About Me

2013/03/11

நீ

கிறீஸ் பிசாசே!
உன் தசை கிழிக்கும் புத்தியில்
இனவாதம் எட்டிப் பார்க்கின்றது!

தரித்திரத்தின் சரித்திரம் நீ
அரியாசனம் மிதிக்கின்றாய்
குருதியை உறிஞ்சியபடி!

நீ கருவறைக் கூடுகளைச் சிதைத்து
உயிரறுக்கும் காட்டேறி!

நீ முகமூடிச் சல்லாபத்தில்
முணங்கிக் கிடக்கும் சாத்தான்!

நீ
நகங்களில் ஆணி பூட்டி
நடுசாமங்களில் ஊர்ந்து செல்லும்
நாகம்!

நீ
துப்பாக்கி ரவைகளில்
அப்பாவிகளை நிரப்பும்
ஆட்கொல்லி!

நீ கற்றாளைப் பாலில் உணவூட்டி
கல்பை விஷமூட்டும்
பாதகன்!

நீ ஆறடிக்குள் ஆன்மா அடக்க
வருந்தாத பூதம்!

உன் மயான கிடங்குகளைத் தீ மூட்ட
வாய் பிளக்கின்றன
அக்கினி நட்சத்திரங்கள்!

உன் அதர்ம மூச்சடக்க
இதோ நாம்!
ஈமானிய உச்சரிப்புக்களுடன்!



- Jancy Caffoor-

     31.11.2013

2013/03/10

இனவெறி


இடம் : food city (Anuradhapura)

காலம் : 05.03.2013

சம்பவம்:

ஒரு கிப்பி வந்தான். அவன் தோற்றம் ரௌடி என்பதைப் பறைசாட்டிக் கொண்டிருக்க, பார் கவுண்டருக்குள் கை நீட்டி உயர்தரமான மதுபான வகைகளை வாங்கியவன், தின்பதற்கு சில நொறுக்குத் தீனிப் பக்கெற்றுக்களையும் வாங்கினான். திடீரென பக்கெற்றுக்களை உற்றுப் பார்த்தவன்........


"இதுல ஹலால் போடப்பட்டிருந்தா எனக்கு வேணாம்" 

 என சிங்களத்தில் கத்தினான்"

"நாங்க சிங்களவர்" என்று புன்னகைத்தான் அவன். அவன் கெட்ட கேட்டுக்கு இந்த பெருமிதம் வேறு...........

இப்படி இனவாதம் பேசுறவங்களுக்கு செருப்படி போதாது. துப்பாக்கிச் சூடுதான் போடனும்..........

இலங்கையை சிங்களவர் தங்களுக்கு சொந்தம் கொண்டாடினால், அப்ப நாங்க எங்க போறதாம்........

ஹலால்.....பேசுற இவன மாதிரி ஆட்களுக்கு ஹராமான வழியிலதான் மரணம் கிடைக்கனும்.

ஆனால் அதே பூட் சிட்டி வாசலில் நின்ற சிங்கள வாயிற் பாதுகாவலன், அந்த இனவாதியைப் பார்த்து என்னிடம் கூறினான் "அவன் பைத்தியக்காரன் "

ஒரே இனத்துக்குள் வித்தியாசமான எண்ணவோட்டங்கள்....

துளிகள் - 1

 

மகளிர் தினம்

பெண்.................!

சுற்றிச் சுழலும் பூகோளத்தின்
அச்சாணி!

உயிரணுவுக்குள் உரு கொடுத்து
காத்திடும் தாய்மை!

அத்தகைய பெண்மைக்காக உலக நாட்காட்டியில் ஒதுக்கப்பட்ட தினமே இந்நாள்!

அன்று............

பெண்ணடிமைத்தன வீச்சங்களால் கறைபட்ட காலங்கள் அடக்குமுறைகளும் அவஸ்தைகளும் பெண்ணவள் பிரதிபலிப்புக்களாக உருமாற்றப்பட்ட காலங்கள்!

அத்தகைய சூழ்நிலைகளின் போது.....

1789-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி பிரெஞ்சு புரட்சியின் போது சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்று கோரிக்கைகளை முன்வைத்த பாரிஸ் பெண்கள் 
 
வேலைக்கேற்ற ஊதியம், 
எட்டு மணிநேர வேலை, 
பெண்களுக்கு வாக்குரிமை, 
பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும்

என்று பாரிஸ் தெருக்களில் கைகளில் கிடைத்த ஆயுதங்களுடன் பிரான்ஸ் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! 

இவர் போராட்டம் கண்டு அஞ்சாத அரசன், 'இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும்' ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான். ஆனால் ஆத்திரமடைந்த பெண்கள் கூட்டத்தினர் தம் மீது அடக்குமுறை விதிக்கும் அரசனின் மெய்க் காப்பாளர்கள் இருவரை கொன்று விடவே, அரசன் சற்று அதிர்ந்து பணிந்து அவர்களின் கோரிக்கையை ஏற்பதாகக் கூறிய அரசன் தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத நிலையில் அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான்.

இந்தச் செய்தி ஐரோப்பிய முழுவதும் பரவ, போராட்டமானது இன்னும் பலமடைந்து, கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் போன்ற நாடுகளிலும் பரவியது.

இத்தாலியிலும் பெண்களும் தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு போராட்டக்களத்தில் இறங்கினர். 

இவ்வாறான முறுகல் நிலைகளின் போது,

பிரான்ஸ், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். 

அந்த நாள் 1848-ம் ஆண்டு மார்ச் 8-ம் நாளாகும்! அந்த மார்ச் 8-ம் நாள் தான் மகளிர் தினம் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது. 

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இதுவென்றாலும் பெண்ணடிமைத்தனம் முற்றாக இன்னும் அறுத்தெறியப்படவில்லை.