About Me

2015/09/13

மோனா மோனா

என்னைக் கிள்ளிக் கொள்கிறேன்
மென் மேனி நரம்புகள்
உன் பெயர்த் துலங்களில்
பாசம்  கொண்டதுவோ
.
அதனாற்றான்
நீ அழைக்கும் போதெல்லாம்
களைக்காத என் வார்த்தைகள்
கலையாகிப் போகின்றதுவோ என்
கைபேசியில்
.
உருண்டு திரளும்- இந்துக்
கரையோர அலைகளினி - தினமும்
இரையாமல் ரசிக்கு மெம்மை
நரையாகாத நம் அன்பை ருசித்தபடி
.
திசை விரிந்தாலும்
உள்ளத்தோசையில்
இசைந்து போன நம் மன்பை
கரமசைத்து வாழ்த்தட்டும்
காலமும் நிறைவாய்
.
உன் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள்

- Jancy Caffoor -
    

2015/09/06

02.09.2015

அளிக்கப்பட்ட பிறந்த தின உபசரிப்பில்
-----------------------------------------------------------
ஜாதி,மத பேதமின்றி பயணிக்கும் நட்புச் சுவட்டில் நான் தரிசித்த அழகான  அன்பளிப்பிது  நன்றி சுபத்திரா
---------------------------------------------------------------------------------
யாரோ எவரோ எனும் நிலை அறிமுகத்தில் இல்லாமற் போகின்றது
அறிமுகம் அன்பெனும் ஈர்ப்புக்குள் தள்ளி விட காலமும் சந்தர்ப்பங்களும் நம்மீது உண்மையான நட்பு, பாசம், அன்பை உணர்த்தி விடுகின்றது
இன்று என் பிறந்தநாளை இன்முகத்துடன் வரவேற்ற என் பாடசாலை மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் வாழ்த்துக்கள் அன்பு கலந்த அன்பளிப்புக்களில் நனைந்து உவகையுடன் நிற்கின்றேன் நேசித்தவர்கள் தொலைந்து போவதும் தொலைவில் நிற்போர் அருகில் வருவதும்
மாற்றமான வாழ்வில் ஒர் துளியே கண்டு கொண்டேன்!

இன்று!
----------------------------------------
முகநூலில் வாழ்த்தியோர்

Mullai Amuthan ---------------
                          Happy Birthday


Nisad Kuvais    ---------------
                         Happy Birthday

Mohamed Fazaal -----------
                        Happy Birthday Jan

Vathiri C Raveendran-------
                        Happy Birthday to u Madam

Kailaiyar Sellanainar Sivakumaran ---- 
                          Please accept my blessings on your birthday Enjoy with your family and friends


- Jancy Caffoor -
   06.09.2015



தேர்தல்

 தேர்தல்
தோற்றுப் போகுமிடம்
,
தோற்றவரின்
வெற்றி முழக்க மொலிக்கும்
மேடை

பதவிச் சண்டைகளுக்கான
ஒரு
ஒப்பந்தம்

தேசத்தின் ஓட்டை யடைக்கும்
வரப்பிரசாதம்

சிலர் விதி மாற்றும்
மதி

தீர்ப்புக்களின்றி
கோர்க்கப்பட்ட சட்டம்

வாழ்த்தும்
வீழ்த்தும்
ஆசன வரிகள்


- Jancy Caffoor -
 

முகநூல்



ஈரப் பூக்களை உதறியவாறு
பேரிரைச்சலுடன் மழை
உருகியது உஷ்ணம் மட்டுமல்ல
என்னுள் உறைந்திருந்த
சிறு சோம்பலும் தான்!

சிறையறுக்க நீ வருவாயென்ற உணர்வு
இறுதியி லுரைத்தது
அருமையான கனவென்று

ஒரு மனிதரைப் பற்றிய ஞாபகங்கள் அதிகமாகப் பகிரப்படும் நாள்
அவர் மரண நாளாகும்
ஏனெனில்
இழப்புக்கள் வரும்போதுதான்
கடந்து போன தடயங்கள் கண்ணீர் சிந்துகின்றன

சூழ்நிலைகள்தான் முடிவுகளைத் தீர்மானிக்கின்றன
நம்முடிவுகள்
ஆரோக்கியமானதாக இருந்தால்
நிம்மதியும் மகிழ்வும் நம் வசமாகும்

                                                                                                                         நம் வார்த்தைகள்
பிறரைக் காயப்படுத்துமானால்
மெளனம் சிறந்தது
ஏனெனில்
அம்மெளனம் அவர்களின் உணர்வுகளை
நாம் மதிப்பதை உணர்த்தும்!


- Jancy Caffoor -
   09.06.2015

இதயம் கிழிந்து.........

இறந்த பின்னர்தான் பல
இதயங்கள் தட்டப்படுகின்றன
கடலலைகளில்
கிழிந்த மூச்சுச் சத்தத்தில்
பல அழுகை
நிசப்தமாய் போனதுவோ
உயிரோடு கண்டு கொள்ளப்படாத உண்மைகளை
பலருக்கு பாடமாக்கியவனாய்
இவனும் பயணிக்கின்றான்
கண்ணீரில்


- Jancy Caffoor -