தென்னையை வைத்தால் பலன் கண்டு செல்வார்கள்
பனையை நட்டால் பார்த்துவிட்டுச் செல்வார்கள்
நிலத்தடி நீரைப் பதப்படுத்தி நமக்கே/
தலையால் தருமே நுங்காகி இனிக்க/
மடி பூக்கவே பல ஆண்டுகள்/
இடி தாங்கியே மழையும் பூக்கையில்/
கருணைத் துளிகளாய் கற்பக விருட்சமே/
காத்திடுவோம் பாரம்பரியத்தை சந்ததிகளுக்கும் கையளிப்போம்/
ஜன்ஸி கபூர்