1. வாராய் - வாராய்
---------------------------------
வாராய் மழையே மேகம் பிழிந்தூற்றட்டும்/
வானவில் பின்னிடும் வண்ணக் கலவையும்/
மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/
என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/
ஜன்ஸி கபூர் - 5.11.2020
1. வாராய் - வாராய்
---------------------------------
வாராய் மழையே மேகம் பிழிந்தூற்றட்டும்/
வானவில் பின்னிடும் வண்ணக் கலவையும்/
மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/
என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/
ஜன்ஸி கபூர் - 5.11.2020
சோபனங்களைச் சுமந்து பயணிக்கின்ற வாழ்வு/
சோர்ந்து வீழ்கின்றதே வறட்டுக் கௌரவத்தில்/
நிசங்களின் துளைகளை நிரப்புகின்றன மாயைகள்/
நிம்மதி கலைக்கையில் நிதானமிழக்கின்றது மனது/
தனக்கான வாழ்வினை பிறர் தரிப்பிடங்களாக்கி/
தகுதியில்லாக் கௌரவத்தினுள் தனையும் அடக்கி/
தவிப்புக்களைச் சுமந்து தத்தளிப்போரின் உயிர்ப்பு/
தள்ளாடுதே தினமும் அவலச் சுமைக்குள்/
அடுத்தவர்க்கே அஞ்சி தன்னையே ஒளிப்போர்/
அவனிக்குள் அலைகின்ற சுயமற்ற மாந்தரே/
ஜன்ஸி கபூர் - 05.11.2020
உணர்வுகளின் மொழிவில் உறவானாய் என்னுள்/
உதடுகளும் நிதம் உனையே உச்சரிக்க/
உதிர்கின்ற பொழுதெல்லாம் உயிர்க்கின்றாயே நினைவுகளாக/
உலகத்தின் ஈர்ப்புக்குள் உடையாதே அன்பும்/
உள்ளத்தில் தினமும் உனையேந்தி வாழ்வதற்காகவே/
உலகத்தில் பிறந்தேனே பூவே உனக்காக/
ஜன்ஸி கபூர் - 12.11.2020
உதிர்கின்ற பொழுதுகள் உரமாக்குகின்ற செயல்கள்/
உறைகின்றன நெஞ்சினில் உன்னதமான காலச்சுவடுகளாக/
உணர்வுக்குள் வீசுகின்ற நினைவுகளின் வாசங்கள்/
பத்திரப்படுத்தப்படுகின்றன மனதினில் காலத்தின் சேமிப்பாக/
சுதந்திரமாக விழிக்குள் சுற்றிய கனாக்கள்/
வாழ்க்கைத் தடங்களின் வளமான பண்பாடுகள்/
வறுமையையும் கிழித்து வாழ்கின்ற முனைப்பு/
வரலாற்றுடன் இணைந்தே துளிர்க்கின்றன தலைமுறைகளுக்குள்/
போரின் மூர்க்கம் போதித்த தாக்கம்/
போக்கிடமின்றித் தவித்த பெருந்துன்பங்களின் வீரியங்கள்/
துளைத்த கணங்கள் துடிக்கின்றன இன்னும்/
துடைத்தெறியப்படாத மறதிக்குள் துயரும் நீள்கின்றது/
அணிவகுத்துச் செல்கின்ற அகிலத்தின் அவலங்கள்/
அவ்வவ்போது அணிகின்ற சமாதானங்களின் மலர்ச்சி/
ஒவ்வொரு ஆத்மாக்களின் உயிர்ப்புக்களின் இருப்புக்களாகி/
தரித்து நிற்கின்றன காலமெனும் காலச்சுவட்டினுள்/
ஜன்ஸி கபூர் - 08.11.2020
1. கடை – விடை -- நடை – மடை
--------------------------------------------
3. அன்பெனும் சோலையில்
அன்பெனும் சோலைக்குள் உயிர்க்கின்ற உறவுகள்/
சிந்துகின்ற நினைவுகள் மணிமகுடங்களே நமக்கு/
சூடிடுவோம் அழகாக/
ஜன்ஸி கபூர் - 9.11.2020
செவ்விதழ் விரித்தே
.......செதுக்கும் குரலினில்/
சொக்கித்தான் போனேனே
......என்றன் சோலைக்கிளியே/
பக்கத்தில் உனையிருத்தி
........வாழ்கின்ற வாழ்வினில்/
தினமும் காதல்
........வாசம் வீசுதே/
ஜன்ஸி கபூர் - 7.11.2020
1.நட்பின் பயணம்
******************
அணைபோடாத தூய அன்பு/
என்னிழலுடன் துணையாகி வருகின்றது/
உணர்வுகளுடன் ஒத்திசைகின்ற பிம்பங்களாகி/
தொடர்கின்றதே எந்தன் வாழ்வினில்/
ஜன்ஸி கபூர் - 03.11.2020
1. வளரட்டும் - மலரட்டும்
-------------------------------------------
வளரட்டும் மனிதநேயமே வாட்டங்கள் குறையட்டும்/
வனப்புகள் படர்ந்திடும் வாழ்வும் தழுவட்டும்/
குற்றங்கள் கரைந்தே குதூகலமும் ஆளட்டும்/
குன்றா அன்பும் குவலயமெங்கும் மலரட்டும்/
நிலையில்லா மனதில் அலைகின்றதே உணர்வுகள்/
நீள்கின்றதே தவிப்பும் நிம்மதியும் தொலைகின்றதே/
தேடல் வாழ்வுக்குள் தேங்கும் ஆசைகளால்/
நகர்கின்ற பொழுதெல்லாம் துடிக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/
நினைவுகளின் வேட்கைக்குள் சிதறிடும் சிந்தையும்/
கவனமதைக் கலைத்தே தடுமாறுதே முடிவுமின்றி/
1 பாதை
-----------
நீண்ட பாதையில்/
நிதானமாகப் பயணிக்கின்றேன்/
வாழ்வியல் அனுபவங்கள்/
வழிகாட்டிச் செல்கின்றன/
ஜன்ஸி கபூர் - 2.11.2020
வாலிபமும் வயோதிகமும்
வயதெனும் எண்ணுக்குள் வசப்படுவதில்லை மனதும்/
வழிகின்ற உணர்வுகளால் பக்குவப்படுகின்றதே வாழ்வும்/
வாலிபமும் வயோதிகமும் பருவத்தின் சுழற்சியே/
முதுமைக்குள் முடங்கிடாத இளமை நினைவுகளை/
இரசித்திடும் விழிகளுக்கு திரையிடுமோ காலமும்/
ஜன்ஸி கபூர்
குழந்தை தவழும் மனை யிலென்றும்/
குன்றாதே செல்வமும் குவிந்தே சிறக்கும்/
குதூகலச் சிரிப்பினில் குறைந்திடும் வலியும்/
குடும்ப வம்சமும் உயிர்த்திடுமே மழலையால்/
1. ஒருநாள் இரவில்
---------------------------
சலனமற்ற இரவும் அவிழ்க்கின்ற மௌனத்தில்/
சங்கமிக்கின்றன நம் உணர்வுகள் இதமாக/
மெலிதாகத் தீண்டுகின்ற உன் விரல்களால்/
மெருகேறுகின்றதே என் வெட்கப் புன்னகையும்/
விரிகின்ற நீள்வானில் ஒளியினைப் பிசைகின்ற/
விண்ணிலாவும் கவியெழுதுகின்றதோ நம் காதலிற்கே/
---------------------------------------------------------------------------**********************************
உயரப் பறந்த உன்றன் சிறகினைத்/
தொட்டிடத் துடிக்கின்றேன் நடுவில் சாகரமோ/
எட்டிப் பார்க்கின்றாய் கனவின் விழிகளில்/
கட்டியணைத்தே கன்னம் சிவந்திடத் துடிக்கின்றேன்/
உனைத் தழுவிய விரல்களின் தவிப்பு/
உருமாறுகிறதே வரிகளாய் உன் வசமாக/
தனிமைக்குள் முகம் புதைக்கும் எண்ணங்களைத்/
திணிக்கின்றேன் மடலில் நீயும் ஏந்திடவே/
ஏக்கத்தைப் பிழிந்தே தீட்டினேன் வார்த்தைகள்/
ஏற்றிடு என்னுள்ளத்தை உன்றன் கரங்களில்/
------------------------------------------------------------------------------
3. நாணமோ இன்னும் நாணமோ
***********************************
சுருங்கிய தேகங்கள் சுமக்கின்ற அன்பு/
சுகத்தின் இரம்மியத்தில் சுவைக்கின்றதோ மகிழ்வினை/
நரை கண்டும் குறைந்திடாக் காதல்/
திரைதனை விரிக்காது ரசிக்கின்றதோ வெட்கத்தை/
முதுமைக்குள் சிரிக்கின்ற வாலிபக் காதலிது
-------------------------------------------------------------------