About Me

2013/05/04

ஏன் தானோ


வேர் தந்த பெற்றோர் மறுத்து
நேற்று முளைத்த காதலோடு சரசமாடி
உற்றார் வெறுத்து நிற்போர் மனசு
பாழடைந்த கல்லறைச் சாலை!

தொப்புள் நாண் அறுத்தெறிந்து - தமக்கென
தொட்டில் குழந்தை தான் வார்ப்போர்
பாவத்தின் சிலுவைதனை போர்த்துகின்றனர்
தம் பரம்பரைக்கே!

மலர் வாசம் வீசும் பாசம் - என்றும்
நமக்குள் அழகான பசுமைக் கோலம்
வளமான வாழ்க்கை வாழ
பெரியோர் ஆசி வேண்டுமென்றும்!

- Jancy Caffoor-
      04.05.2013

2013/05/02

சட்டம்


சிறுபான்மைக்கு அநீதி விளைப்பார்
உரிமை மறுக்கும் பெரும்பான்மை!
எதிர்த்துக் குரல் கொடுப்போர் பயங்கரவாதியாம்!
ஏக்காளமிடுகின்றதய்யா இனவாதம்!

கண்கொத்திப் பாம்புகள்
தன்னினத்திற்கு கரி பூசுவார் சொகு வாழ்விற்காய்!
காட்டிக் கொடுக்கும் வல்லுறுக்கள்
வந்தமரும் உயர் பதவிகளில்!

சட்டத்தில் அறைகின்றனர் அதர்மங்களை!
ஏட்டளவில் சத்தியம் கதறுதைய்யா - நம்
மன எரிமலைக் குழம்பின் அகோரத்தில்
கருகிப் போகுமோ சட்டத்தின் ஓட்டைகள்!


- Jancy Caffoor-
      02.05.2013

யாரோ


வெடிக்கின்றது மேகம்
வெற்றி பெறப் போவது
விண்ணா மண்ணா!

புவிக்குள் மின்சாரம் பாய்ச்சி
வேவு பார்க்கின்றது மின்னல்
தோற்றது யார் காற்றா நாற்றா!

புழுதிக்குள் கூத்தடித்த மலர் மேனி
குளிருக்குள் விறைத்துக் கொள்ளுது
அழுக்குக்காகவா அழகுக்காகவா !

இங்கோ மழையோ மழை!
எட்டு திக்கெங்கும் முரசறையும்
கொன்றல் சத்தத்துடன்!

- Jancy Caffoor-
      02.05.2013

2013/05/01

புரிதலின்றி


பேசித் தீர்த்துவிடு
நம் வாழ்வை நம் முன்றலில்!
இல்லையென்றால்
பிளவுபடுவது நாமல்ல - நம்
வளமான குடும்பம்!

சமாந்தரங்களாய் நாம் பயணிக்கையில்
நம் குழந்தைகள்
எதிர்காலம் முடிவிலியில்!

மனசு பார்த்து இணைந்த நாம்
இன்று
சட்டம் பேசி நிற்கின்றோம்
வாழ்வை சிறைப்பிடுத்த!
வனப்பைச் சிதைக்க!!

விவாகத்திலிருந்து விமோசனமா
இல்லை
விவாகரத்திலிருந்து விடுதலையா!
புதிராகி நீ எனக்குள்!

சொல்லிவிடு
நல்ல பதிலை!
என் மரணத்திற்காய்  நாள் குறிக்கும்
உன்னிடம்தான் கேட்கின்றேன்!


- Jancy Caffoor-
     30.04.2013