About Me

2013/03/08

யதார்த்தம்

ஆரோரோ 
ஆரிவரோ 

தங்க பௌர்ணமியே 
தாய் மடியில் கண்ணுறங்கு!

தாலி தந்த பூவரசே 
செல்லச் சிணுங்கலடங்கி
சீக்கிரமாய் கண்ணுறங்கு!

அப்பன் இங்கிருந்தா
அஞ்சு காசு கொண்டு வரும்!
நெசமா நானுனக்கு
நெறைய சாமான் வாங்கிடலாம்!

ஆத்துல பசி தீர்க்க
அரிசிக் கஞ்சி ஏதுமில்லை!
நாக்கும் வறளுதப்பா
நல்ல தண்ணி தொலைவிலப்பா!

ஏழையாப் பொறந்தாலே
ஏழு ஜென்மமும் கண்ணீரல்லோ!
பாட்டால படிச்சாக்கா
பட்ட துன்பம் போயிடுமோ!

குடிசைல விளக்கில்லை
குஞ்சு மகன் கண்ணுதானே விடிவிளக்கு!
பகலெல்லாம் வெளிச்சம் தரும்
பகலவனும் நீதான்டா!

நேரங்கெட்ட நேரத்தில
நெடுநேரம் அழுதிட்டா 
சாதி சனம் வீடெல்லாம்
சாமத்திலும் விளக்கெரியும்!

சின்ன நிலவே 
நீயும் அழுதிட்டால்
பெத்த மனம் ரணமாகும்
உன் கண்ணு கூட ரணமாகும்!


Jancy Caffoor






ஆராரோ

ஆரோரோ 
ஆரிவரோ 

தங்க பௌர்ணமியே 
தாய் மடியில் கண்ணுறங்கு!

தாலி தந்த பூவரசே 
செல்லச் சிணுங்கலடங்கி
சீக்கிரமாய் கண்ணுறங்கு!

அப்பன் இங்கிருந்தா
அஞ்சு காசு கொண்டு வரும்!
நெசமா நானுனக்கு
நெறைய சாமான் வாங்கிடலாம்!

ஆத்துல பசி தீர்க்க
அரிசிக் கஞ்சி ஏதுமில்லை!
நாக்கும் வறளுதப்பா
நல்ல தண்ணி தொலைவிலப்பா!

ஏழையாப் பொறந்தாலே
ஏழு ஜென்மமும் கண்ணீரல்லோ!
பாட்டால படிச்சாக்கா
பட்ட துன்பம் போயிடுமோ!

குடிசைல விளக்கில்லை
குஞ்சு மகன் கண்ணுதானே விடிவிளக்கு!
பகலெல்லாம் வெளிச்சம் தரும்
பகலவனும் நீதான்டா!

நேரங்கெட்ட நேரத்தில
நெடுநேரம் அழுதிட்டா 
சாதி சனம் வீடெல்லாம்
சாமத்திலும் விளக்கெரியும்!

சின்ன நிலவே 
நீயும் அழுதிட்டால்
பெத்த மனம் ரணமாகும்
உன் கண்ணு கூட ரணமாகும்!


Jancy Caffoor










மார்கழிப் பூவே


மார்கழிப் பூவே!
சமூக அழுத்தங்களால்
எரிமலை படர்கையில்
படர்ந்தாய்
பனி மலையாய்!

மூச்சுக் காற்றுக்குள் துரோகங்கள்
சயனைட்
நிரப்புகையில்
உறிஞ்சியெடுத்தாய் விடத்தை
உரிமையுடன் நட்பாகி!

ப்ரியமே!
நம்
ப்ரிய நேசத்தின் ஆயுளுக்கு
நாள் குறித்ததும் யாரோ!

என் விழியன்னலை
உற்றுப்பார்
தெரிகின்றதா
கண்ணீரில் நனைந்திருக்கும்
உன்னுருவம்!

கூடல்
ஊடல்

அன்பின் பரிமாணங்களே!
பற்றிக் கொள்ள விரல் தா
சுற்றி எரிக்கும் துன்பம் துடைக்க!

Jancy Caffoor
08.03.2013





கனவு தேவதை


நட்சத்திர கீறல்கள்
வீழ்ந்தன புன்னகையாய்!

புல் நுனி கழுவும்  பனியோ
தள்ளாடி வீழ்ந்தன  கன்னவோரம்!

வியர்வையின் ஈர வீரியம் கண்டு
அயர்ந்தன மேனி யிதழ்கள் துவண்டு!

வானவில்லின் சாயம் கரைந்து
வழிந்தது இடை நெருக்கும் மெல்லாடையாய்  !

நறுமணம் பூசும் தென்றல் கெஞ்சும்
சுவாசம் கொஞ்சிப் பேச!

இமையோரம் வெட்கிக் குனியும்
விழியின் சிறகடிப்பின் மோகம் கண்டு!

விரல் வருடும் ரேகை கழன்று
வரிகள் வரையும் உனை நினைந்து!

காதல் தேவதை யுனக்காய் என் தேசம்
காத்திருக்கும் ஏக்கங்கள் பல சூடி!

Jancy Caffoor
08.03.2013