About Me

2012/09/08

மௌனம்


எங்கிருந்து கற்றாய்
இந்த மௌனம்..........!

விழிகள் துலாவுமுன்
மௌனத்தில்.........
சிறையிட்டனுப்புகின்றாய்
காதலை ரகஸியமாய்!

என் கிண்டலில்- உன்
குண்டுக்கன்னம் ஈரமாகும் போது
என் கை(க்குட்டை)களைத் தானேயுன்
கண்ணீர்த்துளிகளழைக்கின்றன!

நம் காதல் முகநூலில்- உன்
அதிக விருப்புக் கிடைத்துள்ள
பக்கமென்னவோ
"ஊடல்" தான்!- இதுவுன்
கூடலுக்கான அழைப்பு!

நீ .........
மௌனித்திருக்கும் நாட்களில்தான்
உன் உணர்வுகளை என்னால்
மொழிபெயர்க்க முடிகின்றது!

நீ .............
வாசித்துச் செல்லும்
ஒவ்வொரு மௌன இரவுகளும்
என்மீதான உன்னுரிமையை
என்னுள் விட்டுச் செல்கின்றது!

மௌனத்தையுடைத்து
நீயிடும் சண்டைகள் கூட - என்
மன டயறியில் பதித்துச் செல்கின்றது
உன்னன்​பை!

குலுங்கிச் சிரிக்கும்
சிட்டுக்களின் குரலிலும்...
உடலணைத்து
சில்மிஷம் பண்ணும் காற்றிலும்
நீ வந்து போவதால்
உன் மௌனம்
என்னை காயப்படுத்தப் போவதில்லை!

உதடுகள் குவித்து- நீ
சிந்தும் கோபங்களிலெல்லாம்
உன்னன்பைத் தானே
தருகின்றாய்!

நாளை சினம்
தரும் சமாதானத்தில்
நாம்
நிறைய பேசவேண்டியுள்ளது!
காத்திருக்கின்றேன்- என்னுள்
போத்தியிருக்குமுன்
ஞாபகங்களை ஸ்பரிசத்தபடி!

உன் சினம் பூத்த
விழிகள்...............
சிவப்பை பூசினாலும் கூட
அழகாகத்தானிருக்கின்றன
உன்
காதலைப் போல!

எத்தனை வாரங்களுக்கு
வரமாக்கப் போகின்றாய்
இந்த மௌனத்தை!

நானும்
நீயும்
சண்டையிட்டுக் கொள்ளும் போதெல்லாம்
என்னை வசப்படுத்த
நீ காட்டும் அதீதக் காதலுக்காய்
இன்னும்
நிறைய சண்டைபிடிக்கலாம்
நான்!

இருந்தும்.....உன்

மௌன அழைப்புக்களில்
பதிவான- உன்
சினத்தை கொஞ்சம்
ஒத்தி  வை!
நீயழைக்காத போதெல்லாம்
என் பெயரே
எனக்கு மறந்து போகின்றது!


ஜன்ஸி கபூர் 









உலக எழுத்தறிவு தினம்


செப்ரம்பர் 8ம் திகதியன்று உலக எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகின்றது. 

மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி, வளர்ந்தோர்க்கு எழுத்தறிவைப் போதிக்கும் இலக்கினடிப்படையில் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 1965 ம் ஆண்டு தெஹ்ரான் நகரில் இடம்பெற்ற கல்வியமைச்சர்களின் மாநாட்டில் தீர்மானம்பெறப்பட்ட து. இதனடிப்படையில் 1965 நவம்பர் 17 ல் கூடிய யுனெஸ்கோ செப்ரெம்பர் 8 ஐ இத்தினமாக கொண்டாட வேண்டுமென தீர்மானித்தது. அத்தீர்மானமே, உருப்பெற்று, உயிர்பெற்று  1966 ம் ஆண்டிலிருந்து  எழுத்தறிவு தினமாக நம்முன்னால் பார்வை தந்துள்ளது.

"ஓதுவீராக" என்பது அல்குர்ஆன் அருளிய முதல் வசனமிதுதான்.

மனித வாழ்வின் அடிப்படையானது  கல்வியறிவின் மீதே உறுதியாகக் கட்டியெழுப்பப்படுகின்றது.  நம்மை, நம்மைச் சார்ந்தோரை, நம் சூழலைப் புரிந்து கொள்ளவும், அதற்கேற்ப தீர்மானங்களைப் பெறவும், நமக்குப் பொருத்தமான வாழ்வியல் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளவும், வாழ்வை செப்பனிடவும் , சிறப்பாக வாழவும் கல்வியறிவு மிகஅவசியம்....

கல்விக்கான வழிப்படுத்தலில் மொழி அத்தியாவசியமானதொன்றாகின்றது. எழுத்து, வாசிப்பு, கிரகித்தல், பேச்சு போன்ற திறன்கள் மொழியால் போஷிக்கப்பட்டு வந்தாலும் கூட, இவற்றுக்கெல்லாம் கிரீடம் வைத்ததைப் போன்ற தேர்ச்சி எழுத்தறிவிலேயே அதிகமாக தங்கியுள்ளது. ஏனெனில் தான் கேட்ட, வாசித்த, கிரகித்த விடயங்களை உள்வாங்கியதால் பெறப்பட்ட எண்ணங்களை எழுத்து வடிவமாக மாற்றும்போதே, அம் மொழித்திறன் முதன்மையடைகின்றது.

ஜப்பான், அமெரிக்கா போன்ற வளர்முக நாடுகளில் வாழும் மக்களின் எழுத்தறிவு வீதம் அதிகமாகவிருப்பதாலேயே, அக்கற்றலறிவின் பயனால் , தமக்கும், நாட்டுக்குமேற்ற பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்த அம்மக்களால் முடிகின்றது...

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வரிசையில் இலங்கையின் எழுத்தறிவு வீதம் அதிகளவிலுள்ளது. தெற்காசியாவிலேயே இலங்கையின் எழுத்தறிவே முதல் நிலையிலிருப்பது இலங்கையர்க்கு சிறப்பான செய்தியே!

எமது நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இலவசக்கல்வியின் வரப்பிரசாதமேயிது. 6 வயது தொடக்கம் 14 வரை இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டாயக் கல்வி மற்றும் அனைவருக்கும் கல்வி எனும் நடைமுறையானது, மக்களின் எழுத்தறிவின் உயர்விற்குக் காரணமாகியுள்ளது. இலங்கை நகரப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95% ஆகவும், கிராமப் புறங்களில் 93% ஆகவும் உள்ளது. எனினும் இத்தொகையை விட குறைவான படித்தவர்களே மலையகப் பெருந்தோட்டத்துறைகளில் காணப்படுகின்றனர். மலையக மக்களின் வறுமைப்பட்ட நிலையின் தாக்கமாகக் கூட இது காணப்படலாம். தமது வறுமை காரணமாக, தமது பிள்ளைகளுக்கு முறைப்படியான அடிப்படைக் கல்வியை வழங்காது, சட்டத்திற்கு மறைவாக வீட்டுத் தொழிலாளிகளாக உருவாக்குவதில் இம் மக்களிற்பலர் முனைப்புடன் செயற்படுவதால் மலையக மக்களின் எழுத்தறிவு வீதம் 76% ஆகக் காணப்படுகின்றது.  இம் மலையக மக்களின் பின்னடைவான நிலையினால் இலங்கையின் எழுத்தறிவு வீதம் ஏறக்குறைய 90.6% ஆகக் காணப்படுகின்றது.

கிராமம் என்பது ஓர் நாட்டின்  இதயம்..கிராமத்தின் விழுதுகளில் கல்வியறிவு ஊன்றிப்பற்றிப்பிடிக்கப்படுமானால், மக்களின் வாழ்விலும் அபிவிருத்தி உயர்மட்டத்தில் பேணப்படும்.

எம் மொழியாயினும் இலகுவாக வசனங்களை எழுதவோ, வாசிக்கவோ முடியாத நிலையையே எழுத்தறிவின்மையென ஐ.நா சாசனம் வரையறுக்கின்றது. சிறப்பாகத் தொடர்பாடலைப் பேணும் ஓர் சமுகத்தில் எழுத்தறிவும் சிறப்பாகக் காணப்படுகின்றது.

இன்றைய கல்விமுறையானது தேர்ச்சிக்கல்விமுறையாகும். தேர்ச்சியென்பது ஒரு பிள்ளை தான் பெற்றுக்கொள்ளுமறிவை ஆற்றலாக மாற்றி தன் வாழ்நாள் முழுவதும் பிரயோகிக்கும் திறனாகும். எனவே பாடசாலைகளில் பல்வேறு நுட்ப முறைகளினூடாக போதனையும் வழிகாட்டலும் இடம்பெறுவதால் மாணவர்களிடம் இத்தகைய மொழித் தேர்ச்சி கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. எனினும் ஆசிரியர் செயற்பாடு மாத்திரமல்ல, பிள்ளையினதும், அவர்கள் வீட்டுச்சூழலினதும் முயற்சியிலும், பயிற்சியிலுமே இவ்எழுத்தறிவின் உயர்தர வெற்றி தங்கியுள்ளது.

"எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் " என்பது ஆன்றோர் வாக்கு.

இன்றைய நவீனத்துவத்தின் பல சவால்களை வெற்றிகரமாக எதிர்நோக்கி, அவற்றிலிருந்து சிறப்பான பயன்களைப் பெறவேண்டுமானால் நமக்கு இவையிரண்டும்  அடிப்படையாகின்றது. கணனிப்பயன்பாட்டின் உச்சளவு கூட இக்கல்வியறிவுடன் வரையறைக்கப்பட்டுள்ளது. எழுத்தினைக் கற்றவன் தன்னம்பிக்கையை வளர்க்கின்றான். அந்நம்பிக்கையின் விளைவாக இவ்வுலகின் சவால்களை எதிர்கொள்ளுமாற்றலையும் தனக்குள் திறமையாக வளர்க்கின்றான். இன்று பல துறைகளில் நிகழும் ஆராய்ச்சிகளும், கண்டுபிடிப்புக்களும் மொழி வளர்ச்சியுடன் தொடர்புபட்டுள்ளது என்பதனால் உலகமயமாதலிலும் இம் மொழி தாக்கம் செலுத்துகின்றது.

தனியாளொருவர் தனது இலக்கை அடைவதற்காக பல்வேறு திறன்களை வளர்க்கவேண்டியவராக இருக்கின்றார். தனது அறிவை அவர் உள்வாங்கி, தன்னுள் ஆழப்பதிப்பதன் மூலம் அதனை ஆற்றலாக மாற்றி. அவ்வாற்றலை தனக்கும் சமுகத்திற்கும் ஏற்றவிதத்தில் பொருத்தமுடையதாக மாற்றும்போதே, அந்நபரை சமுகம் தனது ஆரோக்கிய அங்கத்தவனாக ஏற்றுக்கொள்கின்றது. தனிமனிதனொருவனின்  ஆரோக்கியத்தின் அடியொற்றலிலிருந்தே கலை, கலாசார, பண்பாடும் தனது முகத்தைக் காட்டத் தொடங்குகின்றது.  

எனவே கற்காத ஒருவன் சமுக நிகழ்வுகளிலிருந்து தானாகவே விலகிக்கொள்கின்றான். அல்லது விலக்கப்படுகின்றான்.  இதுவே  இன்றைய யதார்த்தமாகின்றது . இவ்வடிப்படையில் நோக்கும் போது, எழுத்தறிவுப் பிரச்சினையானது ஓர் சமுகப்பிரச்சினையாகவே நோக்கப்படுகின்றது. நோக்கப்படல் வேண்டும்.

கல்வியை இடைவிட்டவர்கள், கற்றலில் நாட்டமில்லாதோர் போன்ற மக்களே இவ்வாறாக எழுத்தறிவில்லாமல் காணப்படுகின்றனர். இவ்வாறாக உலகில் 776 மில்லியன்  வயதுவந்த மக்கள் எழுத்தறிவில்லாமல் இருக்கின்றார்கள். 103 மில்லியன் சிறுவர்களும் தமது கல்வியை பாதியில் நிறுத்தியவர்களாக உள்ளனர். உலகம் ஓர்பக்கம் உலகமயமாதலால் நவீனத்துவத்துள் சுருங்கிக் கிடக்க, மறுபுறம் இவ்வாறான பின்னடைவுகளால் மனித அபிவிருத்தியை பாதக வீழ்ச்சியை நோக்கி தள்ளிவிடுகின்றது..

இம் மக்களுக்குரிய பரிகாரக்கல்வியை வழங்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு நாட்டரசுக்குண்டு. இவர்கள் கவனிக்கப்படவேண்டியவர்கள். எனவே இவர்களுக்காக, மேம்படுத்தப்பட்ட முதியோர் கல்வியும், அனைவருக்குமான கல்வியும், பரிகாரக்கல்வியும் வினைத்திறனுடன் முன்னெடுக்கப்படல் வேண்டும். இவ்வாறான முன்னெடுப்புக்கள் ஒவ்வொரு நாட்டு அரசாலும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதும் நாம்  சிந்திக்க வேண்டிய வினாவாகும். 

இன்றைய போட்டிமிகு உலகில் அரசியல், கலை, சமுக, பொருளாதார எழுச்சிகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுக்கும் இவ்வரசுக்கள் இவ்விடயம் தொடர்பாக தமது மானசீகப்பார்வையைச் செலுத்தி, அதற்கான செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக மேற்கொள்வார்களா என்பதும், அவ்வாறாக வடிவமைக்கப்படும் செயற்றிட்டங்களில் பாமர, படிப்பறிவற்ற இம்மக்கள் ஆர்வங்காட்டுவார்களா என்பதும் சிந்திக்க வேண்டியதொன்று!இப்பின்னடைவால் நாடுகளின் எதிர்காலம் வெட்கப்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றது.

அரசியல், போஷாக்கின்மை, வறுமை, சமூகநிலை, கலாசாரம், இனப் போராட்டங்கள். அடிமைப்படுத்தப்படல் போன்ற பல கூறுகளின் அழுத்தங்களே, இவ் எழுத்தறிவின்மையின் பின்னணியாகக் காணப்படுகின்றன. 

மனிதவுரிமை, சிறுவர் உரிமை சாசனத்தில் கல்வி பெறுதலும் ஓர் உரிமையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது. அவ்வுரிமையை அனுபவிப்பதும், அனுபவிக்கச் செய்வதும் நமது கடமையாகின்றது.

ஆசியாவில் மிகக்குறைவான படிக்காதோரே உள்ளனர். ஏனெனில் இங்கு கல்வியின் முக்கியத்துவம் பெருமளவு பெற்றோரால் உணரப்பட்டு, பிள்ளைகளுக்கு கல்வி வழங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆனால் இந்தியாவில் காணப்படும் பல கிராமங்களில் படித்த பெண்கள் தொகை மிகக் குறைவாகவேயுள்ளது. இந்தியாவின் சனத்தெகை அதிகமாக இருப்பதால் அவர்களின் எழுத்தறிவு வீதம் பின்தள்ள காரணமாகின்றது.

மனித அபிவிருத்தி உள்ளடக்க அறிக்கையின் பிரகாரம் ஜோர்ஜியா மக்கள் 100% எழுத்தறிவைப் பெற்று முதலாமிடத்திலும், இலங்கை 90.8% ஐ பெற்று 99 வது இடத்திலும், இந்தியா 65.2% பெற்று 159 வது இடத்திலும் உள்ளது.

இவற்றை நோக்கும் போது மனிதன் பெறும் கல்வியானது, அவனது ஆளுமையிலும் செல்வாக்குச் செலுத்துகின்றது என்பது உறுதியாகின்றது.. ஒருவர் தனது எண்ணங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தி, தனக்கேயுரிய வாழ்வை வகுத்துக் கொள்ள இன்றியமையாத இவ் எழுத்தறிவினை, கல்லாதோருக்கும் குறிப்பாக வீட்டிலுள்ள முதியோருக்கும் பெற்றுக் கொடுப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகின்றது.

ஆசிரியன் மாத்திரமே இப்பணியைச் செய்ய வேண்டுமென்ற மனப்பாங்கையகற்றி, எழுத்தறிவின்மையைப் போக்கி, பிறர் வாழ்வில் ஒளியேற்றுவது இறைவனுக்கு மிகவும் உவப்பான செயல் !

"கற்பிப்பவனாக இரு அன்றேல்
கற்பவனாக இரு "

இவ்வெழுத்தறிவின்மைப் பிரச்சினையைக் களைவதற்காக கல்வி, கலை, பண்பாட்டுடன் தொடர்பு பேணி அதற்காக செயற்பட்டு வரும் யுனெஸ்கோ தனது அபிவிருத்தி திட்டங்களிலும் எழுத்தறிவித்தலுக்கு முக்கிய கவனம் செலுத்தி, தனது செயற்றிட்டங்களில் பல நாடுகளை இணைத்தும், மேற்பார்வை செய்தும் , திட்டங்களை நடைமுறைப்படுத்தியும் வருகின்றது என்பது சற்று நிம்மதியான விடயமாகின்றது..!


2012/09/07

ninaithu ninaithu (f)




நினைத்து நினைத்துப் பார்த்............ஆண் குரல் பாடல் கேட்க இவ் விணைப்பை அழுத்துக

ஒவ்வொரு பூக்களுமே பாடலைக் கேட்க இவ்விணைப்பை அழுத்துக

Ninaithu Ninaithu



உண்மைக்காதலின் உடைவும், பிரிவும் தாங்க முடியாத வலி....
இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் நம் மனசுக்குள் ஆழ ஊடுறுவி, நாம் அனுபவித்ததைப் போன்ற வலியை ஏற்படுத்துகின்றது...

நினைத்து நினைத்துப் பார்க்கின்றேன்......உன் ஞாபகங்கள் என்னுள் ஒவ்வொரு கணங்களிலும் உயிரூட்டப்படுகின்றனவே!
நீயே என்தன் நிஜமாகி, மனசுக்குள் மகிழ்வுகளைத் தூவும் நேரம் காலனின் அழைப்பு உனக்கேனோ.......அன்பே!

நம் கனவுகள் கூட இன்னும் முதிர்ச்சியடையுமுன்னர், தீயிட்ட காகிதமாய் நீயும் என்னை விட்டு கருகியதேனோ.......

ஒவ்வொரு பொழுதிலும் மின்னலாய்த் தோன்றும் நீ, என் அருகாமையில் வீழ்ந்து, உன் விரல்களால் நெருடி என்னை உஷ்ணப்படுத்தும் அந்தக் கணங்கள் என் கண்ணுள் வீழுமோடி என்னுயிரே!

நாமர்ந்த மர நிழல்கள் கூட உன்னிருப்பைக் கேட்டுத் துடிக்குமே......உன் கொலுசொலிகளின் சப்தத்தில் விழித்துக் கொள்ளும் என் இருப்பிடம் கூட உன்னைக் கேட்டு என்னைக் கொல்லுமே.....நான் என்ன சொல்வேன் உயிரே!

நீ பேசிய வார்த்தைகள் என்னுள் ஆழமாகப் பதிந்திருக்க, உயிரோடு ஒன்றிணைந்த உன்னை மறப்பது சாத்தியமோ......அன்பே , அழக்கூட எனக்குள் சக்தியில்லையடீ!

இனிமையான காதல் பகிர்ந்து சென்ற இந்தப் பிரிவும்,  நாயகன் நெஞ்சில் வடியும் சோகங்களும் என் கண்களையும் நீராட்ட, இப்பாடலில் மெய்மறந்து துடிக்கின்றேன்...........

அவள் மரணித்தாலும் கூட, மீண்டும் தன்னைத் தேடி வருவாளென்ற அவன் நம்பிக்கையிலெழும் அந்தக் காதலின் ஆழம் மெய்சிலிர்க்க வைக்கின்றது..

எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத, மனதைத் தொட்டுச் செல்லும் பாடலிது!


நினைத்து நினைத்து பெண்குரல் ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

Orumurai Piranthaen



வாழ்க்கையென்பது பூவனமாகவும் இருக்கலாம் பாலைவனமாகவும் மாறலாம். நாம் ஒவ்வொருவரும் அந்த வாழ்வை வாழும் தன்மையிலேயே அதன் போக்கும் நம்மைச் சுரண்டுகின்றது.

ஒருமுறை மட்டுமே வாழ வாய்ப்பளிக்கப்பட்ட அந்த வாழ்வின் இன்பங்களை மட்டுமே உறிஞ்சிக் கொள்ளவே போராடுகின்றோம். திருமணம், உறவுகள், காதல் , தொழில் எனும் நம் ஒவ்வொரு வாழ்வின் படிநிலையிலும் ரசிப்பு, மகிழ்வு , வெற்றி என்பவற்றையே மனம் விரும்புகின்றது.

ஒருமுறை நமக்காக கரந்தொடும் அந்த வாழ்வில் காதலித்தவரே கரம் பிடித்தால் மின்னல் பல நெஞ்சுக்குள் வெளிச்சம் அடிக்கும். அந்த வெற்றிகரமான மணவாழ்வின் இணைவுக்கு காதல் வெற்றி பெறவேண்டும்.

இந்தப் பாடலும் இரு உள்ளங்களும் தம் களிப்பை வெளிப்படுத்தும் விதமாக வரிகளை அமைத்துள்ளது. உனக்காகவே பிறந்தேன் உனக்காக வாழப் போகின்றேன்.அந்த வாழ்வில் நீயே என்னை முழுமையாக நிறைத்துக் கொள் எனும் நாயகனின் ஆதங்கம் அழகானது.....



Munbe Va எனும் பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

Munbe Vaa




உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா எனும் பாடலை ரசிக்க இவ் இணைப்பை அழுத்துக

காற்றே என் வாசல் வந்தாய்



மருதாணி பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

திருடிய இதயத்தை




நம்வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் முரண்பாடுகள் பல்வேறு கோணங்களில் எம்மைச் சுற்றிப் படர்கின்றன. அம் முரண்பாடுகள் தரும் மனவழுத்தத்தை ஆரம்பத்தில் நீக்கிவிடும் போதுதான் மனமும் லேசாகின்றது. அவ்வழுத்தம் , மனசைப் பற்றியிழுத்துப் பிறாண்டி கண்ணீரில் இதயத்தைத் தோய்த்தெடுக்கும் போது, கவலைக்குள் நாமழிந்து அமிழ்ந்து போகின்றோம்............ !

அதிலும் காதல் வலி தரும் சோகங்கள், இதயத்தின் உணர்ச்சி மையங்களைத் தீண்டி உயிரையே நெருடிவிடுகின்றன.....

நேற்றைய பொழுதுகளில், தன்னிருப்பையே அவள் மனதுள் விதைத்து, அவளது அழகான கற்பனைக் கோட்டைக்குள் இளவரசனாய் தன்னையே முடிசூட்டியவன், அவளது கனவுத் தோட்டங்களில் நீரோடையாய் சலசலத்தவன், திடீரென தன்னிலிருந்து நீங்கிவிடுமாறு வார்த்தைகளால் இம்சிக்கும் போது , எப்பெண்தான் தாங்கிக் கொள்வாள்.......

வாலிப வாழ்வின் மறுக்கப்பட முடியாத ஓர் பக்கமே காதல்..!
அந்த இனிய இம்சைக்குள் வீழாமல் தப்பியோடுபவர்கள் விரல் விட்டெண்ணக்கூடியவர்களே!  சில காதல் ....திருமணம் தொட்டு நிற்கும், சிலதோ உரிய கல்யாணப்பருவம் எட்டுமுன் பாதியிலே காணாமற் போய் விடும், சிலவோ வெளிப்படுத்தப்படாமல் , மனதுக்குள் மறைத்து வைக்கப்பட்டு வெறும் கற்பனையாகவே அமிழ்ந்து விடும்!

"தன் நேசிப்புக்கு உரித்தாளி" தன்னை மட்டுமே சுவாசித்து, கவனித்து அன்பு செலுத்த வேண்டுமென்ற , உந்துகையே காதலில் பிரிவினையையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து விடுகின்றது...

காதல் நெஞ்ச முதிர்க்கும்  சொற்கள் ஒவ்வொன்றுமே, தேவாமிர்தமாய் மனசால்  உறிஞ்சுக் கொள்ள, அக் குரலலையையே எந் நேரமும் , நினைவுகள் உள்வாங்கிக் கொள்ள , இருதயமோ பட்டாம் பூச்சியாய் பறந்து திரிய, அந்த எதிரொலியின்  மயங்கத்தில் நாட்கள் கிறங்கிக் கிடக்க , அழகிய கனவுத் தேசத்தில் காதல் மனங்களை உலா வரத் தூண்டும் சக்தி இந்தக் காதலுக்கேயுண்டு!

எனினும் காதலர்கள் விரும்பாத வார்ததையொன்று இருக்குமானால் அதுதான் பிரிவு! மெய்க் காதல், பிரிவைக் கண்டால் துடித்து விடுகின்றது...தன் மெய்யையே வருத்தி அழகின் பொலிவையும் மங்கச் செய்துவிடுகின்றது.

மரண அவஸ்தையை விட கொடுரமானது காதல்ப்பிரிவு. ஏனெனில் ஒவ்வொரு கணமும் உயிருடன் வேரறுக்கப்படும் கணங்களே பிரிவின் தருணங்களாக அறிவிக்கப்படுகின்றன....

அதனால்தான் பிரிவின் அவஸ்தையிலிருந்து விலகிக் கொள்ள , நாயகி மன்றாடுகின்றாள். அவன் பார்வையால், நேசத்தால் பறித்தெடுத்த தன்னுணர்வை, நிம்மதியை, சந்தோஷங்களை மீளத் தன்னிடமே சேர்த்து விடும் படி என இறைஞ்சும் அவள் மன்றாட்டம்..........கண்ணீராய் கசிகின்றது இவ்வாறு!

"திருடிய இதயத்தை திருப்பிக் கொடு " என்றவள் கதற,

அவனோ ..........என்னிலிருந்து உன்னினைவுகளை யுமகற்றி என்னையும் நிம்மதியாக வாழவிடுவென்றும் மாறி மாறி துடிக்குமிதயத்தின் அலைவுகளை வார்த்தையாக்கி வெளிப்படுத்துகின்றனர்.

 அவர்களினிந்த வேதனைத்துடிப்பு,  இப்பாடலைக் கேட்போர் மனங்களில் சோகங்களையும் கொட்டிவிடுகின்றது...

எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத சலிக்காத இப் பாடல் ,இதயத்தின் வழி நுழைந்த காதலினாழத்தையும், அக் காதலின்  வெளியேற்றத்தை மறுக்கத் துடிக்கின்ற இவ்விருதய வலியையும் உணர்வுபூர்வமாக நம்முள்ளும்  தொற்றி நிற்கின்றது..

இதுவும் என்னைக் கவர்ந்த பாடலிலொன்று...!

ஏனோ தெரியாது சிறுவயதிலிருந்தே சோகமெனக்கு ரொம்பப் பிடிக்கும். அச் சோகத்தைப் பிரதிபலிக்க வழங்கப்படும்  இசை​யும் அதைவிடப் பிடிக்கும்..........!

நினைத்து நினைத்து பார்த்தேன் பாடலை ரசிக்க

திரும்பத் திரும்ப பார்த்து.............




விழியோரம் கசியும் அன்பே காதலாகி இதயத்தில் படரும் போது, மனசும் மகிழ்வுக்குள் நிரம்பிக் கொள்கின்றது.

காதல் அழகானது....அதன் அன்போ ரம்மியமானது! அதனால்தான் அது சலிப்பில்லாமல் தன்னுயிரைத் திரும்பத்திரும்ப பார்க்கத் தூண்டுகின்றது. அவள் மூச்சுக்காற்றில் அவன் சுவாசமாய், அவனுயுரில் அவள் உணர்வாய் நினைவுகளைப் பரிமாறத் தூண்டுகின்றது காதல்!

அவனது விழி வருடலில், அவள் பெறும் சுகங்கள் கனவாகி அந்த இரவினில் முகிழ்க்கையில், காதல் கொண்ட  மனங்களோ இறக்கை கட்டி வானமதில் கூடு கட்டி நிலாவிலே உலாவத் துடிக்கின்றது............

காதல் ஓர் உணர்ச்சிப் பிழம்பு..அதனால்தான் இருதயத்துடிப்போட்டங்கள் கூட சடுதியாகி, மனங்களில் மண்றாடிக் கிடக்கின்றன.......

இவ் அவனி கூட அன்பின் பிணைப்பிலடங்கிக் கிடப்பதால்,இயற்கை கூட காதலை வளர்த்து விடுகின்றது.....அவள் சேலை  காற்றிலே பறந்து மேகத்தில் சென்று வானவில்லாகி அவனையே வளைத்துப் போடுகின்றது. இந்தப் பரவசமும் ரசிப்பும் காதலில் மட்டுமே சாத்தியம்.......

காதலுக்குள் இத்தனை இனிமையே, அவன் இமைகள் மூடும் போது , அவளுருவம் மறைந்து போக, அத்துக்கம் தாளாமல் மருத்துவம் தேடும் இந்த வேட்கையும், பிரிவை வெறுக்கும் மனமும் காதலில் மட்டுமே உள்ளது என்பது பொய்யில்லைதான்..........

இறப்பு, பிறப்பு போல வாழ்வில் ஒருமுறை மாத்திரம் தோன்றும் இந்தப் பிணைப்பின் இறுக்கமுணர்த்தும் இந்தப் பாடலின் வரிகளும், இசையும் என்னையும் வளைத்துப் போட்டதில் ஆச்சரியமில்லைதான்..........

என் ரசிப்பில் நிறைந்திருந்த குனால்- மொனல், தங்கள் சொந்த வாழ்வுப் போராட்டங்களால் தம்முயிரை நீத்து, இப்பொழுது ஓர் வருடம் ஓர்நொடியாய் பறந்தாலும் கூட, இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம், அதன் காதல் சுவை குன்றாமல் எம் மனதையும் கட்டிப் போட்டிழுக்கின்றதே!

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்திடு பாடலை ரசிக்க இவ்விணைப்பை அழுத்துக

சிவகாசி



இயற்கையின் மோகனத்துள்- பல
வுயிர்கள் தம் யதார்த்த வாழ்விலிணைய.......
கிழக்கு தொட்டு  விடியல் பரப்பி
ஒளி சிந்திச் சென்றான் ஆதவன்!

பட்டாசு  உரு கோர்த்துத் தொழிலாற்ற
இட்டத்துடன் தொழிலகம் சென்றவர்களால்........
சிவகாசியில் மட்டுமன்று அஸ்தமனம் முகங்காட்ட
பூத்த விடியலும் கருகிப் போச்சு !

பாதுகாப்பற்ற தொழிலறைகள்
ஆபத்துக்களோடு பேரம் பேசியதால்...........
வெடிப்பூக்கள் மோதுகைக்குள் வீழ்ந்து சிரிக்க
துடிபடக்கி வெந்து நின்றனர் பலர்..........

விழிகளில் கனவு தேக்கி
வாழ்வைத் தேடலில் செதுக்கியோர்
கல்லறைக்குள் வீழ்ந்து கிடக்க
விதியிங்கு வினையொன்று செய்ததோ!

மனசெங்கும் சோகம் பிழிந்து
கன்னவோரம் நீர் நனைத்துக் கிடக்க.........
மனிதவுடல்கள் சதை கிழிந்தறுந்து
இன்னொரு ஹிரோசிமாவாய் சரிதம் தொட்டது!

பசுமையில் குஷாலித்த சுற்றமெங்கும்- வெடி
மாசுக்களால் மோகித்துக் கிடக்க........
வெண்ணிற மேகங்களும் தமக்குள்
கருமை பூசி கண்டனம் செய்தன ...........

எட்டப்பராய் எட்டிப் பார்த்த மரணங்கள்
பட்டாசு நிலவறையைக் குத்தகைக்கெடுத்ததில்...
கண்ணீரும் அவலமும் தேசியமாகிப் போகவே
சுக நலமிங்கு சிதைந்துதான் போனது!

இரசாயனங்கள் தம்முள் மோதியெழுந்ததில் - பல
இரகஸியங்கள் யிங்கு பரகஸியமானதே.......
கந்தக நெடியின் அராஜகத்துள்
சிந்திக் குழறின குருதித்துளிகள் கனமாய்!

தீக்குச்சியாய் இவர்கள் மாறியதில்- சிவகாசித்
திக்கெங்கும் பொசுங்குமுடல்களே மலையாக.............
தேசமெங்குமிவை செய்தியாய் பரவியதில்.......
பாசத்தின் கண்ணீரஞ்சலி ஈரம் தந்தது!

இழப்புக்கள் கண்ட பாசங்களினி
அழுகைக்குள் தமை சிறைப்படுத்த..........
வெடிவிபத்தின் சோகங்களைப் பிழிய- இனி
இடி மழையாய் அரசியல் கோஷங்கள் மோதும்!

உரிமையாளர் தேடலும்  பலர் கைதுமென- இனி
வருடங்களும் கடந்தோடும்!
பலிக்கடாக்களாகும் மனிதங்களுக்காய்
நீலிக் கண்ணீர் சிந்தும் அரசியலினி !

வெறுமைப் பட்ட சிவகாசி யினியும்
உயிரறுக்குமோ பட்டாசுக்களால் !
வருங்காலத்திலும் மனிதவுயிர் காக்கப்படவே
இறைவன் தானருள வேண்டுமென்றும்!







(படங்கள் உதவி- நண்பர்  Isac Jcp - சிவகாசி)

மேலதிகக் காட்சிகளைக் காண இவ் விணைப்பை அழுத்துக.

சிவகாசியிலுள்ள , முதலிப்பட்டி ஓம்சக்தி பட்டாசு ஆலையில் , விபத்தைப் பார்க்கப் போனவர்களும், காப்பாற்றப் போனவர்களும் கூட பலியாகியுள்ளனர். பலர் இதில் பலியாகி (அரசு தரப்பு கூறும் தொகை 35) யுள்ளதுடன், பலர் கடும் காயங்களுக்குமுள்ளாகியுள்ளனர். இன்னும் பலர் எரிகாயங்களுடன் சுயநினைவற்றுள்ளனர்.

இவ்விபத்துக்குக் காரணம் பட்டாசு அதிபர்களின் விதிமுறை மீறல்களும், தலைவிரித்தாடும் லஞ்சமுமென குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    நன்றி- ஜூனியர் விகடன்



வேள்வியும் கேள்விகளும்!


கவிதைகளால் நேசிக்கப்படுமென்
ஒவ்வொரு கணப்பொழுதிலும்..........
என் மனம் உனையே  நிரப்பிக்கொண்டிருக்கின்றது
உணர்வுகளால்!

பாசக்கலவைக்குள் வீழ்ந்து கிடந்த
உன் பார்வைகளின்று........
ஞாபகங்களாய்  வெடித்துச் சிதறுகின்றன
குருதிக் கசிவோடு!

எங்கோ தெறித்து வீழ்ந்த மழைத்துளியாய் - நீ
நசிந்து கிடக்கும் மனப்பாறையிலிருந்து .........
உனை மீளுறுஞ்சும் வேராய்
பயணிக்கின்றேன் நம்பிக்கையோடு!

இரவின் நிசப்தத்திலும் மறுக்குமென் தூக்கம்
இப்பொழுதெல்லாம் ......
நீ வீசிச்சென்ற கவிதைகளுக்காகவே
காத்துக்கிடக்கின்றன அன்புடன்..........!

உன் உதட்டோரம் மின் பாய்ச்சி
நீயிட்ட  கவித் தூதெல்லாம் - உன்
வெறுமை பட்டதாலின்று வேரறுந்து
கதறுகின்றன மரண அவஸ்தையில்!

அடர்முடி தரித்த வுன் மார்போரம்...........
வருடி விடும் என் விரல் நீவல்களெல்லாம்
கேவியழுகின்றனவே............
பாவியாயாயென் சரிதங்களில் நீ வந்துபோவதால்!

அன்பின்  இம்சைகள் மனசை யழுத்த
விழிகளை நிரப்புகின்றேன் கண்ணீரால் - உன்
ஞாபகங்களாவது  என்னுள் உலராமலிருக்கட்டுமென்று......
நீயோ முட்படுக்கையிலென்னைத் தள்ளுகின்றாய்!

வண்ணச்சிட்டாய்  பறந்து...........
சிறுகிளை தேடும் கிள்ளையென்னில்
சிறகறுத்து நீ தந்த காயங் கூட..........உன்னை
நலம் விசாரிக்கின்றன என் மெய்யன்பால்!

இப்பொழுதெல்லாம் நீ .......... நீயாகவில்லை!!
புரிகிறது ....................!
என் உயிரறுத்துன் துரோகத்திலென்னைப் பதியமிட
கற்றுத் தந்தது யாரோ......உன் காதலோ !

உன் இலக்கியங்களால் திருடப்பட்ட  என் மனசை
நீயே ஏலத்தில் விட்டாய் உன்னலத்திற்காய் .......
என்னையும் ஏப்பமிட்டே பிரிவில் கிடத்தி
குதுகலிக்கின்றாய் இரக்கமற்றவனாய் !

நேற்றென் நெஞ்சில் வீழ்ந்த வுன்
வார்த்தைகளும் நேசிப்புக்களும் - வெறும்
விசமென அறிவிப்புச் செய்யப்பட - நீயோ.....
மோச வில்லனாகின்றாய் யுன் அற்பக் காதலுக்காய்!

உன் மௌனம் எனக்குப் புரிகிறது ...............
வெறும் கவியில் மட்டும் நுழைத்த வுன் பாசம்
வெளுத்ததில் வெட்கித்துக் கிடக்கின்றாயோ- உன்
இருப்பையு மென்னிலிருந்து மறைத்து !

கவிதைக்காரா!
உன்னிடமோர் கேள்வி.................!!
நானுனக்குச் செய்த பாதகமென்ன
நயமாயுரைத்திடு...........!

ஜன்ஸி கபூர் 

2012/09/06

வெள்ளத்தின் உள்ளத்திலே


நமது கடந்தகாலங்கள் என்றுமே நம்மால் மறக்கப்பட முடியாதவை. ஏனெனில் அவற்றின் ஞாபகங்கள் நிகழ்காலத்தின் ஏதோவொரு சம்பவங்கள் மூலம் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.

அந்தவகையில் எமதூரில் தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இந்த நீர்ப்பற்றாக்குறையும், பல குளங்களின் வற்றலும் எனக்கு தந்த ஞாபக உதிர்வாய் பதிவாகின்றது இந்தப் பதிவு!

2010 ஆண்டு ஜனவரி மாதம் அநுராதபுர நகரில் தாராளமாக மழை பெய்தது. இங்குள்ள பிரசித்தி பெற்ற குளங்கள் எல்லாம் நிறைந்து, வீதி வழியே உலவத் தொடங்கின. வீடுகளில் வெள்ளம் புகுந்து வேடிக்கை பார்க்க, உயிரைக் கையில் பிடித்த மக்களோ, பொது இடங்களில் பிரார்த்தனையுடன் தஞ்சம் புகுந்தனர். பாடசாலைகள், தொழில் நிறுவனங்கள் வாரக்கணக்கில் மூடப்பட்டன. இப்பகுதியில் ஏற்பட்ட இவ் வெள்ளம் மக்களுக்கு முதல் அனுபவமாதலால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பதற்றமும் சிரமமும் அடைந்தனர்.

எம்மிருப்பிடமான அநுராதபுர நகரின் வீடுகள், பாடசாலைகளிலும் வெள்ளம் புகுந்து பலவற்றை அழித்தன. சிறைச்சாலை வளவினுள் புகுந்த வெள்ளத்தால் அங்கிருந்த பொலிஸ் வாகனங்கள் புதைந்தன. போக்குவரத்துக்கள் தடைப்பட்டன. வீதிகள் உடைந்தன. வெள்ளம் பார்க்க வரும் பிற இட மக்கள் வெள்ளமும் நிறைந்தன.

யாரும் யாருக்கும் ஆறுதல் கூறமுடியாத நிலை. இதற்குக் காரணம், வெள்ளத்தால் நீர்மட்டம் நிரம்பி வழிந்த மல்வத் ஓயாவின் அருகில் எம்மிருப்பிடம் இருந்ததுதான்.

இன்னும் தொடர்ந்து மழை பெய்தால், அந்நீரால் நாச்சதுவ குளம் நிரம்பி அவ்வூருக்குள் நீர் புகும் எனவும், இதனைத் தடுக்க அக்குள அணைக்கட்டு உடைக்கப்பட்டு குளநீர் வேறு திசைகளுக்கு பரவ விடப்படும் எனக் கூறப்பட்டது.

 மேலதிகமாக மழைபெய்து இவ்வாறு நாச்சதுவ குள அணைக்கட்டும் உடைக்கப்பட்டிருந்தால் , அநுராதபுர நகரின் பெரும் உட்பகுதிகளின் நீர்மட்டம் 10 அடிக்குயர்ந்திருக்கும். இதனால் இம்மக்களின் சொத்துக்கள் நீரால் உறிஞ்சப்பட்டிருக்கும்.

மனப்பீதியுடன், உயிரைக் கையில் பிடித்து வைத்திருந்த எம்முதடுகள் இறைவனைத் துதித்தவாறே இருந்தன. அல்ஹம்துலில்லாஹ்!

அன்று வான் கண்ணீரின் தாராளம் மக்களைச் சினக்க வைத்தது. இன்றோ சூரிய கதிரின்  தாராளமும் மக்களை சினக்க வைக்கின்றது.

அதிகமாகக் கிடைக்கும் எதிலும் ஆபத்துக்களே நமக்குள் குவிந்து கிடக்கின்றன எனும் அந்த சிந்தனையை  மனதுள் அழுத்துகின்றன இப்புகைப்படங்கள் ! 
                                   
                                                         வீதியில் வெள்ளம்




எங்கள் பக்கத்து வீட்டை மூழ்கடித்த வெள்ளம்


எங்கள் வீட்டு வளவு


எங்கள் வீட்டின் பின்புறம்


எங்கள் வீட்டின் முன்பகுதி


எங்கள் வீடு


அநுராதபுர பொலீஸ் விடுதி


                              அநுராதபுர சிங்க கணு அருகில்

           
             வெள்ளத்தால் மல்வத்து ஓயா நிரம்பி வழிதல்
                                                 
                                                     
                                             மிஹிதுபுர வீதி


கவி தந்த சோதரன்

 சகோதரன் கலைமகன் பைரூஸ் அவர்களின் பார்வையில் நான்----





அழிவதூஉம் மாறுவதூஉம் யாக்கை- பயனில
நட்டார்கண் ஒட்டுதலே திரு

சிற்றுடல்க்கு ஊங்கு முள்ளம், சிறுமைதான்
அன்புடை உள்ளம் உயரும்

அரிவை அறியவை போற்றுதல் அழகு
அறியாயின் பேதை எனல்

சிறுமை இளமை மூப்பு மூன்றின்கண்
வனப்பு நோக்க லிழுக்கு

போற்றினும் போற்றுக நல்லுளமே என்றும்
அழகினை நோக்கினின் அழிவு

ஜன்மத்திலேது பயன் அழகினையே உன்னின்
சிறுமைக் குணமல்லோ அறி

வேறு

அறிவிலுயர்ந்தவளாய் நல்லறிவு தருபவளாய்
அஞ்ஞானம் களைபவளாய் ஆதரவு தருபவளாய்
இறைமறை தனை நெஞ்சத்தி லேந்தியவளாய்
இன்னலூடும் இன்முகத்திலிருப்பவள் ஜன்ஸி

இளமை யின்பம் ஏதென்பவளாய் - இளசாய்
இதமாய் உளத்தை பேணியிருப்பவளாய்
கிழடு வந்தாலும் கூட பாசத்தின் உறைவிடமாய்
கிஞ்சித்தும் பெருமை யிளாதாள் ஜன்ஸி!

கிள்ளைமொழி தருபவளாய்- சீராய்ப்
பருவ மாறு கடந்தவளாய் ஆனாலும்
இல்லாத பேறுக்காய் ஏங்கமறுப்பவளாய்
இம்மையில் இனிதிருப்பவள் ஜன்ஸி!

சகோதரியாய் அன்பான சகியாய் - அக்காளாய்
சலனமிலாது வலம்வரும் இவள்க்கு வயதேது
விகாரமிலை உண்மை யன்பீதில் சொன்னேன்
விந்தை இவளுன்மை கண்டிடின் எலோரும்!

எல்லாமுந் தருபனை தந்திடு மூரினில்சீராய்
எழுத்தகரம் முதற்கொண்டு கற்றிட்டாள்
நிலையிலா பாரினை உன்னி தேவையதும்
தேவையிலை என தெம்மாங்குப் பாட்டிசைப்பாள்!

ஜன்ஸி இவள் ஜன்ஸிராணியின் வீரத்திற்றான்......
ஜன்ஸி இவள் இலக்கியராணிதான் தகைமிகு
ஜன்ஸி இவள் உருகண்டு உறவிலை எம்மில்
ஜன்ஸியின் உரு எவ்வாறிருந்திட்ட போதும்........

பேதையரை வழுத்தும் போதையிவன் என்பரோ
பேரே யழிந்திடினும் உண்மைக்கு கரம் நீளும்
நீதமாய் நல்ல படையல்கள் பல தரும்
பத்தினித் தமிழின் நல்லாளிவளை படிப்பேனே!

- தமிழன்புடன் சகோதரன் கலைமகன் பைரூஸ்
2012.09.05


(இன்று இந்திய ஆசிரியர் தினம் - ஆசிரியை எனும் தகையுடையாள் இவள்க்கு வாழ்த்துக்களுமுண்டு)

தமிழ்மொழியில் புலமை நெய்த
அழகுக் கவியின் ஆளுகையே!
உங்கள் கவி வார்த்தை கண்டு
புளாங்கிதத்தி லென் மனமின்று! - இவள் .....ஜன்ஸி


- Ms. Jancy Caffoor -

2012/09/04

கல்விச்சுற்றுலா


நான் கலந்து கொண்ட 2 நாள் கல்விச்சுற்றுலாக் காட்சிகள்

ஹக்கல பூங்காவில் பூத்த மலர்


தம்புள்ள விகாரையின் மேற்பகுதியில்


தம்புள்ள கோல்டன் டெம்பிள்


மிஹிந்தல மலை


                                              மிஹிந்தல

                                                             
                                                    அம்பேவல பாfம்


அம்பேவல பால்மாத் தொழிற்சாலை


Higland பால்மாத் தொழிற்சாலை


ஹக்கல தாவரவியற் தோட்டத்தில்


                                             தம்புள்ள விகாரை


                     தம்புள்ள Golden Temple முன்பகுதி


மிஹிந்தலயில் வைக்கப்பட்டிருக்கும் சிலை 


                                 ஹட்டன்  தேயிலைத் தோட்டம்


பேராதனை தாவரவியற் பூங்கா


   (நுவரெலியா செல்லும் பாதையில் ) நீர்வீழ்ச்சி


கெடிகே ஆலயம் 

                                 
                             பேராதனை பூங்கா தொங்குபாலம்                    


                              மகாவலி கங்கையின் ஓர் பகுதி




அந்த மலைநாட்டுச் சுற்றுலா நாட்கள் மறக்கமுடியாத மனப் பதிவுகள்
என்றும் என்னுள்.......



ஸாஹிரா சமூகம்

நான் கற்பிக்கும் ஸா.ம.வி  

என் தொழில் கூடமான இவ் அறிவியல் கூடமானது , பண்பாட்டுக்கூடம்  மட்டுமல்ல, கலைக்கூடமுமாகும்.


மரம் நாட்டு விழா


ஆசிரியர் தினவிழா


டெங்கு ஒழிப்பு வாரம்


                                     எனது செயற்றிட்ட தலைப்பு


                                           பாடசாலை முன்புறம்





                     பாடசாலைக் கட்டிட வழிகாட்டற் பலகை


பாடசாலைச் சின்னம்


மாணவர் கண்காட்சியின் போது


சிறுவர் தினம் - ஐஸ்கிறீம் வழங்கல்


விஞ்ஞானப் பாடப் பரிசோதனைக்கான எனது முன்னாயத்தப்படுத்தல்


எனது விஞ்ஞானப் பாடச் செயற்பாட்டிலீடுபடும் மாணவிகள்


                                            நுழைவாயிலின் முன்புறம்


2011- பரீட்சைக்கமரும் க.பொ.த சா/த மாணவர் பிரியாவிடை , ஆசி கூறும் வைபவத்தில்


பாடசாலை ஆசிரியர்களிற் சிலர்



பாடசாலை மைதானத்தின் முன்பகுதி


மாணவியர் கல்விச் சுற்றுலாவின் போது


            வகுப்பறைகளுக்குள் உட்செல்லும் பாதை



நுவரெலியா  கல்விச்சுற்றுலா



               சிறுவர் தினம் - மாணவர்கள்-  ஓர் பகுதி


காலைக் கூட்டம்



மாணவர் பாராளுமன்றத் தேர்தல்


                                                 பெற்றோர் சந்திப்பு


முன்னாள் அதிபர்


                                                           உதவி அதிபர்


என் சகோதர ஆசிரியர்கள் சிலர்