About Me

2012/12/09

நிலாப் பெண்ணே



அடர் அடவி யோரம்
பாலூற்றும் அருவிச் சாரலில்............
முகம் நனைத்துக் கிறங்கச் செய்யும்
முழுமதியே!

உன் நுதல் மறைக்கும்
மேகக் கேசம் விரட்டி - என்
உதடு பதிக்கத் துடிக்கின்றேன் - நிதமும்
உயரப் பறந்து வானில் பரவி!

நீ யுதிர்க்கும்  கீறல் கோர்த்து
ஒளி கொஞ்சம் நானும் நெய்து.............
விளக்கேற்றப் போகின்றேன்
விட்டில்கள் மொய்க்கட்டுமென்
வீட்டுக்குள்ளே!

உன் கன்னப்பருவுடைத்து
கசியும் நீர் கொஞ்சம் சேர்த்து  - நானும்
தேகம் நனைக்கப் போகின்றேன் - நீயும்
வேகமாயிங்கு வந்துவிடு!

அஞ்சனம் கொஞ்சமழித்து - நீ
ஊற்றிச் செல்லும் ஒளிக் கசிவுகண்டு
காற்றுக் கூட கண்கூசி - என்
காதோரம் நாணிக் கிடக்கின்றது லேசாய்!

மாதமொரு முறை  துகிலுரிந்து - நீ
மறைத்த வுன் மேனி திறந்து..............
தரையில் வாழும் மெம்மை இச்சையாக்கி
இறுமாறிக் கிடக்கின்றாய்
ஏதுமறியா அப்பாவியாய்!

நீ யுடைக்கும் நகத்துண்டுகள்
தொலைக்கு மிடம் தேடித் தேடி................
அலைகின்றேன் கனநாளாய்
காணவில்லையே வெண்ணிலாவே!

இரவுக் குவியலுக்குள்ளே - உன்னை
மாதமொருமுறை நட்டி............
சாதிக்கும் வல்லோன் ஆற்றல் கண்டு
வியக்கின்றேன்
வியர்க்கின்றேன்!


யாழ் சில அடையாளங்கள்

இலங்கை வரைபடத்தில் யாழ்ப்பாணம்


யாழ் வானில் உல்லாசமாய் பறந்து செல்லும் வான் பறவைகள்


நான் கல்வி கற்ற பாடசாலை


யாழ்ப்பாணத்திலுள்ள பள்ளிவாசல்
(செம்மா தெரு)


யாழ் பல்கலைக்கழகம்



  யாழ் பொது நூலகம்

                                               
                                             யாழ் தபாலகம்


நல்லூர் கந்தசுவாமி கோவில்


                                யாழ்ப்பாண பலாப்பழச் சுளை


மொந்தன் வாழைப்பழம்


மாம்பழம்


                                 வாயூறும் கிளிச் சொண்டு மாங்காய் வற்றல்

                                                             
                                                   யாழ் - திராட்சை
                                                                     

யாழ் சுவைமிகு மரக்கறிகள்


                                                   யாழ் கடல்


அழகான கசுரினா கடற்கரை



நயினாதீவு நாகதீப  விஹாரைக்குச் செல்வோர்


நயினா தீவு - நாக தீப விஹாரை


வளமான மண்ணில் புன்னகைக்கும் வயலொன்று


யாழ் தீபகற்பகத்தின் அடையாளமாய் பனை மரங்கள்



கீரிமலை -  கேணி


யாழ் பண்ணைக் கடல்


யாழ்ப்பாணக் கோட்டை



யாழ் மணிக்கூட்டுக் கோபுரம்


யாழ்ப்பாண பெரிய கடை பகுதிகள்

                                                               

 ஐஸ் கிறீம் சுவைப்பகம்


யாழ் போதனா வைத்தியசாலை



யாழ்ப்பாணக் கச்சேரி


யாழ்ப்பாணம் சுப்ரமணியப் பூங்கா


யாழ்ப்பாணம்- துரையப்பா விளையாட்டரங்கு
(முற்றவெளி)



Point Pedro - Light House


போர்ச் சுவடுகள்



இறுதிக் கட்ட இராணுவ போர்த் தளபதிகள்


போருக்குப் பின்னரான யாழ் முஸ்லிம் கல்லூரி வீதி


சேதமடைந்துள்ள யாழ்ப்பாண புகையிரத நிலையம்


சேதமடைந்துள்ள பள்ளிவாசல்


வட பகுதியின் அமைவிடங்கள்


யாழ் நகர் - வரைபடம்



2012/12/07

அவஸ்தை



நிசப்தத்தின் கூடலில்
விழுந்து கொண்டிருக்கின்றது நம்
வார்த்தைகள்!

ஒளிக்கலவை
விழுங்கிக் கொண்டிருக்கும் - நம்
நிழல்களைத் தவிர.......................

இருளின் மயக்கத்தில்
பூவுலகம் சாய்ந்து கொண்டிருக்கின்றது!

பனித் துளிகளின் பரவசத்தில்
வியர்த்துப் போன என் விரல்களுக்கு..........

உன்னிதழ் ஒத்தடம்
மூச்சுத் திணற வைக்கின்றது லேசாய்!

விழிகளை மூடுகின்றேன்
முறுவலிக்கும் உன் பார்வைக்கு
திரை விரித்தபடி!

இருந்தும்..............எனை
வருடி யுன்னில் பதியமிடுகின்றாய் என்னை!

அறிவாயா...................

என் ஞாபகத்தின் மொழிபெயர்ப்பில்
உள்வாங்கிக் கிடக்கும் உன்னிடம்.........

எனை நிரப்ப வரும் போதெல்லாம்
இரக்கமின்றி நாணம் துவம்சம் செய்கின்றதே!

தம் இடைவெளியறுக்க மனமின்றி
சுவற்றில் தடுமாறும் பல்லிகளின் ஸ்பரிசத்தில்

 மன சஞ்சலங்கள் விழித்துக் கொள்ள..............
புகைமூட்டங்களாய் விலங்கிடுகின்றது
காமம் சூழ்ச்சியுடன்!

"ஏதாவது பேசடீ"

உரிமையோடு உறவாக

தவிப்பில் உறையும் உன் குண்டுக் கண்கள் ..............
துகிலுரிக்கின்றன என் உதடுகளை!

என் மௌனக் கதவுடைக்கும்
உன் காதல் போர் கண்டு மிரண்டு போகின்ற
என் பெண்மை....................

இடையின் இடைவெளியைக் கூட
விரட்டுமுன் ஆதிக்கம் கண்டு
இரகஸியமாய்
இரசிக்கின்றது மனசும் உன்னை உள்வாங்கியபடி!

அணைக்கின்றாய் கன்னத்தில்
கன்னம் வைத்து..................
படர்கின்றேன் முல்லையாய்
திரண்ட வுன் மார்பினில் !

ஆச்சரியம்தான்......................
உன்னைச் சேமிக்கவா தனித்திருந்தேன்!