About Me

2013/04/29

என்றோ ஒரு நாள்


என்றோ ஒர் நாள்
உரமொன்று உயிர் வழியாய் நழுவிச் சென்றதில்
தவறுதலாய்
களைகள்
கலை வடிவத்தில் என் தேசத்தில்!

தலையறுக்கும் வெறியோடு - என்
குரல்வளை நசுக்க அவை துடிக்கையில்
மிரட்சியோடு ஓடுகின்றேன்
திக்கேதுமறியாமலே!

முட்களுக்கிடையியே
மென் மலரொன்று அணைத்து நிற்கின்றது
மனசோரம்

"நான் உனக்கிருக்கேன்"

- Jancy Caffoor-
     28.04.2013

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!