About Me

2012/12/14

கண் வழியே


முகம் காணா  நேசங்களின்
தேசம்!

தொலைதூர நிழல்களின்
சங்கமம்!

மின்னஞ்சல்கள் வழி திறக்க
விழி காட்டும் முகங்களிங்கே!

மின்காந்த  அலையோரம்.......
சலசலக்கும் குசலங்கள்!

வாழ்த்தும்  உள்ளங்கள்..........
தாழ்ப்பாளிடும் பேதங்களை!

நேசமிங்கே இலவசம்தான்............நல்
 நெஞ்சங் கொண்டோர்க்கு!

விழி கசியும் நீருறிஞ்ச- பல
கைக்குட்டைகளிங்கே!

மலரின் மௌனங் கூட
மொழி பெயர்க்கப்படும் நேசமாய்!

இங்கே...........!

இரவின் விழித் திறப்பில்
கிறங்கிக் கிடக்கும் "சட்"கள் !

பாசத்தோடு "மெஸேஜ்"
கோஷமிட்ட லையும்!

"லைக்கும்". "கொமாண்ட்ஸூம்"
சிரிக்கும் அன்பைச் சுமந்து!

காதலும் காமமும் கூட
கழுகாய் காத்திருக்கும்!

 நட்பின் சுகத்தில்
மனசும் திளைக்கும்!

அரசியல் மேடும்
அதிரடி போடும் அந்தரங்களை!

கருத்துக்களும் படிப்பினைகளும்
பின்தொடரும் நம் சுவரோரம்!

குழுக்களின் கும்மாளத்தில்
குஷியாய் எண்ணங்கள் பறக்கும்!

"பேஜ்" எல்லாம்
பேஷாய் நம்மை எட்டிப் பார்க்கும்

பேந்தப் பேந்த முழிக்கும்.........
பேக் ஐடி பழிக்கஞ்சி!

நம் சாம்ராஜ்யத்தில்.......
நாம் தாம்   கிரீடங்கள்!

முகநூல் - நம்
இன்றைய  தோழமை!


ஜன்ஸி கபூர் 



















No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!