About Me

2014/07/28

அல் குர்ஆன்

புனித அல்குர்ஆனில் .....

ஜூஸ்ஊக்கள் (பாகங்கள்) - ----30
மன்ஸில்கள் -------------------- ---07
சூறாக்கள்-------------------------- 114
மக்கி சூறாக்கள் ----------------- --86
மதனி சூறாக்கள் ------------------ 24
ருகூ கள் ---------- ----------------- 540
வசனங்கள் ---------- -------------6666
சொற்கள்--- ---------- -----------77934
எழுத்துக்கள்--- ---------- ------323760
ஸஹதாக்கள்-----------------------14


நோன்பு திறத்தல்


நோன்பு திறக்கும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குகளை பின்வரும் குர்ஆன், ஹதீஸ்களில் இருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

1. நோன்பு திறக்கும் நேரம்:
---------------------------------------
'பின்னர் இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள்' (அல்குர்ஆன் 2:187)

சூரியன் மறைந்து இரவின் இருள் படர ஆரம்பமாவது தான் நோன்பு திறக்கும் நேரமாகும். அதாவது மஃரிப் நேரத்தின் ஆரம்பம் தான் நோன்பு திறக்கும் நேரமாகும்.

2. விரைவாக நோன்பு திறப்பது:
------------------------------------------------
'விரைந்து நோன்பு திறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

3. நோன்பு திறக்கும் உணவு:
-------------------------------------------
'உங்களில் ஒருவர் நோன்பு திறக்கும் போது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்கட்டும்! அது கிடைக்கா விட்டால் தண்ணீரால் நோன்பு திறக்கட்டும்! ஏனெனில் அது தூய்மையானதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸல்மான் பின் ஆமிர் (ரலி), நூற்கள்: திர்மிதி 631, இப்னுமாஜா 1699)

4. துஆ ஏற்றக்கொள்ளப்படும் நேரமிது
---------------------------------------------------------
'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. நோன்பாளி தனது நோன்பை திறக்கும் போது, நேர்மையான அரசர், பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவை தான் அந்த மூன்று பிரார்த்தனைகள். ...' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668)

6. நோன்பு திறக்க உதவுவதன் சிறப்பு:
---------------------------------------------------------
'யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி), நூல்: திர்மிதி 735)

7. நோன்பு திறத்தலின் போது ஏற்படும் மகிழ்ச்சி:
---------------------------------------------------------------
நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனை சந்திக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும் என்பது நபிமொழி.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: திர்மிதி)

நல்வழி காட்டும் ரமழானே





سُبْحَانَ الَّذِى أَسْرَى بِعَبْدِهِ لَيْلاً مّنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الاْقْصَى தன் அடியாரை (முஹம்மதை)(கஃபா என்ற) மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (பைத்துல் முகத்தஸ் என்ற) மஸ்ஜிதுல் அக்ஸா வரை ஒரே இரவில் அழைத்துச்சென்ற இறைவன் மிகவும் பரிசுத்தமானவன்”

(அல்குர் ஆன் 17:1)
--------------------------------------------------------------------------------------------------

“லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறவரின் முன் பாவம் மன்னிக்கப்படுகிறது. ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.” ”என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
----------------------------------------------------------------------------------------------------

“சொர்க்கத்தில் ‘ரய்யான்’ என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது! மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! ‘நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே, அவர்கள் எழுவார்கள்; அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள்! அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழையமாட்டார்கள்!” என ஸஹ்ல்(ரலி) அறிவித்தார்.
-----------------------------------------------------------------------------------------------------

எவரேனும் நோயாளியாகவோ,அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும்
(என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

அவஸ்தை


இராக்களில்
கண்களில் கவிழ்ந்து கிடக்கின்றன
உன் கனவுகள் !

பகலிலோ...
மூடிய விழிகளைத் திறக்கின்றேன்
நினைவுகளில் உன் முகம்!

#காதல்_அன்பான_அவஸ்தை!

----------------------------------------------------------------------------------------

வாழ்க்கையை உன் னன்பில் கற்றுக் கொண்டேன்....
வாழ்ந்துவிட்டுப் போகின்றேன்.....
நிழலாய் தொடரும் உன் ஞாபகங்களுடன்!

---------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு முறையும் உன்னை என்னிடம் விட்டுச் செல்கின்றாய்
முத்தங்களாய்!

---------------------------------------------------------------------------------------
இந்த உலகத்தையே அசைக்கின்ற வருடல் காதலில்தான் இருக்கின்றது.

காதல்..............!

வெறும் அன்பா....
வசீகர அன்பா........
இல்லையேல்......
உணர்வுகளும். உயிரும் ஒன்றோடொன்று பிசையும் ஸ்பரிசமா!

#என்னவனே_உன்_காதல்_இனிக்குதடா!

மனசின் வலி



நாம் தனிமையில் இருக்கும்போது, நம் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் செய்யும் கரங்கள் நமது சொந்தங்கள் ஆகின்றன........
உண்மையான உறவு தூர போகாது...
யாருக்காகவும் விட்டுக் கொடுக்காது...

---------------------------------------------------------------------------------
காதல்....
வேப்பங்காய்தான்...
காரணம்...
அன்பை அலட்சியப்படுத்தி மனதோடு விளையாடும் ஆண்கள் அதிகம்!

ஏமாற்றங்களால் சுமந்த என் மனம் ஒதுங்கித்தான் இருந்தது இனி எதுவும் வேண்டாமென...

வந்தாய்...
வசந்தமாகி நின்றாய்...
உணர்வோடு உடலும் கலந்து உயிரான நம் வாழ்வினில்....

இன்றோ நீ....

எனை மறந்து வேற்றுத் திசையில்!

வாழ்ந்து கொண்டே  சாகின்றேன்..
புதைகுழியே இனி என் தலையணையாய்!

நீயாவது உனக்குப் பிடித்த வாழ்க்கையை வாழ்ந்திடு!
-----------------------------------------------------------------------------------

நம் நடத்தைதான் பிறருக்கு சந்தேகத்தை தோற்றுவிக்கின்றன. ஆனால் நாமோ பிறரைத் திட்டுகின்றோம் நம்மை புரிந்து கொள்ளவில்லையென...
--------------------------------------------------------------------------------------

எல்லாமே பொய்த்துப் போன பின்னர் வாழ்க்கையைத் தேடுகின்றேன். அதுவோ எட்டா தொலைவில்....

அன்பு கொள்ளும் மனதிற்குத்தான் வலி அதிகம். காரணம் ஏமாற்றுவோர் அதிகம்!