About Me

2014/09/20

தூறல் - 2

கூடு விட்டு தாண்டி வந்தேன்
உன் நெஞ்சவீடும் எனக்கில்லையே
குழந்தையாய் நானிருந்தால்
குற்றம் நீயும் காண்பாயோ!
---------------------------------------------------------- 

உதயத்தில் ஓர் அஸ்தமனமாம்..
உன்னால்
உருக்குலைந்த என் னுணர்வுகள்
இன்று
நடைபயில்கின்றன மயானம் தேடி!
----------------------------------------------------------- 
முற்றுப்புள்ளிகள் வெறும் நிறுத்தமல்ல
அடுத்த தொடரை ஆரம்பிப்பதற்கான அழைப்பு!
---------------------------------------------------------- 

சிலரது ஏமாற்றம் தரும் தடுமாற்றம்கூட
நல்லதோர் வாழ்வுக்கான மாற்றமாகலாம்!
-------------------------------------------------------- 

ஒருவர் நம்மீது கொள்ளும் மரியாதை யினளவை
நாம் பேசும் வார்த்தைகள்தான் தீர்மானிக்கின்றன!


- Jancy Caffoor-




வலி



மனதை திறந்த புத்தகமாகத்தான் வைத்திருந்தேன். அதனாற்றான் காற்றின் சீண்டல்களாய் நம் வார்த்தைகள் உரசிச் சென்றதில் உரிமை கோருகின்றன சண்டைகள்!

சண்டைகள் சாக்கடைகள்தான்!
இருந்தும்.........
திரும்பிப் பார்க்க வைக்கின்றன அன்பை!
-----------------------------------------------------------------------------------------

வார்த்தைகளின் போதுதான்
மௌனத்தின் மதிப்பு தெரிகின்றது!

மௌனத்தின் போதுதான்
வார்த்தைகளின் அருமை புரிகின்றது!!

ஆகவே.....
சந்தர்ப்பங்களும்  சூழ்நிலைகளும்தான்  நம்மை பேச வைக்கின்றன!
-------------------------------------------------------------------------------------------
மௌனம்
தனிமையின் மொழி!
தனிமையோ
வலிகளின் வழி!
--------------------------------------------------------------------------------------------

மொழியும் ஒலியும்
மௌனம் கொள்ளும் நேரம்...
தனிமை எனக்குள்
இனிமையின்றி!
-------------------------------------------------------------------------------------------

பிரச்சினைகளைப் புரிந்து விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் வலி இருந்தாலும்கூட, அடுத்தவர் சந்தோஷம் உணர்தலும் ஒர் இன்பமே!
--------------------------------------------------------------------------------

அவமானங்கள் தரும் வலிகூட கடும் உழைப்பால் முன்னேற்றத்திற்கான வழியாகலாம்!


- Jancy Caffoor -




தூறல்

கலைஞனுக்கு....
நம்பிக்கை இன்னும் இருக்கின்றது
நடைபாதையோரம் வீழ்ந்து கிடக்கும் கற்களைச் செதுக்க
உளிகள் கிடைக்குமென்று!

தேடல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும்போது
கற்கள்கூட
சிலைகளாய் நிமிர்ந்து நிற்கும்!



-------------------------------------------------------------------------------------

உருச் சிறிதுதான் சிலந்திக்கு...
இருந்தும்......
விடா முயற்சியின் விழுதுகளாய்
அதன் கரங்கள்!

நானும் சிலந்திதான்...

தோற்றுப்போகும் வலைகளுக்குள்ளும்
தொட்டுக் கொள்ளத் துடிக்கின்றேன்
வெற்றிச் சாயல்களை!

------------------------------------------------------------------------------------

உருவம் தேடா உணர்வின் தொகுப்பாய் - மனதுள்
உருண்டோடும் சந்தோஷ சிலிர்ப்புக்கள்தான்
பெயர் கொண்டதோ

 "அன்பென்று"!
-------------------------------------------------------------------------------------

வலி...........

பலருக்கு
கண்ணீர் தெறிக்கும் வழி!
சிலருக்கோ
தன்னம்பிக்கை செதுக்கும் உளி!
--------------------------------------------------------------------------------------

மனம் வெறும் இரும்பல்ல இறுகிக் கிடக்க..
உணர்ச்சிகளின் கலவை!

அதனாற்றான்

அறியாமை, அவசரம் தரும் பல முடிவுகளை நமது சிந்தனை மாற்றி விடுகின்றது!


- Jancy Caffoor -

சாரல்


எப்படியும் வாழலாம் என்பதை விட,
இப்படித்தான் வாழ வேண்டும் எனும் வாழ்வில்தான் நமக்கான
அழகான வாழ்க்கை காத்திருக்கின்றது!


---------------------------------------------------------------------------------------------

இரவின் புன்னகை
அழகாககத்தான் தெரிகின்றது நிலவினில்...
இருந்தும்....
உன் மௌனச் சாம்பலி லென்னைப் புதைத்து
நிசப்தத்தின் முணுமுணுப்பில் - மூச்சுக்
காற்றின் விசுவாசத்தை
மோசமாக்கத் துடிக்கின்றாய்.........
நானொரு
பீனிக்ஸ் பறவையென்பதை யறியாமல்!


----------------------------------------------------------------------------------

காலத்தின் மடியில் நமது கனவுகள், காயங்கள், சோகங்கள் ஏமாற்றங்களை பரப்பி விட்டு வலியில் துடித்து நிற்கின்றோம்.

ஆனால்

அதே காலம்தான் அவற்றை மறக்கச் செய்து நமக்குள் புது நினைவுகளை முகிழ்க்கச் செய்து நடைபயிலச் செய்கின்றது இயல்பாய் வாழ!
----------------------------------------------------------------------------------------------------

கீழ்திசை!

தொட்டுச் செல்லும் சூரிய விரல்களில் தோய்ந்த என் நிழலும், தூசு துடைத்து ஔிரத் தொடங்கியுள்ளது லேசாய்

இருள் நிரந்தரமல்ல

இயற்கை விட்டுச் செல்லும் நியதியினில்!
இறையருள் போதும்
உறைந்து கிடக்கும் சோகங்கள் உருக்க!

- Jancy Caffoor -