About Me

2013/03/11

தளிர் 2

சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

Photo: சுதந்திரம்..............
அடக்குமுறையின் மொழி!

ஒவ்வொரு வீழ்ச்சியிலும்
எழுதத் துடிக்கின்ற முகவரியது!
----------------------------------------------------------
ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும்
வெற்றியாளனாக அறிவிக்கப்படுகின்றான்

Photo: ஒவ்வொரு தன்னம்பிக்கையாளனும் வெற்றியாளனாக பிரகடனப்படுத்தப்படுகின்றான்............
-----------------------------------------------------

பேசும் ஆயிரம் வார்த்தைகளை விட
மௌனத்தின் வலிமை அதிகம்!

Photo: அதிகமாகப் பேசி ஒருவரை எரிச்சலூட்டுவதை விட, மௌனத்திருப்பது மேல்!

ஏனெனில் ஆயிரம் பேசும் வார்த்தைகளை விட மௌனத்தின் பெறுமதி அதிகமானது
------------------------------------------------------------------
சுதந்திரம் மறுக்கப்படுகையில்
பேனா முனைகள் கூட சிந்தும் துளிகள்
கண்ணீரல்ல செந்நீர்!
செந்நீர் ஈரங் கண்டு
வேரறுக்கப்படும் விழுதுகள் கூட.......
உரமாகும் எழுச்சிகளை வாசித்தபடி!
















------------------------------------------------------
கொன்றலின் வெற்றி யறிவிப்பாய்
முன்றலில் எட்டிப் பார்க்கின்றது கருமை!
விண்ணைப் பிளந்து
மண்'ணில் முளைக்கும் வேர்
மின்னலோ................






தளிர்கள் - 3

தவறுகள் அறியாமையின் வரவுகள்!

நம்மை சிலர் தவறான எண்ணத்தில் விமர்சிக்கும் போது, நம்முள்ளம் எரிமலையாகி சுட்டெரிக்கின்றது. அவ்வாறான தருணங்களில் அமைதி காக்கும் பண்பு நம்மிடம் இருக்குமானால், காலம் மிக விரைவில் தவறிழைத்தவர்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையை உணர்த்தி நிற்கும்!


அன்றும் இன்றும்
-------------------------------------------------------------
தோற்ற காதலெல்லாம்
கல்லறை தேடியது அக்காலம்!
புது உறவுக்காய் மீண்டும் விண்ணப்பிப்பது
இக்காலம்

--------------------------------------------------------------
ஒவ்வொரு பூட்டும் செவி சாய்க்கும் தனக்குரிய திறப்புக்கு மாத்திரமே!

நம் மனம் அப்படித்தான்...........

நம் குணத்தை ஒத்தவர்களின் நட்புடன் மட்டுமே ஒத்துப் போகின்றது!

------------------------------------------------------
மெல்லன மூடின விழிகள்..........
மெல்லிசையாய் மொழிந்தன கனவுகள்
வள்ளியே.........உன்னன்பை
அள்ளித் தரும் வள்ளலே நீயெனக்கு!

-----------------------------------------------------

உனக்கான காத்திருப்புக்களால்
தினமும்
சிலையாகின என் விழிகள்!

பழி சொல்லுமோ காலமும் - உன்
அன்பில் மெய்யில்லையென்று!
அஞ்சுகின்றேன் அணுதினமும்!

--------------------------------------------------
எழுதப்படும் தீர்ப்புக்களையே மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் தன்னம்பிக்கையே!

உள்ளம் தன்னம்பிக்கையில் நிறைந்திருக்கும் போது எத் தீமையும் அண்டுவதில்லை.

நல்லதையே நினைப்போம்!
நலமுடன் வாழ்வோம்!!



நீ

கிறீஸ் பிசாசே!
உன் தசை கிழிக்கும் புத்தியில்
இனவாதம் எட்டிப் பார்க்கின்றது!

தரித்திரத்தின் சரித்திரம் நீ
அரியாசனம் மிதிக்கின்றாய்
குருதியை உறிஞ்சியபடி!

நீ கருவறைக் கூடுகளைச் சிதைத்து
உயிரறுக்கும் காட்டேறி!

நீ முகமூடிச் சல்லாபத்தில்
முணங்கிக் கிடக்கும் சாத்தான்!

நீ
நகங்களில் ஆணி பூட்டி
நடுசாமங்களில் ஊர்ந்து செல்லும்
நாகம்!

நீ
துப்பாக்கி ரவைகளில்
அப்பாவிகளை நிரப்பும்
ஆட்கொல்லி!

நீ கற்றாளைப் பாலில் உணவூட்டி
கல்பை விஷமூட்டும்
பாதகன்!

நீ ஆறடிக்குள் ஆன்மா அடக்க
வருந்தாத பூதம்!

உன் மயான கிடங்குகளைத் தீ மூட்ட
வாய் பிளக்கின்றன
அக்கினி நட்சத்திரங்கள்!

உன் அதர்ம மூச்சடக்க
இதோ நாம்!
ஈமானிய உச்சரிப்புக்களுடன்!



- Jancy Caffoor-

     31.11.2013

2013/03/10

இனவெறி


இடம் : food city (Anuradhapura)

காலம் : 05.03.2013

சம்பவம்:

ஒரு கிப்பி வந்தான். அவன் தோற்றம் ரௌடி என்பதைப் பறைசாட்டிக் கொண்டிருக்க, பார் கவுண்டருக்குள் கை நீட்டி உயர்தரமான மதுபான வகைகளை வாங்கியவன், தின்பதற்கு சில நொறுக்குத் தீனிப் பக்கெற்றுக்களையும் வாங்கினான். திடீரென பக்கெற்றுக்களை உற்றுப் பார்த்தவன்........


"இதுல ஹலால் போடப்பட்டிருந்தா எனக்கு வேணாம்" 

 என சிங்களத்தில் கத்தினான்"

"நாங்க சிங்களவர்" என்று புன்னகைத்தான் அவன். அவன் கெட்ட கேட்டுக்கு இந்த பெருமிதம் வேறு...........

இப்படி இனவாதம் பேசுறவங்களுக்கு செருப்படி போதாது. துப்பாக்கிச் சூடுதான் போடனும்..........

இலங்கையை சிங்களவர் தங்களுக்கு சொந்தம் கொண்டாடினால், அப்ப நாங்க எங்க போறதாம்........

ஹலால்.....பேசுற இவன மாதிரி ஆட்களுக்கு ஹராமான வழியிலதான் மரணம் கிடைக்கனும்.

ஆனால் அதே பூட் சிட்டி வாசலில் நின்ற சிங்கள வாயிற் பாதுகாவலன், அந்த இனவாதியைப் பார்த்து என்னிடம் கூறினான் "அவன் பைத்தியக்காரன் "

ஒரே இனத்துக்குள் வித்தியாசமான எண்ணவோட்டங்கள்....

துளிகள் - 1

 

மகளிர் தினம்

பெண்.................!

சுற்றிச் சுழலும் பூகோளத்தின்
அச்சாணி!

உயிரணுவுக்குள் உரு கொடுத்து
காத்திடும் தாய்மை!

அத்தகைய பெண்மைக்காக உலக நாட்காட்டியில் ஒதுக்கப்பட்ட தினமே இந்நாள்!

அன்று............

பெண்ணடிமைத்தன வீச்சங்களால் கறைபட்ட காலங்கள் அடக்குமுறைகளும் அவஸ்தைகளும் பெண்ணவள் பிரதிபலிப்புக்களாக உருமாற்றப்பட்ட காலங்கள்!

அத்தகைய சூழ்நிலைகளின் போது.....

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்த பாரிஸ் பெண்கள் 
 
வேலைக்கேற்ற ஊதியம், 
எட்டு மணிநேர வேலை, 
பெண்களுக்கு வாக்குரிமை, 
பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும்

என்று பாரிஸ் தெருக்களில் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் பிரான்ஸ் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! 

இவர் போராட்டம் கண்டு அஞ்சாத அரசன், 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டத்தினர் தம் மீது அடக்குமுறை விதிக்கும் அரசனின் மெய்க் காப்பாளர்கள் இருவரை கொன்று விடவே, அரசன் சற்று அதிர்ந்து பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் பரவ, போராட்டமானது இன்னும் பலமடைந்து, கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவியது.

இத்தாலியிலும் பெண்களும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு போராட்டக்களத்தில் இறங்கினர். 

இவ்வாறான முறுகல் நிலைகளின் போது,

பிரான்ஸ், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. 

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இதுவென்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றாக இன்னும் அறுத்தெறியப்படவில்லை.