சூரியச்சிறகுகளில்
கரி தடவி...........
மௌனித்துப் போன வானம்
சேவலின் ஸ்பரிசத்தில்
சிவந்து போகின்றது!
காற்றின் சீண்டலில்
வெட்கித்துப் போன பூக்கள்..........
மயக்கத்தோடு
மௌனித்துக்கிடக்கின்றது!
சிட்டுக்களின் குரற் சலங்கையில்
சுருதி கோர்க்கும் மொட்டுக்கள் - தாம்
மெட்டமைத்த கிறக்கத்தில்
வண்டுகளின் முத்தத்தை
மொத்தமாய் உள்வாங்கத்துடிக்கின்றன!
பறவைகளின் சலசலப்பில்
உறக்கம் மறக்கும் விழிகள்!
ஊமையாகிப் போன ஊரும்
ஊசலாட்டம் காட்டுகின்றன!
இயற்கையின் தரிசனத்தில்
நேற்றைய சோகம் தொலைத்து - என்
நெஞ்சும்............
புது விடியலில் நாணிக் கொள்கின்றன
நயமாக!
-Jancy Caffoor -