தோழியே
நம் பால்ய பருவம்
கண் முன்னால் நசிகின்றது ஆர்வமாய்!
உன்னை நீ என்னுள் நிரப்பிச் சென்ற
அந்த நாட்களில் முகிழ்த்த நட்பெல்லாம்
ஆத்மார்த்தமாய்
ஆத்மாவை நிறைக்கின்றது!
என்னருகில் நீ
உன்னருகில் நான்
விட்டுச் சென்ற காலங்களில்
வசந்தங்கள்
கூடு கட்டி நிற்கின்றது!
பூக்களின் சுக விசாரிப்புக்களில்
குவிந்து கிடக்கின்றன - நம்
விழித் தடாக முன்றல்கள்!
உன்னுள் நானும்
என்னுள் நீயும்
சாய்ந்து உருண்ட நம் கனாக்கள்
அழகாய்
கண் சிமிட்டுகின்றன !
இளமையின் சுவாரஸ்யத்தில்
தேகங்கள் ஊறிக் கிடக்க
அடடா.....நம்
பால்ய பருவத்தின் வசந்தத்தில்
மனசு அப்பித்தான் கிடக்கின்றது!
உன்னை என் விழிகளால் துலாவுகின்றேன்
இப்போதும் - என்
நேசத்தில் நனைத்திட!
ஆனால்.!
நம் சுதந்திர உலகில்
யாரிட்டார் முடிச்சிப்போ!
நம் பார்வைகள்
அன்றும் இன்றும் ஒன்றாய்
வீழ்ந்திருக்க!
புலம் பெயர்ந்த பருவங்களால்
நம்
பால்யம் பாழாக்கப்பட!
கண் கொத்திப் பாம்பாய்
நம்மவர்
பிணைந்து கிடக்கின்றனர் -நம்
பாதையில்!
நீயோ
தொடா தொடு வானமாய்
சிதறிச் செல்கின்றாய் முகில் கிழித்து!
நம்முள் பேதமில்லை
எப்போதும்
அடுத்தவரோ
வேலிச்சுவராய் படர்கின்றனர்
இரக்கமின்றி!
"நாம் வயசுக்கு வந்திட்டமாம்."
காலக் கலண்டர்
கொக்களமிட்டுச் சிரிக்கின்றது
நம் நட்பைப் பார்த்து!
- Jancy Caffoor-
09.04.2013
2013/04/10
விழும் துளியாய்
எங்கோ தொலைந்திருந்தேன்
தொடுவானம் தரை நீவும் கடலாய்
அரவணைக்கின்றாய் எனை நீ
இப்போதெல்லாம்!
உனை நான் ஏந்திக் கொண்டதனால்
வான் பிழிந்து உதிர்ந்தோடும்
நீர் முத்துக்கள் கூட தேகம் சுவைக்கின்றன
உன் கரங்களாய் மாறி!
- Jancy Caffoor-
09.04.2013
மனைவியானவள்
கணவனின் குணமறிந்து
தன் மனதை வழி நடத்துபவளே நல்ல மனைவி.................!
அன்பான மனைவியே
ஆணின் அழகிய சீதனம்!
ஆன்மீகமும் அன்பும் குலைத்து
தன்னுயிராய் ...........
தாலி தந்தவனை
காலம் முழுதும் காதலிப்பவளே
அன்பானே மனைவி.............
வழித்துணை
என் வாழ்க்கைப் பயணத்தின்
வழித் துணையாய் நீ!
காலக் கலண்டரொன்று
நம்மிடம் விட்டுச் செல்கின்றது காதலை!
ஏந்திக் கொள்
ஏந்திழையினி உன்னவளாய்!
எழுதிச் செல்வோமினி
அழகான எதிர்காலமொன்றை!
காத்திருப்புக்களுடன்
எதிர்பார்ப்புக்களுடன் - உன்னுடன்
தொடரட்டுமினி என் பயணம்!
- Jancy Caffoor-
09.04.2013
Subscribe to:
Comments (Atom)



