About Me

2013/03/11

தளிர்கள் - 3

தவறுகள் அறியாமையின் வரவுகள்!

நம்மை சிலர் தவறான எண்ணத்தில் விமர்சிக்கும் போது, நம்முள்ளம் எரிமலையாகி சுட்டெரிக்கின்றது. அவ்வாறான தருணங்களில் அமைதி காக்கும் பண்பு நம்மிடம் இருக்குமானால், காலம் மிக விரைவில் தவறிழைத்தவர்களுக்கு நம்மைப் பற்றிய உண்மையை உணர்த்தி நிற்கும்!


அன்றும் இன்றும்
-------------------------------------------------------------
தோற்ற காதலெல்லாம்
கல்லறை தேடியது அக்காலம்!
புது உறவுக்காய் மீண்டும் விண்ணப்பிப்பது
இக்காலம்

--------------------------------------------------------------
ஒவ்வொரு பூட்டும் செவி சாய்க்கும் தனக்குரிய திறப்புக்கு மாத்திரமே!

நம் மனம் அப்படித்தான்...........

நம் குணத்தை ஒத்தவர்களின் நட்புடன் மட்டுமே ஒத்துப் போகின்றது!

------------------------------------------------------
மெல்லன மூடின விழிகள்..........
மெல்லிசையாய் மொழிந்தன கனவுகள்
வள்ளியே.........உன்னன்பை
அள்ளித் தரும் வள்ளலே நீயெனக்கு!

-----------------------------------------------------

உனக்கான காத்திருப்புக்களால்
தினமும்
சிலையாகின என் விழிகள்!

பழி சொல்லுமோ காலமும் - உன்
அன்பில் மெய்யில்லையென்று!
அஞ்சுகின்றேன் அணுதினமும்!

--------------------------------------------------
எழுதப்படும் தீர்ப்புக்களையே மாற்றக்கூடிய மிகப் பெரிய ஆயுதம் தன்னம்பிக்கையே!

உள்ளம் தன்னம்பிக்கையில் நிறைந்திருக்கும் போது எத் தீமையும் அண்டுவதில்லை.

நல்லதையே நினைப்போம்!
நலமுடன் வாழ்வோம்!!



2 comments:

  1. அணுதினமும்!
    நல்லதையே நினைப்போம்!
    நலமுடன் வாழ்வோம்!!

    ReplyDelete
  2. அணுதினமும்!
    நல்லதையே நினைப்போம்!
    நலமுடன் வாழ்வோம்!!

    ReplyDelete

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!