About Me

2019/05/08

சகிப்புத் தன்மை

Image result for சகிப்புத்தன்மை

வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தில் ஏற்படக்கூடிய  முரண்பாடுகளால் சிக்கல் நிறைந்ததாக வாழ்க்கை மாறுகிறது. சகிப்பு தன்மை இல்லாமையால் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க  வேண்டி உள்ளது.

சகிப்புத்தன்மை என்றால் என்ன ?

நான் நானாகவும், நீ நீயாகவும் இருப்பதும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வதும் சகிப்பு தன்மையின் முகங்களாகின்றன. இப் பூமியில் நாம்  ஒவ்வொருவரும் வாழத்  தகுதி உடையவர்கள். நம் வாழ்க்கை நம் வசம்.  இதனை அற்ப காரணங்களுக்காக அடுத்தவரிடம் அடமானம் வைக்க நிச்சயம் நாம் இடமளிக்க கூடாது .நமது அடையாளம் தொலைந்து போகுமானால் நமது செயல்களும்  வார்த்தைகளும் பெறுமதி இல்லாமல் போய் விடும் .  நம் வாழ்வின் சரிவை தடுத்து நிறுத்த நாம் நம்மை காக்க வேண்டும். நம் நாவின் புனிதத்தை பேணவேண்டும்.  அடுத்தவருடனான சகிப்பு தன்மையை நல்லுறவை  பேண வேண்டும்.

"பொறுத்தார் பூமி ஆழ்வார் "  என்பார்கள்.

நன்மை கிடைக்கும் என்றால் நமது பொறுமையும் சகிப்பு தன்மையும் சிறந்ததே.  அடுத்தவருக்கு மகிழ்வு வழங்கி, நமது சந்தோஷத்தையும் உறுதிபடுத்த சகிப்பு தன்மை அவசியமாகிறது. நம்மை ஏற்றுக்கொள்ளவோர் மத்தியில் நமது சுயம் பேணும் சகிப்புத்தன்மை நமது வாழ்வின் முக்கிய பண்பாகின்றது

- Ms.A.C.Jancy -
     08.05.2019

அஸ்கா - சஹ்ரிஸ் -ஆக்கம்

ஒரு பிள்ளையின் இயல்பு வாழும் சூழல் மூலம் தீர்மானிக்கப்படுகிறது .அந்த வகையில் எங்க வீட்டு சின்ன ராணிகள் , அஸ்கா , (Grade 5) சஹ்ரிஸ்  (Grade 2) என்னை போலவே கவிதை எழுத ஆவல் கொண்டு படைத்த ஆக்கம் இது.
அவர்கள் வளர்ந்து இதை வாசிக்கும் போது கிடைக்கும் அந்த மகிழ்வை நானும் நுகர வேண்டும் .....

                                                                   

அஸ்கா
------------

அழகு நிறைந்த பொம்மை.
உயிர்  இல்லாட்டியும்   உடம்பு  உள்ளது.
மென்மையான பஞ்சுவால் ஆனதே
அழகான அருமையான பொம்மை..............
.
கடையில் அழகழகாய் அலுமாரியில் இருக்கிறது பொம்மை!
 அதன் அழகு எல்லோரினதும் மனதில் மகிழ்ச்சியை தருகிறது  சின்னஞ்சிறியதில் இருந்து பென்னம் பெரியது வரை உள்ளதே பொம்மை ......
கண்ணை சிரிக்க வைக்கும் ஆற்றல் உள்ளதே பொம்மை
.
மனதில் உள்ளவற்றை சொல்ல வைக்கும் ஆற்றல் உள்ளதே பொம்மை
சிறுவர்களுக்கு விளையாட விருப்பம் உள்ளதே பொம்மை
சிறுவர்களுக்கு பரிசாக போவதே பொம்மை.......
பொம்மை எங்கள் வாழ்வில் மகிழ்ச்சியை தருகிறது !
.
பொம்மையின் அழகை நாம் ரசித்த வாழ வேண்டி உள்ளது
பொம்மையை நீ வாழ்க!
பொம்மையை நீயே வளர்க !!





------------------------------------------------------------------
                                சஹ்ரிஸ்
------------------------------------------------------------------


அழகு சஹ்ரிஸ் ......
அவள் நல்லவள்.
நன்மைகளே செய்வாள்.
அன்பானவள்.
அப்பாவி சனத்துக்கு உதவுவள்...
 நான் வளர்ந்து பெரியவள் ஆனால் விஞ்ஞானியாக போக எனக்கு புடிக்கும். எனக்கு ஜன்னியையும் உம்மம்மாவையும் புடிக்கும்.
நான் அவர்களின் பிள்ளையாக இருக்கோணும்
நான் அவர்களின் செல்ல புள்ளையாக இருக்க வேண்டும் என்று  நான் கேட்டுக்கொள்கிறேன்.
 நன்றி



-Jancy Caffoor-

சஹ்ரிஸ்

மேகக் கீறலிடை மின்னும்
வெண் முத்தோ இவள்...
சாமம் விழித்து வாசம் தூவும்
வெண் மல்லிகையோ .....
.
வானவில் பிழிந்த வண்ணச் சாரல் இவள்...
தேன் சிந்தும் வாச மலர்  இவள் ...
கானமிசைக்கும் குயில் இவள் ...
பண்ணிசைக்கும் மூங்கில் இவள் ...
.
தங்க மீன்கள் இவள் விழியோரம்
ஏழு தாண்டா அரும்பிவள் ...
குறும்பாய் சிந்தும்  அமிர்தம் இவள்...
புன்னகை நெய்யும் ஒளியும் இவள்!
.

வெயில்

Image result for வெயில்வெயில் பூக்கள் உதிர்கின்றன
மூச்சு காற்று உஷ்ணமாக!

வெய்யில் குடைக்குள்ளும்
வியர்வை சூடாக!

வெயில் கூட்டுக்குள்
அனல் முட்டைகள்!

வெம்மை குறி வைக்கின்றது
பசுமையை!

அனல் தீ மூட்டலில்
நிழல் கருகிறது!

மலட்டு மேகங்களின் மௌனம்
நிசப்தமாக!

உஷ்ணத்தின் இஷ்டத்தில்
உருகும் மேனி!

ஈர வண்ணத்தியை தொட்டு பார்க்க
பிரார்த்தனைகள் உதிர்கின்றன!

மின்விசிறிகள் உறிஞ்சும் பெரு மூச்சுகளாவது
உதிருமா ஈரமாய்!

கோடையை கொடையாக்கும் மேடையோ
இம் மாதம்!



- Jancy Caffoor -
 

2019/05/07

இனி

வேகமான கால ஓட்டத்தில் பதவி வழிவந்த பணிச்சுமை மற்றும் வாழ்வியல் போராட்டங்களுக்கு மத்தியில் என் விரல்கள் கணனியில் பதிவிடவில்லை . நீண்ட வெறுமையில் சோர்வும் ஓர் அங்கமாகி போக நாளை            நாளை  என நாட்கடத்தலும் நீண்டது . கிட்டத்தட்ட நாலரை வருடங்கள்! என் கவிதாயினியிலிருந்து விலகியே இருந்தேன். இறுகி கிடந்த என் கற்பனை உணர்வுகளை நட்பு வட்டம் மெல்ல மெல்ல கிளற ஆரம்பிக்க, தூசு தட்டினேன் இவ் வலைப்பூவை !

எதை எழுதுவது .....................எப்படி எழுதுவது ...................?

எல்லாமே மௌனித்த உணர்வு.  நான் மாறிவிட்டேனா! இயல்பான வாழ்வியல் சிந்தனைகளை நசுக்கி விட்டதா? ஆனாலும் ஏதோ நான் எழுத வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் நான் நேசித்த என் கலைக்காகவேனும்  எழுத வேண்டும். மீண்டும் நான்  நானாக, என் கலையாக மாறவேண்டும் !

அந்த ஏவல் என் உணர்வுகளுடன் கசிய தொடங்கியவுடன் விரல்களும் விசைப் பலகையுடன் பேசத்தொடங்கியது மழலையாய். ஒரு கலைவாதி மௌனிக்கலாம். ஆனால் மறைந்து விடுவதில்லை. இனி தினமும் என் கவிதாயினியை நான் தரிசித்து போவேன்.

- Ms. Jancy Caffoor -
   07.05.2019

2019/05/06

J/86


பள்ளிக்கூட வாழ்வின் ஒவ்வோர் உணர்வும் இனிமையானவைதான். காலத்தால் மறக்கப்பட முடியாதவை. நரை கண்டாலும் கரை காணா இன்பங்களின்  தொகுப்புகள் அவை. ஒத்த வயது நட்பினர்களுடன் மகிழும் அந்த கணங்களில் நம் வயதும் பாதி  குறைந்து விடுகிறது. எனது பள்ளி தோழிகளையும் பல வருடங்களின் பின்னர் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. புத்தகங்களை  சுமந்த கரங்கள் இன்று குடும்பங்களை சுமந்தவாறு அந்த நட்பினர்களின் களமாகிய வாட்சப் குழுவின் ஆறு மாத  நிறைவுக்கான எனது கவிதை

J/86......
நல்ல நட்புகளின் உச்சரிப்பு நீ
அழகிய சொற்கள் பிசைந்த பூக்கோலம நீ்!
.
இங்கு  அன்பேற்றங்களின் அலைவில்
மனங்கள் புல்லரிக்கும்.
மங்கலமாய் நட்பும் உயிர்க்கும் !.
.
பாசங்களும் பரிவுகளும் சங்கமிக்கும்
இந்த மையப்புள்ளியில்
தேசம் கடந்து இதயங்கள் விரியும் இதமாய்!.
.
கேலிகளின் கலகலப்பில் பூக்கும்
இந்த மலர் கூடத்தில்
புகைப்படங்களைப் பரிமாற்றி
புளாங்கிதமடையும் கொடையாளிகள் நாம்!.
.
உணர்வுகளின் ரேகைகளை
நளினமாய் வரையும் இந்த கலாசாலையின்
தொடு புள்ளியின் தொடக்கப் புள்ளியாய்
வயது ஆறு மாதம்!
.
மதம் கடந்து மூச்சொலிக்குள் நேசம் கிளறும்
இந்த அன்பு சாலையில்
சங்கமிக்கும் எமக்கு
தினம் ஆனந்தமே!
.
உந்தன் பயணப்பாதையில்
முட்களாய் முகம் திறந்த தடை உடைத்து
முல்லையாய் விரிந்த J/86!
நல்ல நட்புகளை தினமும் என்னுள் அடையாளப்படுத்தும் பொக்கிஷம் உன்னைவாழ்த்துகிறேன் வாழி நீ!


- Jancy Caffoor -
  06.05.2019

வேண்டமினி

உயிர்த்த திருநாளில் - பல
உணர்வுகள் உருகுலைக்கப்பட்டன!

உமிழ்ந்த வன்முறையில்
கனவுகள் காணாமல் போயின!

சதைகளின் கிழிசல்களில்
அரும்புகளும் தீனியாய்!

வன்முறை அநாகரிகத்தில்
மனிதம் அசுத்தமானது!

தவறுகளின் சாம்ராச்சியம்
கிரீடம் சூடியது பவிசாய்!

சமாதானங்கள் சமாதியில்
தீப்பிழம்புகள்!

பரிவும் பாசமும் தோற்றுப் போனதில்
பாவக்கறைகள் புன்னகைக்கின்றன!

தனி மனித தீயில் கருகுகின்றன
நம்  சமூகங்கள்!

மக்கள் மாக்கள் ஆனதில்..
குருதி வெள்ளோட்டம் குஷியாய்!

சன்மார்க்கம்
சந்திகளில் பேசு பொருளாய்!

ஈமானிய நம் மனதின் ஈரம்
விழி நீராய் இரகசியமாய்!

அன்று யுத்தம் கண்டோம் வலி கொண்டோம்
இன்று பழிச் சத்தம்!

வேர் விடும் வன்முறைகள்
வேண்டாம் இனி!

Image result for fight

- Jancy Caffoor -
  05.05.2019

வாழ்க்கை

Image result for life

வாழ்க்கை என்ற நீண்ட பயணத்தில் வெவ்வேறு தரிப்பிடங்களில் நின்றே பயணிக்கிறோம். நாம் விரும்பியோ விரும்பாமலோ வெவ்வேறு முகங்களை கடந்தே செல்கின்றோம். அவர்களின் தரிசிப்பில் விருப்போ வெறுப்போ நம் வசம். சிலரின் பிரியங்களைச் சுமக்கும் நாம், சிலரின் முரண்பாட்டுக்குள் சிக்கவும் வேண்டும். இந்த நியதியின் அடிப்படையில் அமைந்த உறவு சட்டகங்கள் நாம் வாழும் வாழ்க்கையின் பகுதிகள்தான்.

-Jancy Caffoor- 
  05.05.2019

மாற்றங்கள்


மாற்றங்கள் யாவும் மனங்களிலிருந்து  உயிர்க்கும்போதே பிறக்கின்றன. வெறும் உதடுகளால் முன்மொழியப்படுகின்ற வார்த்தைகள் மாற்றங்களைக் கொண்டு வராது. எண்ணங்களை உள்வாங்கும் மனது,  தான் பயணிக்கப் போகும் பாதை பற்றிய திடமான தீர்மானத்தை தனக்குள் உள்நுழைத்து அதற்காக தன்னை அர்ப்பணித்துச் செயற்படும்போதுதான், அவை மாற்றங்களுடன் வாழ வேண்டிய பக்குவத்தை நமக்கு கற்பித் தருகின்றன.




- Jancy Caffoor-
   05.05.2019







2019/05/05

யதார்த்தம்

இயல்பாகிப் போன வாழ்விலிருந்து விலகுதல் என்பது சாத்தியமற்றது. ஏனென்றால் மனச்சாலையில் ஆங்காங்கு வீழ்ந்து கிடக்கும் தடைகளை உடைத்து  வெளியேற முயற்சிக்கும்போது பெரும் போராட்டமே வெடித்துச் சிதறுகிறது.

Image result for தடைகள்


- Jancy Caffoor-
   05.05.2019