About Me

2020/11/05

வாராய் - வாராய்

 

1. வாராய் - வாராய்

---------------------------------

வாராய் மழையே  மேகம் பிழிந்தூற்றட்டும்/

வானவில் பின்னிடும்  வண்ணக் கலவையும்/

மண்வாசச் சுவையினில் கலந்திடும் தென்றலும்/

என் ரசிப்புக்குள் வீழ்ந்திடவே வாராய்/


ஜன்ஸி கபூர் - 5.11.2020

-------------------------------------------------------------------------------------- 

2. கனவின் வழியே பயணம்
--------------------------------------------
அன்பும் அறிவும் ஆற்றலும்/
சிந்தையைச் செதுக்கிடும் போதெல்லாம்/
நிசத்தின் தேடலாகத் தொடர்கின்றதே/
கனவின் வழியே பயணம்/

ஜன்ஸி கபூர் - 17.11.2020

---------------------------------------------------------------------------------------- 


3. 
மூக்கும் நுகருதே வண்டின் மணம்/
நோக்கும் பார்வைக்குள் வெறுப்பும் தெரியுதே/
விரும்பா நட்பை முகமது காட்டும்/

*****
தேடி வரும் நட்பின் அணைப்பால்/
ஓடு விடுமே முரண்களும் பேதங்களும்/

ஜன்ஸி கபூர் - 18.11.2020

---------------------------------------------------------------------------------- 

4. பச்சோந்திகள்
-----------------------
 பொய்களைப் பேசியே பொருந்திடுவார் வாழ்வுக்குள்/
மெய்க்குள் வேடமிட்டு மெச்சுவார் தம்மையே/
---------------------------------------------------
சுயநலம் கொண்டு சுடுகின்றாய் அனலாக/
பயமற்றே தரிக்கின்றாய் பல வேடங்களைத்தானே/

ஜன்ஸி கபூர்
------------------------------------------------------------------------------------------

5.செம்புலப் பெயல்நீர் போல
-------------------------------------------- 
தழுவினாய் அழகான அன்பினால்/
விழுந்தேனடி நிதமும் பார்வையினில்/  
இருப்பிடம் வேறானாலும் காதல்/
இணைக்குமே நம்மை உறவுக்குள்/

ஜன்ஸி கபூர் - 24.11.2020
----------------------------------------------------------------------------------

6. ****************************
ஆதியும் அந்தமும்
இதயம்
*****************************
இதயம் தேடுகின்றதே தினமும் உன்னை/
இருவிழிகளிலும் பூக்கின்றதே உன்றன் கனவுகள்/
இணைந்திடத் துடிக்கின்றதே அன்பின் மனமும்/
இன்பச் சிறகடிப்பில் என் இதயம்/

ஜன்ஸி கபூர் -26.11.2020
--------------------------------------------------------------------------------------

7.
கீழிறங்கும் மேகம்/
வளைந்து அசைந்து செல்கின்றது/
துணி நாடா/
 
ஜன்ஸி கபூர்- 26.11.2020
-------------------------------------------------- 




 1. தொலைபேசிக்குள் தொலைந்து போனதே நமது வாழ்க்கை/

2. பொழுதுகளை விழுங்கும் இளைஞர்களின் இணைய மோகம்/
  
ஜன்ஸி கபூர் - 30.11.2020
----------------------------------------------------------------------------------------------


 

பாய்ந்தது வெள்ளம்
பாரிய சேதம் /
காய்ந்தது உதரம்
காட்டுது பஞ்சம் /
நிறைந்த வெள்ளத்தால்
நிம்மதி கரைந்தது /
மறைந்த இன்பத்தால்
மனமும் பதைத்தது /

ஒஸ்லி கபூர்
 

வறட்டு கௌரவம்



சோபனங்களைச் சுமந்து பயணிக்கின்ற வாழ்வு/

சோர்ந்து வீழ்கின்றதே வறட்டுக் கௌரவத்தில்/

நிசங்களின் துளைகளை நிரப்புகின்றன மாயைகள்/

நிம்மதி கலைக்கையில் நிதானமிழக்கின்றது மனது/


தனக்கான வாழ்வினை  பிறர் தரிப்பிடங்களாக்கி/

தகுதியில்லாக் கௌரவத்தினுள் தனையும் அடக்கி/

தவிப்புக்களைச் சுமந்து தத்தளிப்போரின் உயிர்ப்பு/

தள்ளாடுதே தினமும் அவலச் சுமைக்குள்/


அடுத்தவர்க்கே அஞ்சி தன்னையே ஒளிப்போர்/

அவனிக்குள் அலைகின்ற சுயமற்ற மாந்தரே/ 


ஜன்ஸி கபூர் - 05.11.2020


 


பூவே உனக்காக




உணர்வுகளின் மொழிவில்  உறவானாய் என்னுள்/

உதடுகளும் நிதம்  உனையே உச்சரிக்க/

உதிர்கின்ற பொழுதெல்லாம்  உயிர்க்கின்றாயே நினைவுகளாக/

உலகத்தின் ஈர்ப்புக்குள்  உடையாதே அன்பும்/

உள்ளத்தில் தினமும்  உனையேந்தி வாழ்வதற்காகவே/

உலகத்தில் பிறந்தேனே  பூவே உனக்காக/


ஜன்ஸி கபூர்  - 12.11.2020

 




 

2020/11/04

காலச்சுவடுகள்


உதிர்கின்ற பொழுதுகள் உரமாக்குகின்ற செயல்கள்/

உறைகின்றன நெஞ்சினில்  உன்னதமான காலச்சுவடுகளாக/

உணர்வுக்குள் வீசுகின்ற நினைவுகளின் வாசங்கள்/

பத்திரப்படுத்தப்படுகின்றன மனதினில் காலத்தின் சேமிப்பாக/


சுதந்திரமாக விழிக்குள் சுற்றிய கனாக்கள்/

வாழ்க்கைத் தடங்களின் வளமான பண்பாடுகள்/

வறுமையையும் கிழித்து  வாழ்கின்ற முனைப்பு/

வரலாற்றுடன் இணைந்தே  துளிர்க்கின்றன தலைமுறைகளுக்குள்/


போரின் மூர்க்கம்  போதித்த தாக்கம்/

போக்கிடமின்றித் தவித்த பெருந்துன்பங்களின் வீரியங்கள்/

துளைத்த கணங்கள் துடிக்கின்றன இன்னும்/

துடைத்தெறியப்படாத மறதிக்குள் துயரும் நீள்கின்றது/


அணிவகுத்துச் செல்கின்ற அகிலத்தின் அவலங்கள்/

அவ்வவ்போது அணிகின்ற சமாதானங்களின் மலர்ச்சி/

ஒவ்வொரு ஆத்மாக்களின் உயிர்ப்புக்களின் இருப்புக்களாகி/

தரித்து நிற்கின்றன காலமெனும் காலச்சுவட்டினுள்/


ஜன்ஸி கபூர் - 08.11.2020


 
 



கடைப் பார்வை

1. கடை – விடை -- நடை – மடை 

********************************* 
வீழ்ந்தேன் உன்றன் கடைப் பார்வையினில்/
விடை சொல்லாயோ துளிர்க்கின்ற காதலுக்கே/
நடை சிந்தும் நளினம் கண்டே/
மடை வெள்ளமாக இன்பம் ஊற்றுதடி/

ஜன்ஸி கபூர் - 04.11.2020

 


2020/11/03

வசப்படாத வரிகள்


1.அகவை

*************
எண்ணும் எண்களால்                               
........எண்ணங்கள் புரிந்திடுமோ/
வண்ணமாக மின்னிடும்                              
 .......வாழ்வியல் மாற்றங்களை/
புறத்தோற்றங்களால்  காட்டும் கண்ணாடி/

                                                                                                                         02.11.2020
------------------------------------------- 
2.வசப்படாத வரிகள்

 *********************** 
காற்றில் வசப்படா வரிகள்/
என்னுள் சுவாசமாக/
நீயோ உயிர்க்கின்றாய் தினம்/
என்னிலிருந்தே  காதலாக/

                                                                                                                       - 3.11.2020

-------------------------------------------- 

3. அன்பெனும் சோலையில்

அன்பெனும் சோலைக்குள் உயிர்க்கின்ற உறவுகள்/

சிந்துகின்ற நினைவுகள் மணிமகுடங்களே நமக்கு/

சூடிடுவோம் அழகாக/

 

                                                                                                     ஜன்ஸி கபூர் - 9.11.2020

 



வாழ்க்கை எனும் வரம்




1. வாழ்க்கை எனும் வரம்

**************************** 
இறப்பும் பிறப்புமென்ற 
.......இறைவனின் நியதியில்/
இயற்கையின் வசத்தில் 
......இரம்மியப் பொழுதுகள்/

இரசிக்கின்ற தரிசனங்கள் 
......இழையும் நினைவுகளில்/
இளமையின் வனப்பு 
......இன்பத்தின் உயிர்ப்பே/

இசைந்திடும் வாழ்வில் 
......இன்னல்களை நீக்க/
இணைகின்ற உறவும் 
......இன்பமே மனதிற்கே/

இலக்கதை வகுத்தே 
......இயங்கிடும் ஆற்றலால்/
இனித்திடுமே வருங்காலமும் 
.......இவ்வுலகத் தடத்தினில்/

பருவங்கள் விரிகையில் 
......பரவசம் உணர்வுகளிற்கே/
படர்கின்ற கனவுகள் 
......பற்றுமே வெற்றியை/

பகுத்தறிவுச் சிந்தனையால் 
.....பாரதும் புகழ/
பண்புகளால் செழித்திடுவோம் 
......பக்குவமாக வளர்ந்திடுவோம்/ 

ஆறாம் விரலாய் 
.....அறிவினைப் பொருத்தி/
அகத்தினில் அன்பினை 
.....அழகால் நிறைத்து/

அன்பான உறவுகளால் 
.....ஆனந்தமும் பெற்று/
அருமையாக வாழ்கின்ற 
......வாழ்க்கையும் வரமே/

ஜன்ஸி கபூர் - 3.11.2020


 


பூஞ்சோலை


செவ்விதழ் விரித்தே 

.......செதுக்கும் குரலினில்/

சொக்கித்தான் போனேனே 

......என்றன் சோலைக்கிளியே/


பக்கத்தில் உனையிருத்தி 

........வாழ்கின்ற வாழ்வினில்/

தினமும் காதல் 

........வாசம் வீசுதே/


ஜன்ஸி கபூர் - 7.11.2020

------------------------------
இணைக்கின்றேன் அன்பே உன்னை வாழ்வில்
இதயத்தில் மகிழ்வேற்றி உலாவுகின்றேன் நிதம்
இன்னலும் தடைகளும் புயலென மோதுகையில்
வலிக்குள் மூழ்காமல் காக்கின்றாய் என்னையே

ஜன்ஸி கபூர் - 13.11.2020
-------------------------------------------------------------- 

5.  நினைவெல்லாம் நீயே
************************** 
காலம் ஓடிக்கொண்டேதான் இன்னும் இருக்கின்றது/
ஆனால் நீயோ என்னிலிருந்து தொலைவாகின்றாய்/

தினமும் உன்னை வாசித்துக் கொண்டிருக்கின்றேன்/
விரல்களால் என் கண்களைக் குத்துகின்றாய்/

வலிதான என் வலி புரிந்துமா/ 
மௌன முடிச்சுக்குள் ஒளிந்து கொள்கின்றாய்/

தவிப்புக்கள் நீள்கின்றன உனை நோக்கியதாக/
நீயோ தரிசனப் பாதைகளை மறைக்கின்றாய்/

என் கண்ணீரும் தீண்டாமல் காக்கின்றேன்/
விழிக்குள் விம்பமாக மலர்ந்திருக்கின்ற உன்னை/

இருந்தும் காத்திருக்கின்றேன் நீ வருவாயென/
உனதான நினைவுகளைப் பத்திரமாகச் சேமித்தபடி/

ஜன்ஸி கபூர் - 14.11.2020
-------------------------------------------------------- 
6. பண்பாட்டு வாழ்க்கை
***********************
பண்போடு வாழ்ந்திடும் வாழ்வில் என்றுமே/
இன்பமே பெருகும் மனமது மகிழும்/
உறவும் ஊரும் இணைந்தே வாழ்த்தும்/
வரலாறும் நம்மை இணைத்தே பேசும்/

ஜன்ஸி கபூர் - 16.11.2020
-------------------------------------------------------- 




நம்பிக்கை வாழ்வு
-------------------------
நம்பிக்கை கொள்வோர் வாழ்வில் தோற்கார்/
தெம்புடனே ஏற்பார் வாழ்வியல் போராட்டங்களை/
துன்பமும் தடைகளும் தகர்த்தே வெல்வார்/
அன்பும் அறமும் கொண்டே வாழ்ந்திடுவார்/
ஜன்ஸி கபூர்
----------------------------------------------------------------------------------


Azka Sathath
வாழ்ந்திடுவார் என்றுமே சுக வாழ்வினை//
செய்திடுவார் நற் செயல்கள் பல//
வென்றிடுவார் இலக்கு வழிப் பயணங்களை//
கண்டிடுவார் தினம் அன்பான உறவுகளை//
அஸ்கா சதாத்
--------------------------------------------------------------------------------------------------------


நட்பின் பயணம்


1.நட்பின் பயணம்

****************** 

அணைபோடாத தூய அன்பு/

என்னிழலுடன் துணையாகி வருகின்றது/

உணர்வுகளுடன் ஒத்திசைகின்ற பிம்பங்களாகி/

தொடர்கின்றதே  எந்தன் வாழ்வினில்/


ஜன்ஸி கபூர் - 03.11.2020

----------------------------------------- 

2. கருங் காக்கைகள்/
   சிறகு விரித்துப் பறக்கின்றன/
   மழை மேகங்கள்/

ஜன்ஸி கபூர் - 08.11.2020
 


2020/11/02

முத்தமிழ்ச்சாரல்

1. வளரட்டும் - மலரட்டும்

-------------------------------------------

வளரட்டும் மனிதநேயமே வாட்டங்கள் குறையட்டும்/

வனப்புகள் படர்ந்திடும் வாழ்வும் தழுவட்டும்/

குற்றங்கள் கரைந்தே  குதூகலமும் ஆளட்டும்/

குன்றா அன்பும்  குவலயமெங்கும் மலரட்டும்/


2. அலை பாயும் எண்ணங்கள்

நிலையில்லா மனதில்  அலைகின்றதே உணர்வுகள்/

நீள்கின்றதே தவிப்பும் நிம்மதியும் தொலைகின்றதே/

தேடல் வாழ்வுக்குள்  தேங்கும் ஆசைகளால்/

நகர்கின்ற பொழுதெல்லாம் துடிக்கின்றதே எதிர்பார்ப்புக்கள்/

நினைவுகளின் வேட்கைக்குள்  சிதறிடும் சிந்தையும்/

கவனமதைக் கலைத்தே தடுமாறுதே முடிவுமின்றி/


3. என் மன வானில்
*********************
என் மன வானின் ஒளியே/
நிலவெனச் சிரிக்கின்றாய் நினைவுகளில் உயிர்க்கின்றாய்/

நீள்விழிதனில் சூடிடும் காதலால் அணைத்தே/
செதுக்கிறாய் என்னுள் உன்றன் புன்னகையை/

செந்நிறக் கன்னமதில் கரைத்திடும் நாணத்தில்/
நனைந்தே அணைக்கின்றாய் என்னை இதமாக/

  

5. சிங்கமாய் நடை போடு
 
ஆற்றல்களை விரல்களில் அணிந்தே நீயும்/
ஆற்றிடு செயல்களை அகிலமும் வியந்திட/

தோற்றிடும் தோல்விகளை ஏற்றிடு அனுபவமாக/
வெற்றியின் நிழலினில் வல்லமையாய் பூத்திடு/

ஏற்றிடு துணிவினை வீசிடு அச்சத்தை/
போற்றுமே பாருமே  சிங்கமாக வீற்றிடு/
 


6. தேடலிலே வெற்றி உண்டு
**************************** 
அறிவியல் ஆள்கின்ற  அற்புத வாழ்வினில்/
ஆற்றல்களின் செழிப்பினில்  ஆளுமை மலருமே/

இயற்கைத் தளத்தில்  இசைகின்ற செயல்கள்/
வெற்றி பெறவே  வேண்டுமே தேடல்கள்/
 
உதிர்கின்ற பொழுதினை உரமாக்கும் சிந்தனைகள்/
ஊட்டமே எண்ணங்களுக்கு  ஊக்கமே வலிமைக்கும்/



7. மாறாத காலங்கள்
---------------------------------
வாலிபம் வசப்பட்ட வண்ணக் கனவுகள்/
விழிகளில் வீழ்கின்றதே இன்னும் பிம்பமாக/

விரிந்த ஆசைகளைக் கருக்காத காலங்கள்/
இன்னும் பத்திரப்படுத்துகின்றன அகத்தின் சேமிப்புக்களை/

நவீனத் தேடல் தொடுகின்ற மாற்றங்களைக்/
கடந்தே பயணிக்கின்றது எனதான அனுபவங்கள்/


8. புன்னகை பூக்கட்டும்
--------------------------------------
விரிகின்ற விடியலுக்குள் சிரிக்கட்டும் நெஞ்சங்கள்/
புவியின் செழிப்பினில் இயற்கையும் துளிர்க்கட்டும்/

மனிதங்களின் மலர்ச்சிக்குள் வளரட்டும் சமத்துவம்/
இனிமைத் தழுவலில் மனமது நிறையட்டும்/

ஓற்றுமைச் சாரலில் இணையட்டும் இதயங்கள்/
வறுமையும் நீங்கியே வாழ்வது புன்னகைக்கட்டும்/

9. முகிலுக்கும் அழகுண்டு
************************** 
விண் கடலின் பொங்கும் நுரைகளோ/
கண்ணுக்குள் மொய்க்கின்றனவே மேக முத்துக்களாகி/

சிறகினை விரித்தே பறக்கின்றதோ வெண்பட்சிகள்/ 
பதுங்குகின்றேன் நானும் பஞ்சுப் போர்வைக்குள்/ 

காற்றில் நீந்திடும்  வெள்ளிப் பளிங்குகளை/
விழிகளில் ஏந்தியே  தினமும் ரசிக்கின்றேன்/


10கோமாளிகள் கூடாரம்
---------------------------------
அறியாமையை அகமேற்றி அறிவென வாதிட்டு/
ஆற்றல்களை வீணாக்கும் அநாகரிக மாந்தர்கள்/

விரித்திடும் வலையில் வீழ்கின்ற சமூகமும்/
இருக்கின்ற வரையில் இப்புவியின் துடிப்புக்களின்/

பொய்மைக்குள் மெய்தனை பொருத்தியே மகிழ்ந்து/
ஏமாளிகளாய் அணிவகுப்பார் கோமாளிக் கூடாரத்தில்/


12. தீப ஒளியின் தீபாவளி
************************ 
திக்கெங்கும் சுடர்கள் 
........தித்திப்பால் ஒளிர/
தீப ஒளியில் 
........தீமைகளும் அகல/

மத்தாப்புச் சிரிப்பினில் 
.......மழலைகள் மகிழ்ந்திருக்க/
மனதெல்லாம் நல்லெண்ணம் 
......மங்களமாகப் பூத்திட/

உறவுகளின் உற்சாகம் 
........உளங்களைத் தழுவிட/
இல்லங்கள் தோறும் 
.......இனிக்கிறதே தீபாவளி/

13. வாழ்க்கைப் போராட்டம்
*************************** 
இலக்குகளை நோக்கிய 
.......இடைவிடாப் பயணமதில்/
இடைக்கிடையே முகம்காட்டும் 
......இடர்த் தடைகள்/

இன்னல்களின் பின்னல்கள் 
.....இதயமதைச் சூள்கையில்/
வாழ்க்கைப் போராட்டம் 
.....வருத்துமே மனதை/

வரும் சவால்களை 
.....வலிமையுடன் போராடுகையில்/
வசந்தத்தின் நுழைவாயில் 
......வரவேற்குமே நம்மையும்/



14. பூவே பூச்சூடவா
--------------------------
என் வாழ்வில் வரமாக இணைந்தவளே
பிரிவின் வலிக்குள் துடிக்கின்றேன் நீயின்றி
தனிமையின் இம்சைக்குள் தவிப்புக்கள் நீள்கின்றதே
துடிக்கின்ற நினைவுக்குள்ளே துயில்கின்றேன் நிதமும் 
நெடுந்தொலைவோ நீயின்று விழியிரண்டும் கண்ணீரில்
வாடுகின்றேன் அன்பே பூவே பூச்சூடவா

15. கற்றது கையளவு
******************* 
அறிவுப் பெருக்கம் 
அண்டத்தையே துளைத்திட/

அகிலமும் மாறும் 
அடிக்கடி நவீனத்தால்/

அறியக் கற்றது 
கையளவுதானே நமக்கும்/

வாழ்க்கையைக் கற்றிடச்
சொற்கள்தான் போதுமோ/

அறியாததை அறிந்திடவே
அனுபவங்களைத் தேடிடுவோம்/



16. அன்றும் இன்றும்
****************** 
இயற்கைக்குள் உயிர்த்த இனிமை வாழ்க்கைக்குள்/
இணைந்தோம் அன்று இன்பமும் கோடியே/

இன்றோ சுமக்கின்றோம் இயந்திர உலகினை/
இடர்களும் தடைகளும் இன்னலும் நிழலாக/

அறிவுப் புரட்சியால் அலைகின்றோம் நவீனத்துள்/
ஓய்வற்ற செயற்கைக்குள் ஓடித் திரிகின்றோம்/


17. உயிர் காக்க உதவிடுவோம்
****************************** 
காற்றின் சீற்றமும் கார்முகில் எழுச்சியும்/
கன மழையென ஊற்றும் ஊரெங்கும்/

இயற்கை இடரும் இன்னலென குவிகையில்/
வலியின் சுமையில் மனமது துடிக்கும்/

வழியும் கண்ணீரைத் துடைப்போம் அன்போடு/
கருணை கொண்டே காத்திடுவோம் உயிர்களை/


18.அலைபாயும் அலைபேசி
***************************** 
விஞ்ஞானத்தின் விந்தையால் தேடலுக்குள் நாமிணைய/
விரல்களும் பற்றிடும் அலைபேசியும் அருமையே/

வலைத்தளத்தின் வசீகரத்தில் பொழுதெல்லாம் கழிகையில்/
நிலைகுலையுமே நிம்மதியும் வலைவீசும் வம்புகளும்/

உறவுகளின் அருகாமை தொலைவுக்குள் தொலைகையில்/
உணர்வுகளின் பரிமாற்றம் ஊசலாடுதே அலைகளுக்குள்/


19. கனவுகள் கரை சேரட்டும்
--------------------------------------- 
போராட்ட வாழ்வில் கோர்க்கின்ற கனவுகள்/
வேகின்றதே தினமும் உயிர்த்திட வழியின்றி/
நெஞ்சத்தில் மோதுகின்ற ஆசைகளைப் பற்றிட/
ஏங்குதே மனமும் ஏற்காயோ விதியே/
பொங்கும் அலைகளைத் தாங்கும் வாழ்விலே/
துளிர்க்கும் கனவுகள் கரை சேரட்டும்/

ஜன்ஸி கபூர் - 27.11.2020
 


பாதை

 


1 பாதை

-----------

நீண்ட பாதையில்/

நிதானமாகப் பயணிக்கின்றேன்/

வாழ்வியல் அனுபவங்கள்/

வழிகாட்டிச் செல்கின்றன/


ஜன்ஸி கபூர் - 2.11.2020

 



 

எழுத்தாணிக் கவிதைகள்

 


   அகலா தணுகாது தீக்காய்வார் போல்க

இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
 
தமக்கியல்பாக தனைமாற்றும் உயர் அதிகாரம்/
தடுமாறித் தளம்பும் உளத்திற்கான அங்கீகாரம்/
தம்நிலை உணர்ந்திடல் சிறப்பே உடனிருப்போருக்கு/
தமைக்காத்து வாழ்தலே வாழ்வுக்கும் சிறப்பு/
தீயினில் குளிர்காய்தல்போல மிகஅகலாதும் அணுகாதும்/
திருத்திட வேண்டும் தம் நடத்தைகளை/
மிகை நெருக்கமது புலப்படுத்தும் பலகீனங்களை/
விலகியிருத்தலும் பெற்றுத்தரா உயர் நன்மைகளை/
பக்குவமாகப் பழகும் பண்பதனைப் பெற்றோரே
பணியிடங்களில் வெற்றிகளைக் குவிக்கின்றார் உவந்தே/
 


 தாயும் ஆனவன்
தள்ளாடும் மேனியைத் தாங்கிடும் தூணாய்/
தாய்க்கே நிழலாகும் தனயனின் அன்பில்/
சுவர்க்கமும் உயிர்க்குமே சுந்தர பூமிக்குள்/
சுமை வாழ்வுக்குள் சுகமும் பரவுமே/

முதுமைக்குள் மூழ்கையில் துணையின் வாசமே/
முகவரியாகும் தள்ளாடும் மேனிக்கும் சுவாசமாக/
நோயுற்ற போதெல்லாம் நோவுற்றே காத்திட்ட/
ஈன்றவளின் நிழலெனவே படர்கின்ற பிள்ளையே/ 

சேயாகத் துளிர்த்திடும் அன்னையைக் காத்திடும்/
தாயும் ஆனவனைத் தரணியும் போற்றுமே/

  வாலிபமும் வயோதிகமும்

வயதெனும் எண்ணுக்குள் வசப்படுவதில்லை மனதும்/

வழிகின்ற உணர்வுகளால் பக்குவப்படுகின்றதே வாழ்வும்/

வாலிபமும் வயோதிகமும் பருவத்தின் சுழற்சியே/

முதுமைக்குள் முடங்கிடாத இளமை நினைவுகளை/

இரசித்திடும் விழிகளுக்கு திரையிடுமோ காலமும்/


ஜன்ஸி கபூர்  

 













































































































































2020/11/01

நிலாமுற்றம்


குழந்தை தவழும் மனை யிலென்றும்/

குன்றாதே செல்வமும் குவிந்தே சிறக்கும்/

குதூகலச் சிரிப்பினில் குறைந்திடும் வலியும்/

குடும்ப வம்சமும் உயிர்த்திடுமே மழலையால்/


--------------------------------------------------------------------
3.பயணம்
*********** 
இலக்கினை வகுத்தே/
பயணத்தில் தொடர்ந்திடு/
தடைகள் விலக/
பாதைகள் தெளிவாகும்./

ஜன்ஸி கபூர் - 7.11.2020
-------------------------------------------------------------------


4. நிதியின் காலடியில்
********************** 
நிதி ஆள்கின்றதே  
......நிலையற்ற வாழ்வை/
நினைத்திடும் காரியம்
......நிறைவேற்றும் சக்தியிது/

நிதர்சனப் பொழுதுகளில் 
......நிம்மதியைப் பறிக்கின்ற/
விதியின் காலடியில் 
.......விளையாடுகின்றோம் பொம்மைகளாகி/

ஜன்ஸி கபூர் - 8.11.2020

--------------------------------------------------------------------------------------------------
5. உன்னத சேவை
-----------------------------
ஆசிரியர் ஆற்றிடும் சேவையின் மகத்துவம்/
செதுக்குமே நற்பிரஜைகளை நானிலச் சுழற்சியில்/
அறிவினைப் புகட்டி ஆற்றலை வார்த்து/
ஏணியாக உயர்த்தும் உன்னதமான ஆசான்

ஜன்ஸி கபூர் - 11.11.2020


---------------------------------------------------------------------------------------------


6. தித்திக்கும் தீபாவளி
********************** 
தீபங்களின் ஒளியில் இல்லங்கள் மகிழ்ந்திட/
திக்கெங்கும் மத்தாப்புக்கள் சிதறிச் சிரித்திட/
உள்ளங்களின் மகிழ்வில் ஊரெல்லாம் ஒளிர/
உறவாகி அணைக்குதே உவகைத் திருநாள்/

ஜன்ஸி கபூர்  - 12.11.2020
------------------------------------------------------------------------------------------ 


7. இலக்குப் பயணம்
-------------------------------
தடையை விலக்கி உடையாத இலக்கில்/
நடை போடும் நளினம் கண்டே/
விரிகின்றதே விழிகளும் சிற்றுயிரியின் ஒழுக்கத்தினில்/
நீண்ட தூரம் நிதான வேகம்/

குலையாத உறுதியில் குதூகலப் பயணம்/
சுயநலம் இல்லாமலே கூடிடும் வாழ்வால்/
சுகமும் பெறுமே சமூகக் கூட்டம்./
ஒன்றாய் இணைந்து ஒழுங்கைப் பேணி/

ஒற்றுமையாகச் சென்றே சேமிக்கும் நுட்பம்/
நமக்கும் தேவையே உழைத்திடலாம் சோர்வின்றியே/
சுறுசுறுப்பும் முயற்சியும் வெற்றியின் பக்கங்களே/
கற்றுணர்ந்தால் நாமும் பெற்றிடலாம் பெருமைதனை/

 ஜன்ஸி கபூர் - 19.11.2020
---------------------------------------------------------------------------------------------

8. வறுமை
---------------
வறுமை கொண்ட 
வாழ்வு ஏங்குது/
பொறுமை இழந்து 
மனமும் போராடுது/

ஜன்ஸி கபூர் - 21.11.2020
--------------------------------------------------------------------- 
உயிர்க்கும் விதைகள்
*********************** 
வீரம் விளைந்த மண்ணில் புதையும்/
விதைகள் யாவும் சரிதம் பேசும்/
வன்முறை தொடாத இலட்சியச் சமரில்/
தன்மானம் காத்திட உரமாக உயிர்க்கும்/

ஜன்ஸி கபூர் - 26.11.2020


ஒருநாள் இரவில்

1. ஒருநாள் இரவில்

---------------------------

சலனமற்ற இரவும் அவிழ்க்கின்ற மௌனத்தில்/

சங்கமிக்கின்றன நம் உணர்வுகள் இதமாக/

மெலிதாகத் தீண்டுகின்ற உன் விரல்களால்/

மெருகேறுகின்றதே என் வெட்கப் புன்னகையும்/

விரிகின்ற நீள்வானில் ஒளியினைப் பிசைகின்ற/

விண்ணிலாவும் கவியெழுதுகின்றதோ நம் காதலிற்கே/

--------------------------------------------------------------------------- 

2,நான் அனுப்புவது கடிதம் அல்ல

********************************** 

உயரப் பறந்த உன்றன் சிறகினைத்/

தொட்டிடத் துடிக்கின்றேன் நடுவில் சாகரமோ/

எட்டிப் பார்க்கின்றாய் கனவின் விழிகளில்/

கட்டியணைத்தே கன்னம் சிவந்திடத் துடிக்கின்றேன்/


உனைத் தழுவிய விரல்களின் தவிப்பு/

உருமாறுகிறதே வரிகளாய் உன் வசமாக/

தனிமைக்குள் முகம் புதைக்கும் எண்ணங்களைத்/

திணிக்கின்றேன் மடலில் நீயும் ஏந்திடவே/


ஏக்கத்தைப் பிழிந்தே தீட்டினேன் வார்த்தைகள்/

ஏற்றிடு  என்னுள்ளத்தை  உன்றன் கரங்களில்/ 

------------------------------------------------------------------------------ 

 

3. நாணமோ இன்னும் நாணமோ

*********************************** 

சுருங்கிய தேகங்கள் சுமக்கின்ற அன்பு/

சுகத்தின் இரம்மியத்தில் சுவைக்கின்றதோ மகிழ்வினை/

நரை கண்டும் குறைந்திடாக் காதல்/

திரைதனை விரிக்காது ரசிக்கின்றதோ வெட்கத்தை/

முதுமைக்குள் சிரிக்கின்ற வாலிபக் காதலிது

------------------------------------------------------------------- 

 4. காணி நிலம் வேண்டும்
************************** 
காணி நிலம் வேண்டும் அதில்/
கனிந்திடும் நல்மரங்கள் முளைத்திடல் வேண்டும்/
பசுமையின் அழகினை நிதமும் சுவைத்திட/
பச்சை வயல்களும் செழித்திடல் வேண்டும்/

மழையும் வெயிலும் குடிபூரா வீடொன்றில்/
மங்கள உறவுகளுடன் வாழ்ந்திடல் வேண்டும்/
தென்றலின் சந்தத்துடன் தென்னங்கீற்றுக்களின் பாட்டொலி/
தெவிட்டா இசையாகி அணைத்திடல் வேண்டும்./

----------------------------------------------------------------------- 
5. வெற்றிக்கான உன்றன் பயண நடை/   
வெல்லுமே  தடை வீழ்த்தி/
சூழ்கின்ற இடர்தனை   உடை/
வாழ்வியல் புதிர்களுக்கான விடை கிடைக்கும்/

------------------------------------------------------------------------ 
 
6



7. புன்னகைப் பூக்கள்
******************** 
கொஞ்சுகின்ற நினைவுகள் சுவைக்கின்றதோ உணர்வினை/
இதழ்களின் மடிப்பினில் தழுவும் புன்னகை/
இன்பத்தில் மலர்கின்றதே அழகாக/

ஜன்ஸி கபூர் - 7.11.2020
------------------------------------------------------- 




8. அழகு மலர்
-------------------------
சின்ன வெண்ணிலா மண்ணில் உலாவுகையில்/
வண்ண மலர்கள் கொஞ்சுதே மகிழ்வாய்/
பஞ்சுக் கன்னங்கள் ரசித்திடும் புன்னகை/
நெஞ்சினில் வீழ்கின்றதே இன்பத்தின் மொழியாகி/

ஜன்ஸி கபூர் - 9.11.2020


---------------------------------------------------------------------------------------- 

9. ஏதோ நினைவுகள் கனவுகள் நெஞ்சிலே
-------------------------------------------------------------------------
இயந்திரமாக உழைக்கின்ற இதமற்ற வாழ்விலே/
இசைகின்ற சுமைகள் இன்னலை வருடுகையில்/

தொலைகின்றதே வசந்தமும் தொல்லையோடு தனிமை/
கடந்துபோன காலங்களின் களிப்பூட்டும் நிழல்கள்/

தடம்பதிக்கும் இனிமையாக தொடரூந்துப் பயணமதில்/
விரைவோட்ட அசைவிலும் அவிழாத கனவுகள்/

விழுகின்றபோது விழிகளும் மெய்மறந்தே ரசிக்கின்றன/
மகிழ்வோடு பூத்த மானசீகப் பொழுதுகளை/

ஜன்ஸி கபூர் - 11.11.2020



--------------------------------------------------- 

10. ஒளி வீசும் உன் அழகால்/
களிப்படைகின்றதே என்றன் காதல் மனதும்/
வெளிக்குள் உலாவும் உன் னிழலை/
எனைப் போல் கொஞ்சிடுதோ வளியும்/

ஜன்ஸி கபூர் - 12.11.2020

------------------------------------------------- 

11 தாய் மடி கிடைக்குமா ------------------------------- நகரும் பொழுதுகளை
நசுக்குகின்றதே வறுமை/ நகைக்கின்ற விதிக்குள்
நனைகின்றதே துயரும்/ கண்ணீரின் ஈரலிப்பில்
கண்களும் துடித்திட/ அலைகின்ற அலைகளை
அணைக்கிறேன் மனதுள்/ சோகங்களை மறப்பதற்கே
தாய்மடி கிடைக்குமா/
ஜன்ஸி கபூர் - 17.11.2020
--------------------------------------------------------------

12. புன்னகை மலரே

நெஞ்சத்தைத் தழுவும் அன்பு மலரே
அள்ளுகின்றேன் உன்றன் அழகினைக் கண்ணுக்குள்
வெள்ளைக்குதிரை மீதேறி நீயும் சுற்றுகையில்
உள்ளத்தின் களிப்பில் பூக்கின்றதோ புன்னகையும்

ஜன்ஸி கபூர் - 17.11.2020




-------------------------------------------------------------- 
13. சந்திப்பு

நிலவொளி சிந்தும் நதிக்கரை ஓரம்
உலாவும் தென்றலில் மேனி நனைத்தே
உள்ளங்கள் பிணைந்த சந்திப்பு வேளை
மொழிகள் மறந்த அன்பின் மலர்வில்
கனிந்த காதல் உயிர்க்கின்றது கண்களில்

ஜன்ஸி கபூர் - 20.11.2020

------------------------------------------------------------------------- 


14. என் உலகம்
************* 
சுதந்திர பூமிக்குள் 
சுடுகின்ற வாழ்க்கை/
சுற்றமும் உறவும் 
சூழ்ந்திடாத தனிமை/

விரிகின்றது எனக்குள் 
விடிவில்லாப் போராட்டமாக/
சிறகு அறுந்தாலும் 
பறக்கத் துடிக்கின்றேன்/

ஜன்ஸி கபூர் - 21.11.2020