About Me

2012/09/15

வண்ணத்துப்பூச்சி


 

குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு...........

தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும், பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான். ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள்...அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர். அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்!

குழந்தை மனம் வெண்களி போன்றது. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்  அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத்திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தி யின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள், பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப் பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும். குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்

  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 

காரணமாக இருக்கின்றோம்

குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள். வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும். பிள்ளைகள் சுமைகளல்ல. தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள். இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம். வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !



பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !

- Ms. Jancy Caffoor -


குழந்தை



குழந்தை இறைவனின் அற்புதப் படைப்பு. தாம்பத்திய நிழலுள் இணைந்த ஓராணும் , பெண்ணும் தம் அன்பின் பரிமாற்றத்தின் மூலம் உற்பத்தியாக்கும் உயிரே குழந்தை. தந்தை உயிர் கொடுப்பான். ஆனால் தாயோ, அக்குழந்தைக்கு நல்ல வாழ்வின் வழிமுறைகளை அன்புடன் கற்றுக்கொடுக்க பயிற்றுவிக்கும் இதயமாக இருப்பாள். அன்னையின் மேன்மையை மறுக்கும் எந்த ஆண்மகனும் இல்லையென்றே கருதுகின்றேன்..

குழந்தையின் மழலையில், மனம் லயிக்காதோர் யாருளர்...அதன் கள்ளங்கபடமற்ற வெள்ளையுள்ளம் அள்ளித்தரும் அற்புத ரசிப்புக்களில் மனம் கிறங்காதோர் யாருளர்..........!

குழந்தை மனம் வெண்களி போன்றது.. நாம் அதனை நமக்கேற்றவாறு மாற்றிக்கொள்ளமுடியும். குழந்தையின் ஒவ்வொரு செயல்களையும் நன்கு உற்றுப்பாருங்கள். நாம் செய்பவற்றையே, அவ்வாறே செய்யத்துடிப்பார். பிடிவாத குணமும், அழுது சாதிக்கும் தன்மையும் குழந்தையிடத்தில் தாராளமாகக் காணப்படும் பண்புகளாகும்!

குழந்தைகள் தம்முலகமாக வரித்துக் கொள்வது, தம்மைச் சூழவுள்ள பெற்றோர் உள்ளிட்ட நெருங்கிய உறவுகளை மாத்திரமே! நல்லது கெட்டது என இனங் காணாமலே தமது செயல்களை, தாம் நினைப்பவற்றை உடனுக்குடன் செய்து கொள்கின்றனர். குழந்தைகள் பண்ணும் குறும்புகள், விளையாட்டுக்குள் நமக்குள் ஆத்திரமாக மாறும் போது நாமவர்களைத் தண்டிக்கின்றோம். சின்னப் பிஞ்சுகளின், பஞ்சு மேனியின் ரணங்கள் பற்றி நாம் அந்நேரம்....அக்கறை கொள்வதில்லை

குழந்தைகள் அன்புக்குக் கட்டுப்பட்டவர்கள். அதனாற்றான், எங்கு அன்பு கிடைக்கின்றதோ, அத்திசை நோக்கி தம் மனவேர்களை நகர்த்தியின்புறுகின்றனர். குழந்தைப் பருவத்தின் அடி மனதில் கௌவிப்பிடித்திருக்கும் சில நினைவுகள், பிள்ளையின் பிற்கால வளர்ச்சிப்பருவத்தில் பல்வேறு நடத்தைகள் உருவாகக் காரணமாகவுள்ளதை பியாஜே உள்ளிட்ட உளவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

எனவே சூழ்நிலைகள் தான்  குழந்தையின் மனநிலையை போஷிக்கும் மருந்து.. எனவே ஒவ்வொரு பெற்றோரும் தமது குழந்தையின் வளர்ப்பில் அதிக கரிசனை காட்டி கண்காணிக்க வேண்டும். நல்லவற்றை ஊக்குவித்தும், தீயவற்றை அகற்றியும் கற்றுக்கொடுப்பது பிள்ளையாகும் குழந்தையை வளர்த்தெடுக்கும் அன்னை, தந்தை இருவரினதும் தலையாய கடமையாகும்! பிள்ளையைப் பண்படுத்துவதும், புண்படுத்துவதும் பெரியோர் கரங்களிலேயே உள்ளது. எனவே குழந்தைக்கு அனுபவம் வழங்கும் பாடசாலையே நாமே!

ஏனெனில்
நாம்
  • குறை கூறும் குழந்தை கண்டனத்தையும்,
  • விரோதமாக வளர்க்கும் குழந்தை சண்டையையும்
  • கேலி செய்யும் குழந்தை நாணத்தையும்
  • அவமானப்படுத்தும் குழந்தை வக்கிரத்தையும்
  • சகிப்புத்தன்மையைக் கற்றுக் கொடுக்கும் குழந்தை பொறுமையையும்
  • அமைதிச் சூழலில் வளர்க்கும் குழந்தை தன்னை விரும்பவும்
  • நட்பை போதித்து வரும் குழந்தை அன்பையையும் கற்றுக் கொள்ள 
காரணமாக இருக்கின்றோம்
குழந்தைச் செல்வமில்லாத வீடுகள் இருண்டிருக்கும். அந்த மழலைகளுக்கு ஆரோக்கியமான பார்வை கொடுப்பது நம் பணியாகும். வருங்காலத்தில் உங்கள் குழந்தை பற்றிய எண்ணங்களும், அபிலாஷைகளும் வெற்றி பெற வேண்டுமானால், இன்றே அதன் ஒவ்வொரு துடிப்புக்களையும் நன்கறிந்து வழிகாட்டவேண்டிய பொறுப்பு உயிரூட்டியவர்களின் பொற்கரங்களிலேயே தங்கியுள்ளது. குழந்தைகளின் விழிகள் மூலம் சமுகத்திற்கும் ஒளி கொடுப்போம். குழந்தை பிள்ளையாகும் போது, அவன் பயணிக்கும் பாதச்சுவடுகளை அப்பிள்ளையின் ஆற்றலுக்கேற்ப, நீங்களே செதுக்குங்கள்...........

அன்பை அதிகமாகவே அள்ளி வழங்கி, அன்பை அடுத்தவர் மீது சொறியக் கற்றுக் கொடுங்கள். வருங்காலத்தில் பிள்ளையின் வருகைக்காக இவ்வுலகே, மாலையோடு காத்திருக்கும். சாதனைகளின் கனத்தில் பிள்ளையின் வாழ்க்கைச் சரித்திரங்கள் வாழ்த்துக்களைத் தூவி கரகோஷிக்கும் பிள்ளைகள் சுமைகளல்ல. தட்டிக் கொடுக்கப்பட வேண்டிய சிந்தனையோட்டங்கள். இன்றே அவர்கள் வருங்காலத்தை, நம் நிகழ்காலத்துடனிணைத்து வாழ்வைக் கற்றுக் கொடுப்போம். வாருங்கள்

வாழ்க்கை வாழ்வதற்கே !



பிள்ளையருமை உணர்த்தும் பாடலிது......... இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூக்களில் .............ஆராரோ என்று இவர்கள் பாடுவதையும் கொஞ்சம் கேளுங்கள் !

Ms. Jancy Caffoor -


2012/09/14

காதலும் உறுதிமொழிகளும்


காதல்......... !

விழிகளின் சந்திப்பில் உருவாகும் அழகான மொழி! 
ஆனால் இப்பொழுதெல்லாம் அக்காதல் மலிவான உணர்வாகிவிட்டதால், யதார்த்த வெளிகளில் துணிச்சலுடனும், நம்பகரத்துடனும் நீடிக்கும் தன்மை மறைந்து விடுகின்றது.

"நேசியுங்கள் நேசிக்கப்படுவீர்கள்.
காதலியுங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்வீர்கள்"

ஆனால் நமக்குள் பரவசம் தந்து, இருதயத்தைப் போஷிக்கும் இக்காதலின் ஜீவன் இன்னும் உயிர்வாழ்கின்றதா என்றால், அது நூற்றில் பத்துவீதமாகவே இருக்கின்றது.

"கண்டதும், தினமும் ஓரிரு வார்த்தைகள் பேசியதும், கட்டியணைத்து முத்தமிட்டதும், காதல் முகிழ்க்குமா! மனசின் அன்பின் தழுவலும், ஊடலும், சிலிர்ப்புமல்லவா காதலின் நாகரீகம்! இக் காதல்தானே திருமணத்தின் நிழல் தேடி தன்னைப் பொறுத்திக் கொள்ளும்.

இப்பொழுதெல்லாம் வாலிபங்கள் தம் நேரங்கடத்தலுக்கென ஓர் ஜோடியைத் தேடி, தமது திருமண நாட்கள் வரும் வரை காலம் கழிப்பதே காதலின் சிறப்பாகிக் கிடக்கின்றது. அவர்களின் எண்ணங்களைப் போஷிக்கும் ஊடகங்களாக தொலைபேசிகள் முதலிடம் வகிக்கின்றன. எஸ். எம். எஸ் கள் மூலமாகவே பெரும்பாலான காதல் தூதுக்கள் உரப்பேற்றப்படுகின்றன. ஆனால் எத்தனை காதல் நிஜக்காதலாய் யதார்த்தத்தில் பதியப்படுகின்றன.

இப்பொழுதெல்லாம் காதலின் அரிச்சுவடி (பெரும்பாலும்) முத்தத்திலிருந்தே ஆரம்பிக்கின்றன. இவ்வுஷ்ணமூட்டலினால் தன்னை மொத்தமாக இழக்கும் பரிதாபமான நிலை பெண்களுக்கே பெரும்பாலும் ஏற்படுகின்றது. ஏனெனில் பெண் சுமக்கும் களங்கம், அவள் கல்லறையிலும் நிரந்தரப் பதிவாகி, விமர்சனமாகி கிடக்கும்! பெண் தன்னையிழந்தால் அவள் பாவத்தின் அடையாளமாகி நிற்பாள்..இயற்கையின் எச்சரிக்கையிது! இறைவன் செதுக்கிய உடற்கூறின் ரகஸியமிது.

ஆண்கள் காதல் தூதிட்டதும், தன்னை மறந்தவர்களாக பெண்கள், அவர்களைச் சந்திப்பதும், அலைபேசியில் கொஞ்சிக் குலாவுவதும், ஜோடியாக அரவணைத்துத் திரிவதும், பார்க், பீர்ச் எல்லாம் தம்மை நிரப்புவதும், ஈற்றில் மொத்தமாக தம்மையிழப்பதும் காதலின் பல அத்தியாயங்களாக இவ்யுகத்தில் முகங்காட்டி நிற்கின்றன.

காதல் போயின் சாதல்...........!

இது அந்தக்கால காதலின் துடிப்பான நிலைமை! ஆனாலின்றோ,
ஒரு காதலி இருக்கும் போதே, வேறு பலருக்கும் தூதுவிடும் காதலர்களே பெரும்பாலுமுண்டு (ஒரு சில பெண்களுமுண்டு. மறுக்கவில்லை)

இவ் வானவில் காதலில் ஆண்களால் பெரும்பாலும் பரிமாறப்படும் சில ஆயுள் குறைந்த வாக்குறுதிகள் இவற்றைக் கருதலாம்-

  • நான் உன்னை ஒருபோதும் மறக்க மாட்டேன்
  • ஒருபோதும் அழவே விட மாட்டேன்
  • சத்தியமாக உன்னை நம்புவேன்
  • உன்னைக் கண்ணியப்படுத்துவேன்
  • உன்னை துன்புறுத்த மாட்டேன்
  • உனக்கு ஒருநாளும் பொய் சொல்ல மாட்டேன்
  • நல்லதையே உனக்கு செய்வேன்
  • இவ்வுலகம் அழியும் வரை உன்னைப் பிரியவே மாட்டேன்
  • என் மூச்சிருக்கும் வரை உன்னை காதலிப்பேன்
ஆஹா..............
அழகான இப்பொன்மொழிகள் காதலர்களால் நியாயமாக நிறைவேற்றப்பட்டாலே,  காதலில் துயரும் பிரிவும் ஏது?

இப்பொழுதெல்லாம் I Love You எனும் வார்த்தைகளே வெறும் வேடிக்கையான பொழுதுபோக்கிற்காக உதிர்க்கப்படுகின்றனவே தவிர, உள்ளார்த்தமான அன்பினாலல்ல!

காதல் பொய்மை...........திருமணம் நிஜம்!

காதலர்களே!
பொய்மையான காதலை வார்ப்பதாக, செயல் காட்டி மறு மனதில் ஏமாற்றங்களை  திணிப்பதை விட, சற்று தள்ளிநில்லுங்கள் பாவத்தினராகாமல்!

காதலியுங்கள். தவறல்ல. திருமணமாகிய மனைவியை, அவள் தரும் உங்கள் வாரிசை, அவள் மூலம் நீங்கள் அனுபவிக்கும் வாழ்க்கையை காதலியுங்கள்...அப்பொழுதே வாழ்க்கையெனும் பாடம் உங்களுக்கு சுவாரஸியமாக இருக்கும்!

- Jancy Caffoor-


ஏனோ இப்படி


இன்று தொழில்கூடத்தில் ஓர் பெண் ஆசிரியையால் நான் எதிர்நோக்கிய சம்பவமே  இதனை பதிவிடக் காரணமாகிக் கிடக்கின்றது....

மாணவர்களின் கற்றலடைவை பரீட்சைகள் மூலம் பரீட்சித்து, மாணவர் பெற்ற அறிவு, ஆற்றலை பெற்றோருக்குக் காட்சிப்படுத்த மாணவர் தேர்ச்சியறிக்கையை ஆசிரியர்கள் பதிவிட்டு, பெற்றோருக்கு அதனை அனுப்பி வைப்பதுண்டு.. அதற்காக நாங்கள் பரீட்சைப்புள்ளிகளைப் பதிவிட, அதற்கான படிவங்களைப் பயன்படுத்துவதுண்டு!

சென்றமாதம் முடிவுற்ற இரண்டாம் தவணைப் பரீட்சைப் புள்ளிப் படிவங்களைப் பதிவிட்டு உரிய பகுதித் தலைவரிடம் ஒப்படைத்தேன். வழமையாக நான் யாரிடமும் எந்தப் படிவமும் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையெழுத்தினைப் பெறுவதுண்டு. ஏனெனில் பல தடவைகள் நான் ஒப்படைத்தவற்றை தரவில்லையென்று முரண்பட்ட என் சக ஊழியர்கள் சிலர் தந்த அனுபவப்பாடங்களால் நான் கற்றுக் கொண்ட படிப்பினையே இது! இருந்தும் அன்றேனோ ஏதோ ஓர் அவசரத்தில் நான் ஒப்படைத்த படிவத்திற்கான கையொப்பத்தை பெற மறந்து விட்டேன்......!

அன்று கொடுத்த அந்தப்படிவத்தினை  உரிய பகுதித் தலைவரிடம் திருப்பிக் கேட்ட போது, அடித்துச் சொன்னார் தன்னிடம் தரவில்லையென்று ....நானும் சூடானேன்.....மனிதர்களுக்கு மறதி இயல்புதான் .அதிலும் வயது அதிகரித்த நிலையில் மறதி தவிர்க்கமுடியாத இயல்பொன்றே..ஆனால் அந்த ஆசிரியை
தன் மறதிக்கு நியாயம் தேடய செயலை என்னால் மன்னிக்க முடியவில்லை, என் வெறுப்பில் வீழ்ந்த அந்த மூத்தாசிரியை எனக்கு தந்த மனவழுத்தத்தில் இன்று எனது கற்பிக்கும் மனநிலையையே மாறியது. சில நியாயங்கள் அநியாயக்காரர்களால் சமாதியாகின்றன.

என்னிடம் திரட்டூக்கம் சிறுவயதிலிருந்தே அதிகமாகக் காணப்பட்டதனால் எப் பொருளையும் நான் உடனே வீசுவதில்லை. பிறகு தேவைப்படும் என சேகரித்து வைத்திருப்பேன். அத்தன்மையால், இப் புள்ளிகளின் பதிவுகளின் மூலப்பிரதி என் வசமிருந்ததால், எனக்குரிய பாடசாலைக் கடமையை தடையின்றி  பிறர் விமர்சனம் தவிர்த்துச் செய்து முடித்தேன்..

பிறரை நம்புவதால், எனக்கேற்ற துன்பத்தால் நானின்று மானசீகத் தீர்மானமெடுத்தேன்...

"இனி எப் பொருள், படிவத்தை பிறரிடம் ஒப்படைக்கும் போது, அவர்களின் கையொப்பத்தை கட்டாயம் பெற வேண்டும்"

மனிதர் ஒவ்வொருவரும் சூழ்நிலைக் கைதி, சுயநலவாதி, தம்மை நியாயப்படுத்தவே காலத்தைப் பயன்படுத்துகின்றனர். இம் மனிதர்களின் செயல்களே அவர்களை நம்முள் அடையாளப்படுத்துகின்றன. முரண்களை வெளிப்படுத்தும்  மனிதர்களிலிருந்து, நாம் ஒதுங்கிக் கொள்ளும் போது, பிரச்சினைகளும் விலகியோடுகின்றன...

ஒருசிலரின் இவ்வாறான செயற்பாடுகளால், நண்பர்கள்.........உறவுகள் யாருமற்ற வெட்ட வெளியில் என் சிறகுகள் பயணிப்பதைப் போன்றவுணர்வு ஏற்படுகின்றது இப்போதெல்லாம்......

பிரச்சினைகள் காணப்படாத இந்தத் தனிமை ரொம்பப் பிடிக்கின்றது. இத் தனிமைக்குள் வீழ்ந்து கிடக்கும் முயற்சியில் என் பயணச்சுவடு தனக்கான தேசத்தை தேடலில் கண்டறிந்துள்ளது.

இந்தத் தனிமை தேசம் எனக்குப் போதும்......இந்தவுலகில் பிறர் இம்சைகள் களையப்பட்டுள்ளன. சோகத்தை வடிக்கும் இதமான கண்ணீரும், மனதை சிவக்க வைக்கும் துன்பங்களும் என்னுறவாக, தனிமைக்குள் நடை பயில இதோ புறப்பட்டேன்.................

நானும் பெண்தானே!

2012/09/13

உடன்பாடுகளும் முரண்பாடுகள்


பெண் பற்றிய பார்வை
--------------------------------
மனித வாழ்வானது பாரிய விளையாட்டுத்திடல் போன்றது..பலர் நம் வாழ்வின் போக்குகளை ரசிக்க, விமர்சிக்க வந்து போவார்கள். வாழ்வின் சந்தோஷங்களையும், இம்சைகளையும், வேதனைகளையும் பகிரவும் , தோள் சாயவும் உறவுகளும் நட்புக்களும் நம்மை அரவணைத்துக் கிடப்பார்கள்..........!
இவ் அழகான வாழ்வின் மைல்கல் தான் தொழில்!

தொழில் புருஷலட்சணமென்பார்கள். ஆணோ பெண்ணோ தனக்கென ஓர் தொழிலைத் தேடி, தன் காலில் நிற்குமளவிற்கு சம்பாதிக்கும்போதே, தன்னம்பிக்கையுடன் கூடிய வாழ்வை அனுபவிக்கவும், பிறர் முகஞ்சுளிக்காமல் தத்தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் முடிகின்றது.

தொழில் என்பது தற்காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கைப் போராட்டமாகும். தன் தொழிலுலகத்தையும், குடும்பத்தையும் சமாந்திரமாக வழி நடத்திச் செல்லும்போதே,  பிரச்சினைச்சுழிகளில் அகப்படாமல் தப்பிக்க முடியும். தன் கணவன், பிள்ளைகள் உள்ளிட்ட குடும்பத்தை கவனிக்கும் அதே நேரம், தொழில் கூடத்தின் கடமைகளையும் சரிவரச் செய்ய வேண்டியவளாக பெண்ணவள் உள்ளாள்.

வாழ்க்கைப்போராட்டம் உச்ச அளவில் தன் வாயைப் பிளந்து , நிம்மதியை உறிஞ்சிக்கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில், இருவர் சம்பாதிக்கும் குடும்ப வாழ்வே ஓரளவாவது தமது தேவைகளை நிறைவேற்றி நகர்ந்து கொள்ளக்கூடியதாகவிருக்கின்றது.

குடும்பத்தில் விட்டுக்கொடுப்பும், சகிப்புத்தன்மையும், பொறுமையும் பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுண்டு
( விதிவிலக்கான பெண்களை இங்கு நான் கணக்கிலெடுக்கவில்லை. )

இவ்வாறான மன அழுத்தங்களுடன் வேலைத்தளத்திற்குச் செல்லும் பெண்கள் , அங்கு நிர்வாகத்துடனும், சக ஊழியர்களுடனும் முரண்படும் தன்மை இயல்பாகவே ஏற்படுகின்றது. சிறு விடயங்களுக்கெல்லாம் பகைமையை தனக்குள் பூசி, அவற்றை உருத்துலக்குபவர்களாகவும், விமர்சிப்பவர்களாகவும் இவர்கள் இருக்கின்றார்கள்.

ஆக, ஒரு பெண்ணின் போக்கானது, குடும்ப வாழ்வெனும் அத்திவாரத்திலிருந்தே எழுப்பப்படுகின்றது. நல்ல கணவனை தன் வாழ்க்கைத்துணையாகக் கொண்டவள் வாழ்வு பற்றிய சவால்களிலிருந்து வெற்றிபெறக்கூடிய மனவலிமையைப் பெறுகின்றாள்.....!

மாறாக, ஒவ்வொரு இரவின் நிசப்தத்திலும் கூட, அவளின் துடிக்குமிதய ஒலியின் ஆர்ப்பாட்டங்களில் கண்ணீர் ரகஸியமாய் கறைத்திட்டுக்களாய் படியும் சந்தர்ப்பங்களையும் சில கணவன்மார் கொடுப்பதுண்டு!

அக்கினிக்குள் தன்னைப் பொருத்தி, இம்சைக்குள் தன் மூச்சுக்காற்றை நனைத்து வாழ்வு மறுக்கப்படும் பல பெண்கள், இன்றும் ஆண்களின் அடிமைப் பொட்டகத்தால் இறுகக் கவசமிடப்பட்டே இருக்கின்றனர்.

பிறப்பு, இறப்பு எனும் இரு எல்லைக்குள் உருண்டு மருளும் இந்த வாழ்வினை, பெண்ணால் அறுத்தெறிய முடியாது. ஏனெனில் கண்ணாமூச்சிகளாய் குவிந்தெழும் பல உறவுகளின் இறுக்கத்தழுவலிருந்து விடுபட முடியாத கடுமையான போக்கு பெண்ணில் காணப்படுகின்றது. எனவே இவ்வுலகிலிருந்து அவள் வாழ்வை மரணம் கொத்தும் வரை வாழத்தான் வேண்டும்.

இத்தகைய மன இறுக்கத்தில் தொழிலுக்குச் செல்லும் பெண்கள்,  பிறருடனான முரண்பாட்டையே  அதிகம் வெளிப்படுத்துகின்றனர் இதுவே நிதர்சனம்.......நான் என்னுடன் தொழிலாற்றும் சிலரை இதற்காக ஒப்பிடமுடியும். அவர்களிடம் (சில பகுதித்தலைவர்கள்) சில தொழில்சார் படிவங்களை ஒப்படைத்தால், அவற்றை வாங்கிக் கொண்டு சில நாட்களில் தரவில்லையென்று பிடிவாதத்துடன் மறுப்பார்கள்.எம்மை வம்பில் மாட்ட தெரிந்துகொண்டுதான் இத் தவறுகளைச் செய்கின்றனரா...........அல்லது தமது ஞாபக மறதியை நியாயப்படுத்தச் செய்கின்றனரா............புரியவில்லை. இத்தகைய முரண்பாட்டில் ஆர்வமுடையவர்களை நட்புப்பாதையிலிருந்து சற்று விலக்கி வைக்கும் போது சில, பல பிரச்சினைகளைத் தவிர்க்கலாமென்பது என் திண்ணம்.


வானவில்



























2012/09/12

கடற்பூக்கள்


கனவுகள் மெல்லச் சரிய
காற்றின் கூவல்களில் தேகம் சிலிர்த்திடும்
நேரம்.................
அண்டப் பறவையின் நட்சத்திரச் சிறகுகள்
ஒளியுமிழ்ந்து கொண்டிருந்தன!

இருற்றிரையை மெல்லன விலக்கி
மருண்டு நின்றாள் நிலாப் பெண்!
சுருண்டு கிடந்த கடலலைகள்
மிரண்டோடின
கரைப்பரப்பின் மணற்றிணிவில் தம்மை
மறைத்துக் கிடக்க!

படகுகள்................!
பறந்தன  நீரலைகளில் - தம் பாய்ச்
சிறகினை மெல்லன விரித்தும்......
தெறிக்கும் அலைகளில் சற்றிடறியும்!

வெருண்டோடும் மீன்கூட்டம்
கரை வலையில் சட்டென தடக்கி வீழவே...........
உரமேறிய மெம் கரங்களின் வலிப்பில்
அறுந்து வீழ்ந்தன சுவாசப்பூக்கள்
மரப் படகின்  வெளிதனை
நிரப்பியவாறே!

விறைப்பான துடுப்பின் மோதல்
கரையொதுங்கும் அலையைத் தடுக்க..........
சிறகு விரித்த பறவைகள்
மறுகரைக்கு மனுப் போட்டே
இருப்பிடமாற்றுகின்றன பீதியில்!

படகின் விசை கண்டு
வெடவெடத்த விண்பூக்கள்
கடல் விம்பங்களாய் தெறித்துக் கிடக்க.........
பயணிக்கின்றோம்
கனக்கும் வலைகள் காலை மிதிக்க
பணமாகும் மீன்களுடன்!

நிமிடங்கள் நிசப்தமாய் கரைய
அமிழ்ந்த விரவும் உறக்கமவிழ்க்க..........
விடியல் ஸ்பரிசத்தில்
படகினிதயமும் உஷ்ணமுறுஞ்ச.........
விடிவெள்ளிப் பாஷையில்
கடற்றிசை வழிகாட்டி விரிந்தது!

நீண்ட  அலைப் பாயில்
உருண்டு பிரண்டுழைக்குமிந்த
வயிற்றுப் பிழைப்பிற்காய் ............
உயிரறுந்து கிடக்கும் மீன்களே - எம்
செல்வங்களாய் வாழ்க்கைப் பையை நிரப்ப........

அல்லலுடன் மறுகரையிலிருக்கும்- எம்
நல்லுறவுகளின் பிரார்த்தனைப் பலத்தில்
தள்ளாடி கரை திரும்புகின்றனவே
வள்ளங்களும் வனப்புடனே !



ஜன்ஸி கபூர் 

2012/09/10

Oru poyavathu (F)



திருடிய இதயத்தை பாடலைக் கேட்க இதனை அழுத்துக

Oru poiyavathu.......



பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு இந்தப் பாடலைக் கேட்க இதனை அழுத்துக

PEN KILIYEA



உனக்கென்ன உனக்கென்ன பிறந்தேனே பாடலைக் கேட்க இதனை அழுத்துக

கப்பலுக்கு போகல மச்சான்


சனக்கூட்டத்தை திணித்துக் கொண்டு வந்த பேரூந்து, அநுராதபுர புதிய பஸ் நிலையத்தில் தன தியக்கத்தை நிறுத்தியது.

"அன்ராதபுர..அன்ராதபுர......கட்டி ஒக்கோம f பஹின்ட"

பஸ் நடத்துனரின் உரப்பொலியும் ஓய்ந்தொழித்த போது, எல்லோரும் முண்டியடித்தவாறு இறங்க முற்பட்டனர். அந்த அலைக்குள் ராசீதாவும்  நசிந்தபோது, அவள் மார்பில் அணைந்தவாறு கிடந்த ஆறுமாதக் குழந்தையும் வீலென்றழுது தன்னெதிர்ப்பைக் காட்டியது..

"இக்மன் கரண்ட" 

பஸ் நடத்துனர் துரிதப்படுத்திய போது அவளுக்குள் எரிச்சல் முட்டியது...

"சீ..சீ.......எறங்கும் போதாவது அமைதியா எறங்க விடுறாங்களா"

தனக்குள் சலித்தவாறு நிலத்தில் காலூன்றினாள்..........!

அநுராதபுர நவ நகரய...........!

விசாலமாக கரம் நீட்டி அவளையும் வரவேற்றது. தோளோடு ஒட்டிக்கிடந்த சுருங்கிய தோற்பையைத் தொட்டுப் பார்த்தாள்..அந்தப் பைக்குள்தான் அவள் முழு உலகமும் சுருங்கிக் கிடந்தது..

இனிவரும் நாட்களில் அவள் வாழ்வை நகர்த்தப் போகும் சில சில்லறைக் காசுகளும்,  தாள்களும் சிரிப்பை உதிர்த்து தம்மிருப்பை வெளிப்படுத்தின.

புதிய ஊர்......
புதுப் பாஷை....
புதிய மக்கள்.....

என்ன தைரியத்தில் யாரை நம்பி இங்கே வந்தாள்.......படைத்தவன் மட்டுமே அவள்  துணையாக......மனிதர்கள் யாவரும் வேற்றவர்களாக............

கண் கசிந்தது. யாருக்கும் தெரியாமல் துடைத்துக் கொண்டாள்.

அவள் அணைப்பில் சுருண்டு கிடந்த குழந்தை பசியால்  அழத் தொடங்கியது..
இறைவன் கொடுத்த அந்த இயற்கைத் திரவத்தைத் தவிர வேறெதுவும் இல்லாத நிலையில்  அமர்ந்து கொள்ள ஒதுக்கிடம் தேடினாள்..

சற்றுத் தொலைவில்...........

மூடப்பட்டிருந்த கடையொன்றின் ஓரமாக சிறிய மறைப்பொன்று தெரியவே அதிலமர்ந்து கொண்டாள்...

முந்தனை விலக்கி தன் குழந்தையை நெஞ்சோடணைத்து பாலூட்டத் தொடங்கினாள். தன் பசி நீங்கும் மகிழ்வில் குழந்தை அவளை மெதுவாகத் தடவி புன்னகைத்தது.

"ராசீதா"

மனம் அதுவரை அடக்கி வைத்திருந்த துயரம் பீறிட்டுப் பாய மெதுவாக குலுங்கினாள். அவள் குலுக்கத்தில் குழந்தையும் ஒரு தடவை துடித்து நிமிர்ந்தது.

"அக்தார்"

அவன்தான் அவளுக்கு வாழ்வளித்த உத்தமன். படிக்கும் காலத்தில் அறிமுகமானவன். காதலென்று அவள் பின்னால் ஐந்து வருடம் பின் சுற்றினான். அவளுக்கு இந்தக் காதல் கத்தரிக்காய் எல்லாம் பிடிக்காது என்று சும்மா ஒதுங்கினாலும் கூட அவளை விடவில்லை. க.பொ.த (சா/த )படிக்கும் வரை துரத்தினான்.

இந்தக் காலக் காதலர்களெல்லாம், தம் ஒருதலைக் காதலை நியாயப்படுத்த முன்வைக்கும் ஆயுதம், அவளும் தன்னைக் காதலிக்கிறாளென்று உருவகப்படுத்தி, தன் நண்பர்கள் உலகத்தில் உலவ விட்டு அவள் பெயரை களங்கப்படுத்துவதுதான்!. அக்தர் அதனையும் செய்து பார்த்தான். ஆனால் அவளோ அவனைக் கண்டுகொள்ளவேயில்லை. படிப்பில் முழுக்கவனமும் செலுத்தி  பொதுப் பரீட்சையில் பாடசாலையில் முதலிடத்தில் வர  அவனோ பரீட்சையில் பெயிலாகி நின்றான்.

"ராசீதா" 

ஏழ்மைப்பட்டவள். வடபகுதியிலிருந்து யுத்தத்தால் தாக்கப்பட்டவளாய் தன் தாயுடன் அடைக்கலமாகி, புத்தளத்திற்கு வந்து சேர்ந்தவள். ஷெல்லடியில் வாப்பாவும், காக்காவும் மௌத்தாக  உம்மாவே அவளது சகலதுமாகி நின்றாள். தெரிந்த நாலு வீடுகளுக்குப் போய் பாத்திரம் தேய்த்து கிடைத்த சொற்ப வருமானத்திலும்  கஷ்டப்பட்டு மகளைப் படிக்க வைத்ததால் அவளும் காதல் அது இதுன்னு வாலிபச் சேட்டைக்கிடம் கொடுக்கவில்லை. பொறுப்புணர்ந்து படித்ததில் அக்தாரை விலக்க அவனும் அவள் நல்ல மனம் புரிந்தும் விடுவதாக இல்லை.

நம்பிக்கையுடன் உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் காலூன்றியவளுக்கு ஆறு மாதம் கூட போகாத நிலையில் வறுமைப்பட்டு நொந்து போன தாயும் ஒருநாள் நோய்வாய்ப்பட்டு இறந்து போகவே ராசீதாவின் கனவுகளும் அறுந்தன. தாய்வழி உறவினர் அவளைப் பொறுப்பெடுத்தாலும் அவர்களைச் சிரமப்படுத்தி கல்வியைத் தொடர அவள் மனம் இடங்கொடுக்கவில்லை. பாதிவழியே படிப்பும் நிற்க அதுவரை சந்தர்ப்பம் பார்த்திருந்த அக்தார் தன் காதல் மிகை வேட்கையில் பெண் கேட்க, அவர்களும் அவள் விருப்பம் கூட அறியாத நிலையில் அவனுக்கு தாரை வார்த்துக் கொடுத்தனர்.

அக்தார் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். தன் காதல் மனைவிக்கு அவனளித்த இல்லறப் பரிசு கர்ப்பமே. திருமணமாகிய முதல் மாதத்திலேயே அவனின் அன்பு, காமம், ஆசை எல்லாமே சிசுவாய் அவள் கர்ப்பத்தை தொட்டது. அவள் தாய்மையும், அவனது கவனிப்பும் அவளை நெகிழச்செய்யவே, அக்தாரின் அன்பு மனைவியாக வலம் வரத் தொடங்கினாள்..

அக்தாரிடமுள்ள கெட்ட பழக்கம், கஷ்டப்பட்ட உழைப்பதில் ஆர்வங் காட்டாதவனாக இருந்தான். பல்கலைக்கழகப் பட்டம் முடித்தவர்களே இக்காலத்தில் தொழிலுக்காக காத்திருக்கையில், கொஞ்சப் படிப்புடன் பெரிய அரச வேலைக்காய் இலவு காத்திருந்தான்.

அவள் எவ்வளவு கூறியும் கூட, அவன் அதனை வாங்கிக் கொள்ளவில்லை. வறுமை அவர்களைக் கொடுமைப்படுத்தியது. வளர்பிறையாகும் வயிற்றுக்குமுரிய தீனி போட அவளால் முடியவில்லை. அவள் படிக்கும் காலத்தில் படித்த தையல்கலை கைகொடுக்கவே, அயலாருக்குத் தைத்து கொடுத்து ஏதோ காலத்தை ஓட்டினாள். அவள் தயவில் அவன் சற்றுக்கூட பொறுப்பின்றி பல மாதங்களை ஓட்டிய நிலையில், அவள் பிரசவ காலமும் நெருங்கியது. தையல் மெசின் அவளை வராதே என விரட்ட, மீண்டும் அவள் வீட்டு அடுப்புக்கும் பசி இரைத்தது..

ஓரிரு நண்பர்களின் ஆலோசனையில் வெளிநாடு செல்ல முயற்சித்தான். அவளிடமிருந்த தோடும் விற்பனையாக, அந்தப் பணமும் ஏஜன்சியை சந்திப்பதில் கரைந்தது.

ஏஜென்சி நடத்துபவன் அவனது தூரத்து உறவுக்காரன். அவனது குடும்ப நிலை தெரிந்தவன். அதுவரை அவனுக்குள் ளுரைக்காத ஆலோசனையை பக்குவமாக எடுத்துக் கொட்டினான்.

"டேய்.கைல அஞ்சு காசில்லாத உனக்கெல்லாம் சீமை சரிப்பட்டு வராதடா...பொண்டாட்டி வீட்டிலதானே இருக்காள். அவள அங்க அனுப்பிட்டு ராசா மாதிரி தின்பியா, நீ மாடா தேய்வியா............டேய் அவ என்ன ஜமீன் வாரிசா. ஒன்னுக்கும் வக்கில்லாம பத்துப்பாத்திரம் தேய்ச்சு வந்த காசில வளர்ந்த பரதேசி. அஞ்சு பைசா வேணாம். நல்ல எடமொன்று இருக்கு அனுப்பு. நான் ஹெல்ப் பண்ணுறன்"

அவன் ஏற்றல் நன்கு வேலை செய்ய பல கனவுகளுடன் வீடுசென்ற அக்தார் தன்னாசையை அவள் முன் கொட்டினான். அப்போது அவள் மகளுக்கு ஒருமாதம் கூட கழியவில்லை..ஆத்திரப்பட்டாள்.

"உங்களுக்கென்ன விசரே.........பச்சப்புள்ள இத விட்டுட்டு, அந்த பாலை வனத்துக்கு நான் போக ஏலா..........."

அவள் பிடிவாதமும் தொடர, அவனது கோபமும் உஷ்ணமடைய....... வாக்குவாதமும், முரண்பாடுகளும் நாளுக்கு நாள் வளர்ந்தது. யாரிடமோ புதிதாக கற்றுக்கொண்ட சிகரெட்டும், மதுப் பாவனையும் அவளை இம்சித்தது. குடித்துவிட்டு அடிப்பதும் சிகரெட்டால் அவள் கைகளை கருக்குவதும் அவன் வாடிக்கையாகி விடவே துடித்தாள். சில காலம் வசந்தம் பூத்த வாழ்க்கை கருகிப் போகவே, விரக்தியோடு நடைப்பிணமானாள்.

ஒருநாள்.......
அவன் கோபம் உச்சமடையவே, சற்று போதையில் அவளை நெருங்கினான். அவள் தலைமுடிக் கொத்து அவன் பிடியில்!

"சொல்லடீ....வெளில போக சம்மதிக்கிறியா.....இல்லையா"

உறுமினான். அவளும் தன் பிடியிலிருந்து தளரவில்லை.

"இந்தப்  பச்சப்புள்ளய விட்டுட்டு  நான் போக மாட்டேன்"


"போக மாட்டே....போக மாட்டே"


தன் முழு ஆத்திரத்தையும் ஒன்று திணித்து, அவளை உதைக்க அவள் சுருண்டு போய் குழந்தையுடன் சுவரில் மோதுப்பட்டு  விழுந்தாள். குழந்தை அழுதது விறைத்தது.

அவள் நெற்றி சுவருடன் உரசியதில், லேசாய் இரத்தம் கசிந்தது. வலியை விட, அவனது வார்த்தைகள் வலித்தன. மௌனத்தில் இறுகிக் கிடந்தாள்...........

"என்னடி திமிரா.......இனி இந்த வீட்டில உனக்கிடமில்லை"

தரதரவென்று அவளையும், அவள் பிடியில் இறுகிக் கிடந்த குழந்தையையும் வெளியே இழுத்துப் போட்டவனாக கதவை மூடினான்....

இப்பொழுதெல்லாம் காதல் அன்பில் எழுதப்படுவதில்லை. அவசரத்திலும் வெறும் உணர்ச்சியிலும் தானே எழுதப்படுகின்றது..

அவளை நோக்கி வீசப்பட்ட, அயலாரின் அனுதாபப் பார்வைகளைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. வீதியில் வேகமாக இறங்கினாள்...!

"ராசீகா.." நில்லடி!

பக்கத்து வீட்டு கசீனா ராத்தா விம்மலுடன் அவளிடம் ஓடி வந்தாள்..."

எங்கேயடி போவே.............பச்ச ஒடம்பு........இன்னும் நாப்பது கூட போகல........என் வூட்டுக்கு வாடி நான் ஒனக்கு சோறு போடுறன்"

பாசத்தில் கரைந்தாள் யாரோ ஒருத்தி..........!

"இல்ல ராத்தா......நான் போறன்.....அந்த மனுஷன் மூஞ்சில முழிக்க எனக்கு இஷ்டமில்ல...அவனெல்லாம் மனுஷனா....சீ"

ஆத்திரத்தில் நா குளற, அவ்விடத்தை விட்டு நகர முயன்றாள்..

அவள் பிடிவாதமும், அவனின் முரட்டுத்தனமும் கசீனாவுக்குப் புரியும் என்பதால் எதுவுமே பேசல......

தான் கொண்டு வந்த சீலைப்பையையும், சில தாள் நோட்டுக்களையும் அவளிடம் திணித்தாள்.

 "இதுல புள்ளக்கு பால்போச்சியும் மாவும் இருக்கு, "

" ராத்தா.......உங்களுக்கு நான்..............." 

ராசீதாவின் வார்த்தைகள் அற அழுதவளாக வேகமாக எப்படித்தான் புத்தளம் பஸ் நிலையத்தையடைந்தாளோ!

எங்கே போவது..............யாரைத் தெரியும்..................!

பயங்கரம் மனசுக்குள் பிறாண்டும் நேரம், அநுராதபுர பஸ்ஸின்  வருகை அவள் சிந்தனையை அறுக்கவே, அவசரமாக அப் பேரூந்தில் தொற்றிக் கொண்டாள்...

பக்கத்து ஊர்...
யாராவது நல்லவங்க இல்லாமலா போவாங்க.........
நம்பிக்கையுடன் அவளும் பஸ் உள்ளிடத்தை நிறைத்தாள்.

"ஒயா கவுத"

குரலொன்று சிந்தனையை அறுக்க பார்வையை அவசரமாக உயர்த்தினாள். கடை முதலாளி போல் கடை திறக்கணும் அப்பால போ எனப் பார்வையால் விரட்டுவதை உணர்ந்தாள்.

எங்கே போவது.........யாரைத் தெரியும்.............இந்த ஊரில்!
படைத்தவனைத் தவிர!

பல சிந்தனைகளுடன் வீதியில் நடக்கத் தொடங்கினாள் யாராவது அவளுக்கும் அவளது குழந்தைக்கும் அடைக்கலம் தருவார்களென்ற மலையளவு நம்பிக்கை மட்டும் அவள் யாசக வாழ்வின் முதலீடாகிக் கிடந்தது

(கரு நிஜம்)


2012/09/09

அடடா.........



டொக்..........டொக்..............!

இப்பொழுதெல்லாம் ...........காற்றின் சலசலப்பில் வீட்டுக்கூரையின் தலையை அடிக்கடி விளாங்காய் குட்டிக் கொண்டிருந்தது..

"பிள்ள..வெளில பேய்விடுவாள்......கவனம் ........தலைல விழுந்திடும்"

சின்னவளைக் கண்காணிக்கும் தந்தையின் குரலெடுப்பால், அதன் விழுகைச் சத்தம் அடிக்கடி என் கவனத்தைக் கிள்ளிக் கொண்டிருந்தது!

வீட்டின் வெளிவாசல் கேட் (படலை) சந்திக்குமிடத்தில் தான், தன் கிளைகளைப் பரப்பி நிமிர்ந்து நிற்கின்றது  பெரிய விளாமரமொன்று.. இப்பொழுது விளங்காய்  சீசன்..மின்குமிழ் பொருத்தியிருப்பது போல மரம் நிறைத்து விளாங்காய்களும் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

வழமையில் கனிந்த விளாம்பழமென்றால் சீனி பிரட்டி ஒருபிடி பிடிப்பேன். செங்காயென்றால் உப்பில் நனைத்த நிலையில், அது என் சமிபாட்டுத் தொகுதியை நிறைத்திருக்கும்............

ஆனால் இம்முறை மரத்தில் அதிகமாகக் கண்ட விளாங்காய் ஆர்வத்தைத் தரவில்லை. எதனை அதிகமாகக் காண்கின்றோமோ அது அலுத்துவிடும் என்பதனை சும்மாவா நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

பாடசாலை விடுமுறை விட்டிருந்த ஓரிரு நாட்களில், வெறுமைப்பட்ட என் பொழுதுகளை விரட்ட நொறுக்கித்தீனியாக விளாங்காயைச் சுவைத்ததில் அதன் ருசி பிடித்துப் போக இப்பொழுதெல்லாம் விழும் முதல்காயை எனக்கு எடுத்து வைப்பதே என் தந்தைக்குக் கடமையாகி விட்டது. அதிலும் செங்காயின் உட் சதையைவிட, அதனைச் சூழ்ந்திருக்கும் அந்த ஓட்டுப்பகுதியின் சுவையோ தனி!

வீட்டு முற்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் எங்கள் கார்க் கண்ணாடியினை அது பதம் பார்த்துவிடுமோ வென்ற ஆதங்கமும் அதன்பால் என் தனிப்பட்ட கவனத்தைத் திசை திருப்பி விட்டிருந்தது.

பகலில் காற்றுடன் கூடிய வறட்சி எவ்வளவு இருக்கின்றதோ, அதே போல் இரவில் கடும் குளிருடன் கூடிய காற்றும் உடலை மெதுவாக அழுத்தி இதம் தருவது தொடரான நிகழ்விங்கே!

இந்தக் காற்றின் பலத்தில் சிக்குண்ட  பல விளாங்காய்கள் நிலத்தில் சிதறி விழுந்து முற்றத்தைக் காயப்படுத்திக் கொண்டிருந்தன. நல்லவை எமக்குள் உறவாக ஏனையவை அழுக்குக் கூடைக்குள் தலைகுப்புறமாக ஒன்று சேர்ந்தன.

பின்னேரங்களில் அயல்வீடுகளிலுள்ள சிறு வாண்டுகள் எங்கள் வீட்டுமுற்றத்தில்  அணி திரள்வார். மரத்துக்கும் அவர்களுக்குமிடையில் கற்களால் சிறு யுத்தம் கூட நடக்கும். சிறுவர்கள் தம் யுத்தத்தில் வெற்றி பெற்ற களிப்பில் கை நிறைய விளாங்காயை அள்ளிக் கொண்டு போவார்கள். அவர்களின் களிப்பும், என் ரசிப்பும் தொடரத்தான் செய்தன பல மாலைப் பொழுதுகளில்!

இன்று மாலை திடீரென வீட்டுக் கேட்டைத் தள்ளிக் கொண்டு ஓர் ஆங்கிலத் தம்பதிகள் எமது வீட்டுக்குள் உள் நுழைய  வீட்டிலுள்ளோர் முகத்தில் கலவரம் கோடாகிப் படிந்தது.

வந்தவர்கள் எதுவுமே பேசவில்லை. எமது மௌனத்தையும், ஆச்சரியமான புன்னகைகையும் தமது சம்மதமாகக் கருதியவாறு, தம் கைப்பையில் செருகி வைத்திருந்த "டிஜிட்டல்" கமெராவை இயக்கி, விளாமரத்தை பல க்ளீக் செய்தார்கள். அவர்கள் விசிறிய ஒளிவீச்சில் மரம் நாணிக் கோணியிருக்க வேண்டும். வழமையை விட காற்றில் மிதமாக அசைந்தது. அவர்கள் தம் மகிழ்வை புன்னகையாக்கி தம் வேலையை நிறைவேற்றிய ரசிப்பில்  நன்றி செலுத்தியவாறு புறப்பட ஆயத்தமானார்கள்.

ஏற்கனவே வீட்டில் சேகரிக்கப்பட்டிருந்த சில பெரிய விளாம்பழங்களை பையிலிட்டு அவர்களிடம் கொடுத்த போது இதழ்கள் குவித்து இருவருமே ஒரே நேரத்தில் நன்றியை தந்தவாறு புறப்பட்டனர்.

புறப்படும் நேரத்தில் கூட ஓர் விளாங்காயை உடைத்து அதன் சுவையை நாவில் பரப்பியவாறு வீதியிலிறங்கி நடக்கத் தொடங்கினர். அவர்கள் போகு மழகை நான் பல நொடிகள் விழியில் விழுத்தி ரசித்துக் கொண்டிருந்தேன்.

எது அதிகமாகக் கிடைக்கின்றதோ, அது நமக்குள் அற்பமாகவும் எது அற்பமாகக் கிடைக்கின்றதோ, அது நமக்குள் அபூர்வமாகவும் தோன்றிவிடுகின்றது. இதுதான் மனித இயல்பு. 

மனிதன் தன் மனங்களின் அரசாட்சியினூடாகவே தன் வழிப்படுத்தலை மேற்கொள்கின்றான் என்பதே நிதர்சனம்!



















நீ



எங்கோ தொலைபுள்ளியில் நீ!

இருந்துமுன்.....................!!

நழுவுமுன் குறும்புகளும்
மானசீக நேசிப்புக்களும்
சமுத்திரம் கடந்து - என்
கன்னம் கிள்ளுகின்றன ஆர்வமாய்!

என்னை சேகரிப்பதற்காய்
உன் பார்வைகளை மட்டும் தூதனுப்பு!
காத்திருப்பேனுன்
சிந்துவெளியோரம்!

என்னைக் கடந்துசெல்லுமுன்
காற்றில் கூட - உன்
நலவிசாரிப்புக்களே
விசிறப்படுகின்றன இதமாய்!

இதயத்தின் ...........
ஸ்பரிசிப்புக்களிலெல்லாமுன்
விரல்ரேகைகள் கழன்று
முத்தமிடுகின்றன மெலிதாய்
என்னை!

விழுந்து கிடக்குமென்
நிழல்களில்- உனை
உருத்துலக்கிப் பதியமிடுகின்றேன்
இனிவரும் பொழுதுகளில் -
என்
பாதையோரங்களிலுன்னையே
வேலியாக்கிக் கொள்ள!

நம்மிலிருந்து
நழுவியோடும் நிமிடங்களில்
தழுவி நிற்கும் ஞாபகங்களாய்..........
உரசி நிற்கின்றாய்
பரிவை உயிரில் கோர்த்து!

நீயென்னருகில்
தரித்து நிற்கும் தருணங்களில்..........
அவிழ்த்து விடுகின்றாய் தவிப்புக்களை !
தலை கவிழ்த்து நானுமதை
யுறிஞ்சிக் கொள்வதற்கே!

இரவின் சந்தத்தில்...........
இம்சைப்படுமென் கனவுகளில்
வெட்கம் தொலைத்த வெருளியாய்
பக்கமணைக்கின்றாய் ரகஸியமாய்
சித்தமும் கலைக்கின்றாய்!

நீ...................! -  என் 
நீண்டகாலத் தேடல்!!
மிரண்டோடுமென் வாலிபத்தின்
சில்மிஷமாய்
சிணுங்குகின்றாய் காதலில்!

ஜன்ஸி கபூர்