About Me

2020/06/20

இணையம்

வார்த்தைகள் சுருங்கிக் கொண்டதும்
இதயங்கள் விரிந்து கொண்டன
வாழ்க்கையுடன் ஒன்றித்துப் போனதாய்
கைக்குள் இணையம்

ஜன்ஸி கபூர்  


அனுபவக்கல்வியே தேவை

தன்னை  யறிதல் கல்வியென்றார் ஆன்றோர்/  
விண்  மண் இடைவினைப் புரிதலில்/
எண்ணும் எழுத்துக்களும் ஏடுகளை நிரப்ப/
கண் ஒளியில் அறியாமை  இறக்கும்/

அறிவால் கற்பவை வெறும் சொற்ககளே/
வெற்றிடங்களில் வீழும் விதைகள் போல/
வெறுமனே பயனற்றுப் போகும் செயலின்றி/
அறுந்த மணிகளாய் சிதறிக் கிடக்கும்/

சிரசோடு பொருந்தும் அறிவில் உயிர்ப்பில்லை/
கரமும் இதயமும் இணைந்திட்டால் செயலாகும்/
காந்தியும் சொன்னார் இயற்கையும் அழைக்கின்றதே/
காலத்தின் கல்வெட்டில் பதிவாகுமே அனுபவக்கல்வி/

பயன் குன்றிய கல்வி நமக்கெதற்கு/
பாரதியின் முழக்கத்திலும் மெய் யுண்டே/  
சந்ததி வழிக் கல்வி விழுமியங்களே/
சமூகத்தின் அச்சாணியாம் என்றும் தாங்கும்/

சூழும் கல்வியே சமுகத்தின் தேவைகளாம்/
வாழ்க்கையே கல்வி என்றே மொழிந்தார் ரூயி/
தொடர்கல்வியாய் தொடர்கின்ற அனுபவங்களே/
தொல்லையின்றி நம்மைக் காக்கும் தொழிற்கல்வியாம்/

இயற்கைச்சூழல் கற்றுத் தரும் இசைவாக/
இரசனையால் ஐம்புலனில் விரியுமே அனுபவங்கள்/  
தரிசனங்கள் காட்சிகளால் பிள்ளைகள் மனமும்/
கரிசனையுடன் விரும்பிக் கற்குமே எந்நாட்களும்/

ஞானத்துடன் வாழ்க்கையையும் கற்றிடவே/
அனுபவக்கல்வியே சிறந்ததென்றே/ 
நிறைவு செய்கின்றேன் தலைப்பினை/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 கல்விப் புலத்தில் கனிந்த பழத்தின் கருத்து.
அனுபவக் கல்விக்கு ஆதாரம் அழகாகத் தருகின்றார்.
இந்தக் கருத்துகளை எடுத்து நோக்குவோம்.
நிலாமுற்றத்தில் முதல் கவியரங்குவென தலை நிமிர்ந்து பகிர்ந்தாலும் தக்க கருத்துப் பகிர்ந்தார்.
வாழ்த்துகள் கவிஞரே வருகைக்கும் பகிர்வுக்கும் வாழ்த்துகள்

நிலாமுற்றத்தின்
220 - வது
கவியரங்கத்தில்
அனுபவக்
கல்வியே சிறந்து என்று
கவிதையில் ஆயிரம்
சான்றுரைத்து
தாங்கள்
படைத்திட்ட கவிதைக்கு
நன்றி
வாழ்க தமிழ்
வாழ்க உங்கள்
தமிழ்பணி என்றே
வாழ்த்தி மகிழ்கிறது
நிலாமுற்றம்





2020/06/19

வழிகாட்டி


வழியறியாது தடுமாறும் விழியற்ற இளைஞனுக்கே/
விழியாகி வழிகாட்டும் ஊன்றுகோலாய் மாறும்/
அழகான கருணை யிங்கே தரிசிப்பாம்/
வளரும் பிள்ளைக்கோ இவன் வழிகாட்டியாம்/

வெள்ளைப் பிரம்போடு தானும் கைகோர்த்த/
வெள்ளை மனதின் நிழலு மிங்கே/
நல்ல பிள்ளைகள் வாழும் நம் பூமியில்/
உள்ளம் கசிகின்றதே மனிதத்திற்கு வயதுமில்லை/

பள்ளம் மேடும் தானறியாது நடக்கும்/
பாதையில் இடரும் துன்பம் கண்டதுமே/
இருண்ட உலகின் ஒளி விழியாய்/
விரும்பி வாழும் பிள்ளைக் குணம்/

அறமே என்றும் காத்து நிற்கும்/
வரமாய் அகிலம் போற்றி நிற்கும்/
சிறந்த தர்மமாம் பிறருக் குதவுதலே/
அருமையான வளர்ப்பென்றே உரத்துச் சொல்வேன்/

ஜன்ஸி கபூர் - 19.06.2020

 


தினமும் யோகா

பயிற்சி செய்தால் உளமும் திடமாகும்  
உயிர்க் கூடும் வாழ்ந்திடும் நலமாக
உடற்பயிற்சியும் யோகாவும் ஆரோக்கியத்தின் கண்களாம்
உறவுகளை மேம்படுத்தும் உற்சாகப் பண்களாம்
முறையாகச் செய்திட்டால் உடலும் சீராகும்
நடைமுறை வாழ்வும் கண்டிடும் மலர்ச்சி

ஜன்ஸி கபூர் 
 

உறவைத் தேடும் கிளி

 வானம் விரிந்திருக்கும் வாழ வழியிருக்கும்
கனவுகள் கலந்திருக்கும்  காதல் விழியோரம்
கண்ணாளன் வருவான் காத்திருப்பில் நெடுநேரம் 
உணர்வின் தேடுதலில் உயிரும் வாடுதே

சோள வயலிலே முத்துக்கள் வெடித்திருக்கும்
சோடிக்கிளியைக் காணவில்லை  சோகம் குவிந்திருக்கும்   
அலகிலே கதிர் அந்தரத்தில் உயிர்
சலசலக்கும் நீரோடையும் தேடுதோ இணையை

பட்டமரப் பொந்திலே கட்டிய வீடு
வட்டநிலா வெளிச்சம் அங்கே பாசத்தோடு
பட்டுச்சிறகு அணைத்திடும் காதல் நெஞ்சோடு
கிட்ட இருந்தால் ஆறுதலே வாழ்வோடு

சொந்தம் துணையிருந்தால் சொர்க்கம் நிறைந்திருக்கும்
காந்தம் கவர்ந்திழுக்கும் அன்பில் கறையேது
சிந்தையிலே ஈரமுண்டு பகிர்ந்துண்ணும் நேரமிது
எந்தன் மச்சானே வந்துவிடு அந்திக்குள்ளே

ஜன்ஸி கபூர்  




தூறல் மழை

kioj;Jspfis
tprpwpf; nfhz;bUf;fpd;wd
tprpwpfs;



கண்ணீர் துடைத்திடு

 கண்ணீர் சிந்தும் வாழ்வே வறுமையோ 
புண்ணாகும் மனதே புன்னகை தொலைக்குமோ 
துன்பத்தில் சிவக்கும் ஏழ்மையை விரட்ட 
தன்னம்பிக்கையும் துணிவும் நமக்குத் துணையே

ஜன்ஸி கபூர்  

 
 

அன்பே இன்பம்

கோடி உழைத்து மாடியில் உல்லாசம்/
வாடி நிற்குமே அன்பு காணா மனை/
ஓடி யுழைத்த செல்வங்களின் செருக்கில்/
நாடி நிற்போர் ஏழையே அன்பில்லாவிடின்/ 
கூடி வாழ்கையில் உவகை கொண்டோர்/
முடியாய் தருவார் உரிமைகளை  அடுத்தார்க்கே/  

மரணங்கள் தேடும் வாழ்வின் விருப்பாம்/
அரவணைத்துச் செல்லும் உறவுகளோடு மகிழ்தலாம்/
இரக்கத்தோடு இதயம் தொடும் நட்பும்/
சிரம் தாழ்த்துமே  வாழ்வின் பயனென்றே/ 

தசைகளுடன் முரணின்றி என்பும் இரத்தமும்/
இசைந்த உடலின் இயக்க வீச்சில்/
இதயம் மொழிகின்ற அன்பைப் பெற்றோர்/
வதையில் துடிப்பார் பிரிவுத் துயரில்/
சிதையில் வெந்த வலியில் கண்ணீர்/
பதைபதைத்தே அடுத்தார்க்குக் காட்டுமே அன்பை/  

கொடுக்கக் கொடுக்கக் குறையாத செல்வமாம்/
எடுப்பார்க்கும் தித்திக்கும் உடன் அமுதமாம்/
தொடுத்து நிற்கும் மனதின் விருப்போடு/
அடுத்தவருடன் பொருந்தி வாழ்வதும் பேரழகே/ 

அருமையான உயிரும் அன்போடு பொருந்துகையில்/
தோல்விகள் தொடாது வெற்றிகளே முழக்கமிடும்/
அல்லலும் அகன்றிட  அகமதும் தெளிவாகும்/
புகழோடு இன்புற்றிருக்கும் வாழ்வும் நமதாகும்/

 ஜன்ஸி கபூர்

கவிதைக்கான கரு: இரும்பான இதயத்தையும் கரும்பாகப் பிழிந்து தரும் அன்பு திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளில் அன்புடைமை என்ற அதிகாரம்

நட்பும் பேரின்பமே


nfhl;ba kioahy; Fl;bf; Fskpq;Nf
vl;bg; ghu;f;FNjh tl;lkpLk; fg;gy;fs;
Rl;bg; gps;isfspd; ty;yikapy; fhfpjq;fs;
vl;Lj; jpf;nfq;Fk; Rw;WNjh fg;gy;fsha;

fz;Nzhuk; fUj;jupj;j gpQ;Rf; fdTfs;;
vz;zj;jpd; tpUg;ghy; ePuiyapy; NkhJNj
jz;zPupy; eidAk; jk; tpk;gq;fNs
tpz;NzhL Nkhjp tpisahLfpd;wd FJfykha;

Jd;gk; mwpahj gps;is kdjpy;
vd;Wk;  Njhw;Wg; Nghfhj el;GKz;L                   
fpope;jpLk; Xlq;fs; fiu Nru;ifapy;
tope;jpLk; ePu; Jilf;f md;GKz;L

[d;]p fG+u; 
 

2020/06/18

சுயநலம் தவிர்ப்போம்

இறப்புக்கும் பிறப்புக்கு மிடையே போராட்டம்
இயற்கை கற்றுத் தருகின்றதே வாழ்வோட்டம்
அறத்தோடு ஒழுகி வாழ்வதே கொண்டாட்டம்
அகத்தில் சுயநலம் வந்திட்டால் திண்டாட்டம்

இல்லாமையை உடைக்கையில் இதயங்களின் மகிழ்வோட்டம்
அல்லலை விரட்டும் கரங்களில் உயிர்ப்போட்டம்
வள்ளலின் நிழலில் வறுமையின் நகர்வோட்டம்
உள்ளங்கள்  பேசுகையில் அன்பின் ஈர்ப்போட்டம்

கூடி வாழ்கையில் நன்மைகள் வருடுமே
தேடி உதவிடும் மனிதம் தெய்வமே
வாடியோர் சிரித்தால் வசந்தம் பூக்குமே
தேடிடும் சொந்தமாய் பொதுநலம் தொடருமே

மன்னிக்கும் குற்றங்கள் சாந்தியில் உறையுமே
வன்முறைகளை உடைக்கையில் அமைதி வெல்லுமே
அயலாரை நேசிப்போம் அகிலம் நமதாகும்
சுயநலம் தவிர்ப்போம் சுகங்கள் தானாகும்

ஜன்ஸி கபூர் 

சிறகுகள் இல்லாத சருகுகள்

 மரத்தில் மகிழ்ந்து மடியில் தவழ்ந்து/
இறந்தும் உயிர்க்கும் உரமாய் எழுந்து/
விரிந்து கிடக்கும் விருட்சக் குடைகள்/
பரந்த பூமியின் அருட் கொடைகள்/

காற்றின் உரப்பில் பண் ணிசைத்தே/
காட்டு வெளியில் உல்லாசமாய் திரியும்/
வேரறுந்து தரையில் வீழ்கையில்/
பாருக்குள் முகம் புதைக்கும் வலியில்/

வண்ணப் பூக்களை நெஞ்சில் அணைத்து/
மண் ணுயிர்களுக்கே உணவும் தொகுத்த/
பொக்கிஷங்க ளின்று முதுமையின் நிழலாய்/
போக்கிட மின்றி வீழ்ந்தே கிடக்கின்றன/

மரணம் தொட்டால் கரணம் போடும்/
அரவணைக்க இங்கு யாரும் உண்டோ/
பருவம் உடைந்து கோலமும் சிதைந்து/
தத்துவமாய் சிறகுகள் இல்லாத சருகுகள்/

ஜன்ஸி கபூர் 



தொட்டு விடும் ஈரமும் பேரின்பமே

 கொன்றல் கொஞ்சம் தூறல் பிழிய/
தென்றல் சிறகும் மெல்ல வருட/
வண்ணக்குடையும் கையில் சிலிர்த்தே பறக்க/
எண்ணம் மகிழும் தூறல் மழையில்/

கன்னம் உரசும் புன்னகை வாசம்/
சின்ன தேவதை கண்ணோரம் வீசும்/
கொஞ்சிப் பூக்கும் மழையின் நேசம்/
அஞ்சவில்லை தேகம் நனைய நிதம்/

தரையில் இறங்கும் நீர்ச் சிறையில்/
விரும்பிக் கிடத்தல் குழந்தைக் குணமே/
தொல்லை இல்லா பிள்ளை வாழ்வில்/
தொட்டு விடும் ஈரமும்  பேரின்பமே/

ஜன்ஸி கபூர்  

2020/06/17

காத்திடல் நலம்

செய்தி உலகநடப்புக்களின் உருவம் காட்டும்/
பொய் வதந்திகளால் கலக்கமும் வெடிக்கும்/
ஏய்க்கின்ற மனிதர் வீழ்த்திடும் உலகை/
மெய்யுரைத்தே காத்திடல் நம் நலமே/ 

 ஜன்ஸி கபூர் 

உயிரே உருகாதே

இரவுகளும் நீண்டு உடைகின்றன விடியலின்றி
அரவணைக்கும் உறவுகளும் மூழ்கின்றன பிரிவுக்குள்
மரண இம்சையில் மௌனங்கள் உரச
தூறல் வீழாதோ விழிகளும் நனைந்தே

மெழுகாய் உருகி வலியில் வீழ்ந்தே
எழுகின்ற மனமே அழுகின்றாய் சுயநலவாதிகளால்
அழகிய இயற்கையை அக்கினிக்குள் வீழ்த்தும்
பழகிய மாந்தர் பாவிகளாய் முன்னே

உயரத்தி லிருந்தே வீழும் நீர்தான்
பயனாகும் பாருக்கே மின் னொளியாய்
துயரங்கள் துரத்தும் வீழ்ந்தாலே மிதிக்கும்
பயணப் பாதையை மாற்றிடு புன்னகையால்

உணர்வை வருடும் உண்மை அன்பில்
இன்னல் கலைந்தே இதயம் நெகிழும்
வறுமை வசந்தத்தின் தடையல்ல என்றும்
வருவேன் துணையாக உயிரே உருகாதே

ஜன்ஸி கபூர்  

இன்னொரு தாயாய்

 இருண்ட மேகம் மழையின் வாசத்தில்/
இறுக்க முகம் இளகிய பாசத்தில்/
சொற்களில் கண்டிப்பும் கண்களில் கனிவுமாய்/
காத்திடும் இன்னொரு தாயே அப்பா/

ஒழுக்கமும் அறிவும் வாழ்வின் மொழிகளாம்/
அழகாகச் சொல்லியே அனுபவமாவார் வாழ்வினில்/
அருகிலிருந்தால் தொல்லையே புத்தி நினைக்கும்/
தொலைவானால் விழிகள் ஏங்குமே அருகாமைக்கே/

பிஞ்சுப் பருவத்தில் இணைத்திட்ட கரங்கள்/
தஞ்சமாகித் தொடரும் தன் ஆயுளுக்கே/
அறியாத வயதில் பதித்திடும் தடங்களில்/
உரியாதே அன்பின் நிழல் உயிர்க்குமே/

ஜன்ஸி கபூர்  




2020/06/16

வாழ்வின் உயர்ச்சி

குளிர்ச்சி மேகங்கள் மழையாய் பூத்திட்டால்
வளரும் விருட்சங்கள் பசுமையில் செழித்திடும் 
களிப்பால் உழைப்பும் உயர்வைத் தொட்டிடும்
மலர்ச்சியும்  வாழ்வில் நிலையாய் ஊன்றிடுமே

ஜன்ஸி கபூர் 

கூடா நட்பு

கூடா நட்பின் மலர்ச்சி
தேடி தரும் இகழ்ச்சி

 

நீரைத் தேடும் உயிர்

தாவி யோடும் மேகங்கள் பிழிந்தே/
தூறல்கள் வீழுமே மனதும் பூக்குமே/
ஈரம் கசியும் காற்றில் நனைந்தே/
மரங்கள் மகிழுமே வாட்டம் தீருமே/

பாறை உருகும் வெயிலின் வலியில்/
தரைகள் உடையுமே தளிர்கள் சிதையுமே/
நிழலாய் வீழும் விருட்சக் குடைகள்/
அழிந்தே போக அகிலம் உடையுமே/

வரண்ட மண்ணும் உடைக்கும் வெடிப்பில்/
வேரும் மோதுமே பாரும் சாயுமே/
விண்ணும் கதறும் வெம்மை தணிக்க/
கண்கள் குளிருமே  மழையும் வீழுமே/

நீண்டு யர்ந்த கிளைகள் மோதி/
இருண்ட கொன்றல் மின்னல் வெட்டுமே/
இயற்கை உயிர்த்து பஞ்சம் நீங்க/
நீரைத் தேடும் உயிர்கள் வாழுமே/

ஜன்ஸி கபூர்  
  •  

வேண்டாமே முகமூடிகள்

உள்ளொன்றும் புறமொன்றுமாக முகமதைச் செதுக்கி
கள்ளமாக உறிஞ்சிடுவார் அடுத்தவர் புன்னகைகளை
உள்ளத்தின் அழுக்கில் தள்ளாடும் பொய்களால்
துள்ளிடுவார் கபட வேசங்கள் அணிந்தே

புவிக்குள் வேரூன்றி கனிந்திடுவார் சுயநலமாய்
நாவினிக்கும் பேச்சினால் கரைத்திடுவார் துரோகங்களை
மலருக்குள் மறைந்திருக்கும் முட்களின் விரல்களால்
நலம் விசாரித்தே பிடுங்கிடுவார் மூச்சுக்களை

கெடு மதியால் கேடுகள் செய்தே
இடுக்கண் விளைவிப்பார் மனித மனங்களில்
மிடுக்குடன் அவனிக்குள் உலாவும் போலிகள்
தடுக்கி விழட்டும் காணாமல் போகட்டும்

ஜன்ஸி கபூர்   




2020/06/15

இணைய உலா

முகநூல் முகமறியாத நட்பினருடன் கூடி
அக எண்ணங்களை வலிமையாக்கும் தேடி
விரல் அசைவுகளின் இணைய  உலாவில்
நேர நகர்வுகள்   புரிவதில்லை  நமக்கே

ஜன்ஸி கபூர்  

கவிதை பிறந்தது

செந்தமிழ் பிசைந்து தெவிட்டா அமுதுடன்
சிந்தையில் பூத்த எண்ணங்களை வார்த்தே
சந்தக் கவி களிசைத்து மகிழ்ந்தோம்
முத்தமிழ் வளர்த்த நிலாமுற்ற முன்றலில்

இணையம் தந்த இதயம் மகிழ்ந்திட
இணைந்த கவிகளால் மகிழ்வும் பெருகிட
கற்பனையும் யதார்த்தமுமாய் கலவைகள் கரைத்தே
சொற்களும் பதங்களுமாய் அலங்கரித்தன கவிதைகள்

முத்துபேட்டை மாறனார் செதுக்கிய தளமாம்
முகநூலில் கலைநயம்  வளர்த்திட்ட தடமாம்
அகமதின்  எண்ணங்களை பண்புடன் படைத்திட
ஆக்கமும் ஊக்கமும் தெளித்திடும்  வளமாம்

கவிகளோடு பிறந்து கவியாய் வாழ்ந்து
புவி யலைவரிசையின் தமிழ் வாழ்த்தாய்
கலைகள் வளர  கருத்தாகி மலர்ந்த
கலைமகனை வாழ்த்த கவிதை பிறந்ததுவே

ஜன்ஸி கபூர்     - 15.06.2020




அற்புத பறவை




தொலை நிலா உருகும் பொன்னாய்
அலைகள் குவிந் தாடும் களிப்பாய்
ஆழி நனைக்கும் ஒளிக்கீற்றுக்களும் விரிந்தே
செழிக்கும் இரவுப் பூக்களாய் மலர்ந்து

கழுகு விரிக்கும் சிறகின் துடிப்பில்
தழுவிக் கிடக்கும் மதியின் நிழல்
நழுவி யோடும் தடைகள் உடைந்து
விழுதாய் பற்றுமே வாழ்வின் வெற்றியாய்

காரிருள் துளைக்கும் கூரிய பார்வையும்
காற்றை யுடைக்கும் அதீத வேகமும்
தற் றுணிவோடு நகரும் இலக்கும்
அற்புத பறவையாய்  அகிலத்தில் செதுக்குமே

ஜன்ஸி கபூர் - 15.06.2020


நட்பே துணை


'அவள் கணவன் இறந்த செய்தி  இடியாய் இறங்கியது. அவள் மனதில் துளிர்த்திருந்த/ எதிர்கால கனவுகள் எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஒரு நொடியில் காணாமல் போயின. இனி ஒன்றுமே இல்லை.  அழுவதைத்தவிர......

'அம்மா பசிக்குது'/

மெல்லிய குரலில் விசும்பிய  மூன்று வயது மகள் அனுஜாவை அணைத்தவாறே கண்ணீரில் கரைந்தாள் செல்லம்மா.

செல்லம்மா............ வறுமைப்பட்ட பெற்றோருக்கு செல்லமாகப் பிறந்த மகள்தான். பெற்றோரின் ஆசியுடன் , கூலித் தொழிலாளி நடேசனுடன் வாழ்வில் இணைந்தாள். அவ் வசந்த வாழ்வின் பொக்கிஷமாக அனுஜா

அன்று ஒரு மாலைப்பொழுதில் வேலைக்குச் சென்றவன்  உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்ல.
அந்த இரவு கண்ணீரில் கரைந்தது.

மறுநாள்..........

அதிகாலை காவல் நிலையத்திலிருந்து கைபேசி அழைப்பு வந்தது. விபரம் சொன்னார்கள்.

மரக்கிளைகளை வெட்டும்போது/ கால் தவறி வீழ்ந்து பிணமாகி இருந்தான் அவள் கவலைக்குள் மூழ்கி விரக்தியடைந்தாள்.
 
யார் யாரோ எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.

ஆனாலும் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை.
மகளின் வாழ்வுக்கான ஆரம்பமாக இருந்தது./ வாழ்ந்துதான் ஆக வேண்டும்

சிந்தனைக்கோலங்களில் சிறைப்பட்டிருந்தவளை யாரோ சுயநினைவுக்குள் இழுத்தார்கள்.மெல்ல நிமிர்ந்தாள்..

எதிரே...........

சோகத்தின் இறுக்கத்திலும் கண்கள் ஆச்சரியப்பட்டு விரிந்தன.

'பவ்யா'........சிரிக்க முயன்றாள்.  சிறைப்பட்டிருந்த சோகம் வென்றது.

தன் பள்ளிக்கூட நண்பியை இத்தனை வருடங்களின் பின் சந்திப்பாளென்று கனவில்கூட அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.நண்பியின் விழிகளில் வழியும் கண்ணீர் அவளை இன்னும் உசுப்பேத்தி இருக்க வேண்டும்.  அழுகை வெடித்தது. தோழியை சிறு குழந்தையாய் அணைத்தாள்.

'எல்லாம் கேள்விப்பட்டேன். இனி உனக்கு யாரும் இல்லையென்று நினைக்காதே. உனக்கு நான் இருக்கிறேனடி.. உன்னோட வாழ்க்கை இன்னும் அழிஞ்சு போகல  செல்லம்"
.
என்றவாறு அணைத்த தன் தோழியின் கரங்களுக்குள் சிறைப்பட்டாள் செல்லம்மா.

கண்ணீர் சோகம் கலந்த ஆனந்தத்தின் கலவையாக மாறிக் கொண்டது. அறுந்து போன அவள் வாழ்க்கை . நட்பின் துணையால் மீண்டும் தளிர்க்க ஆயத்தமாகிக் கொண்டது.

கதையாக்கம்
ஜன்ஸி கபூர்

2020/06/14

நட்பே துணை


'அவன்......அவள் கணவன் இறந்த செய்தி இடியாய் இறங்கியது.

அவள் மனதில் துளிர்த்திருந்த எதிர்கால கனவுகள் ,எதிர்பார்ப்புக்கள் அனைத்துமே ஒரு நொடியில் காணாமல் போயின.

இனி ஒன்றுமே இல்லை. அழுவதைத்தவிர.......!

'அம்மா பசிக்குது'

என மெல்லிய குரலில் விசும்பிய மூன்று வயது மகள் அனுஜாவை அணைத்தவாறே கண்ணீரில் கரைந்தாள் செல்லம்மா.

செல்லம்மா............

வறுமைப்பட்ட பெற்றோருக்கு செல்லமாகப் பிறந்த மகள்தான். இளமையிற் கொடிது வறுமை என்பார்களே...அந்த வறுமையின் வலியின் முன்னே வாழ்க்கை தோற்றுப் போனது.

சீதனம் எனும் அரக்கன் விதியின் முன்னே  பண்பான அவளது நற்குணத்திற்காக வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டான் நடேசன்

பெற்றோரின்  ஆசியுடன் கூலித் தொழிலாளி நடேசனுடன் வாழ்வில் இணைந்தாள். அவ் வசந்த வாழ்வின் பொக்கிஷமாக அனுஜா

கூலித் தொழிலாளி என்பதால் நீண்ட பொழுதுகள் அலைந்து திரிந்தால்தான் கொஞ்சமாவது பணம் கிடைக்கும்.

அன்றாடம் உழைக்கும் வருமானத்தில் கடன் தொல்லையில்லாத நிம்மதியான வாழ்க்கை.

அன்று ஒரு மாலைப்பொழுதில் வேலைக்குச் சென்றவன் உரிய நேரத்திற்கு வீடு திரும்பவில்லை. துடித்தாள். அந்த இரவு கண்ணீரில் கரைந்தது.

மறுநாள்..........

அதிகாலை காவல் நிலையத்திலிருந்து கைபேசி அழைப்பு வந்தது.

விபரம் சொன்னார்கள்.

உயிருடன் சென்றவன் பிணமாகி இருந்தான்.

மரக்கிளைகளை வெட்டும்போது கால் தவறி வீழ்ந்து மரணம் அது.

அவள் கவலைக்குள் மூழ்கி விரக்தியடைந்தாள்.  உணர்ச்சியற்றவளாக மாறியிருந்தாள்.

யார் யாரோ எல்லாச் சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.

ஆனாலும் வாழ்க்கை இன்னும் முற்றுப் பெறவில்லை. மகளின் வாழ்வுக்கான ஆரம்பமாக இருந்தது.வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

சிந்தனைக்கோலங்களில் சிறைப்பட்டிருந்தவளை யாரோ சுயநினைவுக்குள் இழுத்தார்கள்.

 மெல்ல நிமிர்ந்தாள்.

எதிரே...........

சோகத்தின் இறுக்கத்திலும் ஆச்சரியப்பட்டு கண்கள் விரிந்தன.

'பவ்யா'

சிரிக்க முயன்றாள். சிறைப்பட்டிருந்த சோகம் வென்றது.

தன் பள்ளிக்கூட நண்பியை இத்தனை வருடங்களின் பின் சந்திப்பாளென்று கனவில்கூட அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

நண்பியின் விழிகளில் வழியும் கண்ணீர் அவளை இன்னும் உசுப்பேத்தி இருக்க வேண்டும். அழுகை வெடித்தது. தோழியை சிறு குழந்தையாய் அணைத்தாள்.

'எல்லாம் கேள்விப்பட்டேன்.  இனி உனக்கு யாரும் இல்லையென்று நினைக்காதே. உனக்கு நான் இருக்கிறேனடி. நம்ம அன்புக்கு அவ்வளவு சக்தி இருக்கடி. உன்னோட வாழ்க்கை இன்னும் அழிஞ்சு போகல செல்லம்.
உன் பொண்ணுக்கு இனி இரண்டு அம்மாடி'

தன் தோழியின் கரங்களுக்குள் சிறைப்பட்டாள் செல்லம்மா.

கண்ணீர் சோகம் கலந்த ஆனந்தத்தின் கலவையாக மாறிக் கொண்டது.
அறுந்து போன அவள் வாழ்க்கை.  நட்பின் துணையால் மீண்டும் தளிர்க்க ஆயத்தமாகிக் கொண்டது. 

கதையாக்கம்  
ஜன்ஸி கபூர்


கவிச்சோலையில் உலா

நிலாமுற்றம் உணர்வுகளை உயிரூட்டி கவிகளாக்குதே/
இலக்கியச்சுவையுடன் இன்பத்தமிழையும் மொழியால் வார்த்திடுதே/
அழகிய கனவுகளின் கைதட்டல் ஓசையுடன்/
உலா வருகின்றதே உலகின் கவிச்சோலையாய்/

ஜன்ஸி கபூர் - 14.06.2020


 

அந்தரத்தில் ஆடும் சிவப்பு நிலா


மொட்ட மரம் மெட் டிசைக்க/
கட்டி வச்ச ஊஞ்சலிலே நிதம்/
எட்டி நின்றே கொஞ்சிப் பார்க்கிறே/
வெட்கப்பட்டு கொஞ்சம் சிவக்கும் புள்ள/ 

மனசு மஞ்சள் வானமாய் நீளுதே/
கனவும் உனக்காகத் தவிக்குதே துடிக்குதே/
என் உசுருப் பூவைப் பிழிஞ்சேன்/
விண் தேடி தழுவுதடி மேகமாய்/ 

அனலாய் கொதிக்குது வானும் கடலும்/
அணைத்துக் கொஞ்சடி பனி வீசி/
ஓசோன் உடையுது தொற்றும் பரவுது/
ஒளிஞ்சுக்கலாமா கண்ணே வா வயல்வெளியில்/   

அந்தரத்தில் ஆடாதே அருகில் வாடி/
மந்திரப் புன்னகையில் மயங்கித்தான் போனேனே/
சந்திரவெளியில் உலாவ ஏங்குதடி மனசும்/
வந்து விடவா சொந்தமே நீதானே/ 


ஜன்ஸி கபூர்