About Me

2020/04/08

கொரொனா.....!


கொரொனா.....!
இந்த நாமத்தை உச்சரித்துக் கொண்டே வலி மிகுந்த நாட்களுடன் நாம் அனைவரும் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். மரண பயத்தையும் புறந்தள்ளியவாறு பலருக்கும் வாழ்க்கைப் பயம் பீறிட்டுப் பாய்கின்றது. அன்றாடம் உழைத்து வாழும் பலருக்கு வறுமைத் தாக்கம் முறுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் வெறும் ஏக்கப் பெருமூச்சுக்களே முகடுகளைத் தொட்டு நிற்கின்றன. 

  பாடசாலை மாணவர்களின் பல பெற்றோர்கள் அன்றாடம் உழைத்து வாழ்பவர்கள். வறுமைச்சூழலில் வாழ்பவர்கள். தற்போதைய சூழ்நிலையில் சொல்லெணாத் துயரங்களுடன் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் கண்ணீர்த்துளிகளில் சிலவற்றையாவது உலர்த்தி விட மனம் துடிக்கின்றது. இருந்தும் என் கரங்களில் தற்போது வெறுமை....

அத்தகைய வறுமையில் வாடும் பெற்றோர்களுக்கு பாடசாலை சமூகம்சார்பில் உதவிகளை வழங்குவது மனிதாபிமானக் கடமையாகின்றது. இன்றைய சூழ்நிலைகளைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பழைய மாணவிகள் மற்றும் நலன்விரும்பிகள் எம்முடன் இணையுங்கள்.

இதனை வெறும் தகவலாகக் கடந்து செல்லாமல் இரக்கத்துடன் அவர்களுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் எனது உள்பெட்டியில் இணையுங்கள். உங்கள் உதவிகளை அப்பெற்றோர்களுக்கு சேர்த்து விடுகின்றோம்.

"உரிய நேரங்களில் கிடைக்கின்ற ஒவ்வொரு உதவியும் மிகப் பெரிய பெறுமானமுள்ளவை."