானும்  அந்த பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கலாச்சாரம் பற்றியும் கொஞ்சம் சூடாக சற்றுக் கோபமாக கதைத்தேன். முகாமையாளர் எதுவும் சொல்லாமல் என் வார்த்தைகளை அங்கீகரித்துக் கொண்டிருந்தார்.

"இது எனக்காக மட்டும் இல்லை. இங்கே வாற ஏனைய முஸ்லிம் பெண்களுக்கும் சேர்த்துத்தான் கதைத்துக் கொண்டிருக்கிறேன். உங்கட கலாச்சாரத்தை நாங்க அவமதிச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.  நானும் இந்த ஊர்தானே?  துவேசம் காட்டாதீங்க."

பா.ஊ தலையை குனிந்து கொண்டிருந்தார். முகாமையாளர் முஸ்லிம் பெண்கள் ஆடை தொடர்பாக நன்கு விளக்கியும் கூட, கீழ்நிலை உத்தியோகத்தர்கள் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ளாத நிலையே இந்த சம்பவத்தின் பின்னனி !

என் முறைப்பாட்டுக்கு உடன் தீர்வு தந்த அந்த  மேலதிகாரி மீது எனக்கு மதிப்பு ஏற்படவே, இதனை மேலும் பிரச்சினை ஆக்காமல் அந்த தடத்தை விட்டு மெல்ல நகர்ந்தேன். இங்கு வாழும் என் சமூகப் பெண்களுக்காக  நானும் ஏதோ சிறு துளியாவது செய்திருக்கிறேன் எனும் மன நிறைவு எனக்குள்!

- ஜன்ஸி கபூர் -
   28.06.2019

2019/06/22

அன்றும் இன்றும்

வயது  என்பது உடல் சார்ந்த பெறுமானமே தவிர அகத்தின்  பெறுமதியல்ல. ஆனாலும் நமக்கு கிடைக்கும் அனுபவத்திட்கும், வயது எனும் எண் பெறுமானத்திற்கும்  நேர்ப்பெறுமானத் தொடர்பு  உண்டு. அந்த வகையில் வயது அதிகரிக்கும் போது அனுபவச் சேர்க்கை காரணமாக மனமுதிர்ச்சி உண்டாகிறது.  

அன்று.................!

2012 ஆம் ஆண்டு நான் இணையத்தோடு தொடர்புள்ள பயிற்சியில்  ஈடுபட்ட போது இந்த வலைப்பூவை உருவாக்கினேன். வலைப்பூ மூலம் முழு உலகையும் சில நொடிகளில் சுற்றிய மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியில் எதையாவது எழுதும் ஆர்வம்  மனதைப்  பிறாண்ட கற்பனைக்குள் நான் வசியமானேன்.  

மனம் நினைப்பதை எல்லாம் விரல்கள் வாசித்தன ஆர்வமாய்.  எழுத்துக்களால் ஒரு அடையாளம் கிடைக்க நிறைய போராட வேண்டி இருந்தது. ஒரு ஆக்கம் எழுதும் போது மகிழ்ச்சி வசமானது. நானே என் எழுத்துக்களுக்கு வாசகியானேன். அந்த மகிழ்ச்சி தந்த ஆர்வம், அதிர்வு இன்னும் எழுதத் தூண்டியது. பக்கங்கள் நிறைய, நிறைக்க   எழுதினேன்.  நான் எனும் உலகத்துக்குள் "நானே" வாசகியாய், விமர்சகியாய் உருக் கொண்ட தால் நிறைய எழுதவேண்டும் எனும் தாகம்  மனதுக்குள் கருக் கொண்டது. ஆனால் அப்படைப்பின் கனதி பற்றி மனம் எடை போடவில்லை. என்னைச் சுற்றி இருக்கும் உலகத்தில் எனது படைப்புக்களுக்கு வெளியுலகில் விமர்சனம் இருக்கும் எனும் எதிர்பார்ப்பு  ஏற்படவில்லை.

 ஆனால் ............

காலம் கடந்தது. மனம் முதிர்ச்சி அடைய பட்டம், பதவிகள் அடையாளமாகின. என்னைச் சுற்றி இருந்த உலகம் விரிந்து சென்றது. விமர்சகப் பார்வைகளும் விசாலமாகின.   

கற்பனைகள் ஒடுங்கிக் கொண்டன தானாக. யதார்த்தங்கள் சமீபமானது. ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் காண அருகே ஆயிரம் பேர்களின் விம்பப் பார்வைகள் விழுவதை போன்ற பிரமை. எதை எழுதினாலும் சரி எனும் நினைப்பு  மறைந்து, எதை எழுதுவதென்று யோசித்து நின்றது. படைப்புக்களில் இருந்த அலங்காரம், கருத்துச்செறிவுள்ளதாக மாறப்  போராடியது.  வெளியே அவதானித்துக் கொண்டிருந்த விமர்சகர் உலகம் பெரும் அண்டமாக விழி விரித்துக் காத்து நிற்பது   புரிந்தது.

ஒவ்வொரு அடியும் மிக  நிதானமாக பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது.  சின்ன வயதில் எதையும் எழுதலாம். ஆனால் இப்போது கருத்துச் செறிவுடன், புலமையும் கைகோர்த்து பயணிக்க வேண்டிய அவசியம் புரிந்தது.  நிஜங்களின்  செறிவின் முன்  கற்பனைகள்  யாவும் தடுமாறி ஓடி ஒளிந்து கொள்ள, மெதுவான என் எழுத்துப் பயணம் எனது அடையாளத்தைச் சிதைக்காதவாறு பயணிக்க ஆரம்பித்தது. 

இப்பயணத்தின் பரிமாணம் இப்போதெல்லாம் நிதானித்து, மனசுக்குள் ஒரு தடவை  எழுதியவற்றை சரி பார்த்து, கனதியுடன் படைப்பினை எனக்குள் விமர்சித்தே எழுதுகோல் பிடிக்கிறது. அலங்காரம், கற்பனை அதிகம் தொட்டுக்க கொள்ளாத யதார்த்தமான படைப்பினை நோக்கியதான அடுத்தவர் எதிர்பார்ப்பு பார்வையை நோக்கிய திசையில் எனது விரல்கள் பயணிக்க   ஆரம்பித்து விட்டன.

- Jancy Caffoor -
  22.06.2019

மீளும் ஆளுமை

Image result for மீளும் ஆளுமை

வட மாகாணத்தில் அன்றைய காலங்களை  விட இன்றைய  கல்வி நிலை சற்று தாழ்ந்தே உள்ளது. இது யுத்தத்தின் தாக்கமாகவும்  இருக்கலாம். கற்றல் பெறுபேறுகளில் ஏறுமுகம் காண மாணவர்களின் கற்றலோடு ஆளுமை விருத்திக்கான உள பரிகாரத்தையும் ஏற்படுத்துவதே சிறந்த தீர்வாக இருக்கும் என கருதப்படுவதால், பாடசாலை மாணவர்களுக்கு ஆளுமை விருத்திக்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. அந்த வகையில்  யோகா பயிற்சியளித்தலும் கற்றல் ஒரு பகுதியாக தற்போது கல்வித்துறையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு அம்சமாக 21.06.2019  அன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  யா| இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற  "மீளும் ஆளுமை"  அங்குராப்பண வைபவ நிகழ்வு  என்னையும் ஒரு கணம் சிந்திக்க வைத்தது .

அங்கு கூறப்பட்ட வளவாளர் கருத்துக்களோடு என் மனதையும் உள்வாங்கிக் கொள்ளுகிறேன். மனம் சுத்திகரிக்கப்படும் உணர்வு. மனதின் குழப்ப அலைகளை யாரோ நகர்த்தும்  பிரமை! 

புத்தி என்பது சரியான தீர்மானம் எடுக்கும் ஆழ் மனதின் பகுதி. இந்த மனமும், புத்தியும் ஓர் வழியில் பயணிக்கும் போதே உள ஆரோக்கியம் கிடைக்கும்.  இந்த உள அமைதிக்கு ஆன்மீகம் பாதை அமைத்துக் கொடுக்கின்றது. எனவே நாம் உள அமைதிக்கான வழிகளில் நம் மனதை நகர்த்த வேண்டும். ஆன்மீகமும், ஆரோக்கியமும் சீரற்று    போகுமானால் மனம் குழம்பி விடும்.  

மனம் என்பது எண்ணங்களை உருவாக்கும், உணர்ச்சி மயமான, ஆத்மாவின் ஒரு பகுதி. நம்மை சுற்றி படரும் பலவித எண்ணங்கள் நிமிடத்துக்கு நிமிடம் மாறிக்கொண்டே இருக்கிறன. இந்த மனதில் உருவாகின்ற தேவையான, தேவையற்ற  எண்ணங்களே   நம்மை வழி நடத்துகின்றன.

அனுபவங்கள் பதிந்து கிடைக்கும் பகுதி ஆழ்மனம் ஆகும். சூழல் நமது அனுபவங்களுக்கான ஒரு பொக்கிஷம். நாம் தினமும் பலவிதமான அனுபவங்களை அங்கிருந்து பெற்றுக் கொள்கின்றோம். அவை நம் எண்ணங்களுடன் கலந்து வடிவமைக்கப்பட்டு நடத்தைகளாக சீரமைக்கப்படுகின்றன. புத்தி என்பது ஆழ்மனது உள்வாங்கிக் கொண்ட உணர்வுகளை கிரகித்தல் அல்லது சிந்தித்தால் ஆகும்.  இந்த ஆழ்மனப் பதிவில் இருந்தே நேர், மறை எண்ணங்கள் நமக்குள் இருந்து உருவாகின்றன. புத்தியை முடிவெடுக்கும் திறன், அபிப்பிராயம் என்றும் கூறலாம். 

எண்ணப் பெருக்கத்தை புத்தி சீர் செய்யும். சில வெளியேறும், சில உள்ளே புகுந்து அலைக்கழிக்கும். நமது எண்ணங்களை செயலோடு இணைப்பது, நமது திறமைகளை நினைப்பது, தூங்கும் முன்பு நல்ல செயல்களை மனதில் கட்டளை இடுவது என்பது நமது ஆழ் மனதை சீர்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனித்து வாழ முடியாது. அவன் சமூகத்தின் ஒரு கூட்டு. இச்சமூகத்துடன் சமாதானம்,  புரிந்துணர்வுடன் இணைந்து வாழும் போதே சந்தோஷமான வாழ்வும் நமக்குச் சொந்தமாகின்றது. நாம் நம் மனதை ஒருமைப்படுத்தி சுய விசாரணை செய்யும் போது ஆழ்மனம் தன்னை ஒழுங்கு படுத்துகிறது.
  • நான் யார்?
  • என் இலக்கு என்ன?
  • எனக்கு நன்மையானவை எவை?
  • நான் தவிர்க்கவேண்டியவர்கள் யார்?
  • எப்படி என் வாழ்வுக்கான பாதையை நான் வகுக்க வேண்டும்?
இவ்வாறாக பல வினாக்கள் தொடுத்து நம்மை நாமே சுய விசாரணை செய்ய வேண்டும். அப்போது நம் மனதுக்குள் ஆன்மீகம் உள்ளாந்த புரட்சியை ஏற்படுத்துகிறது.  நமது வாழ்வின் ஒவ்வொரு சம்பவத்திற்கும் நானே பொறுப்பு எனும் உணர்வானது நமது எண்ணத்தின் முதன்மைச் சாவி ஆகிறது.  சூழலில் நாம்  கண்களால் காணும் காட்சிகள்  யாவும்  அவதானமாக மாறி தாக்கம் செலுத்துவதால் நடத்தை கோலங்களினுடாக நமது ஆளுமையும் பாதிக்கப்படுகிறது.  

    நாம்,  நமது வாழ்க்கை எனும்போது அந்த வாழ்க்கையின் பொறுப்பாளி நாமே! மனிதன் தானாக வாழும் போது சக்தி அதிகம். என்னை, எனக்காக வாழும் போதே அந்த வாழ்க்கை சிறப்பு பெறுகின்றது. உறவு, சொத்து, கல்வி, பட்டம், பதவி என்பவை நமக்கு பிறகே!   

என் எண்ணங்களோடு, என்னைச்  செலவழித்து மீண்டும் என்னுடன் என்னைக் கொண்டு செல்லுதல் மீளும் ஆளுமை எனப்படுகிறது ஒவ்வொருவரும் தமது சுய ஆளுமையை உணர்ந்து வாழ்தலே சுதந்திரமான வாழ்க்கை. ஆனால் நாம் எல்லோரும் வெளிவாரி வாழ்க்கையிலே கவனம் செலுத்துகிறோம்.  வாழ்க்கையின் ஆரம்ப அத்திவாரம் பலமாக இருப்பின் எதிர்காலம் சிறக்கும் 
என்பதில் ஐயமில்லை.

- Jancy Caffoor -
  22.06.2016 

2019/06/16

கல்விப் பட்டங்கள்



வவுனியா கல்வியற்கல்லூரியில் என் பாதங்கள் பதிந்து பலவருடங்களும் கழிந்துவிட்டன.

பல ஆசிரியர்களை சமுகத்திற்குள் சேவைக்காக பயிற்றுவிக்கும் அக் கூடத்தின் நிழற்பரப்பில்தான் எனது கல்விமாணிப் பட்டப்படிப்பின் கூடமும் அமைந்திருந்தது

வவுனியா பூந்தோட்டத்திற்கே ஓர் முகவாயிலாக இக் கல்வியியற் கல்லூரி திகழ்கின்றது. இங்கு நான் என் கற்கையறிவுடன் இணைந்த நிலையில் பல நல்ல, என் தொழில் வாழ்விற்குரிய அனுபவங்களையும்  உள்வாங்கியுள்ளேன்..


கல்லூரிக்குள் நுழைந்ததும் ஆசிரியர் மாணவர்களின் பல சிந்தனைத்துளிகள் காட்சிக்குள் வைக்கப்பட்டிருக்கும். அவற்றை ஒவ்வொருமுறையும் விழிகளால் நுகர்ந்து, சிந்தைக்குள் நிரப்பியே உட்செல்வேன்!


இந்த நுழைவாயில் தந்த அறிவும் அனுபவமும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதுகல்விமானி வரை என் தொழிற்றகைமையை உயர்த்தியது.

கல்விக்குதான் தடையேது!

எல்லாப் புகழும் இறைவனுக்கே!















- Jancy Caffoor-
   16.06.2019


2019/06/05

நன்றி பகிர்வு

Image result for roses

தீ ஜுவாலை அனலுக்கு மத்தியிலும் அல்ஹம்துலில்லாஹ்......!

அழகான பெருநாள் மலர்ந்துள்ளது.  இருந்தும் வாப்பா எம்மை நீ விட்டு நீங்கி மூன்று வருடங்கள்!  கண்கள் கருக்கட்டுகின்றது கண்ணீரைப் பிசைந்து
பிரிவு நீளும் போதுதான் நினைவுகளும் ஆழமாக ஊடுறுவி நிற்கின்றது போலும்.  மனதில் வாப்பாவும் பெருநாள் ஞாபகங்களினூடாக இன்றும் பயணிக்கின்றார் என்னோடு!

பெருநாளை உயிர்ப்பிக்கும் அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் இன்றும் என் மனதில் ஈரம் சேர்க்கின்றது. இந்த வருடம் என் பள்ளி நட்புக்களின் தோழமை வாழ்த்துக்களையும் சுமந்து பயணிக்கின்றேன். வாழ்த்து வாசத்தினூடு அன்பு பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள்.

- Jancy Caffoor-
   06.04.2019

2019/05/21

மாம்பழம்

Image result for mango sri lanka


விடுமுறை பொழுதொன்றின் காலை விடியலுடன் பொழுதும் குளிர்மையுடன் கலந்து கொண்டிருந்த நேரம் அது. தங்கை மகளை மேலதிக வகுப்புக்கு அழைத்து செல்வதற்காக முச்சக்கர வண்டியில் நானும் அம்மாவும் சென்று கொண்டிருந்தோம். காற்றின் சுகத்தில் லயித்தவாறு பார்வையை வெளி காட்சிகளில் வீசிக்கொண்டு வந்தேன்.  பார்வைப் புலத்தில்  குவியலாக வீழ்ந்த மாம்பழம் சிந்தையை வசீகரித்தது.

இப்போது மாம்பழ சீசன்தான். வீதி ஒரங்களில் குவியலாக ஆங்காங்கு மாம்பழங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் கூட,  இந்த குண்டு மாம்பழங்களின்  நிறமும் அழகும் வாயூறவைத்தது, 

"நல்ல மாம்பழங்கள்"

மெதுவாக அம்மாவும் நானும்  சொல்லிக்கொண்டோம். எப்படியாவது அதனை வாங்கி செல்ல வேண்டும் எனும் தீர்மானம் நெஞ்சில் ஆணி அறைந்தது. பிள்ளையை வகுப்பில் விட்டு விட்டு வீடு திரும்பும் போது வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கையில் காசு கொண்டு வரவில்லையே! உண்மை பொறி தட்டியது. ஆட்டோகாரர் நன்கு அறிந்தவர். குடும்ப பழக்கம். மெதுவாக அவரிடம் சொன்னேன்.

"காக்கா மாம்பழம் வாங்க வேணும். வீட்டை வந்ததும் தாரேன் பணம் இருக்குமா?"

புன்னகைத்தார். தன் பணப்பையை திறந்து நான் கேட்ட  500 ரூபாய் பணத்தை எண்ணி தந்தார். வாங்கி கொண்டேன். வாகனம் சிறு கதியோடு ஓடி அந்த மாம்பழம் விற்கும் ஆச்சியின் கடை அருகில் நின்றது. இறங்கி மாம்பழத்தை கையில் எடுத்தேன். குண்டு குண்டான கறுத்த  கொழும்பான். விலை கேட்டேன். சொன்னார்.
"குறையுங்கோ ஆச்சி" என்றேன். 5.00 ரூபாய் குறைத்தார். என் அம்மாவோ "இன்னும் குறையுங்கோ" என்ற போது அந்த ஆச்சிக்கு  கோபம் வந்தது. இதை விட குறைக்க முடியாது. சினத்தார்.

"அம்மா பாவம் விடுங்கோ காலை கைவிசேடம் நாம்தான் போல்"

அம்மாவை மௌனியாக்கி  விட்டு, மாம்பழங்களை என் கையில் உள்ள பணத்திற்கேற்ப தெரிவு செய்தேன். பணம் கை மாறியது. மிகுதி பத்து ரூபாய்!நானோ பெருந்தன்மையுடன் வேண்டாம் நீங்களே வைத்து கொள்ளுங்கள் என்றேன். அந்த ஆச்சியோ  சிறிது யோசனையின் பின்னர்

"வேண்டாம் பிள்ளை பத்து ரூபாய்க்கு ஒரு மாம்பழம் தரேன்"

 என்று அருகில் உள்ள பெட்டி திறந்து வில்லாட் மாம்பழம் தந்தார்.
Mango
சிறு தொகை பணமாயினும் அதன் பெறுமதியை மதித்த அந்த மாம்பழம் விற்ற ஆச்சி என் மனதில் உயர்ந்துதான் போனார்.

"சுரண்டல்" எனும் பெயரில் பணம் படைத்தவர்கள் பணத்தை ஏப்பம் விடும் போது அந்த ஏழை ஆச்சியின்  நேர்மையாக பணம் உழைக்கும் நினைப்பு என்னை கவர்ந்தது.

"ஆச்சி நாளைக்கும் வாரேன் "என்றவாறு மன நிறைவோடு ஆட்டோவில் ஏறினேன்.


-Jancy Caffoor-