About Me

2015/03/21

மனவரிகள்


நம் வலிகளை உறிஞ்சி - அவற்றை
புன்னகையாக மாற்றித் தரும் இதயம்
"அம்மா"
--------------------------------------------------------------
கோழி யுரித்துச் சிவக்கும்
உன் கைகளின் தழும்பாய்
எப்பொழுது மிருக்கட்டு மென் உதட்டுன் ஈரம்!
---------------------------------------------------------------
பொய்யோடு மோதும்
மெய்கூட
நோய் வந்து சாய்கையில்
மெய்யன்பு ஆரத்தழுவும்
தன் சேயாய்
----------------------------------------------------------------

நீ நீயாகவும்
நான் நானாகவும் இருந்தால்
நாம்
யாரோவாகப் போகின்றோம்
----------------------------------------------------------------

முகில்கள் தரை இறங்குகின்றனவோ
முகம் மூடும் வயல்களில்
மெல்லக் குட்டுகின்றன பனித்துளிகள்!
---------------------------------------------------------------

கிழக்கின் மையலில்
ஒளிரும் ஒளிப்பொட்டின்
அழகை
அம்பலப்படுத்தும் இரகஸியங்களோ
ஐதரசனும் ஈலியமும்!
---------------------------------------------------------------

பொங்கி வரும் அலைகள்
தாங்கி வரும் சிற்பத்தில்
பொறிக்கின்றேன் என்
உதடு சுமக்கும் சினமதை!
---------------------------------------------------------------

சுயநலமான இவ்வுலகில்
எல்லோர்மீதும் வெறுப்பாய் உள்ளது!


- Jancy Caffoor-
      20.03.2015




பெருமூச்சு

தும்புத் தோரணங்கள் - எங்கள்
குறுவீட்டின் சாளரங்கள்!

மூச்சைக் கோர்த்து விடும் காற்றில்
ஊஞ்சலாடும் தொட்டில்கள் அவை!

அவஸ்தைகள் தரவு மில்லை
எவர் குடியும் கெடுக்கவுமில்லை

சின்ன அலகு தேய்க்க
உணவும் கேட்கவில்லை

விரட்டுகின்றீர்கள் எங்கள் இல்லங்களை
அறுக்கின்றீர்!

நிழல் தர எமக்கு மரங்களுமில்லை
நிம்மதியான மடமுமில்லை

சிறகறுக்கும் உங்கள் முன் - எம்
உறவு  தொலைத்தோ டுகினறோம்!

இருந்தும்

எம் குரல்ளை நெரிக்கு முங்கள்
கரங்களில்
குருவிச் சப்தங்கள் அழைப்பொலிகளாக!


- Jancy Caffoor-
 
.

2015/02/27

மனசு



முருங்கை  இலை மென்று
சுருங்கி உறங்கி வளரும் மயிர்க்கொட்டியின்
கருமேனி  கண்டு
அருவருப்போடு பீதிசேர்த்து ஒதுங்கும் மனசு...
பறந்தோடும் வண்ணாத்தியி னழகில்
இறுமாந்து கிடக்கின்றது!


- Jancy Caffoor-
  27.02.2015

தொல்லை

தவழும் குழந்தைக்கு
கட்டுக்காவல் தொல்லை...

பருவ வயதில்
பருக்கள் தொல்லை....

வாலிபம் வந்தால்
காதல் தொல்லை.......

குடும்பஸ்தனுக்கோ
எடுக்கும் சம்பளம் தொல்லை...

வயோதிப மானால்
தள்ளாடும் தேகம் தொல்லை....

எல்லையில்லா தொல்லைகள்
இல்லாதவருண்டோ வாழ்வில்!



- Jancy Caffoor-