About Me

2020/09/05

பனைமரம் - பழமொழிக் கவிதை

 


தென்னையை வைத்தால் பலன் கண்டு  செல்வார்கள்

 பனையை நட்டால் பார்த்துவிட்டுச் செல்வார்கள்

 

நிலத்தடி நீரைப் பதப்படுத்தி நமக்கே/

தலையால் தருமே நுங்காகி இனிக்க/

மடி பூக்கவே பல ஆண்டுகள்/

இடி தாங்கியே மழையும் பூக்கையில்/

கருணைத் துளிகளாய் கற்பக விருட்சமே/

காத்திடுவோம் பாரம்பரியத்தை சந்ததிகளுக்கும் கையளிப்போம்/


ஜன்ஸி கபூர் 



 


வலிமைக் கழகு செயல்

 


சிறகை வருத்தி உடலும் வருந்த

பறக்கின்ற கழுகைத் துரத்துகின்றதே காகம்

துறந்திடாத பகைமையினில் வான் தாக்குதலோ

அறமில்லா பழி வாங்கல் ஆகாயத்தினில்


வலிமைக் கழுகு இலக்கின் பற்றே

எளியோர் செயலுக்கும் சினமது வீணே

உயர்ந்த வானும்   காகத்திற்கு ஒவ்வாதே

உயரப் பறந்ததே கழுகும் வென்றிட


உடலும் அறிவும் கொண்ட வலிமை  

உயர்த்திடுமே வாழ்வினில்  துரத்திடுமே இன்னலையும்

விரட்டிடுமே பகைமைதனை மதியின் நுட்பமே

விழைந்திடும் வெற்றியின் தடத்திலும் வீரமே


ஜன்ஸி கபூர்  



  •  

சமுதாயச் சிற்பிகள்

 சமுதாயச் சிற்பிகள்

-------------------------------

எண்ணும் எழுத்தும் சிந்தையில் பிசைந்து/

பண்பிலும் நடத்தையிலும் அழகினைப் பதிந்து/

கற்பித்தலுடன் தானும் இற்றையுடன் கற்றே/

தன்னம்பிக்கையுடன் ஆற்றலையும் மாணவருள் பதிக்கும்/

ஏணியாகும் ஆசான்கள் சமுதாயச் சிற்பிகளே/


ஜன்ஸி கபூர் - 05.09.2020



நிலாச்சோறு

 அலைகள் பூக்கும்

நுரைகள் சிரிக்கும்

மகிழ்ச்சி


அவனும் அவளும்

ரசித்தே நடந்திடும் 

பொழுது


கண்கள் சிரிக்கும்

கனவுகள் ரசிக்கும்

ஏக்கம்;


எண்ணம் ஏங்கும்

இதயம் துடிக்கும்

தயக்கம்


கரங்கள் இணையும்

உறவும் மலரும்

காதல்



ஜன்ஸி கபூர் - 04.09.20