About Me

2019/05/04

உள நெருக்கீடு


நம்பிக்கைகள்  சிதைக்கப்படும்போது  அதனை  மீள கட்டியெழுப்புவதென்பது சிரமமானதுதான். அடுத்தவர் வார்த்தைகளால் ௨ணர்வுகைளக் காயப்படுத்தும்போது நாம்  வெளிப்படுத்தும் மௌனம் பாரிய ௨ளநெருக்கீட்டைத் தீர்க்காவிட்டாலும்கூட நம்மைச் சூழ தற்காலிகமாக ௮மைதியையேனும் தோற்றுவிக்கக்கூடியது.

.
- Jancy Caffoor-
   05.04.2019


இருள் குமிழ்

இருளில் கரையும் தரையை
உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன
மின் விளக்குகள்

- Jancy Caffoor -
  04.05.2019

வாப்பா உங்களை நினைந்து

Jaffna Muslim: யாழ் - ஒஸ்மானியா கல்லூரியின் இலச்சினையை, வரைந்த ஒஸ...: - பரீட் இக்பால் - யாழ்ப்பாணம் சோனகதெருவைச் சேர்ந்த உசைன் சாய்பு முஹம்மது – சுலைஹா தம்பதியினருக்கு 1935 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 

- Jancy Caffoor -
  04.05.2019

எண்ணங்கள்

மனித வாழ்வின் தோற்றுவாய்களுள் தவிர்க்க முடியாத அம்சம் பிரச்சினை கள்தான். பிரச்சினைகள் வரும்போது அவற்றிலிருந்து விலகியிருத்தல் அப்பிரச்சனை தவிர்த்தலுக்கான பிரதான வழியாகும்.


கையில் அழகான ரோசா
இருந்தாலும்........
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்!

- Ms. Jancy Caffoor -
   05.04.2019