About Me

2014/10/29

தீபாவளி


பட்டாசு வெடிக்கின்றது
இங்கும்.....
வீட்டுத் திக்கெங்கும் அக்னி பிரளயம்....!
வார்த்தை ஞாலங்களின் மோதல்கள்
எரிபொருளாகி...வெறுப்புத்
தீபங்கள் எரிகின்றன தினமும்
ஆனால்.....
அசுரன் அழிந்ததாகத் தெரியவில்லை!



ஆஹா


புகழை தனக்குள் அடிமைப்படுத்தாதவர்.........
ௐருபோதும்.........
 பிறரால் இகழப்படுவதில்லை

--------------------------------------------------------------------------------------------------
தோல்விகள்தான் நமக்குப் பாடங்களைப் புகட்டிக் கொண்டிருக்கின்றன.
ஏனெனில்   தோல்விகள் ஏற்படும்போதுதான் நாம் நமது குறைகளைத் திரும்பிப் பார்க்க ஆரம்பிக்கின்றோம்!
--------------------------------------------------------------------------------------


புறம் நோக்கும் நம்  கண்கள் கொஞ்சம் 
அகமும் நோக்கட்டுமே
அப்பொழுதுதான்
அடுத்தவர் நம்மைக் கணிக்கும் எடையை 
நாமே பார்வையிட முடியும்!
--------------------------------------------------------------------------------------------


குளிரோடு சேரும்
உன் நெஞ்சின் பாசம்
பனித்துகள்களாய் உருகி - நம்
நினைவுகளை 
உலர விடாமல் காக்கும்!
ஆனால்
அழகான இந்த இரவில்
நம்மை ரசிக்க
பௌர்ணமியும் இருந்துவிட்டால்!
-------------------------------------------------------------------------------------------


அழகான பூக்களுக்கு
முட்கள்தான் பாதுகாப்பென்றால்
அருமையான வாழ்வுக்குள்ளும்
அர்த்தமுள்ள கட்டுப்பாடுகளும் அவசியம்!
-------------------------------------------------------------------------------------------

நேரம் என்பது!
வெறும் கடிகார முட்களலல்ல. நாம் பயணிக்கப் போகும் செயல்களின் வெற்றித் தன்மைக்காக பயன்படுத்தப்பட வேண்டிய காட்டி!
---------------------------------------------------------------------------------------------------


யாரை அதிகமாகப் பிடிக்கின்றதோ
அவர்களிடம் தோற்றுத்தான் போகின்றோம்
 எமது எதிர்பார்ப்புக்கள்
அவர்களால் நிராகரிக்கப்படும்போது
தோற்றுத்தான் போகின்றோம்!

ஆனால்

தோற்றுப் போகும்போது கிடைக்கும் ஒவ்வொரு அடியும்
நம்மையும் செதுக்கின்றது - நம்
வாழ்வைப் புரிந்து
வாழப் பழகிக்கொள்வதற்கு!
-----------------------------------------------------------------------------

தாய்நாடு நமக்கொரு அடையாளம்.......
நம்மைப் பராமரித்து அடை காக்கும் குருவிக்கூடு!

----------------------------------------------------------------------------------------

ௐரூவரை விரும்ப ௐர் காரணம்
அன்பு.....
வெறுக்க பல காரணங்கள்

-  Jancy Caffoor -

2014/10/17

மகுடம்


காலையில் மலர்ந்து மாலையில் வாடி விழும் பூவல்ல வாழ்க்கை.
அதுவோர் நீண்ட தேடல்!
தேடும் மனமிருக்கும்போதுதான் தேவைகளுக்கான விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்றன. நம்மில் பலர் முடியாது என்ற எண்ணத்தில் 'பலத்தை' யெல்லாம் இயலாமையாக்கி விடுகின்றார்கள்!
-------------------------------------------------------------------------------------
காதலையும் கடந்த அன்பு.........
நமக்குள் இருப்பதனால்தான்...
இன்னும் பேசிக் கொண்டிருக்கின்றோம்
வலிகளையும் பகிர்ந்தபடியே!





வலி தீர்க்கும் மருந்து
அன்பான இதயங்களுடன் மனம் விட்டுப் பேசுவதில் இருக்கின்றது.
ஏனெனில் மனசுக்குள் மறைந்திருக்கும் ஆயிரம் பிரச்சினைகளை அறுத்தெறியும் வாள் இவ் அன்பானவர்களின் பேச்சிலிருக்கின்றது!


மொழியீர்ப்பு மையத்தில்
வீழ்ந்து கிடக்கும் நம்மை....
அண்டவௌிகளும்
அதிசயத்துப் பார்க்கின்றன
அன்பின் ரகஸியம் தேடி!


எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரைக் குற்றம் சொல்லுபவர் பிறர்விமர்சனத்தில் காணாமல் போகின்றார்கள் அல்லது கல்லெறி வாங்குகின்றார்கள். ஏனெனில் இவர்கள் பிறர் குறை பறைசாற்ற முன்னர் - தம் கறை அகற்றாதவர்கள்!


சுயநலம்!
.
நமக்குள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான்  தடைகளையும் உடைத்தெறிந்து நம்மை அடுத்தவருக்கு அடையாளப்படுத்தும் உந்துசக்தி கிடைக்கும். ஆனால் அச்சுயநலத்தால் அடுத்தவர் நலம் அழியக்கூடாது!



-  Jancy Caffoor -

2014/10/12

மனதின் நெருடலாய் ஓர் பார்வை




அடடா..............!
பார்வைகளின் வசீகரத்தில்
மனங்களில் எழுதப்படும் அழகான கவிதை
"அன்பு"

---------------------------------------------------------------------------------------------


வீணாய் உதிர்ந்து கொண்டிருக்கும்
பணத்தின் அருமையை
கசிந்துகொண்டிருக்கும் உன் வியர்வைத்துளிகள்
உணர்த்துகின்றன தினமும்!

உன் வியர்வையும் - என்
தவறின் கண்ணீரும்
ஒன்றாய் இணைகையில்
கர்ப்பம் தரிக்கின்றதென்
"உண்டியல்"


திறமைகள்தான் மனிதர்களை அடையாளப்படுத்துகின்றன. நூலைக் கற்றுக் கொண்டவன் பதவிகளில் அலங்காரமாகத் திகழ உழைப்பினைக் கற்றுக் கொண்டவன் திறமைகளால் தன் முதலீடுககளை உயர்த்திக் கொண்டிருக்கின்றான். முயற்சியுடன் கூடிய எத்தொழிலும் சாதனைகளால்தான் நிரப்பப்படுகின்றன. அரிசியில் பெயரெழுதும் கலையைப் பாராட்டத்தான் வேண்டும்!


எட்டியுதையும் கால்களைக் கூட
கட்டித் தழுவும் குழந்தைப் பாசம்.....
மாசற்ற தேன்துளிதான்!


இருளுக்கும் விழியாகும்
மெழுகுவர்த்தியே
ஔி கொடுத்தே
பலி கொள்ளும் நீ கூட

உதாரணமாய் எம்மிடத்தில்
"நன்மைக்குள்ளும் தீமையுண்டு"

பிரித்தறிவோர்
பாராளும் முதல்வர்கள்!





நவீன தொலைபேசியில்
எல்லாம் இருக்கின்றதுதான்!
ஆனால்
அழைப்புக்களை எடுக்க மட்டும்
நேரமில்லை


-  Jancy Caffoor -