About Me

Showing posts with label தன்முனைக் கவிதைகள். Show all posts
Showing posts with label தன்முனைக் கவிதைகள். Show all posts

2021/04/21

காதல்

அன்பின் உணர்வுக்குள்

ஆரத்தழுவுமே காதல்

பிரிவின் வலிக்குள்

உயிரையும் வெறுக்கும்

2020/11/02

பாதை

 


1 பாதை

-----------

நீண்ட பாதையில்/

நிதானமாகப் பயணிக்கின்றேன்/

வாழ்வியல் அனுபவங்கள்/

வழிகாட்டிச் செல்கின்றன/


ஜன்ஸி கபூர் - 2.11.2020

 



 

2020/10/04

பிரியாவிடை

பிரியாவிடை

-----------------------

பிரிய மனமின்றிய/ 

பிரிவுகளைச் சிறப்பிக்கின்றேன்/

பெருமைகளையும் உரைத்தே/

அருமையாக உபசரிக்கின்றேன்/


ஜன்ஸி கபூர் - 04.10.2020



2. நினைவுகள்

-----------------------

நெஞ்சின் நினைவுகளை/ 

தினம் சேமிக்கின்றேன்/

அவை மீளப் பெறமுடியாத/

நிகழ்வுகளின் நிழல்கள்/  

 

ஜன்ஸி கபூர் - 11.10.2020






2020/09/25

குழந்தை

 


பஞ்சுக் கன்னத்தில் புன்னகை/

பிஞ்சு விரல்கள்/

சிரிக்கின்ற கண்கள்/

சிந்தையைத் தொடுகின்றதே கவிதைகளாகி/


ஜன்ஸி கபூர் - 25.09.20




2020/09/06

பண்பாட்டு வாழ்க்கை

தலைமுறை தந்த சொத்தாக/ 

பண்பாட்டு வாழ்க்கை எனக்குள்/

நல்லறத்தின் நற்பயனால்/

நற்குடியாக வாழ்கிறேன்./


ஜன்ஸி கபூர் - 06.09.2020



 

2020/07/12

தனிமை



தூரத்து நிலவும்////
தூங்காத விண்மீன்களும் துணையிருக்கும்////
விடியாத இருட்டும் அருகிருக்க////
மனதுக்குள் ஏது தனிமை////


ஜன்ஸி கபூர் - 12.07.2020