About Me

2014/07/25

காஸா


கண்ணீர்த் தணலில்
பற்றி எரிகின்றது காஸா!
பாலஸ்தீனமோ
பயங்கரவாதத் திகிலில்!

அனல் பறக்கும் சிலிப்பர்
குண்டுகளும்
கறை படிந்த குருதித் துளிகளும்

இங்கு
சரித்திரமெழுதும் எழுத்தாணியாய்
தரித்து நிற்கின்றது
மரண ஓலங்களின் சுருதியில்!

முதியோர்களும்
பாவைகளும்
பால் மணம் மாறா பாலகர்களும்
ஈமானியங்களும்

ஓலமிடும் அழுகுரல்களால்
காஸா
காணாமல் போய்க் கொண்டிருக்கின்றது
சில நாட்களாய்!

பயங்கரவாதம் அனல் கக்கும்
அல்லாஹ்வின் வீட்டைக் காக்க
உம்மத்துக்கள்
மௌத்துக்களால்
உரமாகிக் கொண்டிருக்கின்றனர்!

யா ரப்பே...!

தணலாய் கொதிக்கின்றது - இப்
பசுமைபூமி!
விடிவு தேடி
விட்டில்களாய் நசுங்கிப் போன - எம்

காஸா உறவுகளோ
ஷகீதாகி
உன் வசமாக!

காலம் ஓடிக் கொண்டுதானிருக்கின்றது
நாமோ
கண்ணீருடன் அருள் வேண்டி
நிற்கின்றோம் - அம்
மக்களின் துயர் துடைக்க!

எல்லாம் வல்ல அல்லாஹ்வே!
மனதில் ஈரம் கசிய - எம்
துஆக்கள் உன்னிடத்திலே
தரித்து நிற்கின்றன

அனலோடு
அல்லல் கண்ட அம்மக்களுக்கு
கண்ணியமான சுவர்க்கம் தந்து விடு!
மறுமையாவது வாசமாகட்டும்!

- Jancy Caffoor-
      25.07.2014

முகநூல் துளிகள் - 2




ஆழ்ந்த அன்பும் பிரியக்கூடும்
ஆறடிக்குள் அடங்கும் மெய்க்கூட்டில்!

பிரிவென்பது......
பரிவில்லாத மனதின் ஆரவாரிப்பு!
------------------------------------------------------------------------------

கசப்பான கடந்த காலம் என்பது கசக்கப்பட்ட காகிதம் - அவை
மறதிக் கூடைக்குள் விழ வேண்டிய குப்பைகள்!
தூசு தட்டி சுகம் விசாரித்தால் - அவை
லேசான மனதை இரும்பாக்கி விடும்!

இரும்பு துருப்பிடித்தால்..
அருமையான உறவுகளும் தொலைந்து போகும்!

----------------------------------------------------------------------------

சிறகு விரிக்கும் வண்ணத்தி
சிறைப்படும் பூவில்தான்...
சுவையான மகரந்தம்!

வாழ்விலும்....
உறவுகளின் சிறையில்
சுமையான சுகங்கள்!

கோபமும் பாசமும்...
விட்டுக்கொடுப்பும் வீம்பும்...
பொறுமையும் பிரிவும்

அவற்றுள் சில உணர்வுத்துளிகள்!

-------------------------------------------------------------------------


நீர்க்குமிழி வாழ்க்கையைத் தேடிப் போகும்போதுதான் கானல் நீராய் ஆசைகளும் எதிர்பார்ப்புக்களும் எட்டிப் பார்க்கின்றன. ஏக்கங்களுடன் அவற்றை தொட்டுவிடத் துடிக்கின்றோம்...

அந்தோ.....

என்ன பரிதாபம்...

உடைந்து விடுவது வாழ்க்கையல்ல...அந்த வாழ்க்கையை நேசிக்கும் மனதுதான்.....

காலம் சிலருக்கு வசந்தங்களை அன்பளிப்பாக்குகின்றது. சிலருக்கோ வெறும் துன்பங்களை மட்டுமே!

ஆனால்....

வாழத்தான் வேண்டும்..துயர முடிவு தெரிந்தாலும் கூட முன்னேற சிறுதுளியாவது தன்னம்பிக்கை இருந்தால் போதும்!

-------------------------------------------------------------------------

கேட்டுப் பெறுவதல்ல உண்மை அன்பு
தானாய் கிடைப்பது!
மனம் வருந்தச் செய்வதல்ல உண்மை அன்பு
மன வருத்தங்களைக் குறைப்பது!
காலம் சிதைப்பதல்ல உண்மை அன்பு
காணா விட்டாலும் தேடித் துடிப்பது!
வாழ்க்கை வெறுக்கச் செய்வதல்ல உண்மை அன்பு
அழிந்து போகும் அன்பை மீட்டித் தருவது!




முகநூல் துளிகள்



நாம் ஜெயித்துக் கொண்டே இருக்க....
உற்சாக மனம் போதும்..

அப்பொழுதுதான்...

நிழல்களை நிஜமாக்கும் கற்பனை நம் அறிவுடன் சேர்ந்து நம்மை உற்சாகமாய் இயங்க வைக்கும். அவ் உற்சாக விழுதுகள் நம் வெற்றியைத் தாங்கும் தூண்கள்!

---------------------------------------------------------------------------------------

நம்பிக்கை பலருக்கு வெறும் எழுத்துக்களால் ஆன சொல்..

செய்வார் சிலர் ஏனோ தானோவென..
சிலரோ....
விதையிட்டவுடன் விளைச்சல் தேடுவார்!
சிலரோ.....
கடுகுச் செயலுக்கும் மலையெனத் திணறுவார்!

பலருக்கு ........
வாழ்க்கை கசந்து போவதற்குக் காரணம் நம்பிக்கையின்மையே!

உண்மையில்...

நம்பிக்கை என்பது நமது மனதை ஏவச் செய்யும் செயல்!
அதனால் நம்பிக்கை கொண்டோர் தம் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றைத் தீர்ப்பதற்கான வழிகளையும் இலேசில் கண்டுபிடித்து விடுவார்கள்!

நம்பிக்கை நம்மை வாழ வைக்கும் சக்தி!
நம்புவோமாக!

-------------------------------------------------------------------------------


அழ வைக்கும் ஆயிரம் வார்த்தைகள்...
அன்பு செய்யும் வார்த்தைகள் முன்
தோற்று விடுகின்றன !
காற்றில் தன் சினத்தைக் கரைத்து!!

உண்மைதான்....

கண்ணீரையும் கரும்பாய் மாற்றும் சக்தி  இந்த அன்புக்குண்டு!
ஏனெனில்...
இந்த அன்பினை எப்பேதங்களும் தொட்டுப் பார்ப்பதில்லை!

அன்பாய் இருப்போர்...
இன்பத்தின் நீரூற்றில்
என்றுமே கலந்திருப்பார்
தம் வாழ்வில்!

-------------------------------------------------------------------------------------------


ஒருவர்...........

நமக்கு உடன்பாடில்லாத எந்த விடயங்களைக் கூறினாலும் ,முதலில் நாம் அவற்றை மறுத்து விடுகின்றோம்.

ஆனால்........

சற்று கண நேரச் சிந்தனையானது...

நம் மனதை முரண்பாட்டிலும் உடன்பாடு காண தயார்படுத்தி விடுகின்றது!

இதுதான் வாழ்க்கை!

தீயின் வெப்பம் பிரித்து குளிர் போக்கும் மனப்பக்குவம் நம்முள் இருக்கும் வரை, நம் வாழ்வும் சலித்துப் போவதில்லை!

-------------------------------------------------------------------------------------------



வௌிப்படையான பேச்சு உறவின் உறுதிப்பாடுதான்...
ஆனால்.....
அதனால் ஏற்படும் காயங்களையும், முரண்பாடுகளையும் கட்டுப்படுத்தும் சக்தி மௌனத்திற்கே உரியது!

நமக்கு உடன்பாடில்லாதவற்றை நம் உறவுகள், நண்பர்கள் வௌிப்படுத்தும் போது மௌனம்தான் சிறந்த முடிவாக இருக்கின்றது!

-------------------------------------------------------------------------------------------


பயம் என்பது பலவீனத்தின் வருடல்...
துணிவென்பது பலத்தின் விளைவு!

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்தப் பயமும் துணிவும்தான் மனதின் உச்சரிப்புக்களாகி அவர்களின் செயல்களுக்கு பின்னணியாகி விடுகின்றன!

மனசாட்சியோடு பலத்தைக் குலைக்கும் செயல் வீரன் சரித்திரமாகின்றான்...
பலவீனத்தில் தன்னைக் கரைத்து ஒதுங்கிக் கொள்பவன் காணாமற் போகின்றான்..!

துணிவே துணை..

எனவே நல்லவற்றை துணிந்து செய்யும்போது நம் வாழ்க்கையும் நமக்கு பணிந்து ஆரத்தழுவுகின்றது சந்தோசங்களுடன்!

------------------------------------------------------------------------------


அடுத்தவர் குறைகளைப் பற்றி பேசித் திரிவோர்
தன் நிறைவை ஏனோ மறுத்து விடுகின்றார்கள்!

என்னிலுன்னை




அன்பு கொண்டவன் ஈன்றான்
அழகான அன்பளிப்பொன்று!
ரோசா சாறு பிழிந்த சுடிதாரில்
ராசா அவனன்பு கண்டு.....
ரம்ழானும் உவகையில் தானின்று!

ஆழிச் சார லோசையினில்
வழியொன்று திறக்கின்ற தென் கரையில்!
அழகான வுன் சிரிப்பை
ஔிந்து நின்று ரசிக்கின்றேன்!

மெலிந்து நீதான் போனாலென்ன
வலி தீர்க்கு முன்தன் னன்பு........
பலம்தான் எனக்கும் - உன்
குரல் பிழியும் ரசனை யென்
இராக்களின் பனித்தூறல்தான்!

இறைவா...
குறையில்லா எங்கள் அன்பு- இக்
குவனியில் குதுகலிக்க
அருள் தந்து விடு......

அன்பனுக்காய்



அன்பு!

என்
ஒவ்வொரு இரவுகளிலும்
உன் னன்பு காற்றில் நசிந்து
சுவாசமாய் விட்டுச் செல்கின்றது!

அன்பால்
நீ
கொடுத்த எண்ணங்கள்
தினமும்
என்னைச் செதுக்கிக் கொண்டிருக்கின்றன!

அன்பை
மாத்திரமே போதிக்கு முன்
வழிப் பயணத்தில் - என்
காலடித் தடங்கள்
சங்கமித்துக் கிடக்கின்றன!

அன்பு
நம்முள்
காதலாய்
நட்பாய்
பாசமாய்
வாழ்கின்றது!

ஒரு
குழந்தையாய்
குமரியாய்
மனைவியாய்
தாயாய்

உன்னைச் சுமக்கும் என்
ஒவ்வொரு பொழுதுகளும்
கரைந்தே போகின்றது - நம்
அன்பில்!

காதலுக்கு வயதில்லை
சொல்லித் தந்தாய் அழகாய்!

அதனாற்றான் என்னவோ- இப்
பிரபஞ்ச மேடை
காத்திருக்கின்றது
நம்மைச் சுமக்க - அதன்
எல்லைப்புள்ளி வரை!

- Jancy Caffoor-
      24.07.2014