About Me

2021/04/24

சுவைப்போமா – மா அடை

ஒரு சமூகத்தின் அடையாளம் கலாசாரம். ஒரு சில அடையாளங்களுடன் பண்பாடுகள் பின்னிப் பிணைந்துள்ளன. அந்த வகையில் இலங்கை முஸ்லிம்களுக்கென சில பலகாரங்கள் தனித்துவம் வாய்ந்தவை. அதிலும் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் விசேடமான உணவுகளில் ஒன்றுதான் மா அடை.

மா அடை எவ்வாறு சுடுவதென பார்ப்போம்

தேவையான பொருட்கள் 

  • 500 கிராம் சீனி
  • 250 கிராம் அரிசி மா
  • 250 கிராம் ரவை
  • 100 கிராம் பயறு 
  • 3 கோப்பை தேங்காய்ப்பால் (2 தேங்காய்)
  • 6 முட்டை
  • அரை தே.க பேக்கிங் பவுடர்
  • தேவையான அளவு கஜூ, பிளம்ஸ், உப்பு

செய்முறை

  • அரிசி மாவை வறுத்தெடுக்க வேண்டும்.
  • வறுத்த அரிசி மாவில் சீனியைச் சேர்த்த பின்னர் மூன்று கோப்பை பாலையும் நுரை வர கலக்க வேண்டும்.
  • வறுத்து குற்றி அரைத்த பயறினை இதனுடன் சேர்த்தல் வேண்டும்.
  • பின்னர் இக்கலவையுடன் போதியளவு உப்பு, துண்டாக்கப்பட்ட கஜூ, பிளம்ஸ், பேக்கிங் பவுடர்சேர்த்து, நன்கு கலந்து, கரைக்க வேண்டும்.
  • மா தடிப்பான பருவமானதும், எண்ணெய் பூசிய தாச்சியில் ஊற்றி, சுட்டு எடுக்க வேண்டும்.

💗💗💗 அடடா அடை ரெடியாச்சு.....வாங்க சாப்பிடலாம்.

ஜன்ஸி கபூர் - 24.04.2021




இயலாமை

இயலாமை என்பது தோற்றுப் போகின்ற வாழ்விற்கான அடையாளம்தான். நம்மிடையே காணப்படுகின்ற பலகீனங்களை கண்டறிந்து, அவற்றை பலமாக்க முயற்சி செய்யாதவரை இயலாமையும் நம்மை மோப்பம் பிடித்துக் கொண்டே இருக்கும். 

இயலும் எனும் மந்திரச் சொல்லால் போராட்ட வாழ்வில்கூட, மகிழ்வின் வாசம் வீசிக் கொண்டேயிருக்கும். நமது பாதையில் குறுக்காகிக் காணப்படுகின்ற தடைகளைப் பார்த்து  தயங்கி நிற்கின்ற இயலாமையை கசக்கி வீசியெறிந்து விட்டு தடைகளைத் தகர்க்கின்ற வழிகளைக் கண்டறிதல் வெற்றியின் பக்கத்தில் நம்மை நிறுத்தும்.

ஜன்ஸி கபூர் - 24.04.2021


பொறாமை

 


பொறாமை எண்ணம்//

பெருமையைக் கொல்லும்//

சிறுமையும் தந்தே//

நம்மையே வருத்தும்//


ஜன்ஸி கபூர் - 24.04.2021


2021/04/23

துரத்தும் கொரோனா

மிரட்டுது வாழ்வை

நாட்டில் மீண்டும் கொரோனா அலை

கைகளை கழுவுங்கள்

முகக் கவசம் அணியுங்கள்

சமூக இடைவெளி பேணுங்கள்

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுங்கள்

என எவ்வளவுதான் அறிவுரைகள் தரப்பட்டாலும்,  சிலர் இவற்றைப் பொருட்படுத்துவதேயில்லை. இவர்களிடத்தில் கொரோனாவே வந்து பயம் காட்டினாலும்கூட, இவர்கள் தமது பிடிமானத்திலிருந்து அசைவதாக இல்லை. மனதால் மானசீகமாக உணராமல் சட்டத்திற்குப் பயந்து பின்பற்றுகின்ற எதுவும் ஆரோக்கியம் தரப்போவதில்லை.

New health guidelines to be followed till 31st May issued (English) 

April 23, 2021 at 6:26 PM

எனும் தொகுப்பிலிருந்து சுருக்கமான தகவல்கள் எனது பார்வையில் இதோ-

  • வீட்டிலிருந்து ஒரே நேரத்தில் இருவர் மாத்திரம் வெளியே செல்லலாம்
  • ஆசனங்களுக்கேற்ற இருக்கை – பேருந்து , புகையிரதம்
  • கார் , முச்சக்கர வண்டி - இருவர்
  • நீர்,  மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள்
  • அலுவலகம் - குறைந்தளவு ,அவசியமான ஊழியர்கள். வீட்டிலிருந்து வேலை செய்ய அழைப்பு
  • கூட்டங்கள் - இருக்கைகளின் அரைவாசிப் பேர்
  • சுப்பர் மார்க்கட், வர்த்தக நிலையங்கள், சலூன், வங்கிகள்,நீதிமன்றம் பாடசாலைகள், முன்பள்ளிகள் 50%  மானோருக்கு அனுமதி
  • நிர்மாணப் பணிப் பகுதிகள்  - அனுமதிக்கப்பட்டுள்ளது
  • பல்கலைக்கழகங்கள் - மூடப்பட்டுள்ளன.
  • தனியார் கல்வி நிறுவனங்கள் - அனுமதியில்லை
  • திருமணம் - 150 பேருக்குள் அழைப்பு
  • மரணச்சடங்கு – 25 பேர் அனுமதி
  • பார்டி – அனுமதியில்லை
  • சினிமா – 25 %
  • இசைக்கச்சேரி, சிறுவர் பூங்கா – அனுமதியில்லை
  • நீச்சல் தடாகம் - மூடப்பட வேண்டும்
  • இரவு விடுதி - மூடப்படல் வேண்டும்
  • உணவு விடுதிகள் - 50 வீதம்

அனைத்திலும் சுகாதார நடைமுறைகள்   கடைப்பிடிக்க வேண்டும்.

ஆரோக்கிய வாழ்வினை நாமும் பெற்று நம்மைச் சார்ந்தோருக்கும் வழங்குவோமாக

ஜன்ஸி கபூர்


இரவின் மடியினில்

 இதமான பாடல்கள்

அமைதியால் அழகு பெறுகின்ற ஒவ்வொரு இரவினையும் உரசிச் செல்கின்ற வானொலி இசையை செவிகள் உள்வாங்கும்நேரம் இரசிப்பின் உச்சத்துக்குள் மனம் நுழைந்து விடுகின்றது.

நிசப்தத்திற்குள் மலர்கின்ற அந்தத் தென்றல் இசையோசையில் விழிகள் உறக்கத்திற்குள் தாவுவதும் நமக்குத் தெரிவதில்லைதான்.

அழகான மென் இசைகள் நம்மைத் தாலாட்டும் நேரம் இரவும் மடியாகி நம்மைத் தாங்கி விடுகின்றது.

ஜன்ஸி கபூர் - 23.04.2021



வசந்தமும் ஒரு நாள்

அழகான பட்டாம்பூச்சியொன்று சில நாட்களாக அந்தப் பூக்களைச் சுற்றி சுற்றி வருகின்றது. காற்றோடு உரசுகின்ற அதன் சிறகுகள்   அமுதத்தின் போதை நினைப்பில் ஆசையுடன் உராய்கின்றன.

நாட்கள் செல்லச் செல்ல ஈர்க்கப்பட்ட புற அழகின் கவர்ச்சி படிப்படியாகக் குறைய,

 ஒரு நாள் அந்த மலரின் பார்வையிலிருந்து நீங்கி விட்டது அந்தப் பூச்சியும்.....

அந்தப் பூச்சிதான் மனதோ.....

வாழ்க்கையில் எதுவும், எந்த உணர்ச்சியும் யாருக்கும் நிரந்தரமில்லை. இயல்பான வாழ்வில் மனம் போராடும்போது, புற மாயைகளிலிருந்து நீங்கி விடுகின்றது. ஆசையும், அதிசயமும் கலவையாகி ஜொலித்த ஒவ்வொன்றும்  அந்நியமாகி விடுகின்றன.

இதைத்தான் இரசித்தோமா 

ஆச்சரியம் நம்மை விழுங்கி விடுகின்றது.

மனதில் ஊற்றெடுத்த ஆசைகள் மங்கிப் போக,   மறுதலையாக ஏமாற்றமும் அலுப்பும்   ஒன்றன்பின் ஒன்றாக நம்மைத் துரத்த ஆரம்பிக்கின்றன. 

ஒரு குறித்த காலத்தின் பின்னர் நாம் ஆசைப்பட்ட விடயங்களை அசை போட்டுப் பார்ப்போமாயின், அவை சாதாரண விடயங்கள்போல் நம்மை விட்டுக் கடந்து போயிருக்கும். நம்மைப் பற்றிய சுய விசாரணையின்போது அட இதற்குத்தான் இப்படி முக்கியத்துவம் கொடுத்தோமா என நம்மையே நாம் திருப்பிக் கேட்போம். ஏனெனில் அன்பைத் தவிர அனைத்துமே காலவோட்டத்தில் காணாமல் போய்விடுகின்றன.

ஜன்ஸி கபூர்

2021/04/22

வெற்றி

 

சிறு புள்ளிதான் ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஆரம்பம். அது சிதைவதும், சீராகுவதும் நமது மனோபலம், முயற்சி, விருப்பில் தங்கியுள்ளது. செய்கின்ற ஒவ்வொரு செயலுக்கும் அர்ப்பணிப்பான தொடக்கமொன்று இருக்குமாயின், அச்செயலின் வெற்றிக்குள் நமது நிழலும் மகிழ்ந்து கொண்டிருக்கும்.

ஜன்ஸி கபூர்

முயற்சியின் பலன்

முயற்சியின் பலனால் முன்னேற்றம் வாழ்விலே/

முடிச்சினை அவிழ்த்தே முழங்கிடும் விவேகம்/

முகங்காட்டும் வெற்றியில் முடியாதது ஒன்றுமில்லையே/

இரும்புத் திரையும் இளகுமே பயிற்சியில்/

இதயத்தின் வலிமையில் இன்பமே செயல்களில்/

இடரினைத் தடுத்தால் இலக்கும் அருகிலேயே/


ஜன்ஸி கபூர்  

மழலையின் சிரிப்பு

 
பிறை உதடுகள் வரைந்திடும் சிரிப்பினில்/
சிந்தையும் நுகருதே மகிழ்வின் நறுமணத்தை/

பஞ்சுக் கன்னமதில் படர்ந்திடும் அழகினில்/
உயிரும் நனைந்தே ரசிக்கிறதே மழலையை/

அன்பின் சுகந்தத்தில் வருடும் குழந்தை/
இன்பத்தின் பேரூற்றே இவ்வுலக வாழ்வினில்/

ஜன்ஸி கபூர்  


மழலையின் சிரிப்பு மந்திரப் புன்னகையோ
மலர்கின்றதே மகிழ்வும் நெஞ்சத்தை நிறைத்து

பஞ்சுக் கன்னத்தில் தேங்கிடும் அழகை
கொஞ்சி ரசிக்கையில் நிறைகிறதே மனதும்

பூவிழிக் கண்களும் உதிர்த்திடும் பார்வையினில்
பூசுகின்றேன் எனையே உயிருக்குள் பரவசமே

Jancy Caffoor

தாலாட்டு

 

பஞ்சுக் கன்னமதை  அன்பால் வருடி/

பிஞ்சு விரல்களுக்குள்  தாய்மையைக் கோர்த்தே/

நெஞ்சத் தூளியாக தன்னையே மாற்றி  

நெற்றியில் இதழ்களால்  முத்தங்களை வரைந்தே/

அன்னையும் இசைத்திடும் பாசத் தாலாட்டில்

அன்பின் சுவைதனை குழந்தையும் அறிந்திடுமே 


ஜன்ஸி கபூர் 

வேடந்தாங்கிகள்

எல்லைக் குறுக்கீடின்றியே எழுகின்ற சிறகுகளெல்லாம்/

தழுவுகின்றனவே தம்மினங்களை தடமாகின்றதே சரணாலயமும்/

வேற்றுமையை வேரறுக்கும் வேடந்தாங்கல் பறவையொலி/

படர்கின்றதே சங்கீதமாகப் பரவசம் மனங்களுக்கே/

அடர்ந்த மரக்கிளைகளில் அழகான உயிர்ப்புக்கள்/

அழகான அன்பினை அகிலமும் ரசிக்குமே/


ஜன்ஸி கபூர் 

பணம்

பாரினை ஆளும் பணமும் நிலையற்றதே/

பத்தும் செய்யும் பஞ்சமாபாதக வித்திது/


பரபரப்பு வாழ்வில் பாசத்தையும் துறக்கும்/

பதுக்கிடும் போதெல்லாம் பறித்திடுமே நிம்மதியை/

 

பாதாளம் பாய்ந்து பண்பதனை மாற்றும்/

பலவழிகளிலும் தேடிடவே பம்பரமாகச் சுழற்றுமே/


 ஜன்ஸி கபூர்  

உழைப்பை உறிஞ்சும் அட்டைகள்

 சுட்டெரிக்கும் வெயிலும்  தேகத்தைப் பருகிட/

வாட்டமே வாழ்வாகத் தேயிலைத் தோட்டத்தில்/

பறித்திடும் கொழுந்தும் சிவக்குதே ஏழ்மையில்/

அறிந்திடாக் கபடத்தில் வாழ்வும் பலியாகுதே/

பஞ்சத்தில் வெந்திடும் நெஞ்சத்தின் ஏக்கத்தை/

அஞ்சாமல் சுரண்டிடுதே  வஞ்சக முதலைகள்/

தொழிலாளி நலத்தை விழுங்கிடும் முதலாளித்துவம்/

தொல்லைமிகு அட்டையாக  உழைப்பையும் உறிஞ்சுகிறதே/ 

ஜன்ஸி கபூர்  

வண்ணக் காதல்


பசுமை நினைவுகளின் இதமான அணைப்பினில் 

பரவுகின்றதே மகிழ்வும் தேகமும் சிலிர்த்திட 

கொஞ்சும் விழிகளின் காதல் பார்வையில் 

பஞ்சு மேனியும் நாணத்தில் சிவக்கிறதே/


தழுவுகின்ற சிறகினில் உரசுகின்ற தென்றலும் 

மஞ்சள் முகத்திலே முத்தங்களைப் பொறிக்கையில் 

வட்டக் கருவிழிதனில் மொய்த்திருக்கும் அன்பினைச்

சூடுகின்றதே கனவும் சூழுகின்றதே வனப்பும்/


இரகசியச் சந்திப்பில் இசைகின்ற உயிர்களில் 

இரேகைகளாகப் படிகின்றதே ஊடற் சுகமும் 

இதயம் குளிர்கின்றதே  உதயத்தின் அலைவினில் 

இரசிக்கின்றேன் வண்ணங்களைத் தெளிக்கின்ற காதலையே 


ஜன்ஸி கபூர்  

அன்னப் பெடையே நாணமேனோ


பிறை நெற்றியில் படர்ந்திடும் கூந்தலைப்//  

பின்னியதோ கார்மேகமும் கற்பனையும் சுவைக்கின்றதே//


கசிகின்ற அன்பினால் உனையே மீட்டுகின்றேன்//

கரும்பினைப் பிழிகின்றாய் மனதின் ஓரங்களில்//


கூர் விழிகளும் வீழ்த்திடும் மோகத்தில்//

சூடினேன் உனையே செதுக்குகின்றாய் நினைவுக்குள்//


சிரிக்கின்றாய் உதிர்கின்றனவே பௌர்ணமித் துகள்கள்//

பறிக்கின்றேன் தென்றலே உனையே சுவாசத்துள்//


விரலும் தீண்டா மென் காதலால்//

உரசினேன் உன்றன் உயிரினை அன்பே//


சிவக்கின்றாய் சிந்தைக்குள் எனையும் சிறைப்பிடித்தே//

ரசிக்கின்றேன் அன்னப் பெடையே நாணமேனோ//


ஜன்ஸி கபூர் 

பசுமை நினைவுகள்

பால்ய வயதின் பசுமை நினைவுகள்/

படர்கின்றதே மனதில் பரவசமும் துளிர்க்கிறதே/

பள்ளி வாழ்வில் துள்ளிய நட்புக்கள்/

பனித் தூறல்களே நெஞ்சம் ரசித்திட/


அழகிய கிராமத்தின் ஆனந்த உயிர்ப்பாக/

சிறகு விரித்தேன் சிதறும் மழையினில்/

அலைப்பூவில் ஈரம் பிழிந்தே நனைந்த/

அந்த நாட்களும் அணைக்குதே சுகமாக/


ஜன்ஸி கபூர்  

இருமுகம்

அகமும் புறமுமென 

அலைகின்ற முகத்தினில்/

அதிரும் உணர்வுகள் 

அணைக்குதே வாழ்வினில்/


உதட்டுப் புன்னகைக்குள் 

உறைகின்றதே வன்மமும்/

உள்ளத்தின் சோகம்

உறவுக்குள் பூவாகின்றதே/


மெய்க்குள் மூழ்கும் 

பொய்களை மறைத்தே/

சாய்வார் வேலிபோல் 

சாய்த்திடுவார் வேட்டையினில்/


சீற்றத்தை மறைத்தே 

சிரிப்பார் அன்புபோல்/

தோற்றமும் மறைத்தே 

ஏற்றிடுவார் மறுமுகத்தை/


ஜன்ஸி கபூர்  


மறந்தால்தானே

மறந்தால்தானே பிரிவுக்குள் மூழ்கும் உறவும்/
உறவின் அணைப்பே சுகமாகும் வாழ்க்கையில்/
வாழ்விற்கும் அர்த்தமானதே உன்றன் துணையே/
துணையாகித் தொடர்கின்றாய் என்றன் நிழலிலும்/

நிழலும் நிஜமாகுமே பூக்கின்ற மெய்யன்பில்/
மெய்யன்பும் தழுவுகின்ற நினைவுகள் அழியாதே/
அழியாத ஓவியமாக உயிர்க்கின்றாய் உயிரினில்/
உயிரினில் படர்கின்றாய் தினமும் நீயே/

ஜன்ஸி கபூர்  

கூடை மேல கூடை வைச்சு



கூடை மேல கூடை வைச்சு/
ஓடையோரம் அசைந்து போற புள்ளே/
கடைக்கண் பார்வைக்குள்ள என்ன சிக்கவச்சு/
நடக்கிறீயே வாடையாத் தழுவுறேன்டி நானே/

காலில கட்டின ஒன்னோட கொலுசு/
காதோரம் சிணுங்குதடி காதலச் சொல்லுதடி/
காத்திருக்கும் நேரமெல்லாம் அனலும் வீசுதடி/
கனிந்த மனசுக்குள்ள நெனப்பும் தழுவுதடி/
 
நெற்றியில முத்துக்கள் வெளஞ்சிருக்கு புள்ள/
நெஞ்சுக்குள்ள முத்தத்தோட ஈரம் செவந்திருக்கே/
நெசத்தில நாம சேர்ந்திருக்கும் காலம்/
நெருங்கியே வரணுமே  நேசப் பைங்கிளியே/

ஜன்ஸி கபூர்   

தாயும் கன்றும்

 கட்டிய கயிற்றை அவிழ்த்தே கன்றும்

ஒட்டியும் உறவாடி ஒன்றுக்கொன்று மகிழுதே 

முட்டியே மோதி முற்றத்தில் விளையாடுகையில்/

கிட்டிடும் அன்பினை கண்களால் ரசித்திட/

எட்டிடும் தூரத்திலே தாயது இல்லையே/ 


ஜன்ஸி கபூர்  

காரைக்கால் அம்மையார்

தனதத்தன் மகளாக தரித்தாரே காரைக்காலில்/

தரணியும் புகழ்ந்திட தந்தாரே திருவந்தாதி/

புனிதவதி இயற்பெயராம் புகழானார் அம்மையாராக/

புனிதமான தெய்வமுமாகி புகுந்தாரே மனங்களில்/


சிறுவயது சிவபக்தையின் சிந்தைக்குள் சிவநாமம்/

சிவபெருமான் சிறப்புக்களை சிறப்பாக யாத்தாரே/

இசைத்தமிழின் அன்னை இசைத்தாரே பனுவல்களை/

இறைவனைப் பாடியே இணைந்தாரே திருப்பதிகத்துள்/


கயிலை மலைதனை கைகளினாலே நடந்தே/

கண்ணியமும் பெற்றார் களித்தாரே சிவனும்/

மாங்கனித் திருவிழா மாண்பாக்கும் அம்மையாரை/

மக்களும் தொழுதே மனநிறைவும் பெற்றிடுவார்/


திருக்கோயில் சிற்பங்களில்  திருமேனியைப் பதித்திட்டார்/

திருவடியின் கீழ்ப்பேற்றை திருவருளாகப் பெற்றிட்டார்/

திருவாலங் காட்டில் விதைக்கப்பட்டே உரமானார்/

திருவுருவம் கொண்டே சிறக்கின்றார் வரலாறுகளில்/

கல்வியே சிறப்பு


ல்வி கற்கையில் எதிர்காலம் பலமே/
ந்ததி தோறும் ஆரோக்கிய சுகமே/
பட்ங்கள் பதவிகள் நமது அடையாளம்/
ரணியும் வாழ்த்துமே நமது புகழை/  
ணிவுடன் சேரும் அறிவே அழகு/
ஆற்லும் வளர்த்தே வாழ்வினில் சிறப்போம்/

ஜன்ஸி கபூர்  

அறன் வலியுறுத்தல்

 குறள் - 35

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கு இயன்றது அறம்.

பொறாமை ஆசை சினம் கடுஞ்சொல்

பொருத்திடுமே குற்றத்தில் வருத்திடுமே பாவத்தில் 

திருந்திடலாம் அறத்துள் வாழ்வினைப் பிணைத்தே 

சிறந்திடலாம் மனிதத்துள் நமையும் இருத்தி 


 குறள் - 39

அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம்

புறத்த புகழும் இல.

அறத்தோடு இசைந்து வாழ்வதே பேரின்பம் 

அன்றில் பறந்தோடுமே உள்ளத்தின் இன்பம் 

உளக் குற்றத்தால் மறைகின்ற புகழும் 

உணர்வினைச் சிதைத்து துன்பத்தில் வீழ்த்துமே 

 

அறன் வலியுறுத்தல்
-------------------------------------
மனதின் நேர்மை அறத்தின் மகுடம்/
தனக்கெனச் செய்கையில் இன்பமும் தளிர்க்கும்/

குற்றம் குறைகளைக் களைந்திடும் பண்பே/
சுற்றம் எங்குமே சிறப்பினை வார்க்கும்/

புகழும் வந்திடும் அகத்தின் தூய்மையால்/
இகழ்ந்திடுவார் அறம் மறந்து வாழ்வோரை/

வாழ்நாள் பலனை உணர்ந்திடும் தருணம்/
வாழ்த்துமே புவியும் நற்பண்பினை மதித்தே/
 
ஜன்ஸி கபூர்  

 

மன வலிமை

 
மண்ணில் பிறப்பெடுத்த உயிர்கள் அனைத்துமே/
தன்னைத் தாழ்த்துவதில்லை அற்புத வாழ்வினிலே/

தளர்ந்திடாத தன்னம்பிக்கையை மனதில் ஏந்தி/  
தலைநிமிர்கின்றேன் நானும் உக்கிரம் கொண்டே/ 

கண்ணாடியின் விம்பத்தில் பூனைத் தோற்றமே/
எண்ணத்தின் வடிவமாய் வலிமைச் சிதறல்களே/

அறிந்திடுவாரோ அகமேந்தும் முரணின் நாட்டத்தை/
புரிந்திடுவாரோ பதுமை ஏந்தும் தீப்பிழம்பை/

உருவம் பார்த்து எடை போடுவோரே/
உணர்ந்திடுவீர் வேற்றுமை கொண்ட மனதினை/

ஜன்ஸி கபூர்  
 

கரும்பு தின்னக் கூலி வேண்டுமா?

  

 
ரும்பின் சுவையில் இனித்திடுவார் நல்லோர்
பெருமனதோடு நற்காரியங்களையும் ஆற்றுவார் சிறப்பாக
அன்பினைப் பிழிந்தும் ஊற்றுவார் அமிர்தமாக
இனிப்பான இன்பத்தினைச் சுவைத்திடச் செய்வார்
கனிவான மாந்தர் தருகின்ற நட்புக்கும்
விலையும் உண்டோ இவ்வையக வாழ்வினில் 

குறள் கவிதைகள்


(குறள்  - 65) 
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
 
இல்வாழ்வும் தந்திடும்    குழந்தைச் செல்வமே/
இனித்திடும் இன்பமாம்   இவ்வுலக வாழ்வில்/

குழந்தையின் தழுவலில்  துளிர்க்குமே மகிழ்வும்/
மழலையின் மொழியினைச்  சுவைத்திடுமே செவியும்/4

உளத்தையும் உடலையும்  அணைக்கின்ற மக்களால்/
உணர்கின்ற இன்பமே துன்பத்திற்கான மருந்தே/

சேயின் மெய்தீண்டலில் வழிந்தோடும் வலியும்/
சேர்த்திடுவர் களிப்பினை  மக்கள் செல்வத்தினர்/ 8
                                                                                              
   (குறள்  - 68) 
 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
 மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
 
பிறப்பின் பயனாம்  பெற்றோருக்கும் நன்மக்களாவது/
சிறப்பான உயர்வும்  தந்திடுமே இன்பமே/

அறிவின் உயர்ச்சிக்குள்  உயிர்த்திடும் பிள்ளையால்/
ஆனந்தமே துளிர்க்கும்  பெற்றவர்கள் நெஞ்சுக்குள்/4

 தன் பிள்ளையின்  உயர்வின் மலர்ச்சியில்/
துன்பம் கரைத்து  மனமும் களிப்பிலாடும்/  

அறம்தானே அகிலத்தின்  உயிர்களுக்கும் இன்பமளித்தல்/
அகமகிழ்ச்சிக்குள் அனைவரையும்  இசைத்திடுமே அறிவுடைமை/ 8

ஜன்ஸி கபூர்  

  குறள் 971:

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்.

 

குறள் 972:

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

 

#ஒளிஒருவற்கு_உள்ள_வெறுக்கை_இளிஒருவற்கு

#அஃதிறந்து_வாழ்தும்_எனல்.

ஊக்கத்தின் உயர்வினில் பெருமை


பிறர் செய்திடாத நற்செயல்களை நானும்/

செய்திடுவேனெனும் ஊக்கம் கொண்டோரே தம்முள்/

பெற்றிடுவார் பெருமையெனும் நற்பண்பினைச் சிறப்பாக/

அன்றேல் அவ்வூக்கமின்றி வாழ்தலே போதுமென்று/

சிந்தைக்குள் கருத்தினைப் பெற்றே இழிந்திடுவோர்/

இணைத்திடுவார் உளத்தில் உளக்குமுறலெனும் மாசினை/


  


 



 


 

கஸ்தூரி மஞ்சள்

அற்புத பயன்களை அள்ளித் தருமே/

அழகின் மகுடம் அருமையான கஸ்தூரி/

அழற்சி எதிர்ப்பும் அகன்றே போகும்/

அழுக்கின்  ஒவ்வாமை அதிர்ந்தே ஓடும்/


அணுகாதே புற்றுநோயும் அழியுமே பாக்றீரியாவும்/

அவசியம் நமக்கே அறிவோம் பயன்களை/

அரைத்த மஞ்சள் அகற்றுமே வடுக்களை/

அடிபட்ட வலியின் அருமருந்தும் இதுவே/


தோலின் நோய்கள் தோற்றே போகும்/

தேமல் வந்தால் தேடியே போவோமே/

தேனுடன் கலந்தால் தோன்றாதே வயிற்றுவலியும்/

தேவை மஞ்சளே சருமம் பொலிவிற்கே/ 


சித்த வைத்தியம் சொல்லும் இரகசியம்/

சிந்தை மகிழவே தூளைப் பூசுவோம்/

இளமை முகம் இதய சுகம்/

இன்றே பயனடைவோம் இனிய மஞ்சளால்/

ஜன்ஸி கபூர் 

கறிவேப்பிலை

 

கறிவேப்பிலை நறுமணம் கமகமக்குமே சமையலில் 

அறிவோமே இன்று கொத்திலைகளின் மருத்துவத்தை 

கல்லீரல் பாதுகாப்புடன் கண்பார்வை சீராகும் 

தோல்த் தொற்றும் மாயமாகிப் போகும் 


தோற்றமும் அழகுடன் மிளிர்ந்தே சிறக்கும் 

நீளக் கூந்தலும் உடலைத் தழுவும் 

நீங்குமே நீரிழிவும் தீருமே தலைச்சுற்றும் 

செரிமானக் கோளாறும் சரியாகும் தினமும் 


செந்நிற இரத்தம் சுற்றியோடும் சரியாக 

பச்சையிலை பசியின்மையை நீக்கும் நமக்கே 

பருகும் சாற்றால் குமட்டலும் ஓடும் 

உடலுக்குப் பலமும் கிடைத்திடும் சிறப்பாக 


உயிர்ப்பான மூலிகையை உணவாகக் கொள்வோம் 

சுவைப்போம் நிதமும் தடுப்போம் நோய்தனை 

ஜன்ஸி கபூர்

ஓட்டுரிமை

நல்லாட்சி விதைத்திட நாமேந்தும் ஆயுதமே/
நல்லவர்கள் நாடாள நாமிடும் அங்கீகாரமே/

தொட்டதுமே பதினெட்டை வந்துவிடுமே அடையாளம்/
தெரிவுக்கான உரிமைக்காக உறவாவார் பலருமே/

சிந்தித்தே இடும் வாக்குப் பலத்தில்/
விரல்களும் எழுதிடுமே புரட்சி மாற்றங்களையே/

ஜன்ஸி கபூர் 

நாணயம்

நம்பிக்கையை மனதிலேற்றி நம்மை நகர்த்திடும்/
நாணயமே ஆள்கின்றதே மனித வாழ்வினை/

நிலைமாறும் உலகைப் பற்றும் அச்சாணியிது/
நீங்குமே நுகர்வினால் நீடிக்கா  செல்வமாகி/

நுட்பமான சேமிப்பும் காக்குமே எதிர்காலம்/
நூதனசாலைகள் பேணிடுமே பழமைத் தோற்றங்களை/
  
நெஞ்சக் கலக்கம் நீக்கிடும் பொக்கிசமிது/
நேர்மையும் நாணயப் பண்பும் கொண்டோர்/
  
நொந்திடார் அவலங்களால் நிறைந்திடுவார் நிம்மதியினால்/
நோவும் துறந்தே மகிழ்ந்திடுவார் பொழுதெல்லாம்/

ஜன்ஸி கபூர்  
 

உதிரிப்பூக்கள்

 

வலியின் வலிமையில் வாழ்வது மூட/
வயதின் ஏற்றத்தில்  வனப்பது உதிர/
வாழ்கின்ற வனிதையும் வகுத்திடும் விதியோ/
வழிகின்ற நீரும் வருத்திடும் முதிர்கன்னியென/

உதிரும் நாட்களில் உறைகின்றதே ஆரோக்கியம்/
உன்னத வாழ்வினை உருக்குலைக்கும் தீநுண்ணிகள்/
உருவாக்கும் மரணங்களால் உதிரிப்பூக்களாகத் தேகங்கள்/  
உருவாக்கப்படுகின்ற நவீனத்தால் உறங்குகின்றன உயிர்கள்/

அரும்பிடும் முன்னர் அவலக் கறை/
அணைக்கின்ற காமம் அறுத்திடும் மூச்சை/
அழகிய ஆன்மாவுக்குள் அறைகின்றதே வன்புணர்வை/
அகிம்சை இற்றுப்போக அடைக்கலமாகின்றன சமாதிக்குள்/

வெஞ்சினம் கரைத்தே வெந்நீர் பூசும்/
வெறுக்கும் சமரினில் வெட்டப்படும் தேகங்கள்/
வெறுமை பூமிக்குள் விதைக்கப்படுகின்றன உதிரிகளாகி/
வெல்லுகின்ற வன்முறைகள் வெட்கப்படா கலியுகமிது

ஜன்ஸி கபூர்  

இடைவிடா அடைமழை

 


படர்கின்ற வெயிற் பூக்களை யறுத்திடவே/

இடர் மழையோ யிங்கு வெள்ளமாக/


வீழ்கின்ற துளிகளில் உதிர்ந்தோடும் மலர்களும்/

அவிழ்கின்ற மண் முடிச்சுக்களின் துளைகளும்/

வலியுடன் போராடி கரைந்தோடுகின்றன வலிமையுடன்/


சதைகளைத் துளைக்கும் ஈர வீரியமும்/

விதைக்கின்றதே குளிரினை உணர்வும் சிலிர்க்கின்றதே/


சாலையோரம் நனைந்தே வீசுகின்ற காற்றும்/

சொல்லிடுமோ கலைந்தோடும் கார்மேக இரகசியத்தினை/  

மனசுக்குள் சாரலடிக்கும் மேகவூற்றும் பேரின்பமே/


ஜன்ஸி கபூர்  

சித்திரவதைப் பார்வை



பெண்மைக்குள் தீயூற்றும் கலிகாலம் அணைப்பினிலே/

தாய்மையும் சூடுகின்றதே முட்கிரீடம் உயிரினிலே/

பருவங்கள் கடந்திடாத போதும் கரையேற்றும்/

பாதகங்கள் பாரினிலே அரங்கேற்றும் அவலத்தினை/


படிப்பேற்றாது அடுப்பூதும் அநுபவமதைக் கற்றிடவே/

பாதையினை வகுத்திடுவார் ஏழ்மைக்கும் கருணையில்லை/

இருமனமும் கலக்கின்ற திருமண பந்தத்திலே/

விரும்பிடுவார் சீதனத்தை சிதைந்திடுமே இல்லறமும்/


கொந்தளிக்கின்ற காமத்தினால் வல்லுறுக்கள் வட்டமிட்டே/

கொன்றொழிக்கும் உணர்வினையே வன்புணர்வும் சித்திரவதைக்குள்/

மங்கையராகப் பிறந்தோர் மாதவம் செய்தோரென/

முழங்கிடுவோரும் அறுக்கின்றார் அணங்கின் அடையாளங்களை/


வலிமைக்குள் வலி திணிக்குமிந்த வாழ்க்கை/

வேண்டாமே பாவைக்குள்ளோ சித்திரவதைப் பார்வை/

சிதறுகின்ற கனவுகளைப் பொறுக்குகின்ற விதியது/

அழியட்டும் அன்புக்குள் அவளுலகம் ஆளட்டும்/


ஜன்ஸி கபூர்  

ஆவாரை


ஆவாரையைப் பயன்படுத்துவோர் சாவாரோ நோயினில் 
ஆரோக்கிய வாழ்வினால் நாளெல்லாம் இதமே 

தாவரப் பகுதியெல்லாம் தந்திடுமே மருத்துவத்தை 
ஆதாரமே நமக்கும் பொன்மேனி அழகிற்கு 

நோய்க் கிருமிகள் பாய்ந்தோடும் விரைவாய் 
நோவினைத் தரும் புற்றும் நீங்குமே 

ஆவாரைப் பட்டையில் கெட்டியாகுமே பற்களும் 
ஆஸ்துமாவும் தீர்ந்து போகுமே தேகத்தில் 

மண்ணீரல் பலத்தில் மிரண்டோடும் காய்ச்சல் 
கண் எரிச்சலும் காணாமல் போகுமே 

ஆவாரப் பஞ்சாங்கம் ஆளைப் பலப்படுத்தும் 
ஆவாரப் பூவால் இரத்தமும் சீராகும் 

எக்ஸீமாவும் தாக்காது எழிலுக்கும் குறையிருக்காது 
எல்லோர் தேகத்திலும் கரும்புள்ளிகள் கரையுமே 

வாயுத் துன்பம் தேயும் இலைச்சாறில் 
நோயும் நீங்கி சிறுநீரகமும் சிறப்பாகுமே 

ஆவாரையின் உறுப்பெல்லாம் தேடித்தரும் இதத்தை 
அனுபவிப்போம் நாமும் வீட்டில் பயிரிட்டே 

இலை தண்டு வேர் பூவெல்லாம் 
இரணம் களையும் மூலிகையாய் முகங்காட்டுமே 

நாளின் புத்துயிணர்ச்சியை நயம்படத் தந்திடுமே 
தோலின் வறட்சியை விரட்டியே செழிப்பாக்குமே.

வெம்மையை உறிஞ்சி நிழல் விரித்திடும் 
வெற்றி வாழ்வைப் பற்றும் மருந்திதுவே 

 
ஜன்ஸி கபூர்