About Me

2014/10/01

மீள வந்துவிடு




இப்பொழுதெல்லாம்
இரவு முகிழ்க்கையில்.....
இதயத்தில் ஏனோ வலி!

அன்று.......

அல்லி பூத்தலை ஈர்த்த
 நம் நெஞ்சங்கள்....
ஔிப்பிழம்பாய் கசியும்
நட்சத்திரங்களை
ரகஸியமாய் நனைத்த
நம் விழிகள் ...
நிலாவின் குளிர்மையில்
உலாவிக் கிடந்த நம் வார்த்தைகள்...

இன்று.....

பிரிவின் மையத்தில்
பரிவில்லா காலத்தின் ஆணையாய்...
கலங்கிக் கிடக்கி்ன்றன!

இது யார் செய்த
சதியடா....
என்னைப் புரிந்து கொள்ளாத
பரிவில்லாத நீ தந்த பரிசடா!

உனக்குள் வாழ்ந்து
உன் சேய்கள் சுமந்த  என்னையே....
காகிதமாக்கி
காலனிடம் சேர்த்தா யுன் சினத்தால்...!

அடிக்கடி .....
என்னை உச்சரித்த
உன் னுதடுகளுக்குள்.....
இன்று நானில்லை!

நம்முள் நகரும் பல நிமிடங்கள்....
வெறுமையின் சிறைக்குள்
உன்னால்!

உன் ஞாபகத்துள்
மறந்துவிட்டஎன் னுயிர்க்கூட்டுக்குள்......
தினமும்
இராக்களில்
விசமேற்றிப் போகின்றாய்...
வம்புடன்!

புரிகின்றதா - என்
கவலைப் பூக்களின் மகரந்தத்தில்
கருக்கட்டப்படும்...
உன் னினைவுகள் - இப்போதெல்லாம்
உரிமையின்றி போகின்றன!
காரணம் நீயடா...!!

உன் னுள்ளம் நேசித்துச்
செல்லமாக முறைத்துச் சண்டையிடும்
என்னையா.....
வெறுத்துப் பயணிக்கின்றாய்
இன்னொரு நிழலுடன்
இராக்களில்!

இன்னும் நம்பிக்கையிருக்கின்றது
என்னுள்.......
என்றோ ஓர் நாள்..
என் ப்ரியம் தேடி மீள வந்துவிடுவாய்
என்னுயிர்க்கூட்டுக்குள்!

அதுவரை ....

நீயாவது வாழ்ந்து விடு .........
உனக்குப் பிடித்த பிரியங்களுடன்
இராக்களின்
விசாரிப்புக்களுடன்!

காலச்சுனாமியில்
காணாமற் போகும் பண்டமல்ல
நம் அன்பு!
இறையருளால்
இதயம் வாசித்த  உணர்வுப் பொட்டகம்!

காத்திருப்புக்கள் தொடர்கின்றன
என்னுள்......

நீ...

மீள ......

என்னை மட்டும் நேசிக்கும்
என்னவனாய் .....
வந்துவிடுவாயென்ற நப்பாசையில்!

இவள் ஜானு!




தரம் 5 பரீட்சைப் பெறுபேறு - Zahira M.V, A/Pura

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு - 
ஸாஹிரா ம. வி, அநுராதபுரம்
------------------------------------------------------------------------------------

அநுராதபுரம் ஸாஹிரா மகா வித்தியாலயத்தில் இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள் 

அவர்கள் விபரம் -

                               Name                  Marks                      Dis Rank

1.. M.F.Aadhil Ahamed............... ( marks 182) --------------- 3
2. .M.V.Sameeha......................... .......... (177) ---------------- 6
3..M.M.M. Akeel............................. .......(172)---------------- 15
4..N.Ashfan Ahamed...................... ........(167)---------------   24
5..A.A.H.Nisha ....................................... (165)--------------   27
6.. N.Aysha.............................................. (162)---------------  37
7..M.R.F.Salha......................................... (159)----------------46
8..S.H.Hafri ..............................................(158)----------------51
9..A.H.F.Rasheeka..................................  (158)----------------51
10..A.S.Shahama...................................... (158)----------------51
11..T.F.Sahara............................... ...........(156)----------------59

இவர்களை நாமும் வாழ்த்துவோம்...அத்துடன் இவர்களின் இக்கல்வி வெற்றிக்குழைத்த வகுப்பாசிரியர்களான ,M.N.M.SIYAM, M.K.F.ZAHIRA  உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்..

வாழ்த்துவோம் - அப்துல்லாஹ் அஸ்மின் 
-----------------------------------------------------------------
பதுருயா மத்திய கல்லூரி , மாவனல்லையில் கல்வி கற்கும் அப்துல்லாஹ் அஸ்மின்  2014 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 171 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளார்.  கேகாலை மாவட்டத்தில் 42வது நிலையைத் தனதாக்கியுள்ள இவரையும் நாம் வாழ்த்துவோம்...



-Jancy Caffoor-

சிறுவர் தினம் - 2014


இன்று ஒக்டோபர்  01 ந் திகதி, சர்வதேச குழந்தைகள் தினம்..
-------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு குழந்தையும் தன் தாயின் கருவறையில் ஜனனிக்கும்போது தன் ஆத்மாவில் நன்மைகளை நிறைத்தே பிறக்கின்றன. நல்ல சூழல் நல்ல குழந்தைகளை சிருஷ்டித்து இவ்வுலகில் சிறப்பான மனித நடமாட்டங்களை உருவாக்குகின்றது. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளைக்க முடியாது என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல யதார்த்த வாழ்வியலின் ஓரம்சம். எனவே தம் நடத்தைகளைச் சீக்கிரமாக மாற்றக்கூடிய சிறுவர் பருவத்தை சரியான திசையில், இலக்கில் இட்டுச் செல்வது காலத்தின் தேவையாகும். ஏனெனில் இப்பருவத்தில் ஒழுக்கம் பிறழ்ந்து நடமாடும் ஒவ்வொரு பிறவியும் முதிர்ச்சியடைந்த பிறகு பலரின் விமர்சனத்திற்கு ஆளாகும் பாவிகளாகின்றனர்.

முதுமையின் விளைநிலம் இளமை ததும்பும் சிறுவர் பராயம். இப்பராயத்தை சிறப்பானதாக மிளிரச் செய்வது எமது- கட்டாயக் கடமையாகும்.  அந்த வகையில் குழந்தைகளுக்கிடையே புரிந்துணர்வையும், பொது நிலைப்பாட்டையும் ஏற்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் அவையினால்(unicef) 1954 ஆம் ஆண்டு  பிரகடனப்படுத்தப்பட்ட இச் சிறுவர் தினம் இலங்கையில் ஒக்டோபர்  1 ஆம் திகதி கொண்டாடப்படுவது யாவரும் அறிந்ததே!

இந்நாளில் உலகிலுள்ள அனைத்து சிறுவர்களுக்கும் உள்ள அடிப்படை உரிமைகள் நினைவுபடுத்தப்படுகின்றன. ஏனெனில் உலகிலுள்ள காமுகர்கள் அரங்கேற்றும் சிறுவர் துஷ்பிரயோகத்தை சட்டங்களால் மட்டும் நிறுத்த முடியாது. ஒவ்வொருவரும் தன்னைப் பாதுகாக்க தனது பலகீனத்தைக் களைதல் வேண்டும். அதற்காக தன்னை உணர்தல் வேண்டும். ஒவ்வொரு சிறாரும் தன்னை முழுமையாக உணர, சிந்திக்க சிறுவர்தினம் களமமைத்துக் கொடுக்கின்றது

குழந்தை தனது ஒவ்வொரு செயலையும் வளர்ந்தவரைப் பார்த்தே செய்கின்றது. பின்பற்றுகின்றது. எனவே சிறுவர் பருவம் என்பது குழந்தையின் வளர்ச்சிப் பருவத்தின் ஓர்நிலை. சிறார் தனக்கெதிராக மேற்கொள்ளப்படும் எந்தவொரு அநீதிகளையும் தொடர்ச்சியாக உள்ளெடுப்பாராயின் காலப்போக்கில் அவர்களும் வன்முறையெனும் ஆயுதமேந்திகளாகவே மாற்றப்படுவார்கள்.

எனவே இன்றைய சிறுவன் நாளைய தலைவன் என்பதை மனதிலிருத்தி அவர்களின்  அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க ஒவ்வொரு வளர்ந்தோரும் முன்வரல் வேண்டும். இதற்கு அடிப்படையாக  கல்வியை அவர்கள் பெற்றுக் கொள்ள வழிப்படுத்த வேண்டும்.


எனவே  இன்றைய நாளில் சிறுவர்கள் தமது அடிப்படை உரிமைகளைப் போஷித்தவாறே, சகல சௌகரிகங்களும் பெற்று தத்தமது இல்லத்தில் மனநிறைவுடன் வாழ வாழ்த்துவதோடு,  இவ்வாழ்க்கை அவர்களுக்குக் கிடைக்க நாமும் முதியோர் தினத்தை நினைவுகூர்ந்தவாறு இறைவனைப் பிரார்த்திப்போமாக!


2014/09/30

வாழ்க்கை


சூழ்நிலைகள்தான் நம்மைத் தீர்மானிக்கின்றன. அதனால்தான் நேற்று எடுத்த முடிவுகள் இன்று அவசியமாகாமல் நாளை மாற்றப்படலாம். மாற்றங்கள்தான் வாழ்க்கை..காலமும் நம்மை நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொண்டே இருக்கின்றது. அதுதான் வாழ்க்கையின் பலம். சுவாரஸியங்களை நமக்குள் விட்டுத் தரும் தோற்றங்கள்.....

வாழ்வோம்!
வாழ்ந்து காட்டுவோம்!!
நமக்குப் பொருத்தமான வாழ்வுக்குள் நம்மைத் தயார் படுத்துவோம்!!!


-----------------------------------------------------------------------------------

ஈரம் மறந்த பூமியோரம்
வேரூன்றும் உயிர்க்கூடுகளின்....
கனவுகளில்  நீராகாரம்!
கண்களிலோ விழிநீர் கோலம்!


-------------------------------------------------------------------------------------------------


சிதறிக் கிடக்கும் சின்னச் சின்ன விசயங்களில்தான்
பென்னம் பெரிய சந்தோஷங்கள் வீழ்ந்து கிடக்கின்றன....
அதுபுரியாம நாம அந்தக் கணங்களையும் தொலைத்துவிட்டு எங்கேயோ போய் தேடிக் கொண்டிருக்கின்றோம் மன அமைதியை!

வாழ்க்கையை ரசிப்பதற்கு நம்மை நாமே ஏற்றுக் கொள்ளும் மனம் போதும்.............நம்மை நாமே ஆளும்போதுதான் நமது பலமும் பலகீனமும் புரிய ஆரம்பிக்கின்றது! வாழ்கின்றோம் என்பதைவிட இப்படித்தான் வாழனும் எனும்போது மனதும் பக்குவப்படுகின்றது!

இந்தப் பக்குவம்தான் நிம்மதிக்கான அடிவருடல்!
வாழ்ந்துதான் பார்ப்போமே!

--------------------------------------------------------------------------------------------------

உன்னை எனக்குத் தெரியும் - நீ
என்னிடம் உன்னை விட்டு விட்டுப் போன
கணத்திலிருந்து!



இருந்தும்............
உனக்காய் காத்திருக்கின்றேன்
சிறு பிள்ளையாய் நானும்!
என்னை நீயும் அணைத் தென் நெற்றியில்
அழுத்து மந்த அன்புக்காய்
காத்திருக்கின்றேன்.........
இன்னும்!

------------------------------------------------------------------------------------


பளபளக்கும் ஔி நாடி
பறந்து வரும் ஈசல்களெல்லாம் - தம்
சிறகறுக்கின்றன அற்ப ஆயுள்தேடி!
.
சிறப்பான மாந்தரும் - தம்
தவறுகளுக்காய் வருந்தாது வழி
தவறிப் போகின்றனர் அற்பர்களாய்!

--------------------------------------------------------------------------------------


அன்பு சாகா வரம்
அதனால் நீயோ......
எனக்கு இன்பஸ்வரம்!
பூக்களுக்கும் வலிக்குமோ
நீ விரல் தீண்டா உன் பூவை அவை
தாங்குவதால்!

--------------------------------------------------------------------------------------

இருட்டில் இறுமாந்திருந்த
குப்பி லாம்பு.................
ஔிப் பிராவகத்திலே
அழுது வடிகின்றது!
ஏற்றுவோர் யாருமின்றி!
.
அடுத்தவருக்காக தன் சுயமிழப்போரும்
கவனிப்பாரற்று காலத்துள் புதைந்து விடுகின்றனர் 
தன்மானமிழந்து!
.
இதுதான் வாழ்க்கைப் போக்கு!

------------------------------------------------------------------------------------------

கனவுகளுக்கும் கால்கள் இருக்கின்றதா
தினம்..........
உன்னிடம்தானே வந்து நிற்கின்றன.......
இருந்தும்
விரல் நீட்டுகின்றாய்
உன்னை மறந்து போவதாய்!

------------------------------------------------------------------------------------------


அதிகாரம் ஒரு ஆட்சிபீடம்...
அதன் கையசைப்பில்
ஆயிரம் தலை கவிழ்ப்புக்கள்!
இருந்தும்....
சூடிக் கொள்ளும் முடி
வாடி வீழும்போது......
ஓடியணைத்துக் கொள்ள யாரும் வருவதில்லை - தன்
நிழல் தவிர!

-------------------------------------------------------------------------------------------