About Me

2014/08/16

அந்தக் கடைசி நிமிடங்கள்



அந்தக் கடைசி நிமிடங்கள்
----------------------------------------------
இருள் கௌவும் நேரம்.....

உடல் அதிகமாக வியர்க்கும் உணர்வு. மெல்லத் தலையை உயர்த்த முயற்சிக்கின்றேன். முடியவில்லை.

உஷ்ணம்................

மூச்சுக் காற்றில் உட்காந்து விளையாட ஆரம்பித்தது. ஆனாலும் வியர்வையால் நனைந்து போன உடல் மட்டும் ஜில்லென்று....

"ம்"

முனகுகின்றேன்.....

கண்களில் கண்ணீர் கன்னம் வழியே கோடு கிழிக்க...

மனசும் உப்புக் கரிக்கின்றது.

"ஓவென" கத்த வேண்டுமென்ற உணர்வு!

இறுதி ஊர்வலத்திற்காக டாக்டர் நாள் குறித்தாகியாச்சு..இந்தப் பூமியை விட்டு நீங்குவதற்கு ஏதோ ஒரு காரணம் கிடைத்து விடுகின்றது..

நிமிடங்களின் நச்சரிப்பையும் பொருட்படுத்தாது இதயம் மீண்டும் துடிக்கின்றது..

"வலியால் மெல்ல முனங்குகின்றேன்"

"மாரடைப்பு" எனக்கும் நாள் குறித்து விட்டதா...

மரண வலியிலும் என் கண்கள் பனிக்கின்றன. இதயத்தின் மாறுபட்ட துடிப்பை என்னால் உணர முடிகின்றது.

அது வலியா.........அழுகையா!

என்னைச் சுற்றியுள்ள கூட்டத்தை விலக்கி கண்கள் இரகஸியமாக அவனைத் தேடுகின்றது..

"அவன் வருவானா"

நப்பாசையில் விரிந்த மனதை, பகுத்தறிவு அடக்குகின்றது..

"இந்த இறுதி ஊர்வலத்தை அவனுக்கு யார்தான் அறிவிப்பார்கள். பக்கத்திலா இருக்கின்றான். கண்கலங்கி விடையனுப்ப!

இதயம் மீண்டும் வலிக்கின்றது..

"அவன் நினைவுகள் வாழ்ந்த கூடு அது. உயிர்ப்போடு ஆசைகளையும் கனவுகளையும் செல்லச் சண்டைகளையும் சேமித்த கூடு அது"

கண்கள் நனைவதையும் பொருட்படுத்தாமல், விழிகள் நிரந்தரமாக மூடத் தொடங்குகின்றன...

அவன் நாளை என்னைத் தேடி வருவான். அதுவரைக்குமாவது என் இற்றுப் போன இதயம் துடிப்பை மறக்கலாமா...

ஆத்மாவின் ஓலம் புலப்படாமலே, வெறும் மெய்க்கூட்டை நால்வர் சுமந்து செல்கின்றனர் கண்ணீருடன்!

கைவிலங்கு


உன்னைச் சுற்றும் சிலந்தி
நான்....
சிறைபடுகின்றாய் தினமு மென்
பார்வைக்குள்...!

விடுதலை யுனக் கிருந்தும்
நீ ......
விரும்பிக் கிடக்கு மென் சிறையின்
கைவிலங்காய் என் அன்பு!

Jancy Caffoor

நாங்கள்

விடை தேடும் விடுகதையொன்று!

நாங்கள் 
தினமும் சண்டை பிடிக்கின்றோம்!

ஆனால்
நாங்கள் விரோதிகளல்லர்!

நாங்கள் 
அன்பாகவும் சில நேரங்களில்
பேசுகின்றோம்!

ஆனால் 
நாங்கள் நண்பர்களுமல்லர்!

நாங்கள் யார்?

உணர்வுகள்



நம் உயிர் வாழும் கூடு மெய்
இருந்தும்....
மெய் யன்பில் நாட்டமில்லா வாழ்வோர்தான்
அதிகம்...
இந்த பொய் உலகில்!
-------------------------------------------------------------------------------------

நாம் பெறும் அனுபவங்களே உணர்வுகளில் பதிந்து நமது செயல்களாய் இயக்குகின்றன. எனவே நாம் எவ்வாறு நம்மை நினைக்கின்றோமோ, அவ்வாறேதான் பிறரையும் நினைப்போம்..

நமது எண்ணங்களுக்கும், யதார்த்த சூழலுக்கும் இடையில் ஏற்படும் இடைவௌிகளே மனக்குழப்பங்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும்.....

எனவே................

நல்லதையே நினைப்போம்!
-----------------------------------------------------------------------------------

பல வருடங்களாக களிப்போடு
சிறகு விரித்த என் கல்விச்சாலை...இன்று
சிறைக்கூடமாய்!
யார் செய்த தவறிது!
----------------------------------------------------------------------------------
அன்று ன்னை
என் தனிமைக்குள் நிரப்பி வைத்தேன்

ஆனால்....

இன்று .....

தனிமையோ....
துணையின்றி!
---------------------------------------------------------------------------------

சில புதிர்களுக்கு இப்பொழுதுதான்
விடை கிடைத்திருக்கின்றது!

காத்திருந்து இற்றுப் போன இதயம்
காலனிடம் மண்டியிடாமல்...
காலம் காயம் ஆற்றட்டும்!
--------------------------------------------------------------------------------
எல்லாம் கடந்த பின்னர்தான்
வாழ்க்கை பற்றிய தேடல் ஆரம்பிக்கின்றது!
விளைவாய்..........
விரக்திக் கோடுகள்!
அவை...............
அழியா வரங்கள்!
-----------------------------------------------------------------------------
என் குடும்பம்
என் கணவன்
என் பிள்ளைகள்
எனும் "என்' பற்றிய சுயநலத்தினால் பொறாமையும், பாவங்களும், விரோதங்களும் உருவாகின்றன. இச்சுயநலம்தான் உறவுகளுக்கிடையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன.

- Jancy Caffoor -