About Me

2019/07/13

ஊக்குவித்தல் நுட்பங்கள்

Related image

ஊக்குவித்தல் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம்  நிறுவன பணியாளர்களால் வினைத்திறனான வெளியீடுகளைப் பெறலாம் .
-----------------------------------------------------------------------------

ஊக்கல்  சில வரைவிலக்கணங்கள் 

  • 'ஊக்கல்' என்பது கேட்பவரின் உள்ளார்ந்த ஆற்றல்களை அல்லது தேவைகளை அவரது சூழலில் காணப்படும் பொருள்களின்பால் வெளிப்படுத்தும் ஒரு செயன்முறையாகும்"  - G.M.Blair & Othersd (1947)

  • "அது யாதேனும் பெறுபேற்றை பெறுவதற்காக ஆட்களை வழிப்படுத்தும்,  உந்தும் போக்காகும்" - J.W.Atkinson (1966)

எனவே ஊக்கல் என்பது யாதேனும் நடத்தைக்கு சக்தி வழங்குகின்ற உந்து சக்தியாகும். இதனை  விரும்பிய  இலக்கை அடைவதற்காக தனியாட்களை தூண்டும் செயல் முறையாகவும்,  நிறுவனத்தின் இலக்குகள் சார்ந்து உயர் மட்டத்திலான முயற்சியை எடுப்பதற்கான விருப்பமாகவும் கொள்ளலாம்.

ஒருவரை உடலியல் மற்றும் உளவியல் செயல்பாட்டிற்கு உட்படுத்தி, அதன் மூலம் ஒருவருடைய தேவைகளையும், விருப்பத்தையும் பூர்த்தி செய்கின்ற செயல் ஊக்குவித்தல் எனப்படுகிறது. 

கிடைக்கும் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்துவதுடன், அதிபர்- நிறுவனப் பணியாளர்களின் தொடர்பு, போதனைசார் செயற்பாடுகளின் மேற்பார்வை மற்றும் மதிப்பீடு, ஆசிரியர்களது பன்மைத்துவ விருத்தி, குழு விருத்தி, செயற்பாட்டு ஆராய்ச்சி, ஒரு நேர் கணியப் பாடசாலைச் சூழல் போன்ற அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புபட்டதாகவும், சமநிலை உள்ளதாகவும் பேணப்படும் போதே  பாடசாலையிலும் வினைத்திறன்மிக்க அபிவிருத்தியானது  ஏற்படுகிறது. எனவே நிறுவனப் பணியாளர்களிடம் கடமைகளையும், பொறுப்புகளையும் பொருத்தமாகப் பகிர்ந்து கொள்வதுடன், அவர்களைப் பாடசாலை இலக்குகளை நோக்கி முறையாக வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலமே  பாடசாலையை சக்திமிக்க நிறுவனமாக மாற்ற முடிகிறது.

பாடசாலையிலுள்ள ஆசிரியர்கள், ஊழியர்களின் தேவைகள் வேறுபாடானவை.  எனவே அவர்களின் தேவை,  விருப்புகளை அறிந்து அந்த நிறைவுத் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான ஊக்கலை வழங்க வேண்டும். ஊக்குவித்தலானது தேவை, உந்துதல், இலக்கு, தூண்டு விசை எனும்  நடத்தையின் பல்வேறு பகுதிகளைக்  கொண்டுள்ளது.

வேலையாள் ஒருவர் உயர்மட்டத்திலான வினையாற்றலை வெளிப்படுத்துவதற்கு மிகவும் அவசியமான காரணிகளாக பின்வருவன காணப்படுகின்றன :-
  • சாதனை 
  • அங்கீகாரம் 
  • பொறுப்பு
  • வேலையில் உயர் அடைவதற்கான வாய்ப்பு 
  • தனிப்பட்ட வளர்ச்சி 

இவற்றை ஊக்குவித்தல் வழங்கும். இவ் ஊக்குவித்தலானது ஒரு உள்ளார்ந்த உணர்வாகவும், ஒரு உளவியல் செயன்முறையாகவும் இருப்பதனால் திருப்தி உணர்வு ஏற்படுகின்றது. இதன் மூலம்  நிறுவன பணியாளர்களின் உள்ளார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அவர்களும் நிறுவனத்தின் இலக்கு நோக்கி நகர்கின்றார்கள்.

ஊக்குவித்தலானது சகலரையும் நிறுவனச் செயற்பாடுகளில் பங்கெடுக்கச் செய்வதால், சகலரும் தீர்மானம் எடுத்தலில் பங்குபற்றுகின்றார்கள்.  இத்தகைய  ஜனநாயகச் சூழ்நிலையின் வெளிப்படுத்துகை  மூலம்  இவர்களிற்கிடையில் "தாமே உரித்துடையவர்" என்ற உணர்வு  ஏற்படும்.  இது பாடசாலை தொடர்பான இலக்குகளை அடைவதற்கு உந்துசக்தியாக  காணப்படுகின்றது.

உயர்மட்டத்தில் ஊக்குவித்தலை வழங்கும்போது பெறப்படும் உந்துசக்தியானது சமநிலை அடைந்து பொருத்தமான நடத்தையைத் தீர்மானிக்கிறது. இதனால் குறைபாடுகள் குறைவாகக் காணப்படும்.  முரண்பாடுகள்  காணப்படாத    உன்னதமான  நிலை    ஏற்படும். 

ஊக்குவித்தலை  பாடசாலையில் நடைமுறைப் படுத்தும் விதம்.  
------------------------------------------------------------------------------
  • பங்கேற்பு - 
சுதந்திரமான கருத்து வெளிப்படுதல்,  ஜனநாயகத் தன்மையான சூழல்   ஏற்படுத்தும்.
  • தொடர்பாடல் -  
அடையப்பட்ட வெற்றிகள், இலக்குகள் பற்றி சகலரும் அறியச் செய்தல். இருவழித் தொடர்பாடல், கவனத்துடன் செவிமடுத்தல், தகவல் பகிர்வு, நேர்மையும் விசுவாசமும்  ஏற்பட்டு   ஆசிரியர்களை ஊக்குவிக்கும்.
  • அங்கீகாரம் - 
ஒருவரின் தனித்த தன்மையை அங்கீகரிக்கும் போதும்,  மதிக்கும்  போதும்  அவர் உள்ளார்ந்த திருப்தி அடைவர். இதனால் பாடசாலை அபிவிருத்திக்கு உதவுவர்.
  • அதிகார பகிர்வு - 
ஒருவரின் பதவி உயர்த்தப்படுமானால், அது திட்டமிட்ட அபிவிருத்திக்கு வழி வகுக்கும். எனவே தகுதியானவர்களிடம் பொறுப்புகளை பகிர்ந்தளித்து அவர்களை சிறந்த தீர்மானம் எடுக்க ஊக்குவிக்கும் போது பாடசாலை வினைத்திறனான செயற்பாடுகளை இலகுவாக முன்னெடுக்கும். அதிகார பகிர்வு கடமைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தும். 

பிறரால் ஏற்கப்படல், பிறரால் பாராட்டப்படல், பிறரோடு இணைந்து வாழல்  போன்ற  பண்புகள் நிறுவன பணியாளர்களைச் சாதனையாளர்களாக மாற்றும் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்கும்.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் நிறுவன பணியாளர்களால் வினைத்திறனான வெளியீடுகளைப் பெறுவதற்காக ஊக்குவித்தல் நுட்பங்களைப் பயன்படுத்த முடியும். 
--------------------------------------------------------------------------------------
பாடசாலை அதிபர் ஒருவர் தனது ஆசிரியர்களையும், சக பணியாளர்களையும் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள்   
---------------------------------------------------------------------------------------
அதிபரானவர் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் திருப்தி ஏற்படுத்தும் விடயங்கள், அதிருப்தி ஏற்படுத்தாத  விடயங்கள்  தொடர்பில்  அறிந்து வைத்திருத்தல் வேண்டும். அப்பொழுதே பணியாட்களின்   தன்னடைவுத் தேவைகளை அடைந்து கொள்வதற்குரிய தடைகளை அதிபரால் அகற்ற   முடியும்.  இதனால்  பணியாள்  மன அழுத்தம்  குறைந்த  சூழ்நிலையில்  நிறுவனத்தின்  இலக்கு நோக்கி பயணிக்கலாம்.

பின்வரும் ஊக்குவித்தல் உத்திக்களைப்  பிரயோகித்தல்.
  • பாராட்டும், பரிசும் சரியான முறையில், சரியான நபருக்கு வழங்குதல்.
  • ஒரு செயலை செய்து முடிப்பதற்கான செயல் திறமை, நடத்தை பற்றித்  தெளிவாகக் கூறல்.
  • தங்கள் கூறிய கருத்துக்கள் மாற்றவர்களால்  வரவேற்கப்பட்டதாகவும், மற்றவர் உறுதுணையாய் நிற்பதாகவும் உணரச் செய்தல்.
  • அவர்களுக்கு எழும் வினாக்களுக்கு நேர் பதில் வழங்கி பாராட்டுதல்.
  • கடினமான செயல்களை சிறு, சிறு செயல்களாக செய்யப் பழக்குதல்.
  • எதைச் செய்தாலும் முழுமையாகச் செய்ய   வழிப்படுத்தல்.
  • வேலைகளை உடனுக்குடன் மதிப்பிடல்.
  • மற்றவருடன் ஒப்பிடாமல் அவரவர் திறமைக்கு ஏற்ப மதிப்பிடல்.
  • ஒவ்வொருவரின் தனித்தன்மையை இனம் கண்டு ஊக்குவித்தல்.
  • புதிய அறிவு கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் புதிய, புதிய செயல் திட்டங்களில் ஈடுபடுத்துதல். 
  • பாடசாலை மட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • தொலைவிலிருந்து பாடசாலைக்கு வரும் ஆசிரியர்களுக்கு விடுதி வசதி ஏற்படுத்திக் கொடுத்தல்.
  • மேலதிக கற்றலில் ஈடுபடும் ஆசிரியர்களை ஆசிரியர் கூட்டங்கள், விளம்பர பலகைகளில் வெளிப்படுத்தி ஊக்குவித்தல்.
  • பெற்றோர் தரவட்டங்களை ஏற்படுத்திக் கொடுத்து, அதனூடு ஆசிரியர்-  பெற்றோர் இடையே சீரான தொடர்புகளைப் பேண உதவுதல்.
  • பயனுறுதிமிக்க தொடர்பாடல்  மூலம் உற்சாகப்படுத்தல்.
  • கூட்டுணர்வுள்ள ஒன்றிணைந்த செயற்பாடுகளில்  ஈடுபடுத்தல்.
  • போதிய வளங்களை பெற்றுக் கொடுத்து கற்றல் -  கற்பித்தலை மேற்கொள்ள வழிப்படுத்தல்.
  • பாடசாலைச் சூழலை மகிழ்ச்சி மிக்கதாக மாற்றுதல். 
  • பாடசாலையில் ஏற்படும் உளநெருக்கீடுகளையும், முரண்பாடுகளையும் குறைத்தல்.
  • அனைவரின் திறமைகளுக்கு ஏற்றவாறு பொறுப்புகளை பகிந்தளித்தல். 
  • அவற்றை முறையாக மேற்பார்வை செய்தல், ஊக்கப்படுத்தல், சிறப்பான   வெளிப்படுத்தலூக்காக பரிசு வழங்கல். 
  • கற்றல் - கற்பித்தல் செயன்முறை  போட்டிகளை ஆசிரியர்களுக்கிடையில் நிகழ்த்தி   பரிசு வாங்க, பாராட்டுப்  பெற ஊக்குவித்தல்.
  • கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை புத்தாக்கத்துடன் தயாரித்து, கற்பிக்க ஊக்குவித்தல்.
  • கற்பித்தல் துணை சாதனங்களாக  கட்புல, செவிப்பு புல சாதனங்களை பயன்படுத்த ஊக்குவித்தல்.
  • தாம் செய்யும் செயல் மூலம் கிடைக்கும் பயன்கள் பற்றிய விளக்கத்தையும், கற்பித்தலின் தன்மை பற்றியும், கற்பித்தல் மேற்பார்வை மூலமாக ஆளணியினருக்கு உணர்வினை ஏற்படுத்துவதன் மூலம் அவர்கள் தம்மை தாமே மதிப்பிட்டு தமது செயல்களில் ஆர்வத்துடன் செயற்படும் சூழ்நிலையை உருவாக்குதல்.
  • அழுத்தங்கள் ஏற்படாமல் ஊழியர்களை வழிப்படுத்தல்.
  • ஆசிரியர் கற்பித்தல் செயன்முறையில் காட்டும் முன்னேற்றங்களை உடனுக்குடன் அவர்களுக்கு தெரியப்படுத்தல்.
  • சிறப்பான அதிபர் - ஆசிரியர் அல்லது ஆளணியினர் தொடர்பினை பேணல். 
  • வாண்மைத்துவம் சார்ந்த அனுபவப் பகிர்வினை குழுச்செயன்முறைகள்  மூலம் மேற்கொள்ளல்.
  • விரைவான தீர்மானம் இயற்றும் ஆற்றல், படைப்பாற்றல் திறன்,  அர்ப்பணிப்பு என்பவற்றை அதிகரித்தல். 
  • வளங்களைப் பெற்றுக் கொடுத்தல்.
  • சிறந்த தொடர்பாடல் திறன்களை பிரயோகித்தல்.
  • செவிமடுத்தல், புரிந்து கொள்ளுதல் போன்ற சமூகத் திறன்களை பிரயோகித்தல்.
  • பணியாளர் நலம் பேணல்.
  • முக மலர்ச்சியுடனும், நகைச்சுவையுடனும் செயலாற்றும் சூழல் உருவாக்கல்.
  • நிறுவனப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை வெளிப்படையாக அங்கீகரித்தல் அவர்களின் தரம் உயரக் காரணமாக  அமையும். 
  • ஆசிரியர்களின் கல்வித்தரம் அதிகரிக்கும் போதே மாணவர்களின் கல்வித்தரமும் அதிகரிக்கும். எனவே ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் கல்வித் தகைமை, தொழில் தகைமை அதிகரிக்க அதிபர் வழி காட்ட வேண்டும்.  உயர் தகைமை அடையும் போது பாராட்ட வேண்டும்.
  • உரிய நிறுவனங்களில் தொடர்பு கொண்டு, பொருத்தமான தகவல்களைப் பெற்று ஆசிரியர்களின் தொழில் உயர்ச்சிக்கான விடயங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். 
  • பணியாளரின் சுயமரியாதையை ஏற்றல். 
  • அவர்களின் தன்னம்பிக்கையை மதித்தல். 
  • வலுவூட்டுதல் - புன்னகை,  தலை அசைப்பு   செயல்கள் மூலம்
  • வெற்றியைப் பற்றிய நம்பிக்கை ஊட்டல். 
  • கவலையைக் குறைத்தல். 
  • நல்லுறவு பேணுதல் - இதனால் மேம்பட்ட உறவு பேணப்படும்.
  • தனியாள் எதிர்பார்ப்புகளை நிர்ணயித்தல். 
  • ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை  உருவாக்குதல்.
  • ஆர்வத்தை எழுச்சியுறச் செய்தல். 
  • செய்யும் செயலில் கவனத்தை ஏற்படுத்தல். 
  • ஒருவருக்கு விருப்பத்தை ஏற்படுத்தும் ஊக்கிகளை அவருடைய இயற்கையான உந்துதலோடு இணைத்தல்.
          போன்ற நடவடிக்கைகளை  மேற்கொள்ளலாம்

Ms. A.C.Jancy,
S.L.P.S -3
J/ Kadeeja Ladies College, 
Jaffna









2019/07/12

பாடசாலை முரண்பாட்டு முகாமைத்துவம்

முகாமைத்துவ செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தும் போது பாடசாலையில் எதிர் கொள்ளும் முரண்பாடுகள் 
---------------------------------------------------------------------------------------------------

Image result for முரண்பாடு
ஏதோ ஒரு இலக்கினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நம்  வாழ்வில் நாம் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறோம். சிலர் நினைவில் நின்று விடுவார்கள். சிலர் வெறுப்போடு மறைந்து போவார்கள். வெறுப்போடு  மறையும்  காரணங்களில் ஒன்று முரண்பாடு. 

"வேறுபட்ட இலக்குகள் அல்லது பெறுமானங்களை கொண்டிருக்கும் இருவருக்கிடையில் அல்லது இரு குழுக்களுக்கிடையில் தோன்றக்கூடிய வெளிப்படையான இயக்கமற்ற தன்மை முரண்பாடு எனப்படும்."

முரண்பாடு என்பது ஒருவரிடத்தே அல்லது இருவருக்கிடையில் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோரின் கருத்து வேறுபாட்டின் அல்லது எதிர்ப்பின் பெறுபேறாகத் தோன்றுவதாகும். சுருங்கக் கூறின் வேலையிடத்தில் தனது கடமைக்கும், மனசாட்சிக்கும் இடையிலான எதிர்ப்பு நிலையை இது அடையாளப்படுத்துகின்றது.

முரண்பாடுகளுக்கான சில பண்புகள் 
  • குறித்த நபர் அல்லது நபர்கள் தொடர்பில் வெறுப்பை வெளிப்படுதல்.
  • குறை கூறல்.
  • தமது கருத்துக்களை வெளிப்படுத்தாமல் இருத்தல். 
  • ஒதுக்கி வைத்தல். 
  • தனித்திருத்தல். 
  • பேசுவதை தவிர்த்துக் கொள்ளல். 
  • கண்கள் நேருக்கு நேர் பார்த்து பேசாதிருத்தல். 
முரண்பாட்டுக்கான காரணங்கள் 
  • பக்கச்சார்பு. 
  • தனிநபர் ஆளுமை.
  • புலனுணர்வில் வேறுபாடு. 
  • வேறுபட்ட இலக்கு. 
  • வரையறுக்கப்பட்ட வளம். 
  • தவறான தொடர்பாடல். 
  • அந்தஸ்து பேணப்படல். 
  • பகுதியாக்கல். 
  • தெளிவற்ற பொறுப்புக்கள். 
  • ஆளுமை மோதல். 
  • அதிகப்படியான வேலைச்சுமை. 
  • வேறுபாடான எண்ணக்கருக்கள். 
முரண்பாடு மூலம் கிடைக்கும் நன்மைகள் 
  • புதிய கருத்துக்கள் உருவாகும். 
  • இணக்கமாக வாழக் கற்றுக் கொடுக்கிறது. 
  • தேவைகளை நிறைவு செய்கிறது. 
  • நடத்தை கோலங்களை கற்றுக் கொடுக்கிறது. 
  • பிரச்சனைக்கான தீர்வு தேடித் தரும். 
  • தொடர்பாடல் திறனுக்கான பயிற்சி. 
  • உணர்ச்சிவசப்படுவதை தடுக்கும். 
  • வித்தியாசமான அனுபவங்களைத் தரும். 
  • புதிய சந்தர்ப்பங்கள் உருவாகும். 
  • உண்மையான பிரச்சனை வெளிப்படும்.
  • குறைபாடுகளை இனம் கண்டு கட்டுப்படுத்த முடிகிறது. 
  • இரு தரப்பும் இணங்கும் வெற்றிகரமான தீர்வு. 
  • புரிந்துணர்வு வளர்ச்சி. 
முரண்பாடுகள் மூலம் கிடைக்கும் தீமைகள் 
  • சக்தி நேரம் வீணாகும். 
  • தாமத முடிவு. 
  • ஆரோக்கியமற்ற சமூகம். 
  • எரிச்சலூட்டுதல். 
  • பின்தங்கிய நிலை. 
  • குழுவினர் விலகுதல். 
  • குறிக்கோளை அடைய முடியாது. 
முரண்பாட்டின் வகைகள் 
  • கட்டமைப்பு ரீதியிலானது. 
  • அமைப்பு ரீதியிலானது. 
கட்டமைப்பு ரீதியிலானது.
 அதிபர்  -  ஆசிரியர் தொடர்பு (செங்குத்து வடிவம் )
-----------------------------------------------
  • தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல். 
  • தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
ஆசிரியர்  -  ஆசிரியர் தொடர்பு (கிடை மட்டம் )
-----------------------------------------------
  • ஆசிரியர் ஒருவர் அதிபரின் வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல். 
ஆசிரியர்  -  மாணவர் தொடர்பு
------------------------------------------------
  • குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
அதிபர்  -  பிற பாடசாலை அதிபர் 
------------------------------------------------------
  • ஒரே வளவுக்குள் இரு பாடசாலைகள் இயங்குதல்.
நிரந்தரக் கட்டிடம் உள்ள அதிபர்,  அதே பாடசாலையில் தற்கலிகமாக இயங்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்குதல்

 அம் முரண்பாடுகளை வினைத்திறனாக தீர்த்துக் கொள்வதற்கு தங்கள் கடைபிடிக்கும் படிமுறைகளை விளக்குக 
---------------------------------------------------------------------------------------
முரண்பாடுகள் முடிவடைவதில் நன்கு அடிப்படை விதங்கள் உள்ளன. 
  • வெற்றி    -  தோல்வி 
  • தோல்வி  -  வெற்றி 
  • தோல்வி   - தோல்வி 
  • வெற்றி   -  வெற்றி 
இவற்றுள் வெற்றி  -  வெற்றித் தீர்வு முறை மிகச் சிறந்ததாகும்.

ஒழுங்கமைப்பினுடாக முரண்பாட்டுக்கான தீர்வுக்காக  கடைபிடிக்கப்படும் பல்வேறு உபாயங்களாவன : -
  • தவிர்த்தல். 
  • தீர்வொன்றை விதித்தல். 
  • மிருதுவாக்குதல். 
  • ஒழுங்கமைப்பின் குறிக்கோளை நிறைவுபடுத்திக்  கொள்ளல். 
  • பிரதிநிதியுடன் கலந்துரையாடல்.
  • கட்டமைக்கப்பட்ட இடைத்தாக்கம். 
  • பேச்சுவார்த்தையும் பேரம் பேசுதலும். 
  • மத்தியஸ்தம். 
  • பிரச்சினை தீர்த்தல். 
  • ஒழுங்கமைப்பை மறுசீரமைத்தல். 
தீர்வு காணும் உத்திகளுக்கான அணுகுமுறைகள் 
  1. பகுப்பாய்வு அணுகுமுறை 
  2. தொகுப்பு அணுகுமுறை 
இவற்றுள்
1. பகுப்பாய்வு அணுகுமுறை மூலமாக பிரச்சினை சிறு, சிறு கூறுகளாகக்  பிரிக்கப் பட்டு ஒவ்வொரு கூறுகளும் தீர்வு காணுதல் ஆகும். இதன் மூலம் சிறந்த தீர்வு காண முரண்பாட்டுப் படம், மாற்று வழிகளைத் தோற்றுவித்தல் உதவுகின்றது. விடய ஆய்வின் மூலம் மாற்றுவழி தீர்வு உதவும் .

2. கோட்பாட்டு முறை மூலமாக உடன்பாடு காணச் செய்தல் .இதன் மூலமாக தத்துவ ரீதியில் அதிபருடன் ஆசிரியரையும் இணங்கச் செய்தல்.

இதன் அடிப்படையில் மேற்குறித்த பிரச்சினைகள் பகுப்பாய்வு செய்யப்படும் 
மேற்கூறப்பட்ட  முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக தெரிவு செய்யும் நுட்பம் பிரச்சினை தீர்த்தல் ஆகும். பிரச்சினை தீர்த்தல் நுட்பத்தின் படி முறைகள் ஆவன:- 

1. பிரச்சினை 
  1. தவறு எங்கே உள்ளது?  அவை யாவை? 
  2. காணக்கூடிய பண்புகள் யாவை? 
  3. அவற்றினால்  நட்டம்,  தீங்கு என்பவற்றை ஏற்படுத்துபவை யாவை? 
இதன் அடிப்படையில்   மேற்காட்டப்பட்டுள்ள  பிரச்சினை பகுத்து ஆராயப்படும். அத்துடன் சம்பந்தப்படும் பிரச்சினைகள் தொடர்பாக பகுப்பாய்வு அணுகுமுறையின் முரண்பாட்டுப்படம் தயாரிக்கப்பட்டு காணப்பட்ட  பிரச்சினைகளுக்கு பெயர்கள்  இடப்படும்.

தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல்.
பெயர் இடல்  -அதிக லீவு  பெறல் 

தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
பெயர் இடல் - தாமத லீவு பெறல் 

ஆசிரியர் ஒருவர் அதிபரின் வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல்.
பெயர் இடல் - தன்னிச்சையான தீர்மானம்.

குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
பெயர் இடல் - தண்டனை பெறல். 

ஒரே வளவுக்குள் இரு பாடசாலைகள் இயங்குதல்.
நிரந்தரக் கட்டிடம் உள்ள அதிபர்,  அதே பாடசாலையில் தற்கலிகமாக இயங்கும் பாடசாலை அதிபர், ஆசிரியர்களை மன அழுத்தத்துக்குள்ளாக்குதல்
பெயர் இடல் -  ஒத்துழைக்காமை. 

2. பகுப்பாய்வு 
  1. பண்புகளை வகைப்படுத்தி பார்த்தல். 
  2. காரணங்களை இனம் காணுதல் 
  3. குறைபாடுகளை அவதானித்தல் 
  4. பிரச்சினைகளின் தீர்வுக்கு தடையாக இருப்பவற்றை கண்டறிதல் 
 இவ்வாறே முரண்பாட்டுப்படம் அடிப்படையில் முரண்பாட்டுடன் தொடர்புள்ளவர்களை இனம் காணுதல்  வேண்டும். 

சம்பவம் 1

தொலைவிலிருந்து பாடசாலை வரும் ஆசிரியர் அதிக லீவு எடுத்தல்.
அதிபர்  ,   ஆசிரியர் 

சம்பவம் 2
தாமதமாகி வந்த ஆசிரியருக்கு சிவப்பு கோடு இடல். 
அதிபர்  ,   ஆசிரியர் 

சம்பவம் 3
குழப்படி செய்யும் மாணவரை ஆசிரியர் தண்டித்தல். 
ஆசிரியர்,    மாணவர் 

சம்பவம் 4
ஆசிரியர் ஒருவர் அதிபரின் (எனது) வேண்டுகோளின் படி இன்னுமொரு ஆசிரியரால்  கற்பித்தல் மேற்பார்வை செய்யப்படும் போது அதனை எதிர்த்தல், ஒத்துழைப்பு வழங்காமை, விமர்சித்தல். 
ஆசிரியர் , ஆசிரியர் 


3. பிரவேசம் 

தீர்வுகளை பிரயோகிக்கக்கூடிய உபாயங்கள்  யாவை ?

தீர்வுக்கு வழி  காட்டும் விதிகள் யாவை? 

தீர்க்கக் கூடிய வழி பற்றிய விரிவான கருத்தை எடுத்துக் காட்டுதல். 


அத்துடன் முரண்பாட்டுப்படம் அடிப்படையில் தரப்பினரின் தேவைகளையும், ஐயப்பாடுகளையும் இனம்கண்டு பட்டியல்படுத்த வேண்டும். 

சம்பவம் 1
தேவைகள் : - மனிதத் தேவை, அனுகூலம், சுய கெளரவம் , தொடர்பாடல் 

சம்பவம் 2
தேவைகள் : - பாதிப்பு அடையாமை, தொடர்பாடல்  

சம்பவம் 3
தேவைகள் : - பாதிப்பு அடையாமை , மனிதத் தேவை, உணர்ச்சி கட்டுப்பாடு  தொடர்பாடல் 

சம்பவம் 4
தேவைகள் : - சிறப்பான மனிதத் தொடர்பு , தொடர்பாடல் 

அவர்களின் தேவைகளை அவர்களிடம் நேரடியாகவோ அன்றி நண்பர்கள் மூலமாகவோ அன்றி நமது அவதானத்தின் அடிப்படையிலோ கண்டறியலாம். 

இவ்வாறாக பிரச்சினை தொடர்பாக பகுப்பாய்வு செய்து தகவல்களை திரட்டிக் கொள்ளுதல் வேண்டும். 

பின்னர் அதிபர் குறித்த தரப்பினருடன் சிறந்த முறையில் தொடர்பாடலைப் பேண வேண்டும்

உதாரணம்: - 
  • "இவ்வாறான செயல்கள் பாடசாலையின் பெயருக்கு களங்கம் தரும்" என்று பாடசாலை குறிக்கோளினை நிறைவுபடுத்திக்க கொள்ளலாம். இதனால் அவர்கள் சுமுகமாகலாம்.
  • சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி தீர்வுக்கு வழி தேடலாம்.
  • அதிபர் நிறுவனம் தொடர்பான தகவல்கள் சுற்று நிருபங்கள் கருத்துக்களை சகலரும் அறியும் விதத்தில் பரிமாறலாம்.
  • சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தலாம். 
  • ஆளணியினரின் திறன்கள், குணப்போக்குகளை கண்டறிந்து அதற்கேற்ப பொறுப்புகளை ஒப்படைத்தல். அத்துடன் அவர்கள் பாடசாலைக்கு வரும் விதம், குடும்ப தன்மை, தனியாள் வேறுபாடுகள் என்பவற்றையும் கண்டறிந்து அதற்கேற்ப அவர்களுக்கு பொறுப்புகளை ஒப்படைக்கலாம். 
அவ்வாறே
  • பாடசாலை சமூகத்துடன் மன ஒருமைப்பாட்டுடன் சிறந்த செவிமடுத்தல் திறனை வளர்க்க வேண்டும் இதன் மூலம் சிறந்த மனிதத் தொடர்பு கட்டி எழுப்பப்படுகிறது.
  • அவ்வாறே செவிமடுத்த விடயங்களை அன்புடன் மீளக் கூறும் போது முரண்பாடுகள் மறைந்து போக்க கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும்.
  • குறித்த ஆசிரியர், பிற பாடசாலை அதிபர்  என்போரின்  குறைகளை அவர்களே உணரச் செய்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும். ஒருவர் செய்யும் குறைகளை பொதுப்படையாக கூறும் போதும் அவர் தனது குறைகள் தொடர்பாக தன்னை மதிப்பிட முடியும்.
  • அவ்வாறே அவர் தவறுகளை மனம் நோகாமல் மெல்லச் சுட்டிக் காட்டலாம்.  
  • நேரடியாக  ஆசிரியர்களை சுட்டிக் காட்டி (நேர காலத்துடன் பாடசாலை வரும் ஆசிரியர்கள்) நேரடித் துலங்கள் காட்டலாம்.
  • முரண்பாடுடன் சம்பந்தப் பட்டவர்களை பேச்சு வார்த்தைக்கு வரவழைத்து தீர்வு காணச் செய்யலாம் (சம்பவம் 3, 4 ) 
 சம்பவம் 4
அதிபர்  மத்தியஸ்தம் வகித்து, சிரேஷ்ட மற்றும் தொழில் அனுபவங்கள் கல்வித் தகைமைகள் என்பவற்றை அடிப்டையாகக் கொண்டு பிரச்சினையில் சமரசமும், ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் உருவாக்கலாம். 

இவ்வாறாக முரண்பாட்டுக்குள் உள்ளானோர் பின்னணியினை ஆராய்ந்து, அதிகாரத் தோரணை இன்றி அவர்களின் நம்பிக்கையினை கட்டியெழுப்பி தாம் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளக் கூடிய, அவர்களாகவே ஒரு முடிவு காணக்கூடிய தக்க தீர்வை கொடுக்கும் போது அதிபர் எனும் வகையில் என் நிறுவனம் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க முடியும். அதுமாத்திரமின்றி முரண்பட்டோர் கருத்துக்களை "நேருக்கு நேர் நோக்குதல்" போன்ற நுட்ப முறைகளையும் பயன்படுத்தி பிணக்குத் தீர்க்கலாம்.

இவற்றுடன் சம்பந்தப்பட்டோரின் சிந்தையை கிளறச் செய்து, ஒவ்வொருவரும் தமது கருத்துக்களை முன்வைத்து அதன் மூலமாக நியாயமான தீர்வினை கொடுப்பதுடன்  நிறுவனத்தில்  ஏற்படும் முரண்பாடுகளை சிறப்பாக முகாமைத்துவம் செய்யலாம்.

- Ms.A.C.Jancy-
   SLPS -3
J/Kadeeja Ladies College,
Jaffna