2021/07/02
2021/05/31
சந்தனப் பிழம்பு
இருளை உடைத்துக் கொண்டு
இமயம் தொடுகின்ற சந்தனப் பிழம்பு
கண்ணிற்கும் குளிர்ச்சிதானே!
- ஜன்ஸி கபூர் -
31.05.2021
உணர்வுகள்
நம்மை பற்றி அக்கறை கொள்ளாதோர் .....
தாமாகவே விலகிச் செல்கின்றார் நம்மை விட்டு ...
2021/05/09
2021/05/05
2021/04/29
தன்மானம்
தன்மானத்தையும் சுரண்டுகின்ற மிகப் பெரிய ஆயுதம் வறுமையே. தன்மானம் இழந்து அடுத்தவரின் புறக்கணிப்பிற்கும் ஆளாகின்ற ஒவ்வொருத்தரின் சோகத்தின் வலி கண்களின் வழியாகிச் செல்கையில் அதனை தனது மொழியாகி உணருமோ உணர்வுகள்.
நாவிலே பொய்யும் புரட்டும் இயல்பாகவே சரளமாகின்றபோது மெய்யும் மெய்க்குள் மௌனமாக அடங்கி விடுகின்றது.
ஜன்ஸி கபூர் - 29.04.2021
2021/04/26
பிரார்த்தனை
இரவு பகல் இறைவனின் படைப்புக்களின் இரகஸியம்தான். நிச்சயம் இன்றைய இரவின் முடிவில், நாளைய விடியல் தொடரத்தான் போகிறது.
ஆனால் வாழ்வில் ...............
கண்களை மெல்ல மூடுகின்றேன். ஈரத்தின் சுமையில் விழிகள் இன்னும் நனைந்தே இருந்தன.
வாழ்வா சாவா எனத் தெரியாமல் மூச்சுத் துவாரங்களை அழுத்தும் கடன் பற்றிய நினைவோடு மனம் மெலிதாக உரசியபோது பயம் பற்றிப் படர்ந்தது.
கண்களில் மரண பயம்!
நாளைய எதிர்காலம் நம்பிக்கையற்றுப் போனது.
நாளை விடிந்தால் கடன்காரர்கள் வீட்டைச் சுற்றுவார்கள். அவர்களைச் சமாளிக்கும் அளவிற்கு மன தைரியம் இல்லை.
விரக்தியின் முன்றலில் அலைந்த மனம் மரணத்தை பற்றியே சிந்தித்தது.
விடியலைத் தர மறுக்கின்ற தொடர் சிக்கல்களின் அழுத்தங்களை தாங்கும் மனநிலை இனியுமில்லை.
வறுமையைச் சமாளிக்க வாங்கிய கடன், இன்று வாழ்வையே மூழ்கடிக்கும் பிரமை .
கன்னத்தை நனைத்துக் கொண்டிருந்த கண்ணீர், பெருமூச்சில் ஆவியாக்கி கொண்டிருந்தது.
"பெரியம்மா"
என்ற அழைப்போடு பிஞ்சுக் கரங்கள் தோளைத் தொட்டன. திரும்பிப் பார்த்தபோது................
ஏழு வயது நிரம்பிய சின்ன மலர் சிரித்துக் கொண்டு நின்றாள்.
"உங்க கஷ்டம் தீர இப்போ தொழுதிட்டு வாரேன்"
எனச் சொன்னவளை அணைத்தபோது, எனது அழுகை இருளின் நிசப்தத்தையும் உடைத்தவாறு வெடித்தது.
ஜன்ஸி கபூர் - 26.04.2021
2021/04/23
இரவின் மடியினில்
இதமான பாடல்கள்
அமைதியால் அழகு பெறுகின்ற ஒவ்வொரு இரவினையும் உரசிச் செல்கின்ற வானொலி இசையை செவிகள் உள்வாங்கும்நேரம் இரசிப்பின் உச்சத்துக்குள் மனம் நுழைந்து விடுகின்றது.
நிசப்தத்திற்குள் மலர்கின்ற அந்தத் தென்றல் இசையோசையில் விழிகள் உறக்கத்திற்குள் தாவுவதும் நமக்குத் தெரிவதில்லைதான்.
அழகான மென் இசைகள் நம்மைத் தாலாட்டும் நேரம் இரவும் மடியாகி நம்மைத் தாங்கி விடுகின்றது.
ஜன்ஸி கபூர் - 23.04.2021
2021/04/21
அழகான அன்பு
நம்மைச் சுற்றிப் படர்ந்திருக்கின்ற அழகான அன்பு வாழ்வின் ஒவ்வொரு நகர்வுகளையும் ரசிக்க வைக்கின்றது. அன்பின் அதிர்வுகள் தருகின்ற இன்பங்கள் மனதில் வண்ண மயங்களாகின்றன.
நமது எதிர்பார்ப்புக்களையும், ஆசைகளையும், கனவுகளையும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் விழுங்கும்போது அமைதிக்குள் அடங்கி விடுகின்றோம். வலுவான மௌனத்தின் பிடிக்குள் நம்மைச் சிறை வைக்கின்ற அத்தருணங்களில்கூட, அழகான அன்பின் பிம்பங்கள் நம் மனதை மகிழ்வூட்டுகின்றதென்பதே யதார்த்தம்.
ஜன்ஸி கபூர் - 21.04.2021
2021/04/09
மனதின் குரல்
எப்போதும் மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் மனது❤❤❤
சின்னச் சின்ன விடயங்களுக்காக அச்சந்தோசங்களைப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கின்றது👎👎👎
ஜன்ஸி கபூர் - 9.4.2021
2021/04/08
வீழ்தலில் எழுக
💧💧💧💧 வீழ்கின்ற மழைத்துளிகள் 💧💧💧💧
🌺🌻🌼🌷 தவழ்கின்றன மலர்களில் பனித்துளிகளாக 🌺🌻🌼🌷
கிடைக்கின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் நமது தேடலுக்கான விடைத் தளங்களாகவும் இருக்கலாம்.
ஜன்ஸி கபூர் - 08.04.2021
தோல்வி
தோல்வி நம்மைத் தாக்கும்போது நமது மனம் வேதனையில் தவித்தாலும்கூட, அத்தோல்வி தொடர்பாக ஆராய்கின்றது. நம்மை நாமே திரும்பிப் பார்க்கும் எண்ணத்தைத் தருகின்றது.
தோல்வி நிரந்தரமல்ல. 👆👆👆👆
வழியும் கண்ணீரும் நிரந்தரமல்ல. 😊😊😊😊
எனவே ஓவ்வொரு தோல்வியிலும் நாம் வாழ்வைக் கற்றுக் கொள்கின்றோம்.
ஜன்ஸி கபூர் - 08.04.2021
2021/04/07
பயணம்
2021/04/06
தாய்மை
2020/01/08
வலி களைந்து வாழ்வதும்
2020/01/01
புத்தொளியுடன் 2020
அன்புடன் ஜன்ஸி கபூர்
2019/06/16
வசந்தத்துளிகள்
----------------------------------------------------------
- Ms. Jancy Caffoor -
16.06.2019
அன்பே மகிழ்ச்சி

16.06.2019
சின்னக் குறும்பு
- Jancy Caffoor-
16.06.2019
கனவுகள் சொல்வதென்ன
16.06.2019