About Me

2014/10/06

தேவதையுடன்


விரல்களின் விருந்தோம்பலில்
கணனித் தட்டச்சு திணறிக் கொண்டிருக்க..
கண்களைக் திரையில் பொறிக்கின்றேன்!
கன்னம் சிவக்க சிரிக்கு முன் முகம்
காணவில்லை
சில நாட்களாய்!

நெஞ்சக்கூட்டைக் குதறிக் கடிக்கும்
உன் நினைவுகளைக் கிள்ளிப் பார்க்கின்றேன் - நீ
தொலைந்து போன ஈரத்தை
இன்னும் பரத்திக் கொண்டுதான்
இருக்கின்றன
உன்னை உலர விடாமல் தடுக்க!

தடக்கி விழுந்த போதெல்லாம்
என்னை நிமிர்த்திய வுன் கரங்கள்....
அழுதபோதெல்லாம் அணைத்த வுன்
கரங்கள்
கவலைகள் துடைத்த வுன் வார்த்தைகள்
இப்போதெல்லாம்
அவள் பெயரை ஸ்பரித்தே
என்னை மறந்து போனது!

அன்று
நீ
அன்போடு எழுதிய என் சரிதத்தை
அவசர  அவசரமாய் முடித்து வைத்தபோது
உன்
அவசரத்தின் அவசியத்திற்காய்
வழி விட்டு நிற்கின்றேன்
மௌன வௌிக்குள்!

என் ஆழ்நிலைச் சுவாசம் பிடுங்கி - நீ
தினமும் உயிர்ப்பூட்டும் அவளுக்காய்
உனக்காய்
இறந்துமுன்னை நேசிக்கின்றேன்!

என் கல்லறைச் சுவர்களாவது
உன்னுடனான என் னன்பை
புரியவைக்குமென்ற நெகிழ்வுடன்
விடைபெறுகின்றேன்

நீயாவது வாழ்ந்துவிடு
உன் தேவதையுடன்!

- Jancy Caffoor-
 

மனமே மனமே




தியாகம், விட்டுக் கொடுப்பு , இறையன்பு போன்ற தத்துவங்களால் ஆளப்படுகின்ற இன்றைய ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் எனது ஈதுல் அல்ஹா ஈத் முபாரக்!
----------------------------------------------------------------

இன்று (ஒக்டோபர் 06) இலங்கையில் சர்வதேச ஆசிரியர் தினம்    கொண்டாடப்படுகின்றது. ஆசிரியர்தின வாழ்த்துக்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் என் நன்றிகள். அத்துடன் எனக்கும் கல்வியூட்டிய என்னுடன் பணியாற்றும் சகல ஆசிரிய நட்புக்களுக்கும் இனிய ஆசிரியர்தின வாழ்த்துக்கள்......! 


--------------------------------------------------------------------------

நீ மறந்து போன..
மறுத்துப் போன ஒவ்வொன்றும் - என்
ஞாபகங்களாய்!
தொலைத்தாய் என்னை - பல
எல்லைகளுக்கு அப்பால்!

-----------------------------------------------------------------


மழைத்துளிகள் மெல்ல கரம் தருகின்றன
கன்னம் கரைக்கும் கண்ணீரை
யாரு மறியாது துடைப்பதற்கு!
---------------------------------------------------------------------------


தேடல்களின் தொகுப்புத்தான் வாழ்க்கை! அதனால்தான் திருப்தியடையாத மனமும் தினமும் தேவைகளை விரித்துக் கொண்டே செல்கின்றது. ஒன்றின் நிறைவில்தான் புதிய தொன்றுக்கான ஆசைமனதில்  வித்திடப்படுவதனால் , கிடைத்த தொன்றினை ரசிக்க ஆரம்பிக்க முன்னர், கிடைக்காத ஒன்றுக்கான எதிர்பார்ப்பில் மனம் அலைந்து ஏக்கம் சுமந்து அந்த ரசனையையும் கவலைக்குள்ளாக்கி விடுகின்றது பலரிடம்...!
.
நிலையற்ற மனித மனமே... நீ
கவலைகளின் சொப்பனம் இதனாலோ!
----------------------------------------------------------------------------------------


உறவுகள், நட்புக்களின்
சுயநலங்கள்......
அன்பைப் பொசுக்கும்போது....
அனாதை விடுதிகளும், முதியோர் இல்லங்களும்
அடையாளங்களாகின்றன
புது உறவைக் கொடுத்து!
.
தொலை சென்ற உறவுகள் தேடா
முள்வேலிக்குள் முகவரி காட்டும்
கலைக்கூடத்திலும்
நல்ல உள்ளங்களின் அன்பும் கிடைப்பதுண்டு!

-----------------------------------------------------------------------------

வேடிக்கையான வாழ்க்கைக்குள்
விடியல் தேடும் மானுடர்கள்.....
நேற்றிருந்தோர் இன்றில்லை
இன்றிருந்தோர் நாளை நம்கூட வரப் போவதில்லை.....
சுயநல ஆதிக்கமும்....
விதியின் கோரத்தனமும்....
மாற்றங்களோடு!

இதுதான் வாழ்வின்
யதார்த்தமா!

2014/10/01

மீள வந்துவிடு




இப்பொழுதெல்லாம்
இரவு முகிழ்க்கையில்.....
இதயத்தில் ஏனோ வலி!

அன்று.......

அல்லி பூத்தலை ஈர்த்த
 நம் நெஞ்சங்கள்....
ஔிப்பிழம்பாய் கசியும்
நட்சத்திரங்களை
ரகஸியமாய் நனைத்த
நம் விழிகள் ...
நிலாவின் குளிர்மையில்
உலாவிக் கிடந்த நம் வார்த்தைகள்...

இன்று.....

பிரிவின் மையத்தில்
பரிவில்லா காலத்தின் ஆணையாய்...
கலங்கிக் கிடக்கி்ன்றன!

இது யார் செய்த
சதியடா....
என்னைப் புரிந்து கொள்ளாத
பரிவில்லாத நீ தந்த பரிசடா!

உனக்குள் வாழ்ந்து
உன் சேய்கள் சுமந்த  என்னையே....
காகிதமாக்கி
காலனிடம் சேர்த்தா யுன் சினத்தால்...!

அடிக்கடி .....
என்னை உச்சரித்த
உன் னுதடுகளுக்குள்.....
இன்று நானில்லை!

நம்முள் நகரும் பல நிமிடங்கள்....
வெறுமையின் சிறைக்குள்
உன்னால்!

உன் ஞாபகத்துள்
மறந்துவிட்டஎன் னுயிர்க்கூட்டுக்குள்......
தினமும்
இராக்களில்
விசமேற்றிப் போகின்றாய்...
வம்புடன்!

புரிகின்றதா - என்
கவலைப் பூக்களின் மகரந்தத்தில்
கருக்கட்டப்படும்...
உன் னினைவுகள் - இப்போதெல்லாம்
உரிமையின்றி போகின்றன!
காரணம் நீயடா...!!

உன் னுள்ளம் நேசித்துச்
செல்லமாக முறைத்துச் சண்டையிடும்
என்னையா.....
வெறுத்துப் பயணிக்கின்றாய்
இன்னொரு நிழலுடன்
இராக்களில்!

இன்னும் நம்பிக்கையிருக்கின்றது
என்னுள்.......
என்றோ ஓர் நாள்..
என் ப்ரியம் தேடி மீள வந்துவிடுவாய்
என்னுயிர்க்கூட்டுக்குள்!

அதுவரை ....

நீயாவது வாழ்ந்து விடு .........
உனக்குப் பிடித்த பிரியங்களுடன்
இராக்களின்
விசாரிப்புக்களுடன்!

காலச்சுனாமியில்
காணாமற் போகும் பண்டமல்ல
நம் அன்பு!
இறையருளால்
இதயம் வாசித்த  உணர்வுப் பொட்டகம்!

காத்திருப்புக்கள் தொடர்கின்றன
என்னுள்......

நீ...

மீள ......

என்னை மட்டும் நேசிக்கும்
என்னவனாய் .....
வந்துவிடுவாயென்ற நப்பாசையில்!

இவள் ஜானு!




தரம் 5 பரீட்சைப் பெறுபேறு - Zahira M.V, A/Pura

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு - 
ஸாஹிரா ம. வி, அநுராதபுரம்
------------------------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் 

அவர்கள் விபரம் -

                               Name                  Marks                      Dis Rank

1.. M.F.Aadhil Ahamed............... ( marks 182) --------------- 3
2. .M.V.Sameeha......................... .......... (177) ---------------- 6
3..M.M.M. Akeel............................. .......(172)---------------- 15
4..N.Ashfan Ahamed...................... ........(167)---------------   24
5..A.A.H.Nisha ....................................... (165)--------------   27
6.. N.Aysha.............................................. (162)---------------  37
7..M.R.F.Salha......................................... (159)----------------46
8..S.H.Hafri ..............................................(158)----------------51
9..A.H.F.Rasheeka..................................  (158)----------------51
10..A.S.Shahama...................................... (158)----------------51
11..T.F.Sahara............................... ...........(156)----------------59

இவர்களை நாமும் வாழ்த்துவோம்...அத்துடன் இவர்களின் இக்கல்வி வெற்றிக்குழைத்த வகுப்பாசிரியர்களான ,M.N.M.SIYAM, M.K.F.ZAHIRA  உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்..

வாழ்த்துவோம் - அப்துல்லாஹ் அஸ்மின் 
-----------------------------------------------------------------
பதுருயா மத்திய கல்லூரி , மாவனல்லையில் கல்வி கற்கும் அப்துல்லாஹ் அஸ்மின்  2014 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 171 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.  கேகாலை மாவட்டத்தில் 42வது நிலையைத் தனதாக்கியுள்ள இவரையும் நாம் வாழ்த்துவோம்...



-Jancy Caffoor-

சிறுவர் தினம் - 2014


இன்று ஒக்டோபர்  01 ந் திகதி, சர்வதேச குழந்தைகள் தினம்..
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் ஜனனிக்கும்போது தன் ஆத்மாவில் நன்மைகளை நிறைத்தே பிறக்கின்றன. நல்ல சூழல் நல்ல குழந்தைகளை சிருஷ்டித்து இவ்வுலகில் சிறப்பான மனித நடமாட்டங்களை உருவாக்குகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைக்க முடியாது என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல யதார்த்த வாழ்வியலின் ஓரம்சம். எனவே தம் நடத்தைகளைச் சீக்கிரமாக மாற்றக்கூடிய சிறுவர் பருவத்தை சரியான திசையில், இலக்கில் இட்டுச் செல்வது காலத்தின் தேவையாகும். ஏனெனில் இப்பருவத்தில் ஒழுக்கம் பிறழ்ந்து நடமாடும் ஒவ்வொரு பிறவியும் முதிர்ச்சியடைந்த பிறகு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகும் பாவிகளாகின்றனர்.

முதுமையின் விளைநிலம் இளமை ததும்பும் சிறுவர் பராயம். இப்பராயத்தை சிறப்பானதாக மிளிரச் செய்வது எமது- கட்டாயக் கடமையாகும்.  அந்த வகையில் குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்ட இச் சிறுவர் தினம் இலங்கையில் ஒக்டோபர்  1 ஆம் திகதி கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே!

இந்நாளில் உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் உலகிலுள்ள காமுகர்கள் அரங்கேற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டங்களால் மட்டும் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாக்க தனது பலகீனத்தைக் களைதல் வேண்டும். அதற்காக தன்னை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு சிறாரும் தன்னை முழுமையாக உணர, சிந்திக்க சிறுவர்தினம் களமமைத்துக் கொடுக்கின்றது

குழந்தை தனது ஒவ்வொரு செயலையும் வளர்ந்தவரைப் பார்த்தே செய்கின்றது. பின்பற்றுகின்றது. எனவே சிறுவர் பருவம் என்பது குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தின் ஓர்நிலை. சிறார் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அநீதிகளையும் தொடர்ச்சியாக உள்ளெடுப்பாராயின் காலப்போக்கில் அவர்களும் வன்முறையெனும் ஆயுதமேந்திகளாகவே மாற்றப்படுவார்கள்.

எனவே இன்றைய சிறுவன் நாளைய தலைவன் என்பதை மனதிலிருத்தி அவர்களின்  அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொரு வளர்ந்தோரும் முன்வரல் வேண்டும். இதற்கு அடிப்படையாக  கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிப்படுத்த வேண்டும்.


எனவே  இன்றைய நாளில் சிறுவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் போஷித்தவாறே, சகல சௌகரிகங்களும் பெற்று தத்தமது இல்லத்தில் மனநிறைவுடன் வாழ வாழ்த்துவதோடு,  இவ்வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க நாமும் முதியோர் தினத்தை நினைவுகூர்ந்தவாறு இறைவனைப் பிரார்த்திப்போமாக!