2012/11/29
நீ போகாதே
இதயத்தின் சொப்பனமாய்
முடி சூட்டிக் கொண்டன
உன் மீதான தவிப்புக்கள்!
கவனித்தாயா !
நீயென்னை நினைக்கும்
ஒவ்வொரு நொடிகளுமே ..........
விக்கல்............
கவிதைகளை வாசிக்கின்றது!
உன் சோலை..........
பொத்திக் கொண்ட ரோஜாக்களின்
விரல்களில் கூடக் காயம் !
முட்களை முடித்து வைத்தேனதில்.........
தடைக்கல்ல..............பாதுகாப்பிற்கு!
ஏன் மறக்கின்றாய்..............!
யதார்த்தங்களால் தரிசான - உன்
மன பூமியில் - நிதமும்
என் கண்ணீர்க் கீற்றுக்கள்தானே
நம்
காதலை ஈரலிப்பூட்டுகின்றன!
அறியாயோ............!
அனல் கூட அன்பால்
புனலாகும்!
நம்பிக்கையிழக்காதே........!
வானாளோரம் வசந்தம் கூடு கட்டும்
காத்திரு காலம் உன் வசம்!
என் வகிட்டினில் - நீ
பதித்த ஈரமெல்லா மின்னுமே உலராதிருக்க
உலறுகின்றாயே
எனைத் துரோகியாக்கி ........
உன் னிதய நரம்போரம்
அலைந்து கொண்டிருக்கும் என்னை
உறிஞ்சிக் கொள்.....
சாறு பிழியு மென் புன்னகையால்
உன் காதல் வாழட்டும்!
கண்ணா.............!
சாதலிலல்ல காதல்.........
வாழ்தலுக்கே காதல்!
உணர்வுகளை மயக்கும்
அழகிய விசம்தான் காதலென்பதை....
இன்றுதான் அறிந்தாயா!
என்னுள் வீழ்ந்து கிடக்கு முன்னை
நானின்னும் மறுக்காத போது...........
எனை மட்டும் நாட்டி விட்டு
போகாதே நீ மட்டும் தனி வழியே!
காதல் பூங்கா வனமல்ல............
போராட்ட களம்!
கனவுகளுக்குள் கல்லெறிந்து விட்டு- உன்
நிஜ முகம் காட்டு!
அன்பால் உலகம் நெய்து
அணையாமல் காத்திருக்குமெனை விட்டு........
போகாதே கண்ணா போகாதே!
2012/11/28
வலிக்கிறது !
அப்பா...............!
பாசங் கொண்டோருக்கு
அழகு நாமமிது!
உங்கள் இராச்சியத்தால்
என்னுள் முடிசூட்டப்பட்டவை
அன்பு மட்டுமே!
அண்டம் பிளக்கும் அணுவை விட
பாசமாக உதிரும் உங்கள் வார்த்தைகளை
தேன் சுவைக்கின்றதே!உங்களால்..............
ஒவ்வொரு விடியலுமே இங்கு
முகம் காட்டிச் செல்கின்றதே!
இப்போதெல்லாம் கவனித்தீர்களா......
காற்றுக்கும் விழி முளைக்கின்றது
உங்களை நான் தரிசிக்க
- ஜன்ஸி கபூர் -
2012/11/26
அறியாமலே
தொலைவில்............
தெருநாய்கள் ஊளையிடுகின்றன
பலமாய்..............!
கடிகார விரல்கள்
சுட்டி நிற்கின்றன
பன்னிரெண்டைத் தொட்டு !
என்றோ யாரோ.............
விட்டுச் சென்ற பேய்க் கதைகள்
பல்லிளித்து எனை முறைக்க..........
நரம்புகளின் புல்லரிப்பால்
விழிகளில் பீதி யுறைய.............
நிசப்த நிழல்களிலெல்லாம்
"அசாதாரண" தடங்களின் உயிர்ப்பு!
விழிகளை இறுக்குகின்றேன் எனை மறைக்க
விளக்குகளை அணைத்தவாறே.........
மீண்டும் அருகில் ஊளைகளும்
காலடியதிர்வுகளும் எனைச் சிதைக்கும் நேரம்.....
மேசையில் சாய்ந்து கிடக்கும்
பரீட்சை விடைத்தாள்களும்............
சிவப்புப் பேனாவும்............
மின்விசிறி சுழற்சியில் சிக்குண்டு
காத்துக் கிடக்கின்றன............
என் தூக்கம் அறியாமலே!
நீயே என்னுறவாகி
மெய் காதல்
மெய் தீண்டுமோ...............!
அழகான இம்சை கரைத்து - நிதம்
பொய்யுரைத்தாய்........
உலர்ந்தவுன் னிதழ்கள் ஈரலிப்பில்
தோய்ந்து கிடக்க!
இருள் முக்காடிட்ட - பல
இராக்கள்..............
மௌனத்தி லுறைந்து கிடக்க
இப்பொதெல்லாம் - நம்
அலைபேசியின் குசுகுசுப்பை
காதல்
மொழிபெயர்த்துக் கொள்கின்றது
இரகஸியமாய்......!
லப்டொப்பில் வுன் முகம் திணித்து
என்.........
லப் டப் அதிர்வினை - நீ
தினம் ருசிக்கையில்.............
வெட்கித்துக் கிடக்கும் தலையணைகள்........
மிரட்சியோடுன் நினைவுகளைப்
பத்திரப்படுத்துகின்ற - நீயே
என் உறவென!
Subscribe to:
Posts (Atom)