போராடிப் பெற்றோம் பேரின்பம் கிட்ட/
பாராட்டும் மனிதமே பாரினில் நம்மை/
முதலாளித்துவம் விரட்டி முன்னேற்றம் கண்டோம்/
மதங்கள் கடந்தும் மாண்புடன் வாழ்கிறோம்/
அகிம்சை வழியிலான அறமோங்க/
அகிலத்தில் வாழ்ந்திடலாம் அன்பின் துணையுடனே/
ஜன்ஸி கபூர்
போராடிப் பெற்றோம் பேரின்பம் கிட்ட/
பாராட்டும் மனிதமே பாரினில் நம்மை/
முதலாளித்துவம் விரட்டி முன்னேற்றம் கண்டோம்/
மதங்கள் கடந்தும் மாண்புடன் வாழ்கிறோம்/
அகிம்சை வழியிலான அறமோங்க/
அகிலத்தில் வாழ்ந்திடலாம் அன்பின் துணையுடனே/
ஜன்ஸி கபூர்
ஆண் அவசரத்தால் பெண் அவலம்/
அரங்கேறிய மகாபாரத்தின் மாந்தராய் சிகாண்டினி/
முற்பிறப்பில் காசி மகள் அம்பாவாம்/
சுகமிழக்கிறாள் பீஷ்மரால் மணமேடை காணாமலே/
மறுபிறப்பெடுத்தாள் பாஞ்சால வம்சத்து சிகண்டினியாய்/
மலைத்திடும் வீர மகனாய் வளர்க்கப்பட்டாள்/
வெஞ்சினத்துள் பீஷ்மரை வீழ்த்தியே நின்றாள்/
அஞ்சிடாத பாண்டவர் அணிக்கும் துணையுமானாள்/
பெண்மகள் ஆணுருவில் மணந்தாள் மாதை/
பொருத்தமில்லாத உறவெனவே பிரிந்திட்டாள் மனையாள்/
வருந்திய மனதுடன் இறந்திடத் துடிக்கையில்/
வாழ்க்கையும் மாறியதுவே ஆணாகவே மீண்டாள்/
திரும்பினான் சிகாண்டியாய் இல்லறத்திலும் இணைந்தான்/
விரும்பிய வாழ்வுக்குள்ளே சந்ததிகளும் கண்டான்/
குருசேத்திரப் போரும் நீண்டது பகைமையினில்/
எதிர்த் துருவங்களில் சிகாண்டியும் பீஷ்மரும்/
உரைத்திட்டான் சிகாண்டியும் பலியை நினைவுறுத்தி/
உணர்ந்திட்டார் பீஷ்மரும் இழுக்கே போரிடுதலென/
உருமாற்ற இரகஸியம்தனை அறிந்த அருச்சுனனும்/
சிகண்டியை முன்னிருத்தி பீஷ்மரையும் வீழ்த்தினானே/
ஜன்ஸி கபூர் - 13.08.2020
சுதந்திரக் காற்றே சுவாசத்துள் நீ/
சுற்றங்களின் அணைவில் மணக்கிறதே விடுதலையும்/
சுதந்திர உணர்வின் விருட்சத்தில் நாடும்/
சுபீட்சமாக வாழ நனையுது அபிவிருத்தியில்/
ஏகாதிபத்திய தலைமையை எதிர்த்திட்ட தியாகமே/
ஏந்துகிறதே சுடரினை எதிர்காலமே ஒளியில்/
இதயங்கள் வருந்திட சிறைக்குள்ளும் பூத்தனர்/
இன்னல்கள் விளைந்திட பெற்றோமே உரிமைகள்/
உதிரங்கள் ஊற்றி உயிர்களையும் நட்டி/
உணர்ச்சிகளின் எழுச்சியில் உருவானதே விடுதலை/
பிணக்குகள் மறந்து இன்முகம் அணிந்து/
காத்திடுவோம் நம் வளமான பூமியே/
ஒற்றுமையில் உழைக்கும் உற்சாகக் கனவு/
ஓயாது மலர்கையில் விழிப்புணர்வும் மலருமே/
வெள்ளையரின் கோட்டையை கைப்பிடித்த சாதனையே/
உள்ளத்திலும் ஒலித்திடும் சரித்திரத்திலும் பதிந்துவிடும்/
ஜன்ஸி கபூர் - 05.08.2020
பாரத தேசத்தின் நேசகர் ஆனவர்/
தாரக மந்திரமாக கல்லாமை நீக்கியவர்/
மனிதருள் மாணிக்கம் கனிவின் வித்தகர்/
தனித்திருந்து கடமைகளை கருத்தோடு செய்தவர்/
பட்டங்கள் பெறாமலே சட்டங்கள் சொன்னவர்/
திட்டங்கள் தீட்டியே மனங்களை வென்றவர்/
குடும்பமாக தேசமே உயிர்க்கவே உரமாகியவர்/
தடுமாறும் ஏழைக்கே தாய்மையில் நின்றவர்/
விரிந்த தேசமே விரும்பிட நின்றார்/
விருட்சமாகி கல்விக்குள் சேவைகள் புரிந்தார்/
சமத்துவம் பேணி சார்ந்திட்டார் அன்பில்/
சரித்திர பூமியை சொர்க்கமாகவே மாற்றினார்/
ஜன்ஸி கபூர்
சுதந்திர வாழ்க்கையின் சொப்பனங்கள் தொலைய/
சுற்றித் திரிகின்றனர் நாடோடிகளாக தரிப்பிடமின்றி/
பிஞ்சுகளின் கண்களுக்குள் விடியல் ஊற்றிட/
கெஞ்சுகின்றதே ஏழ்மையும்தான் தாய்மையின் துடிப்பினாலே/
போராட்ட வாழ்வினில் பொசுங்குதே ஏக்கங்கள்/
வேரோடும் கனவுதனை அறுத்திடுதே வறுமையும்/
பாராளும் மன்னரெல்லாம் கையேந்தும் அவலநிலை/
பசி தணிக்கும் காத்திருப்பில் நிமிடங்கள்/
வாழ்ந்திட ஆயிரம் வழி காத்திருக்கிறதே/
வாசலெல்லாம் நிழல் பதிக்கும் வாழ்வெதற்கு/
சோர்வை உதறிவிடு சோகங்களும் தூரமாகும்/
தேம்பியழும் கண்ணீருக்கும் முடிவிருக்கும் நிரந்தரமாய்/
இரந்திடும் கரங்களுக்குள் வலிமையிருக்கு வாழ்வதற்காக/
வந்த துன்பம் தீர்வதற்கே துணிவுமுனக்கிருக்கே/
காணாமல் போகும் கண்ணீரும் உன்னிடமிருந்தே/
களமிறங்கு களிப்புடன் வசந்தமே உன்னிடமே/
ஜன்ஸி கபூர்
திகழுமே அறிவும் பேரொளி சிந்தி
மகிழுமே மனதும் அறியாமை அகற்றி
அகிலமும் வியக்குமே உந்தன் அறிவில்
கற்றிடும் கல்வியே இமயமென உயர்த்தும்
சுற்றிடும் பூமிக்குள்ளும் அறியாமை களைந்தே
பற்றிடுக பகுத்தறிவும் வாழ்வினை மாற்றுமே
ஜன்ஸி கபூர் - 04.08.2020
விழிகளின் கனவெல்லாம் விழிநீரில் கரைந்திடுமோ
தழுவிடத் துணையுமில்லை தணிந்திடாத கோபத்தால்
வழக்கின் பிடிக்குள் அழகான இல்லறம்
வழிகின்ற சோகம்தான் எதிர்காலத் துடிப்பாகுமோ
கருத்தோடு இசைந்தே வாழ்ந்திட்ட வாழ்வும்
உருச் சிதைந்ததோ மனமும் புரிந்துணர்வின்மையால்
எதிர்த் துருவமாக சிறகடிக்கும் அன்பே
அருகமர்ந்து பேசினாலே மிரண்டோடும் பிணக்கெல்லாம்
விட்டுக்கொடுத்தாலே விலகிடும் முரண்பாடெல்லாம்
தட்டிக் கொடுத்தாலும் தாம்பத்தியம் மகிழ்ந்திடும்
கட்டிய மாங்கல்யம் தொட்டணைத்த குழந்தைகளை
விட்டோடுதல் தகுமோ பெற்றவர்கள் துணையின்றி
ஜன்ஸி கபூர்
சில காதல்கள் தீ போன்றன
முதலில் இதமான பார்வைகள் வீசுகின்றன
பின்னர் இதயத்தில் உணர்வுகள் பொங்குகின்றன
அடுத்து உடலெங்கும் மின்சாரம் பாய்கிறது
சந்திப்புக்களில் மெல்லிய காமம் பூக்கிறது
பிறகு அதுவும் அடங்கி விடுகிறது
நீ யாரோ நான் யாரோவென்று
நம் மனங்களையும் முறித்து விடுகின்றன
சில காதல்கள் கனவுகளில் வாழ்கின்றன
கற்பனைகளில் மாத்திரம் கவிதைகளைச் சுமக்கின்றன
நிஜ வாழ்க்கைக்கு ஏனோ பயப்படுகின்றன
அடி மனதில் ஆசை துடித்தாலும்
எல்லாவற்றையும் மறந்ததாக நாமும் நடிக்கிறோம்
விருப்பமின்றி வேறு வழியில் பயணிக்கிறோம்
நம்மிடம் எஞ்சுகின்றன வடுக்கள் மாத்திரமே
சில காதல்கள் காதலர்தினத்தில் பொங்குகின்றன
நாகரிக உலகத்தில் வாழ அலைகின்றன
வாழத் தெரியாத காதல்கள்தானே இவை
அருகிருந்தால் அணைக்கின்றன தொலைவென்றாலோ மறக்கின்றன
ஆனாலும் உண்மை அன்பைக் கடக்கின்றோம்
அடுத்தவர் பாவத்தையும் நாம்தான் சுமக்கின்றோம்
காதலுக்குள்ளும் அகம் புறக் கண்களுண்டு
நம் உலகம் சுருங்கிக் கிடக்கின்றன
கனவு நிலைக்குள் நாம் தள்ளப்படுகிறோம்
பிறர் புறக்கண்கள் நம்மிடம் நீளுகின்றபோதெல்லாம்
மாயை உலகின் விமர்சனங்களைக் கடக்கின்றோம்.
சில காதல்கள் பேருந்துகள் போன்றவை
இலக்கின்றி இதயத்தில் ஏற்றி இறக்குகின்றன
கொஞ்ச நினைவுகளே நமக்குள் எஞ்சுகின்றன.
கடைசியில் காதலின் புனிதத்தை இழக்கின்றோம்
சில காதல்கள் மலர்களைப் போன்றன
உதிர்ந்து எருவாகின்ற பூக்களாய் மாறுகின்றன
இறந்தாலும் உயிர் வாழ்கின்றன நமக்குள்
அவை ஒருபோதும் நினைவுகளை மறப்பதில்லை
சில காதல்கள் பாதணிகள் போன்றன
எம்மை அருகிலிருந்து அன்போடு பாதுகாக்கின்றன
நாமாக உதறித் தள்ளும் வரை
நம்முடனே இணைந்து வருகின்றன தினமும்
அந்த அன்புடனே நாமும் அலைகின்றோம்
சில பிஞ்சுக் காதல்களும் வாழ்கின்றன
இலக்கணம் அறிந்திருக்காத புதுமைக் காதல்கள்
மற்றோரைப் போல நாமும் காதலிக்கின்றோம்
எல்லா உணர்வுகளும் அதில் இருக்கின்றன
ஆனாலும் முதிர்ச்சிக்கு முன்னரே தோற்கிறோம்
வலி மாத்திரம் எஞ்சுகின்றது நமக்குள்
சில காதல்கள் நமக்கு ஏணிகள் போன்றன
நம்முடன் நினைவில் நடந்து முன்னேற்றுகின்றன
தொலைவிலிருந்து ரசிக்கும் இந்த அன்பை
நினைவுகளில் மாத்திரமே நாமும் சுமக்கிறோம்
காதல்கள் சூழ்நிலைக்கேற்ப பண்புகளை மாற்றுகின்றன
கற்பனைகள் வலிகள் ஏக்கங்கள் எதிர்பார்ப்புக்கள்
எல்லாம் வந்துதான் போகின்றன அழகாக.
சிதையாத உண்மைக் காதல் வாழ்கின்றது
நாம் சுமக்கின்ற அன்புடனதுவும் வளர்கின்றது
ஜன்ஸி கபூர்
யாழ்ப்பாணம்
விடியல் போராட்டங்கள் உணர்வுகளின் ஒலியே/
துடித்திடுமே இதயங்களும் மௌனத்து வலியில்/
மடிகின்ற மனிதங்களை உயிர்ப்பிக்கும் ஆயுதமாய்/
படிகின்றதே வாழ்வுக்குள்ளும் விடுதலை வெற்றி/
ஜன்ஸி கபூர்
சிற்பமொன்று உயிர்த்திடவே சிறகடித்தேன் கனவுக்குள்ளே/
அற்புத ஒளியவளோ உணர்வெல்லாம் மோட்சத்தினில்/
விழியசைத்தாள் நனைந்ததுவே என்னுயிரும் ஏக்கத்தினில்/
அழகியவள் கரமிணைத்தேன் மயக்கத்தினை மொழிபெயர்த்தாள்/
கன்னத்தில் கசிகின்ற வெட்கத்தின் வெடிப்புக்களை/
சுவைக்கின்றேன் களவாக சொப்பனத்தில் அவளிதழ்கள்/
உளமேந்தும் காதலுமே பிணைந்திடும் நேரந்தனில்/
உறைகிறாள் மௌனத்தினில் ரசிக்கின்றேன் நானுமவளை/
ஜன்ஸி கபூர் - 12.08.2020
யாழ்ப்பாணம்
மூங்கில் இலைகளோ காற்றின் கைகள்/
கைகள் வருடுகையில் உயிர்த்திடுமே புல்லாங்குழல்/
புல்லாங்குழல் துளைதனை முத்தமிடும் தென்றலே/
தென்றலே காதோரம் இசைக்கின்றாய் கீதத்தினை/
கீதத்தினை கேட்கையில் மேகங்களும் துள்ளிடுமே/
துள்ளிடுமே உள்ளங்களும் தூறல்களில் நனைந்து/
நனைந்து சிலிர்த்திடுமே நுரைத்திடும் நீரோடையும்/
நீரோடை அசைவினில் விழிகளுக்கும் பேரின்பமே/
பேரின்பமே நமக்கும் இயற்கையின் அழகு/
அழகு வேண்டுமே மாந்தர் இதயத்திலே/
இதயத்திலே நிழலாடும் நினைவுகளும் சுகமாக/
சுகமாக வாழ்ந்திடத்தானே நமக்கிருக்கு மூங்கில்/
ஜன்ஸி கபூர் - 12.08.2020
செந்தமிழ் பிழிந்தூற்ற இலக்கணமும் யாப்பேற்றும்/
வந்தமர் சந்தனமாய் இலக்கியமும் நறுமணத்தில்/
சிந்தைக்குள் அலைகின்ற வாழ்வியல் தொகுப்பெல்லாம்/
வந்தமருமே சொற்களும் கசிந்தோடும் கற்பனைக்குள்/
கற்றோர் கல்லாதோர் கனிந்திடுவார் சுவைக்கையிலே/
காத்திடுவோம் உதிராமல் இலக்கியப்பூக்களை உயிர்ப்புடனே/
ஜன்ஸி கபூர் - 12.08.2020
கல்வி கற்றிட வயதும் தடையில்லை/
காலத்தோ டொற்றிக் கற்றிடல் சிறப்பு/
கற்காதோர் கண்டிடார் புது உலகை/
ஜன்ஸி கபூர் - 11.08.2020
சுமைகளும் சுகங்களே வலியதையும் ரசிக்கையில்/
ஊமைக் காயங்களுக்குள்ளும்; தீர்வின் வழியுமிருக்கும்/
கருகிடும் கனவுக்குள்ளும் கருத்தும் மறைந்திருக்கும்/
விரும்பிடா வாழ்வுக்குள்ளும் அரும்பிடும் இலக்குமுண்டு/
கண்ணீரும் நனைக்காத தன்னம்பிக்கை துணையுடனே/
எண்ணங்களும் வலுவாகும் சோகத்தையும் சுமக்காதே/
ஜன்ஸி கபூர்
அமுதூட்டும் விழியாளே/
ஆரத்தழுவினேன் உனையே
ஆனந்தம் வழிந்தோட/
இளமைச் சிற்பமே
இன்பவூற்றின் செங்கரும்பே/
ஈகையாய் எனக்களித்தாய்
உனைத்தானே எழிலே/
ஜன்ஸி கபூர் - 02.08.2020
விழி நீண்டிடும் கனவுக்குள்ளும் சிலிர்ப்பலைகள்
விழுந்திட்டதே உன் அன்பின் சுவையால்
தழுவிடும் முந்தன் கரங்களின் சுகத்தினில்
நழுவிடும் மின்னலும் மென்னுடல் பிணைகிறதே
தாமரைச் சாற்றினிலே ஊற்றெடுத்த உடம்பும்
தந்தியடிக்குதே உன்னைக் கண்டதும் அன்பாலே
பேச்சிலும் மூச்சிலும் நீயே நானாகி
பேரானந்தமாய் வாழ்ந்திடலாம் பல நாழியே
உந்தன் குறும்பைப் பிழிந்தூற்றும் உதட்டுக்குள்
உறவாகும் எந்தன் பெயரும் தித்திக்கும்
உன் இரேகைக்குள் பிணைந்திட்ட என்னாசைகள்
கண் வழியாய் காதலுடன் உறவுமாகும்
தேன் நிரப்பி நெய்திட்ட மேனிக்குள்
தேங்கிடுதே இன்பங்கள் தினமுனை வாசிக்க
காணும் திசையெல்லாம் படர்ந்தாய் நிழலாய்
வாழுகிறேன் நானே எனை மறந்தே
மனசுக்குள்ளும் முப்பொழுதும் உன் கற்பனைகள்
ஜன்ஸி கபூர்
தெறித்திட்ட பூமழையில் நனைந்திட்ட நிலவும்
பறித்தெடுத்த இலைக்குள் மறைக்கின்றதே உடலை
சிரித்திடும் கன்னமதில் விரிந்திடும் அழகும்
பூரிக்கின்றதே சிற்பமவள் மெல்லிடையும் சிலிர்க்க
மூடிய விழிகளுக்குள் மோதிடும் மகிழ்வெல்லாம்
சூடிய மல்லிகையின் வாசத்தில் நுரைத்தெழ
நனைந்திட்ட தேகமதும் விரித்திடும் சிறகால்
புனைந்திட்ட காவியமாய் உயிர்த்திடுவாள் இவளே
ஜன்ஸி கபூர்
யாழ்ப்பாணம்
ஏக்கங்கள் வெடித்திடும் ஏழ்மையும் கண்டே/
ஏனி றங்கவில்லை வான்மழையு மிங்கே/
வெடித்திட்ட தரைக்குள்ளே துடித்திடும் வலியும்/
வடித்திட்ட கண்ணீரும் ஈரமில்லா அனலே/
வறட்சி நிலமெல்லாம் கரைந்திட்ட பசுமையால்/
வயிறும் காய்ந்ததே வைரமாய் இடரிங்கே/
வசந்தத்தின் நிழலிங்கே பெருஞ்சுமைக்குள் இளைப்பாற/
வாடிய மனங்களின் தேடலிங்கே மூச்சறுப்பே/
ஜன்ஸி கபூர்
கருவறை சீராட்டும் உயிருக்கில்லை மாசு
உரு மாறும்போதே இழிகுணங்களும் வீசும்
உள்ளம் குமுறும் வெஞ்சினம் மறைத்தே
உதடுகள் குலாவும் நறுஞ்சுவைத் தேனில்
பச்சோந்தி மனமது பந்தலிடும் இழிகுணங்களும்
மெச்சிடும் உருவேற்று உலாவிடும் தீதுக்காக
இணையும் கரமதும் சுமக்கும் துரோகத்தை
இனித்திடும் வார்த்தைக்குள்ளும் ஊறிடும் நஞ்சும்
இருப்பிடச் சூழ்நிலையின் உணர்வோடு வாழ்ந்திடும்
இவ்வுலக மாந்தரெல்லாம் மேடை நடிகரே மனமதில்
ஜன்ஸி கபூர்