About Me

2020/10/09

Azka Poem

 தாய் பாடும் தாலாட்டில்

சேய் தூங்கி போவது போல்

பொய் பாடும் தாலாட்டில்

மெய் தூங்கி போகிறதே

வேருரிஞ்சும் நீராலே

மரம் செழித்து நிற்பது போல்

உழைப்பாளி வியர்வையால்

முதலாளி வளர்கிறார்

அறியாமையில் ஆழ்ந்து

தூங்கியது போதும்

துயரைத் துடைக்க

Azka - 09.10.2020




tsul;Lk; xU ey;;y Njrk;

   J}a;ik NgZk; xU tsk;

ey;yij NgRk; jha; kf;fs;

   Kfj;jpy; re;Njhrk; nghope;J kyul;Lk;

Azka-2020.11.01

2020/10/07

காற்றினிலே வரும் கீதம்

 
காற்றில் உதிர்த்திடும்
...........காதல் கீதம்/
வற்றாத நதியாகி 
..........வஞ்சியைத் தழுவும்/

பற்றிடும் மூச்சினில் 
............பரவசம் தந்தே/
ஊற்றாய் மாறி 


...........உணர்வினில் கலக்கும்/

ஊற்றும் மகிழ்வை 
...........உள்ளத்துள்/
தேற்றுமே வலிதனை 
..........தெளிந்திடும் மனமே/

ஜன்ஸி கபூர் - 16.10.2020

 





2020/10/06

செந்தமிழும் நா பழக்கம்

  

உணர்வினை வருடியே உலகத்தை ஆண்டிடும்/

உன்னத மொழியாம் எம் தாய்த்தமிழ்/

உச்சரிக்கின்ற அசைவினில் மூச்சினை அழகாக்கி/

உயிரில் இசைந்தே  அமுதத்தை வார்த்திடும்/

நாவின் பயிற்சியால் செதுக்கிடுவோம் தினமும் 

நலமாய் மொழிந்தே  வளர்த்திடுவோம் மொழியை/

ஜன்ஸி கபூர்   

 




 
 







 

 

 

 




 

 



 






 

 


 
















2020/10/04

நிலாச்சோறு

 1.தடுமாற்றம்

---------------------

சிந்தையின் தடுமாற்றம் உருமாற்றும் எண்ணங்களையே/

எடுத்த காரியங்களும் திசைமாறும் தடுமாறி/

பகுத்தாராயும் சிந்தனையே வகுத்திடும் வெற்றியை/

 2.உன்னைத் தேடும் என் விழிகள்

----------------------------------------------------------

அசைகின்ற ஊஞ்சலில்

அலைகின்றதே பாச நினைவுகள்

எட்டுத் திக்கெங்கும்

விழித் தேடலுக்குள் தாயுருவம்

 
3.சொல்லத் துடிக்குது மனசு
----------------------------------------------
சொல்லத் துடிக்கிற மனசுக்குள்
சொல்ல முடியாத காதல்
உன்றன் மௌனத்தை ரசிக்கின்றேன்
ரசிகனாகி!



4. அழியாக் கோலம்
-----------------------------------
விரலிடுக்குப் பேனாவும் 
..... எழுதிடுமே புரட்சியை/

பொறிகளை இயக்கியே 
..... ..உழைத்திடுமே தன்னம்பிக்கையாக/

உறவுகளைத் தழுவிடுமே 
..... அன்புக் கரமாகி/

உலகையே ஆண்டிடுமே 
..... உயிர்க்கும் செங்கோலாகி/

ரேகைகளும் வரைகின்றதே 
...... அழியாக் கோலமதை/

 


 5. உன் நினைவாய் நான்

---------------------------------------

இல்லறச் சுகமதில்/ 

இன்னுயிர்கள் கலந்தே/

இனிதாக வாழ்ந்திட்ட ஒவ்வொரு கணங்களும்/

அவிழ்கின்றன தனிமையில்/

6. விண்ணிலாவும் பெண்ணிலாவும்

கவிஞனின் பார்வையில் கற்பனைத் தேன்சுவையில்/

கன்னியவளும் நிலாவும் கவர்கின்றனர் அழகினில்/


பருவ மாற்றங்கள் பகிரும் வாழ்வினில்/

பருக்களும் குழிகளும் படர்ந்திடும் கன்னங்களில்/


வளர்தலும் தேய்தலும் வனப்பின் படிநிலைகளே

வனிதையின் நாணம்போல் விண்ணிலவும் ஒளியுமோ


உணர்வினைத் தூண்டுதே உருவத்தின் ஒத்திசைவும்/

உள்ளதே நிலையின்மை உணரலாம் நாமும்/


7. 
எல்லைகளில் வெடிக்கின்றதே யுத்தப் பிழம்புகள்
அல்லலைக் களைந்திடவே செல்லுகின்றாய் நீயும்
நல்லுறவுகளின் அன்பான வாழ்த்தும் ஆசியும்
வெல்ல வைக்குமே தாயக இலட்சியமதை

8.பண்பில்லா வன்மம்

-----------------------------------

காமத்தின் உச்சம்

.......கல்லறைக்கான பூவாசம்/

கற்பினைக் கொய்தே

........கண்ணீரைச் சூட்டுகின்ற/

கல்நெஞ்சர் களித்திடும்

........கலிகாலக் கோலமிது/

கனிகின்ற பெண்மையை

........கடித்தே குதறிடும்/

காமுகர் வேட்டையை

.........காலந்தான் தடுத்திடுமோ/


ஜன்ஸி கபூர் - 24.10.2020

9. தோற்றம்

--------------------

தோற்றம் காட்டாதே உள்ளத்தின் வலிமையை/

தோற்றே போவார் உருவத்தை அளவிடுவோர்/

அகமே ஆளுமே நமது வாழ்வினை/


10. துணையெனும் தோழமை

----------------------------------------------

அன்பை மொழிந்து/

ஆருயிர் தழுவி/

இனித்திடும் இல்லறத்தால்/

உணர்வினில் இசைந்திடும்/

ஊரறிந்த உறவு/


ஜன்ஸி கபூர் - 28.10.2020














பாவைக்கும் காவல்கள் வேண்டும்

அரும்பும் மழலைப் பருவமும் முட்களில்

பருவத்தின் சிறகுகளிலும் காயத்தின் பற்கள்

வருந்திடும் காலத்தில் வாழ்கின்றோம் நாமே

விரும்பாத பாலியல் வன்புணர்வுக்குள் பெண்மை


தாய்மையைக் கிழிக்கும் குரோத எண்ணத்தில்

தரணிக்குள் பதிக்கின்றார் பிணக்குழி கற்களையே

அணைக்கின்ற அன்புக்குள்ளும்  முள்வேலித் திரையிட்டு

பிணைக்கின்றனர் வன்மத்தை  அன்பின் பெயரில்

 

விழிகளில் கலந்திடும் காதலிலும் காமம்

அழகென போற்றிடும் உதட்டிலும் விடம்

பழகிடும் மாந்தர் நெஞ்சுக்குள்ளும் ஏமாற்றம்

தழுவிடும் பெண்மையைக் குதறிடுதே வன்மம்


பாவைக்கும் காவல்கள் வேண்டும் வாழ்வினிலே

தேவைக்குப் பயன்படுத்தும் பொருளல்லவே அவள்

போதைக்குள் காமமேற்றி சிதைக்கின்ற ஆன்மாவை

சிதைக்குள் தள்ளிடும் தீர்ப்பும் வேண்டுமே


நாவினிக்கப் பேசி கசக்கிடும் மூர்க்கத்தில்

நயவஞ்சகர் சூழ்ந்திருப்பாஅங்கத்தினையும் சுவைத்திட

மிருகமாய் இழிந்திருக்கும் மானுடம் மறந்தோரும்

அருகிலிருப்பதால் வேண்டுமே காவல் பெண்மைக்கும்


ஜன்ஸி கபூர் - 04.10.2020


 


 


பிரியாவிடை

பிரியாவிடை

-----------------------

பிரிய மனமின்றிய/ 

பிரிவுகளைச் சிறப்பிக்கின்றேன்/

பெருமைகளையும் உரைத்தே/

அருமையாக உபசரிக்கின்றேன்/


ஜன்ஸி கபூர் - 04.10.2020



2. நினைவுகள்

-----------------------

நெஞ்சின் நினைவுகளை/ 

தினம் சேமிக்கின்றேன்/

அவை மீளப் பெறமுடியாத/

நிகழ்வுகளின் நிழல்கள்/  

 

ஜன்ஸி கபூர் - 11.10.2020