About Me

2014/10/12

மனதின் நெருடலாய் ஓர் பார்வை




அடடா..............!
பார்வைகளின் வசீகரத்தில்
மனங்களில் எழுதப்படும் அழகான கவிதை
"அன்பு"

---------------------------------------------------------------------------------------------


வீணாய் உதிர்ந்து கொண்டிருக்கும்
பணத்தின் அருமையை
கசிந்துகொண்டிருக்கும் உன் வியர்வைத்துளிகள்
உணர்த்துகின்றன தினமும்!

உன் வியர்வையும் - என்
தவறின் கண்ணீரும்
ஒன்றாய் இணைகையில்
கர்ப்பம் தரிக்கின்றதென்
"உண்டியல்"


திறமைகள்தான் மனிதர்களை அடையாளப்படுத்துகின்றன. நூலைக் கற்றுக் கொண்டவன் பதவிகளில் அலங்காரமாகத் திகழ உழைப்பினைக் கற்றுக் கொண்டவன் திறமைகளால் தன் முதலீடுககளை உயர்த்திக் கொண்டிருக்கின்றான். முயற்சியுடன் கூடிய எத்தொழிலும் சாதனைகளால்தான் நிரப்பப்படுகின்றன. அரிசியில் பெயரெழுதும் கலையைப் பாராட்டத்தான் வேண்டும்!


எட்டியுதையும் கால்களைக் கூட
கட்டித் தழுவும் குழந்தைப் பாசம்.....
மாசற்ற தேன்துளிதான்!


இருளுக்கும் விழியாகும்
மெழுகுவர்த்தியே
ஔி கொடுத்தே
பலி கொள்ளும் நீ கூட

உதாரணமாய் எம்மிடத்தில்
"நன்மைக்குள்ளும் தீமையுண்டு"

பிரித்தறிவோர்
பாராளும் முதல்வர்கள்!





நவீன தொலைபேசியில்
எல்லாம் இருக்கின்றதுதான்!
ஆனால்
அழைப்புக்களை எடுக்க மட்டும்
நேரமில்லை


-  Jancy Caffoor -

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!