About Me

2015/03/21

மூன்றாவது இதயம்


நான் இலக்கிய உலகில் காலடியெடுத்து வைத்தபோது அறிமுகமானவர்தான் சகோதரர்  நாச்சியாதீவு பர்வீன்....எங்களுக்குள்   பத்து வருடங்களுக்கு மேலான  இலக்கிய நட்பு! நான் எழுத்துலகில் இருந்து விலக நினைக்கும் போதெல்லாம் என்னை  எழுதத் தூண்டிய எழுதுகோல்களுள் பர்வீனும் ஒருவர்!

யதார்த்தமான விடயங்களை  அழகாக, உணர்ச்சிபூர்வமாக வரிகளாக்கி அவற்றை நம்மிடையே  நகர்த்தி விடுவார் ரசிக்கும் விதமாக. அவரின் இன்னொரு இலக்கிய பிரசவிப்பான "மூன்றாம் இதயம்"  - கவிதை நூல் நாளை வௌியிடப்படவுள்ள  நிலையில் இம்மூன்றாம் இதயத்தின் உணர்ச்சிப் பிழம்புகளை தரிசிக்க நானும் ஆவலாக உள்ளேன். இன்ஷா அல்லாஹ். நாளை பத்து மணிக்கு சீரீசி மண்டபத்தில் சந்திக்கலாம். வாழ்த்துக்கள் நாச்சியாதீவு பர்வீன்!

- Jancy Caffoor-

      20.03.2015

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!