About Me

Showing posts with label முகநூல். Show all posts
Showing posts with label முகநூல். Show all posts

2015/09/06

முகநூல்



ஈரப் பூக்களை உதறியவாறு
பேரிரைச்சலுடன் மழை
உருகியது உஷ்ணம் மட்டுமல்ல
என்னுள் உறைந்திருந்த
சிறு சோம்பலும் தான்!

சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு
இறுதியி லுரைத்தது
அருமையான கனவென்று

ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்
இழப்புக்கள் வரும்போதுதான்
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன

சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன
நம்முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்தால்
நிம்மதியும் மகிழ்வும் நம் வசமாகும்

                                                                                                                         நம் வார்த்தைகள்
பிறரைக் காயப்படுத்துமானால்
மெளனம் சிறந்தது
ஏனெனில்
அம்மெளனம் அவர்களின் உணர்வுகளை
நாம் மதிப்பதை உணர்த்தும்!


- Jancy Caffoor -
   09.06.2015

2015/08/30

முகநூல்


ஒருவர் புகழடையும் போதுதான்
அவர்மீதான அடுத்தவர் பார்வையும்
தீவிரமடைகின்றது
ஆக்கினையும்
ஆதரவும்
அவருக்கான கொடுப்பனவாகின்றன!
-------------------------------------------------------------
தன் தவறுகளை உணராதவர்கள்
அடுத்தவர் தவறுகளை விமர்சிப்பதற்கு தகுதியானவர் அல்லர்
--------------------------------------------------------------

கடலோரம்
வெண் மணல் துளைத்து
சங்கெழுதும் இரகஸியமதை
துள்ளி வரும் அலைகள்
மெல்லதை அள்ளி
கால்களைக் கிள்ளி
என்னுள் சொல்கின்றதே!

-----------------------------------------
அமைதியான தேர்தல்
சாமர்த்திய தீர்ப்பு
ஆனால்
அட்டகாசமான மந்திரி பதவி
ஆர்ப்பாட்டங்கள்
அட!
நாடு எங்கேயோ போகுது !
-------------------------------------------
ஆயிரம் நிமிட வேலைப் பழுவின் மத்தியில்
அறுநூறு நிமிடம் நினைப்பது காதல்
அறுபது நிமிடம் நினைப்பது பாசம்
ஆறு நிமிடயாவது நினைப்பது நட்பு
ஆரோ எவரோ
நினைப்பதே யில்லை!


- Jancy Caffoor -
   30.08.2015

2015/08/25

இதுவும்..............


இடம் - யாழ்ப்பாணம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி தமிழ் மக்களுடன் இனிமையான இடைக்கால தமிழ்ப் பாடல்கள்.  ஆனால் வவுனியா வந்ததும் சிங்களப் பாடல்கள் ஒலிக்கின்றன.
.
இடம் - அநுராதபுரம்
பஸ் பயணிக்கின்றது கொழும்பை நோக்கி சிங்கள மக்களுடன். சிங்கம் 1 தமிழ்ப்படம்
.
இதுவும் இன ஒற்றுமைதான்.....
--------------------------------------------------------------------------------

நாம் சந்திக்கும் ஏமாற்றுக்காரர்கள்தான் நமக்குள் எச்சரிக்கை உணர்வுகளை விதைக்கின்றார்கள்.
இடம் - கொழும்பு காலிமுகத்திடல்
வீடு திரும்பும் நேரம். அருகில் ஓர் ஆட்டோ நிறுத்தப்படுகின்றது. போக வேண்டிய இடம் சொன்னோம். ஏறுங்களென தமிழில் சொன்னான்.

ஓ முஸ்லிமா!

பயமின்றி ஏறினோம். ஆட்டோ புறப்பட்டது. இலகு பாதை இருக்க வேறு திசைகளில் ஆட்டோ ஓடியது. காரணம் கேட்ட போது  தனக்கு வீதி தெரியாது என போடு போட்டான். கடைசியில் எப்படியோ வீடு சேர்த்தான். ஆட்டோ வாடகை 700 என்றான்.

நான் கொடுக்க வில்லை. உன் தவறுக்கு நாம்.பணம்.தர முடியாதென்றேன். சரி 500 ரூபா தாருங்களென்றான். 1000 ரூபா கொடுத்தேன் மிகுதியை தரும்படி மிகுதி பணத்தை கையிலெடுத்தான்.

ஆனால்....

கண்ணிமைக்கும் நேரத்தில் மிகுதிப் பணத்தை தராமல் ஆட்டோ பறந்தது. சீ    இதெல்லாம் ஒரு பொழைப்பு. அந்த ஆட்டோக் கள்ளனை சபிக்கத்தான்முடிந்தது. அவனது நம்பிக்கைத் துரோகம் சிறந்ததோர் படிப்பினை எனக்கு!

- Jancy Caffoor-
      25.08.2015


முகநூல்



உணர்வு தொட்டு
உளம் வருடும் நட்புக்கு ஆயுள் அதிகம்....
------------------------------------------------------------------------------------

வானம் மஞ்சளை அப்பிக் கொண்டிருக்கும் மாலை நேரம்...
சற்று சூடான ஈரக் காற்றில்
ஷாம்பூ தேய்த்து குளித்த கூந்தலை...
சற்று காய வைத்து
தன் மடியில் கிடத்தி உலர்த்தும் அன்னையின் அன்பு...
சின்ன வயதின் பூரிப்பான ஞாபகங்கள்....

------------------------------------------------------------------------------------

எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிக்க தெரிந்தவர்கள்.
.வாழ்க்கையின் தடைகளை வெற்றி கொள்கின்றார்கள்.........

------------------------------------------------------------------------------------

அடுத்த நிமிடத்தை பற்றி நினைக்கும்போது....
இந்த நிமிடத்தின் சந்தோஷம் தொலைந்து விடுகின்றது....
------------------------------------------------------------------------------------

பிரச்சனைகளைக் கண்டு ஒதுங்கிப் போதல்
தோல்விகளுக்கான வரவேற்புரை....
----------------------------------------------------------------------------------
ஒரு ரூபாவாக இருந்தாலும் கூட, அது தவறிப் போகும் போதுதான் அதன் மதிப்பை நாம் உணர்கின்றோம்.....வலி கொள்கின்றோம்....
------------------------------------------------------------------------------------

வியர்வைக் குளியலோடு..
கொஞ்சம் வயிற்றை நிரப்பும் சில்லறைகளுக்காய்..
போராடி உழைப்போரைப் பார்க்கும்போதுதான்..
வீணாகச் செலவழியும் பணத்தின் அருமை புரிகின்றது.....
----------------------------------------------------------------------------------------------------------------


வானத்தில்.....
ஆங்காங்கு கருந் திட்டுக்களாய் மேகங்கள்..
யன்னலோரம்
உரசி வரும் காற்றில்
லேசா ஈரம்....
ஓஓ...
அதனால்தான்
உடம்பும் மனசும் இதமாக இருக்கின்றதோ...
பயணம் தொடர்கின்றது....


முகநூல்




வேண்டாம் என்றேன்
வேண்டும் என்றாய்
நெஞ்சில் திமிரு
கொஞ்சம் இருக்கு உனக்கு
-------------------------------------------------------------

புரிதல் கூட அன்பின் ஈர்ப்பே
புரிந்து கொள்ளாதவர்கள் பிரிவின் புதைகுழிக்குள் தம்மை புதைத்துக் கொள்கின்றார்கள்
பிரிவும் உறவும் காலத்தின் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------

பல பொழுதுகளில்
திமிர் கரைத்து
தோற்றுப் போகின்றோம் சிலரிடம்
அவர்கள்தான்
நாம் மாற்றங்களை வெளிப்படுத்த
கற்றுத் தருபவர்கள்!

----------------------------------------------------------------
விழிகளால் பருகிய அழகுதனை
மொழி பெயர்க்கின்றேன்
அடடா
வீழ்கின்றனவே கவிதைகளாய்
----------------------------------------------------------------
பிரிவோம் பிரிவோம் எனச்
சொல்லியே
பிரியம் வளர்க்கின்றோம்.
இழப்புக்கள்
இதயத்திற்கா
இல்லை
அழகான அன்புக்கா
.
விதியா சதியா
காலங்கள்.காத்துக் கொண்டுதானிருக்கின்றன
நம்.சத்தியங்களையும் சுமந்தபடி
----------------------------------------------------------------------

இது தேர்தல் காலம்
வீதிகளில்
சுவரொட்டி முகங்கள்
எழுதப்படாத வார்த்தைகளை
அழுத்தி சொல்லிக் கொண்டிருக்கின்றன சத்தியங்களாய்

--------------------------------------------------------------------------
குட்டித் தூக்கம் போடுகின்றேன்!
எட்டிப் பார்க்கின்றாய்
கொட்டாவி விடும் போதோ
எட்டடி பாய்கின்றாய்
பட்டப் பகலில் பேய் கண்டது போல்
------------------------------------------------------------

தனிமை
நினைவுகளை மொழி பெயர்க்கும் திரை
-------------------------------------------------------------

சிலரை புரிந்து கொள்ள
நொடிக் கணங்கள் போதும்
--------------------------------------------------------------

சூரியன் கூட அழகுதான்
அதனைத் தொடாத வரை
சந்திரன் கூட குளிர்மைதான்
அது தொலைவிலிருக்கும் வரை
எதிர்பார்ப்புக்கள்தான்
நம்மை ஏமாளிகளாக்குகின்றன
புரிந்தும் புரியாமலும் நாமோ
அலைந்து கொண்டிருக்கின்றோம்
வாழ்க்கைச் சக்கரத்தில்
------------------------------------------------------------

காற்று இன்னும் மூச்சோடு
பேசிக் கொண்டுதானிருக்கிறது
ஞாபகங்களை
அதனால்தானோ
என்னவோ
துயில்
இருள் குகைக்குள் நுழைய
மருள்கின்றதோ
-----------------------------------------------------------

தேர்தல்
------------
பொய்களை
மலிவு  விலையில் விற்கும்
சந்தை
----------------------------------------------------------

வெற்றி கண நேர சந்தோஷம்
தோல்வி
யுகம் தொடரும்
அனுபவம்


- Jancy Caffoor-

      25.08.2015

முகநூல்



"அலை அடிச்சா கரைக்கு வரணும் - அது
தரைக்கு வந்தா
மீண்டும் மண்ணை அள்ளிக் கொண்டு கடலுக்குப் போகணும்"
.

இந்த சுழற்சி மனித வாழ்க்கைக்கும் பொருந்தும்..
தேவைகள் ஏற்பட்டால் அது நிறைவேற ரொம்ப முயற்சிக்கிறோம். ஏனோ அவை நிறைவேறினாலும் மனதில் திருப்தி வருவதில்லை மாறாக எமது எதிர்பார்ப்பு இன்னும் விரிந்து சென்று வேறொரு தேவையைத் தொட்டு நிம்மதியின்மைக்குள் சுருண்டு கொள்கின்றது.
------------------------------------------------------------------------------------------------------

உருகும் பனியும்
திரவமாகும் வெப்பங் கண்டால்
உதிரும் சருகும்
எருவாகும் மண் பற்றிக் கொண்டால்
முயற்சியும் பயிற்சியுமிருந்தால்
உயர்ச்சியும் வாழ்விலுண்டாகும்.


- Jancy Caffoor-
     25.08.2015

சிறகுகள் வேணாம்


நம்மைச் சுற்றி புரிந்து கொள்ளாதவர்கள் இருக்கும் வரை
நாம் தனிமையுலகில் வாழும் அனாதைகள்தான்
-------------------------------------------------------------------------------------------

சிறகுகள் வேணாம்
சிறு கூடே போதுமெனக்கு
-------------------------------------------------------------------------------------------

தினமும் ஒர் சொட்டுக் கண்ணீர் சேமிக்கிறேன்
என் விழிக்கோப்பையில்
ஓர் நாள்
நான் அடையாளமற்றுப் போகும்போது
உலர்ந்து போன
என் இருப்பினைக் காட்டும் சுவடுகளாக
அவை இருக்குமென்பதால்
-----------------------------------------------------------------------------------------

அரசியல் எனக்கு பிடிக்காது, ஆனால்,,,
இப்போதெல்லாமே முகநூல் அரசியல் மேடை ஆகிற்று
தவிர்க்க முடியவில்லை தரிசித்து போகிறேன் சில சுவாரஸ்யங்களை
-----------------------------------------------------------------------------------------

வாழ்க்கை ஒர் சுவாரஸ்யமான கலை, ஏனென்றால் பல உணர்ச்சிகளின் உள்ளடக்கமே நாம்
அதனால்தானோ என்னவோ
ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது நமக்குள் ஏற்படுகின்ற ஆர்வம், ஆசை, பதற்றம், எதிர்பார்ப்பு அதனை முடிக்கும் தறுவாயில் வருவதில்லை காரணம்
அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கின்ற அனுபவங்கள் நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி , நிதானப்படுத்தி நம்மை முழுமையடையச் செய்கின்றன.
-------------------------------------------------------------------------------------------

ஆயிரம் பேருக்கு கூஜா தூக்குவதை விட ஒரு சிலருக்கு ராஜாவாக இருக்கலாம். அப்போதுதான் நம் நல்ல சிந்தனைகளுக்கு அங்கீகாரமும்
செயல் வடிவமும் கிடைக்கும்
------------------------------------------------------------------------------------------

சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம் சண்டை பிடிக்கும்போது வெறுக்கும் மனசு, அவங்க நம்மை விட்டு பிரிய போறாங்க என்று உள் மனசு சொல்லும்போது மறைஞ்சிருந்த அந்த பாசம் கண்ணீராய் கரைய ஆரம்பிக்கிறது, பாசத்தை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம்தான் இழப்பின் வலி.
-------------------------------------------------------------------------------------------

தேர்தல் பரீட்சை முடிஞ்சாச்சு பாஸ் ஆனவங்க பார்ளிமெண்ட் போவாங்க
பெயில் ஆனவங்க அடுத்தவங்க கேலிப் பேச்சுக்குள்ள கொஞ்சக் காலம்
விழுவாங்க ஆனா பள்ளிக்கூட புள்ளைங்கட பரீட்சை இன்னும் முடியலியே

ம்.ம்.....

லீவு முடிஞ்சு நாளைக்கு மீண்டும் ஸ்கூல் பயணம். ஆரம்பிக்குது


- Jancy Caffoor-

     25.08.2015


2013/03/11

தளிர் 2

சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

Photo: சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

ஒவ்வொரு வீழ்ச்சியிலும்
எழுதத் துடிக்கின்ற முகவரியது!
----------------------------------------------------------
ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும்
வெற்றியாளனாக அறிவிக்கப்படுகின்றான்

Photo: ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும் வெற்றியாளனாக பிரகடனப்படுத்தப்படுகின்றான்............
-----------------------------------------------------

பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
மௌனத்தின் வலிமை அதிகம்!

Photo: அதிகமாகப் பேசி ஒருவரை எரிச்சலூட்டுவதை விட, மௌனத்திருப்பது மேல்!

ஏனெனில் ஆயிரம் பேசும் வார்த்தைகளை விட மௌனத்தின் பெறுமதி அதிகமானது
------------------------------------------------------------------
சுதந்திரம் மறுக்கப்படுகையில்
பேனா முனைகள் கூட சிந்தும் துளிகள்
கண்ணீரல்ல செந்நீர்!
செந்நீர் ஈரங் கண்டு
வேரறுக்கப்படும் விழுதுகள் கூட.......
உரமாகும் எழுச்சிகளை வாசித்தபடி!
















------------------------------------------------------
கொன்றலின் வெற்றி யறிவிப்பாய்
முன்றலில் எட்டிப் பார்க்கின்றது கருமை!
விண்ணைப் பிளந்து
மண்'ணில் முளைக்கும் வேர்
மின்னலோ................






தளிர்கள் - 3

தவறுகள் அறியாமையின் வரவுகள்!

நம்மை சிலர் தவறான எண்ணத்தில் விமர்சிக்கும் போது, நம்முள்ளம் எரிமலையாகி சுட்டெரிக்கின்றது. அவ்வாறான தருணங்களில் அமைதி காக்கும் பண்பு நம்மிடம் இருக்குமானால், காலம் மிக விரைவில் தவறிழைத்தவர்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையை உணர்த்தி நிற்கும்!


அன்றும் இன்றும்
-------------------------------------------------------------
தோற்ற காதலெல்லாம்
கல்லறை தேடியது அக்காலம்!
புது உறவுக்காய் மீண்டும் விண்ணப்பிப்பது
இக்காலம்

--------------------------------------------------------------
ஒவ்வொரு பூட்டும் செவி சாய்க்கும் தனக்குரிய திறப்புக்கு மாத்திரமே!

நம் மனம் அப்படித்தான்...........

நம் குணத்தை ஒத்தவர்களின் நட்புடன் மட்டுமே ஒத்துப் போகின்றது!

------------------------------------------------------
மெல்லன மூடின விழிகள்..........
மெல்லிசையாய் மொழிந்தன கனவுகள்
வள்ளியே.........உன்னன்பை
அள்ளித் தரும் வள்ளலே நீயெனக்கு!

-----------------------------------------------------

உனக்கான காத்திருப்புக்களால்
தினமும்
சிலையாகின என் விழிகள்!

பழி சொல்லுமோ காலமும் - உன்
அன்பில் மெய்யில்லையென்று!
அஞ்சுகின்றேன் அணுதினமும்!

--------------------------------------------------
எழுதப்படும் தீர்ப்புக்களையே மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் தன்னம்பிக்கையே!

உள்ளம் தன்னம்பிக்கையில் நிறைந்திருக்கும் போது எத் தீமையும் அண்டுவதில்லை.

நல்லதையே நினைப்போம்!
நலமுடன் வாழ்வோம்!!