2022/11/03
2021/05/16
கிராமத்தில் வசித்த ஒரு வயதான மனிதர் (An Old Man Lived in the Village)
இந்த ஆங்கிலக் கதையின் முழுமையான மொழிபெயர்ப்பு இதுவல்ல. ஆனால் இக்கதையை நான் வாசித்தபோது, எனக்குள் ஏற்பட்ட அருட்டலை கதையின் பண்போடு வரிகளாக்கியுள்ளேன்.
இயற்கையின் வனப்புக்களை ஆங்காங்கே சிதறவிட்டு அழகாக காட்சியளிக்கின்ற பசுமைக் கிராமம்தான் இது. இக்கிராமத்தில்தான் இந்த முதியவர் வாழ்ந்து வருகின்றார்.
முதுமை என்பது உடலுக்கே அன்றி மனதுக்கல்லவே. வயதின் ஏற்றம் எப்பொழுதும் உடலுக்குத்தானே. மனது எப்பொழுதும் இளமையாக இருக்கவே விரும்புகின்றது. அனுபவங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இம்முதுமை என்பது உறவுகளுக்கு பொக்கிசமே!
ஆகவே இப்பருவத்தில் எல்லோரும் குழந்தைகள்போல் அன்பை எதிர்பார்த்து உறவுகளுடன் நெருங்கி வாழவே விரும்புகின்றார்கள். தம்மைச் சூழக் காணப்படுகின்ற தனிமையை விரட்டி மற்றவர்களுடன் தம் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளத் துடிக்கின்றார்கள்.
சில முதியவர்கள் உறவுகளின் அரவணைப்பில் புன்னகையை உதிர்த்துக் கொண்டிருக்க, சில முதியவர்களை யாரும் கண்டு கொள்வதாக இல்லை. விரக்திக்குள் அவர்களை வீழ்த்த, விரட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
இக்கதையில் வருகின்ற முதியவர் சற்று வித்தியாசமானவர்.
ஒளி இழந்த கண்களில் ஏதோ ஒன்றுக்கான தேடல். சுருக்கமடைந்த தேகத்தினுள் கொந்தளிப்புக்களின் சேகரிப்பு. மகிழ்ச்சியற்றவராக, எதையோ இழந்தவராகவே எப்பொழுதும் காணப்பட்டார்.
அடுத்தவரை புண்படுத்தும் வார்த்தைகளும், நடத்தைகளும் அவரை ஊர்மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கின்றது.
அவரின் தோற்றத்தினுள் இறுக்கம். கடுமை.
அடுத்தவரின் குறைகளை விமர்சிப்பதால் பலரின் வெறுப்புக்கும் ஆளானார்.
இதனால் ஊரார் அவரை நெருங்குவதில்லை.
தனிமை இவர் தனக்கு தானே விரித்துக் கொண்ட கூடு.
அவரிடம் மகிழ்ச்சியைக் காணவே முடியாது. உம்மென்ற புன்னகையற்ற முகம் அவரின் அடையாளம்.
நாட்கள் வேகமாக ஓடுகின்றன.
அவரின் பிறப்புக்கு எண்பது வருடங்களாகி விட்டன.
அன்றைய பிறந்தநாளின்போது ஊருக்குள் ஆச்சரியமான செய்தியொன்று பரவியது.
'கிழவன் இன்று ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றார்'
ஊர்வாய்கள் சுவாரஸியமாக அவரைப் பற்றி அலசின.
எல்லோரும் காரணமறிய அவரைச் சந்தித்தனர்.
அவரோ நிதானமாகச் சொன்னார்.
இத்தனை நாட்களாக மகிழ்ச்சியை நான் தேடிக் கொண்டிருந்தேன். அது பயனற்றது என்பதை உணர்கின்றேன்.
'ஆனால் இன்றோ மகிழ்ச்சியைத் தேடாமல், கிடைக்கின்ற வாழ்வை வாழ வேண்டுமென நினைக்கின்றேன். அதனால் என் முகம் மகிழ்ச்சியாக இருக்கின்றது' என்றார்.
உண்மைதான் இந்தச் சின்னக் கதைக்குள் பொருந்தியிருக்கின்ற பெரிய உண்மை நமக்கான தத்துவமே. தன்னைச் சுற்றிய வாழ்க்கையை உணர்ந்ததால், ஏற்பட்ட திருப்தியே இம்மகிழ்ச்சிக்குக் காரணம் என்பதை அவரது புன்னகை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
மகிழ்ச்சி என்பது நீண்ட நாள் நல்வாழ்க்கைக்கான உணர்வு. அமைதி மற்றும் நமது வாழ்வோடு சேர்ந்த திருப்தி.
உண்மையில், நம்மைப் பற்றி மட்டுமே அக்கறைப்படுதல் என்பது தனிமையையும், மனஅழுத்தத்தையுமே முன்னெடுக்கும். நாம் நமக்குள் பல எதிர்பார்ப்புக்களை உருவாக்கி அதன் அழுத்தத்தால் கிடைக்கின்ற சின்னச் சின்ன சந்தோசங்களையும் இழக்கின்றோம்.
மகிழ்ச்சியை விராட்டாதீர். வாழ்க்கையை நமக்கேற்றதாக நாம் வாழ்கின்றபோது மகிழ்வும் நம்மை விட்டுப் போகாது
ஜன்ஸி கபூர் -16.5.2021
2021/05/15
To Build a Fire
Jack London எழுதிய To Build a Fire எனும் ஆங்கிலக் கதை நிகழ்வினை எனது பார்வையில் சுருக்கமாக இவ்வாறாக வடிவமைத்துள்ளேன்.
டு பில்ட் எ ஃபயர்' என்பது அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டனின் சிறுகதை. இந்த கதையின் இரண்டு பதிப்புகள் உள்ளன. முதல் பதிப்பு 1902 இலும் மற்றொன்று 1908 இலும் வெளியிடப்பட்டன. இக் கதை 1908 ஆம் ஆண்டுக்குரியது
-------------------------------------------------------------------
பெயரிடப்படாத ஆண் கதாநாயகன் யூகோன் பிராந்தியத்தின் சப்ஜெரோ போரியல் காட்டில் இறங்குகிறார். அவரை தொடர்ந்து வருகின்ற ஒரு பூர்வீக நாய் நண்பர்களைப் பார்ப்பதற்காக அப் பாதையில் செல்கிறது. சல்பர் க்ரீக்கிலிருந்து ஒரு வயதான மனிதரின் எச்சரிக்கைகளை புறக்கணித்து கடுமையான குளிரில் தனியாக நடைபயணம் மேற்கொள்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து இக்கதை விளக்குகின்றது ஈற்றில் கதாநாயகன் மரணத்திற்குள் உறைகிறார்.
தொடர்ந்து வாசியுங்கள் 💓💓💓💓💓💓
------------------------------------------------------------------
பகல் நேரம், சாம்பல் பூத்து அதிக குளிரால் நிரம்பியிருந்தது.
அந்த பெயரிடப்படாத மனிதர் பிரதான யூகோன் பாதையிலிருந்து விலகி, யூகோன் ஆற்றின் எல்லையில் உள்ள காடுகளின் வழியாக, வெப்பநிலை −75 ° F (−59 ° C) ஆக உள்ள நிலைமைகளில் எச்சரிக்கைகளை புறக்கணித்து ஒரு பெரிய உமி நாயுடன் பயணித்தார்.
மங்கலான சிறிய பாதையொன்று கிழக்கு நோக்கியதாகக் காணப்பட்டது. உயரமான தரைப் பகுதியில் ஏறினார். அதிகம் மேலே ஏறியதில் மூச்சு வாங்கியது.
தனது கடிகாரத்தைப் பார்த்தார்.
நேரம் 9 ஐக் காட்டியது.
மேகங்கள் காணப்படாத தெளிவான வானில் சூரியன் காணப்படாமையினால் சற்று இருளாகக் காணப்பட்டது. அந்த நுட்பமான இருள் அவருக்குப் பழக்கப்படாதது.
யூகோன் பாதை பனித்துகள்களால் நிரம்பியிருந்தது. வெள்ளைத் துகள்களின் மத்தியில் கூந்தலைப் போன்று அந்த வீதி தென்பட்டது. அந்தப் பயணப் பாதையின் முடிவில் ஏதோ ஒரு வெளிச்சப் பகுதி இருக்க வேண்டுமென அவரின் உள்ளுணர்வு சொல்லியது. அந்த ஒளிப்பகுதி காணப்படுகின்ற தீவை அடைய இன்னும் சிறு தூரம் ஏற வேண்டியிருந்தது.
சூரியனைக் காணாத இந்தக் குளிர் அவருக்குப் புதிது என்பதால் பூஜ்ஜியத்திற்கு கீழான ஐம்பது பாகை உறைபனி அவருக்கு சங்கடமாக இருந்தது. அது கையுறைகள், காது-மடிப்புகள், சூடான மொக்கசின்கள் மற்றும் அடர்த்தியான சாக்ஸ் ஆகியவற்றால் பாதுகாக்கப்பட வேண்டும். அது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. பனிக்குள் துப்பினார். அது காற்றில் வெடித்தது. அதனைப் பார்த்து திடுக்கிட்டார்.
உண்மையில் வெப்பம் அல்லது குளிரின் குறித்த வரையறைக்குள் வாழ வேண்டுமென்ற வறையறை மனிதனின் பலகீனமாகவே காணப்படுகின்றது.
அவர் கைக்குட்டையில் போர்த்தப்பட்ட மதிய உணவைத் தவிர வேறு எதையும் எடுத்துச் செல்லவில்லை.
அவர் ஆறு மணிக்கு முகாமுக்கு வருவார். அங்கே சிறுவர்கள் இருப்பார்கள், சூடான இரவு, உணவு நெருப்புக் கோளத்தின் மத்தியில் தயாராக இருக்கும்.என நினைத்தார்.
அவரின் குதிகால்கள் சோர்ந்தன. உறைபனியின் தாக்கத்தினைக் குறைக்க கன்ன எலும்புகளை கைகளால் நன்றாகத் தேய்த்து உஷ்ணமூட்டினார்.
ஒளியைக் காணாத, நீண்ட பயணம் இனம்புரியாத புதிய அனுபவமாகவே இருந்தது. இருந்தும் பயமும் படர்ந்தது. அந்த இருளின் குளிர்மைக்குள் மனம் நெருப்பை விரும்பியது.
அவருடன் பயணப்பட்ட நாயும் சோர்வடைந்தது. அச்சுறுத்தலான பயத்தை அனுபவித்தது. நாய் நெருப்பை விரும்பியது. இல்லையெனில் பனியின் கீழ் புதைத்து அதன் வெப்பத்தை காற்றிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அதன் சுவாசத்தின் உறைந்த ஈரப்பதம், அதன் ரோமங்களில் உறைபனி குடியேறியது. அதன் முகவாய் மற்றும் கண்கள் அதன் சுவாசத்தால் வெண்மையாக்கப்பட்டன.
நாய்க்கு தெர்மோமீட்டர்கள் பற்றி எதுவும் தெரியாது. அதன் மூளையில் மனிதனின் மூளையில் இருப்பது போன்ற மிகக் குளிரான நிலை குறித்த கூர்மையான உணர்வு இல்லை. ஆனால் கடுமையான குளிரின் ஆபத்துகளைப் பற்றி எச்சரிக்கின்ற உள்ளுணர்வு இருந்தது. இத்தகைய பயமுறுத்தும் குளிரில் வெளிநாடு செல்வது நல்லதல்ல என்று அறிந்திருந்தும், தன் நண்பர்களைச் சந்திக்க தயக்கமின்றி நாய் பின்தொடர்ந்து சென்றது.
அவரது செந்நிறத் தாடிக்குள் பனித்துகள்கள் அப்பியிருந்தன. அவரது வாய் புகையிலையை மென்று கொண்டிருந்தது.
நாய்க்கும் மனிதனுக்கும் இடையே மிகுந்த நெருக்கம் இருந்தது. அவர் நாயுடன் நீரோடை வழியாக நகர்ந்தார்.
இப்போது மணி பத்து.
அவர் செல்லவேண்டிய ஊருக்குப் போக இன்னும் பத்து கிலோ மீற்றரே காணப்பட்டது. அவர் பன்னிரண்டு மணிக்கு முட்கரண்டிக்கு வருவார் என்று கணக்கிட்டார். அவர் தனது மதிய உணவை அங்கே சாப்பிட முடிவு செய்தார்.
அன்று மாலை ஆறு மணியளவில் தங்கள் முகாமில் வருங்காலக் குழுவை ('சிறுவர்கள்') அடைவதே அவரது குறிக்கோள்.
ஆறு மணிக்கு அவர் சிறுவர்களுடன் முகாமில் இருப்பார் என்பதைத் தவிர வேறு எதுவும் யோசிக்கவில்லை. பேச யாரும் இல்லை. இருந்திருந்தாலும் அவரது வாயில் பனி முகவாய் இருப்பதால் பேச்சு சாத்தியமில்லை. அந்த ஆர்க்டிக் குளிர்காலத்தில் எந்த ஒரு சிற்றோடையிலும் தண்ணீர் இருக்க முடியாது. ஆனால் மலைப்பகுதிகளில் இருந்து குமிழ்ந்து, பனியின் அடியில் மற்றும் பனியின் மேல் ஓடும் நீரூற்றுகள் உள்ளன என்பதையும் அவர் அறிந்திருந்தார்.
உறைந்த சிற்றோடையின் போக்கை அவர்கள் பின்பற்றும்போது, பனியால் மறைக்கப்பட்ட மெல்லிய பனியின் திட்டுகளைத் தவிர்க்க கவனமாக இருந்தார்.
அப்பனி அவரின் காலின் தோலை வெடிக்கச் செய்தது. காலை நீரோடையில் நனைத்து ஈரப்படுத்த நினைத்தார். ஆனால் அது பயணத்தைத் தாமதிக்கும் என்பதால் தயங்கினார். அவரின் இப்போதைய தேவை நெருப்பின் அருகாமையில் குளிர் காய்வதுதான்.
வழக்கமாக மறைக்கப்பட்ட குளங்களுக்கு மேலே பனி, ஒரு மூழ்கிய மிட்டாய் தோற்றத்தைக் கொண்டிருந்தது. அது ஆபத்தை விளம்பரப்படுத்தியது.
நேரம் இப்போது பன்னிரெண்டு மணி
சூரியன் வெகு தொலைவில் இருந்தது.
கை, கால் விரல்கள் விறைத்தன. உணர்விழந்த நிலை. மதிய உணவை உண்ண முயற்சித்தார். ஆனால் கையை வாயிற்கு கிட்டே கொண்டு செல்ல முடியவில்லை.
நெருப்பைப் பற்றாமல் மதிய உணவு உட்கொள்ள முயன்ற தனது முட்டாள்தனத்தை நினைத்துக் கொண்டார்.
அரை மணி நேரத்தில், ஒரு மரத்தின் கீழ் ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அதைச் சுற்றியுள்ள தூரிகைக் குவியலிலிருந்து கிளைகளை இழுத்து தீப்பிழம்புகளுக்கு உணவளிதார்.
நெருப்பை மூட்டிய போது, உடலும் உள்ளமும் திருப்தியடைந்தது. தனது கையுறைகளை நீக்கியும் தொப்பியைக் கழற்றி காது மடிப்புக்களை வெளியே இழுத்தும் நன்றாக உஷ்ணமுட்டியபோது மனம் சந்தோசப்பட்டது. நாய் நெருப்பில் திருப்தி அடைந்தது.
இந்த செயலின் இறுதியில் கிளைகளில் இருந்து ஒரு பெரிய பனி கீழே விழுந்து தீயை அணைக்க காரணமாகியது.
பின்னர் மீள புகையிலையை மென்றவாறு பயணத்தைத் தொடர்ந்தார். வழியில் பனி அவரின் பயணத்தை தடைப்படுத்தவில்லை. உரிய நேரத்திற்கு சென்றடையலாம் எண்ணிப் பயணத்தைத் தொடர்ந்தபோது, ஈரமான சுவாசமும், பனித்துகள்களால் மூடப்பட்ட வெண்ணிற மீசையும் அவரைச் சங்கடப்படுத்தியது. திடீரென முழங்கால்கள் பனிக்குள் அமிழத் தொடங்கின. விரைவாக உணர்வை இழக்கத் தொடங்கி, கடுமையான குளிரால் ஏற்படும் உயிருக்கு ஆபத்து பற்றிய எச்சரிக்கைகளைப் புரிந்து கொண்டார்.
இப்போது பூஜ்ஜியத்துக்கு கீழே வெப்பநிலை எழுபது. ஆத்திரப்பட்டார். தனது அதிஷ்டத்தை எண்ணிக் கவலைப்பட்டார். தன்னைச் சூழ்கின்ற ஆபத்தினையும் உணர்ந்தார்.
விரைவாகவும் அதே நேரம் பொறுமையாகவும் நிதானமாகவும் இயங்கினார்.
ஒரு மணி நேரம் தாமதம் ஏற்படப் போகின்றதே. எப்படியாவது மீண்டும் நெருப்பை மூட்டி குளிர் காய வேண்டும்.
மற்றொரு நெருப்பை எரிக்க, சுற்றும் முற்றும் நோக்கினார். அருகில் கிடந்த உலர்ந்த மரக்கிளைகள், தடிகளைக் கொண்டு தீமூட்டியபோது அச்சுடர் ஒளிர்ந்தது.
அவரின் கால்கள் ஈரமாக இருந்தன. பனிக்குள் கால்கள் ஒட்டிக் கொள்ளுமே. உறைபனிக்குள் விரைவாக ஓடமுடியாது. மனம் பலவற்றை நினைத்துக் கவலைப்பட்டது.
மீண்டும் தீமூட்ட வேண்டும். மனம் பரபரத்தது. கைகளில் உணர்வின்மை காரணமாக தன்னைத்தானே எரித்துக் கொண்டார்.
ஆபத்தான இவ்வாறான பயணங்களுக்கு தனியே செல்வது தவறு என்பதை உணர்ந்தார்.
மற்றொரு நெருப்பைத் தொடங்க எந்த வழியும் இல்லாமல், நாயைக் கொன்று அதன் உடல் வெப்பத்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்தார்.
ஆனால் ...........
அவர் கைகள் மிகவும் கடினமானவை. அவரால் விலங்கின் கழுத்தை நெரிக்கவோ அல்லது தொண்டையை வெட்ட கத்தியை எடுக்கவோ முடியாது. இறுதியாக, அவர் முகாமை நோக்கி ஓடுவதன் மூலம் தனது சுழற்சியை மீட்டெடுக்க முயற்சித்தார்.
ஆனால் தடுமாறி பனியில் பல முறை விழுந்தார்.
இந்தப் பனிப் போராட்டத்தினிடையில் தொலைவில் சிறு புள்ளியாகத் தெரிந்தது அவர் செல்ல வேண்டிய பயணப்பாதை.
ஆனால் குளிர் படிப்படியாக அவரின் மையப்பகுதியை உறைய வைத்தது. கை, கால்கள் விறைத்தன. தரையின் தொடர்பறுந்த நிலை. உணர்ச்சியற்றுப் போனது உடல். இதயம் தனது துடிப்பினை இழந்து பலம் குன்றிப் போன பிரமை.
இறுதியில் தாழ்வெப்பநிலை காரணமாக இறந்துவிடுகிறார் .
முகாமில் உணவு மற்றும் தங்குமிடம் கண்டுபிடிக்க நாய் இருட்டிற்குப் பிறகு உடலை விட்டு வெளியேறுகிறது.
அவர் தனது உடலைக் காணும்போது 'சிறுவர்களுடன்' நிற்பதை கற்பனை செய்கிறார்.
இவ்வாறாக நீண்டு செல்கின்றது இக்கதை. வித்தியாசமான நகர்வோட்டம். பனிப் பயணப்பாதையில் ஏற்பட்ட சிரமங்கள் இங்கே உயிரோட்டம் பெறுகின்றன.
To Build a Fire எனும் ஆங்கில கதையினை வாசித்தால் எழுத்தாளரின் முழுமையான உணர்வின் விம்பங்களை நீங்களும் ரசிக்க முடியும்.
ஆங்கிலக் கதைகளில் வித்தியாசமான சுவையொன்று இருப்பதை உணர முடிகின்றது. வாசிப்பின் அனுபவங்கள் அதிகரிக்கின்றபோது நாமும் தரமான ஆக்கங்களைப் படைக்க முடிகின்றது.
ஜன்ஸி கபூர் - 15.5.2021
2021/05/14
திரு ஸ்மித்தின் புதிய மூக்கு (Mr. Smith's new nose)
கிறீஸ் ரோஸ் என்பவர் எழுதிய திரு ஸ்மித்தின் புதிய மூக்கு எனும் ஆங்கில சிறுகதையின் தமிழாக்கம் என் பார்வையில்
இது பிரிட்டிஸ் கவுன்சில் பாட நூலில் உள்ள சிறுகதைதான் ஆனாலும் கதையின் போக்கு நம்மை சிந்திக்க வைக்கின்றது.
----------------------------------------------------------------------------------
22 ஆம் நூற்றாண்டு காலத்தில் மக்கள் தமது உடல்களை தாம் விரும்பியவாறு புதிய தொழில்நுட்பங்கள் மூலம், வடிவமைத்தால் எவ்வாறு அது அமையும் என்பதை இச்சிறுகதை சுவைபட முன்வைக்கின்றது.
இதோ...கதையின் நகர்வு. சுவையுங்கள். என்னுடன் சேர்ந்து கதை வரிகளை இரசியுங்கள்.
நாகரீக மோகத்தில் நமது சுயத்தை நாம் இழந்து படுகின்ற அவஸ்தையை இக்கதையின் ஒவ்வொரு வரிகளிலும் உணரலாம்
திரு ஸ்மித் எனும் நமது ஹீரோ தனது பெரிய மூக்கினை மாற்றி, அழகான மூக்கு ஒன்றினைக் கொள்வனவு செய்ய கடைக்குப் போகின்றார். கடை உதவியாளரின் இரசனையுடன் சேர்ந்து மிகவும் நாகரீகமானதும், தனக்குப் பொருத்தமானதுமான சிறிய மூக்கினைக் கொள்வனவு செய்கின்றார்.
தனது மனைவியிடம் அதனை தொலைபேசி வீடியோ கால் மூலமாகக் காட்டி "பிடிக்கின்றதா" என சம்மதமும் பெறுகின்றார்.
"நூறு ஆண்டுகளுக்கு முன்பு, உடலை மாற்றுவது சாத்தியமில்லை. பழைய கால 'பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை' இருந்தது. ஆனால் அது விலை உயர்ந்தது. வேதனையானது மற்றும் ஆபத்தானது. அச்சச்சோ! இப்போது எங்கள் 22 ஆம் நூற்றாண்டின் மரபணு பொறியியலுக்கு நன்றி. நாம் விரும்பும் போது நம் உடலை மாற்றலாம்!"
என கண்ணாடியில் இருந்த தனது புதிய சிறிய மூக்கைப் பார்த்து, எவ்வளவு நாகரீகமாக இருக்கிறார் என்று யோசித்தார்.
அவர் தனது புதிய மூக்கில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.
ஆனால் இப்போது ஒரு பிரச்சனை ?
மூக்கிற்குப் பொருத்தமான தலைமுடி வேண்டுமே.!
இணையத்தில் அதனைத் தேடிக் கிடைக்காததால் நேரடியாக கொள்வனவு செய்வதற்காக குறித்த கடைக்குச் செல்கின்றார்.
அவரது பழைய சாம்பல் நிறமான முடியை நீக்கி, இளமையாகக் காட்சியளிக்க வைக்கின்ற, குறுகிய, செந்நிற, சுருண்ட முடிகளை விரும்பி கொள்வனவு செய்தபோது, கடை உதவியாளர்கள் புதிய காதுகளைப் பற்றிச் சொன்னார்.
ஆசை யாரைத் தான் விட்டது. தனது மூக்கு, தலைமுடிக்குப் பொருத்தமான காதுகளைத் தெரிவு செய்ய விரும்பினார். கடை உதவியாளரின் உதவியுடன் இரண்டு காதுகளையும் கொள்வனவு செய்து வெளியேறினார்.
பின்னர் அவரது ஆசைகளின் பட்டியல் நீண்டது. அவரது புதிய உடலில் ஆர்வம் வளரத் தொடங்கியது.
அவர் புதிய நாகரீகமான, பச்சை கண்கள், புதிய கைகள், புதிய முழங்கால்கள் மற்றும் புதிய கால்களை வாங்கினார்.
திரு ஸ்மித்தின் புதிய கால்கள் அவரது பழைய கால்களைப் போல மோசமாக இல்லை. என திருமதி ஸ்மித் மகிழ்ச்சி அடைந்தார்.
திரு ஸ்மித் புது வடிவம் பெற்று நாகரீக மனிதன் ஆனார். அது அவருக்குப் பெருமையாக இருந்தது.
ஆனால் மறுநாள் காலை விடிந்ததும் ஸ்மித்தின் மூக்கு இயங்கவில்லை. மனைவியிடம் அவர் இதுபற்றிக் கூறியபோது அவர்;
'ஒருவேளை உங்களுக்கு சளி வந்திருக்கலாம்' என்று பரிந்துரைத்தார்.
'அது சாத்தியமில்லை! இது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு! சளி வராது! ' என ஸ்மித் கூறினார்.
ஸ்மித்தால் எதனையும் மணக்க முடியவில்லை. எனவே அதே கடையில் இயங்கக்கூடிய இன்னுமொரு மூக்கினை கொள்வனவு செய்ய மீண்டும் அதே கடைக்குச் சென்றார்.
ஆனால் கடை உதவியாளர், நாகரீகமான சிறிய மூக்குகளை ஏற்கனவே வாங்கி விட்டீர்களே எனக் கூறினான்.
'எனக்கு ஒரு புதிய மூக்கு வேண்டும். ஏனெனில் இது வேலை செய்யாது!'
'அது சாத்தியமற்றது' என்று கடை உதவியாளர் கூறினார்.
'உங்களிடம் மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட பாடிகோ மூக்கு உள்ளது. அது தவறாக போக முடியாது! '
'ஆனால் அது தவறாகிவிட்டது' என்று திரு ஸ்மித் பதிலளித்தார்.
' என்னால் எதையும் மணக்க முடியாது.' என்றார்.
'மிஸ்டர் ஸ்மித் என்ன செய்ய உங்கள் மூக்கைப் பயன்படுத்தினீர்கள்?'
கடை உதவியாளர் கேட்டபோது சுவாசிக்கவும், வாசனைக்கும் பயன்படுத்தியதாகக் கூறினார்.
'மிஸ்டர் ஸ்மித், நீங்கள் உங்கள் மூக்கை சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால், அது சரியாக இயங்காது.' எனக் கடைக்காரர் கூறியபோது,
'அது அபத்தமானது!' என திரு. ஸ்மித் கத்தினார்.
'எனக்கு என் பணம் திரும்ப வேண்டும்! எனக்கு பணத்தைத் திரும்பப் பெற வேண்டும்! ' என்றார்.
ஆனால் கடைக்காரரோ ...............................
'திரு ஸ்மித், நாங்கள் பணத்தைத் திரும்ப வழங்க மாட்டோம் என்றார்.
திரு ஸ்மித் மிகவும் கோபமடைந்தார். அவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவர் கடையிலிருந்து வெளியேறினார். எதுவும் பேசவில்லை.
ஆனால் இப்போது அவருக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது.
பயனற்ற மூக்கு.
நாகரீகம் என நினைத்தது பயனற்றுப் போனது.
துரதிர்ஷ்டவசமாக, அவரது பிரச்சினைகள் வளர ஆரம்பித்தன. மறுநாள் காலையில் அவர் எழுந்தபோது அவருக்கு எதுவும் கேட்க முடியவில்லை. பின்னர் அவரது புதிய இளஞ்சிவப்பு முடி நரைத்தது. புதிய முழங்கால்கள் நகரவில்லை. அவரது அசாதாரண பச்சைக் கண்களால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடியவில்லை. விரல்கள் ஒவ்வொன்றாக விழுந்தன. நடக்கவும் முடியவில்லை.
இறுதியில் திருமதி ஸ்மித் அவரை அவர்களின் ஏர்காரில் வைத்து அவற்றைக் கொள்வனவு செய்த கடைக்குப் போனார்.
'குட் மார்னிங், மிஸ்டர் ஸ்மித்" கடை உதவியாளர் கூறினார்.
'இன்று நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?
என்றபோது அவரது மனைவியோ "இன்று அவர் எதையும் புதிதாக விரும்ப மாட்டார். ஆனாலும் அவர் தனது பழைய உடலை மீளப் பெற விரும்புகின்றார்" எனப் பதிலளித்தார்.
'திருமதி ஸ்மித், நாங்கள் பணத்தை திரும்ப வழங்க மாட்டோம்" எனக் கடைக்காரர் கூற,
'நான் பணத்தைத் திரும்பப் பெற விரும்பவில்லை'
என்று திருமதி ஸ்மித் விளக்கினார்.
'என் கணவரின் அசல் உடலை மீண்டும் விரும்புகிறேன்! இந்த புதியதை விட எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது! ' என்றபோது,
கடை உதவியாளரோ,
'நாங்கள் சுற்றுச்சூழல் நட்பு நிறுவனம். எங்கள் பழைய உடல்கள் அனைத்தும் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. ' என்றார்
ஆனால் திருமதி ஸ்மித்தோ தனது கணவருக்காக கடை உதவியாளரிடம் மீண்டும் வாதாடினார்
'ஆனால் நீங்கள் விற்ற புதிய உடல் பாகங்கள் வேலை செய்யாது! அவர் இப்போது என்ன செய்ய முடியும்? ' என்றபோது,
கடை உரிமையாளரோ,
'அவர் மறுசீரமைக்கப்பட்ட உடலை வாங்க முடியும்.' என்றார்.
''மறுசீரமைக்கப்பட்ட' உடல் என்றால் என்ன?' என அவர் மனைவி மீளக் கேட்டபோது,
கடை உதவியாளர் கணனி உதவியுடன் மறுசீரமைக்கப்பட்ட ஸ்மித்தின் உடலைக் காட்டினார்.
"அது மிகவும் பழக்கமான உடல். பெரிய மூக்கு மற்றும் நரை முடி"
திருமதி ஸ்மித் "அது என் கணவர்!" எனக் கத்தினார். '
அதுதான் அசல் மிஸ்டர் ஸ்மித்!' கடை உரிமையாளரும் அதனை அங்கீகரித்தார்.
'தயவுசெய்து அவர் தனது பழைய உடலை மீண்டும் வைத்திருக்க முடியுமா?' என திருமதி ஸ்மித் கேட்க அது 100,000 யூரோ எனப் பதிலளித்தார்.
ஆனால் திருமதி ஸ்மித் விலை அதிகமாக இருக்கின்றது என முணுமுணுத்தாலும் மீண்டும், அதனை வாங்கினார்.
திரு ஸ்மித் தனது சொந்த உடலைத் திரும்பப் பெற்றார்.
திருமதி ஸ்மித் அவரை விமானக் காரில் வீட்டிற்கு பறக்கவிட்டார்.
'நான் மீண்டும் நானே!' ஸ்மித் கத்த,
திருமதி ஸ்மிதோ 'நீங்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளீர்கள்.' என்றாள். ஏனெனில் உங்களிடம் தற்போது பயனுள்ள புதிய மூளை வந்துள்ளது என்றாள்.
ஸ்மித்தும் புன்னகையுடன் 'நானும் அப்படித்தான் நினைக்கிறேன், அன்பே,' என்றார்
கிறிஸ் ரோஸ் எழுதிய இக்கதையை வாசித்தபோது, இதென்ன மூக்கு பற்றிய வித்தியாசமான தலைப்பாக இருக்கின்றதே என யோசித்தேன். ஆனாலும் கதையை முழுமையாக உள்வாங்கிய பின்னர், அதில் இழைக்கப்பட்டிருக்கின்ற படிப்பினை பெரிதாக இருக்கின்றது.
அலங்காரமின்றி எளிமையாக நகரும் இக்கதை எனக்குப் பிடித்திருக்கின்றது. உங்களுக்கு. ...............?
ஜன்ஸி கபூர் -14.05.2021