About Me

2013/04/10

எனக்கும் உனக்கும்


காதல் சொல்ல வந்தேன் - உன்னை
மெல்ல அள்ள வந்தேன்!

ஈரம் நனையும் முத்தம் - அதுவுன்
உதடு சிந்தும் சத்தம்!

இத்தனைக்கும்

உனக்கு இருபது!
எனக்கு  அறுபது!!

- Jancy Caffoor-
     09 .04.2013








ஆட்டோ கிராப்


அது.......பதினாறு வயசு நிரம்பிய பருவம்!

வெறும் கனவுக்குள்ளே மனதைக் கிறங்க வைத்து, அழகான உலகத்தில் அமிழ்ந்து வாழ்ந்த காலம். திரைப்படத்தில காணும் அழகான நடிகர்களுடன் ஜோடியாய் இரகஸியமாய் இணைந்து கற்பனை உலகில் சொர்க்கித்துக் கிடந்த காலம்...........................

பின்னால சைட் அடிச்சு திரிஞ்ச பசங்களயெல்லாம், திரும்பி பார்க்காம கொஞ்சம் திமிரோடு நடந்த பருவம்!

வந்த தூதுக்களையெல்லாம் சுக்கு நூறாக்கி துடிக்க வைத்த காலம்................

அந்நாட்களில்...........!

எங்கள் வீட்டுக்கு முன்னால் ஒரு ஜஸ்பழக் கடை இருந்தது...அங்கே ஒரு பையன் வேலைக்குச் சேர்ந்தான்..என்னை விட அவன் ஆறு வயது மூத்தவன். அவன் ரொம்ப அழகு,............நான் கற்பனையில் லயித்திருந்த அந்த கனவு நாயகனைப் போலவே,

ஆனால் அவன் கூட ஒரு நாளும் பேசியதில்ல......நான் அவனைக் கடந்து போகும் போதெல்லாம் என்னை பார்த்து ஒரு லுக் மட்டும் விடுவான்....
அவன் மீசையோரம் கொஞ்சம் புன்னகைகளையும் சேர்த்து!

அவனும் அவன் வேலை செய்யும் கடை முதலாளியின் பொண்ணும் லவ்வுன்னு செய்தி காதுக்கு எட்டின பிறகு (அந்த பொண்ணு என் நண்பி) அவன நான் கொஞ்சம் அதிகமாக வாச் பண்ணினேன்.....

அடப் பாவி.........

அவன் கொஞ்ச நாள்ல என்னையே அவுட் ஆக்கிட்டான்.

(அப்போ அந்த பொண்ணு லவ்..என்னாச்சுன்னு தெரியல)

கொஞ்சம் கொஞ்சமாக அவன்ர பார்வை, சிரிப்பு, அந்த அன்ப நானும் ரசிக்கத் தொடங்கினேன். அவன் யாரு, அவன்ர பின்னணி என்ன எதுவுமே அப்ப தெரியல......
அவனின் பார்வைக்குள் என்னை நாட்ட அடிக்கடி அவன் கடைப் பக்கமாக போவேன்.ஏதாவது பேசுவான்.......
பதில் சொல்ல மாட்டேன்...என் மௌனத்தை அவனும் ரசிப்பான்......இப்படியே ஆறு மாதம்..............!

யாருக்கும் எங்க உணர்வு தெரியாது!

இது லவ்வா......இல்லையா....தெரியல! நாங்க ஒரு வார்ததை கூட பேசினதில்லை...ஆனால் ஒருவர ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வோம்.அவனப் பார்த்துக் கொண்டே இருக்கணும் போல மனசுக்குள்ள பீலிங்ஸா இருக்கும். அவனும் வாசலுக்கு வந்தா எங்க வீட்டு வாசலையே நோட்டம் விட்டுக் கொண்டு நிற்பான்.

எங்க அப்பா ஒரு பொலிஸ்காரர். ஸோ...........ரொம்ப என்னைக் கட்டுப்படுத்தி இருந்தேன்......
ஒருநாள் எங்க வீட்டு கதவில இருக்கிற சிறு துவாரம் வழியாக அவன பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அப்பா வந்துட்டார். வசமாய் மாட்டினேன். நான் ஏறியிருந்த இடத்தில ஏறி அப்பாவும் றோட்ட பார்த்தார்.

அவன்......................

எங்க வீட்டு வாசலப் பார்த்துக் கொண்டு நின்றான்.

அப்பா என்கிட்ட ஒரு வார்ததை கூட பேசல....அந்த மௌனம் என்னை ரொம்ப கஷ்டப்படுத்திச்சு. அம்மா சாடைமாடையாய் அவனுக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு புற கௌரவத்தை எடை போட்டாங்க..

யாரும் எங்க அன்ப புரிஞ்சு கொள்ளல.....அது காதலா இல்ல பருவக் கிளர்ச்சியா........எனக்கும் தெரியல!

மறுநாள் அவன் வேலைக்கு வரல...........

அந்த முதலாளிக்கு அப்பாதான் ஏதோ சொல்லியிருக்கணும். ...

அவன்ர பிரிவு ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. சகிக்க முடியல. வெளிப்படையாக அழக் கூட முடியல. அழுதா அப்பா அடிப்பாருன்னு பயம். மௌனமா மனசுக்குள்ள போராடி காலத்தின் போக்குல அந்த துயரத்தில இருந்து மெல்ல மெல்ல விடுபட்டேன். அதுக்குப் பிறகு அவனச் சந்தித்த போது, ஏதோ என் கூட பேச பின்னால விரட்டிக் கொண்டு ஸ்கூல் கேட் வரை வருவான். பட்...நான் அப்பாக்கு பயந்து அவன நிமிர்ந்து கூட பார்க்கல. ஒருநாள் அவன நான் புறக்கணிச்சதால எங்க ஊர விட்டே பொயிட்டான். இந்த செய்தியை அவன் தன் தம்பி மூலமாக எனக்கு சொல்லியனுப்பினான். இன்னைக்கு வரைக்கும் அவனுக்கு என்ன நடந்துச்சு என்று எனக்குத் தெரியல..........பட் எப்போதாவது அவன் என் ஞாபகத்தில எட்டிப்பார்த்து விட்டுப் போவான்................

(சேரனுக்கு மட்டுமல்ல, நமக்குள்ளும் எத்தனையோ ஆட்டோ கிராப்கள்)

இது சத்தியமா கற்பனைதான்!

துளிகள் 2



அழகான சிரிப்பும்..........
அன்பான மனமும்........

எல்லா மனங்களையும் வசீகரிக்கக் கூடியவைதான்!
அன்பு அனைத்தையும் வென்று விடும்...
----------------------------------------------------------------------------------
உன் இதழில்...........!

முத்தங்களை இலவச இணைப்புச் செய்கின்றேன்.....
வாழ்க்கைச் சந்தா மட்டும் தந்து விடு!
-------------------------------------------------------------------------------------


வார்த்தைகள்தான் நம் நம்பிக்கையின் கதவு!

ஒருவரை முழுமையாக நம்பி ஏமாறும் போது கலங்கி நிற்பது மனது மட்டுமல்ல, வாழ்க்கையும் தான்!
---------------------------------------------------------------------------------------


நம் நிழல் கூட ஒருபோதும் அதன் நீளத்தில் நம்முடன் ஒத்திருக்காத போதும் , உணர்வுகளால் ஒத்திருக்கும் நம் நண்பர்கள் நம்மை பிறரிடம் விட்டுக் கொடுக்கவே மாட்டார்கள். நல்ல நண்பன் வெறும் உறவல்ல வாழ்க்கை...............!

-----------------------------------------------------------------------------------------




தான் விரும்பும் பொருளைக் கேட்டு பிடிவாதமாய் அடம்பிடித்து அடிவாங்கும் குழந்தை.....................
தாய் அடித்த வலி நீங்க முன்னர் "அம்மா" ன்னு
தாவி அன்னை அரவணைப்பில் அடங்கிக் கொள்வாள்!

"குழந்தையின் அன்பு............
வற்றாத நீரூற்று"

I Miss u da chellam...........

----------------------------------------------------------------------------------------


ஒவ்வொரு வெற்றியாளரும் வாய்ப்புக்களை தன் வசப்படுத்தியே வாழும் காலத்திற்குள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

வாய்ப்புக்கள்................!

வாழ்க்கைக்காக இறைவன் நமக்களிக்கும் பரிசு!!!

பயன்படுத்துவது நம் புத்தாலித்தனத்திலேயே தங்கியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------

ஆசை என்பது மனதிலிருந்து பீறிடும் உணர்வுகளில் ஒன்று ........
அதனைக் கடிவாளமிட்டு அடக்கலாமே தவிர அழிக்க முடியாது. ஏனென்றால் மனதின் பசியாக பிராவிக்கும் இவ் ஆசையின் விளைவுகள் பிறரைப் பற்றிச் சிந்திப்பதில்லை.

ஆனால் அனுபவங்களை மனம் கற்றுக் கொண்ட பின்னர், ஆசைகள் தானாய் தன்னை சுதாகரித்துக் கொள்ளும்!
---------------------------------------------------------------------------------------


சாதிக்கும் மனமிருந்தால் போதும்............
சாதனைகள் ஊனம் தாண்டி உலகம் தொடும்!
----------------------------------------------------------------------------------------



மதங்கள் பேச ஆரம்பிக்கும் போது
மனிதம் மௌனமாகி விடும்!

மௌனத்தின் ஹிம்சையில்
மரணங்கள் மயானம் தொழும்!






துளிகள் - 1



இறப்பு, பிறப்பு எனும் ஈர் எல்லைகளுக்கிடையிலான மானுடவியலின் பருவங்களை மகாகவி பாரதியார் தனது பாடல்கள் மூலம் அழகாகத் தொட்டுக் காட்டியுள்ளார். அவற்றுள் ஒன்று ஊஞ்சட் பாடல்....

பதினான்கு வயதுச் சிறுவன் பாரதி. அவரை மணமுடித்த மணமகள் செல்லம்மாளோ ஏழுவயதுச் சிறுமி. அதி விமரிசையாய் எட்டயபுரத்தில் நிகழ்ந்தது திருமணம். 

திருமணத்தின் நான்காம் நாள். 

பலரும் கண்டு அதிசயிக்க, திருமண ஊர்வலம் முடிந்து, ஊஞ்சல் நிகழ்ச்சி நிகழ்கிறது. அதுபோது, மணமகன் - அதாவது பாரதியார் இனிய ராகத்தில் ஓர் ஊஞ்சல் பாடலைப் பாடுகிறார். ஊரே வியக்க நடந்த அந்த அதிசய நிகழ்வை நினைவுறுத்தி மணப் பெண்ணான செல்லம்மா பாரதி பின்னொரு காலத்தில் தமது "பாரதியார் சரித்திரத்தில்' எழுதுகிறார் இவ்வாறு,

கல்யாண விமரிசையைப் புகழ்ந்து, அதை நடத்தியவர்களின் சலியா உழைப்பையும், என் தகப்பனார் கல்யாணத்துக்குக் கஞ்சத்தனமின்றி மிகத் தாராளமாகச் செலவு செய்ததையும் வியந்து, வித்துவான்களின் சங்கீதத் திறமையை மெச்சி இயற்றிய பாடல் அது. அதைக் கேட்டு, யாவரும், 

பலே! பேஷ்! 

என்று ஆரவாரித்து, மாப்பிள்ளை வாய்த்தாலும் செல்லப்பா அய்யருக்கு வாய்த்ததுபோல், வாய்க்க வேண்டும். மணிப்பயல், சிங்கக்குட்டி என்றெல்லாம் அவரவர் போக்கின்படி புகழ்ந்தார்கள். என் தகப்பனார் மாப்பிள்ளையைக் கண்டு உள்ளம்பூரித்து, உடல் பூரித்து மகிழ்ச்சியடைந்தார்''.

என செல்லம்மாள் தன் நினைவுகளில் உள்ளம் பூத்தார்.
------------------------------------------------------------------------------------------


எதிரியின் புன்னகையை விட,
நண்பரின் கோபம் சிறந்தது.
------------------------------------------------------------------------------------------


நம்மை படிப்பதை விட, பிறரின் உணர்வுகளை நாம் முதலில் புரிந்து கொள்வோமானால், வாழ்க்கை நமக்கு சவாலாக இருக்காது........

--------------------------------------------------------------------------------------



வலிக்கின்ற போராட்டங்களுக்கு
விலையேது.........
ஒவ்வொரு அழிவுகளுமே..............
அடைகாத்து நிற்கும் விடுதலையை!

---------------------------------------------------------------------------------------------



தவறு ஏற்படாதவாறு நடப்பவர் புத்திசாலி.......
செய்த தவறை ஒப்புக் கொண்டவர் தைரியசாலி.....
தவறுக்காக வருந்துபவர் பண்பாளர்!

-----------------------------------------------------------------------------------------



வாழ்க்கை என்பது இறைவன் நமக்கு எழுதித் தந்த அழகான புத்தகம். நமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் நாமே தவிர பிறரல்ல...........

எப்பொழுது நம் வாழ்வில் திருப்தியடையாமல், அடுத்தவரை திரும்பிப் பார்த்து ஏக்கங் கொள்ள ஆரம்பிக்கின்றோமோ.............அன்றே நம் வாழ்வின் நிம்மதி நம்மை விட்டுச் செல்ல ஆரம்பிக்கின்றது.
----------------------------------------------------------------------------------------


பயம் எனும் வேரிலிருந்து முளைவிடும் உணர்வுதான் கவலை....
கவலையை சகித்து பழகிக் கொள்பவருக்கு, வாழ்க்கையே ஓர் கலையாக மாறி விடும்...
------------------------------------------------------------------------------------------

நம் உதடுகள் ஒரு விடயத்தை மறுக்க ஆரம்பிக்கும் போதே, உள்ளம் ஏனோ அதனை இரகஸியமாக விரும்ப ஆரம்பிக்கின்றது.
கோபம் தணிந்த பின்னர், அந்த வெறுப்பிற்காக மனம் வெதும்பும். ஆனால் அதனை நாம் வெளிப்படுத்தாமல் "கல்" மனமாய் காட்டிக் கொள்வோம்!
-----------------------------------------------------------------------------------------



முதல் பார்வை........
முதல் வார்த்தை.........
முதல் முத்தம்.........
முதல் ஸ்பரிசம்.........
முதல் சந்திப்பு..........
முதல் காதல்.........

இவையெல்லாம்  மகிழ்விற்காக மனதில் சேமிக்கப்பட்டிருக்கும் "முதல்"கள்
---------------------------------------------------------------------------------------

அதிகம் வம்பிழுக்கும் நண்பனை விட
ஆபத்தில் நமக்கு தெம்பளிக்கும் நண்பனே சிறந்தவன்!

நல்ல நண்பர்களை தெரிவு செய்து பழகுவது, நிம்மதியான வாழ்வுக்கான உத்தரவாதம்!
----------------------------------------------------------------------------------------

ஒவ்வொரு தடவைகளும் முயற்சிக்கும் போது கீழே விழுகின்றேன். எழ முயற்சிக்கையில் மூன்றாம் கையாய் தன்னம்பிக்கை!
----------------------------------------------------------------------------------------



அதிகம் பேசுவது ஆணா........பெண்ணா!
-----------------------------------------------------------
பாக்ஸ்பி2  (Foxp2)  என்னும் புரதம் பெண்களின் மூளையில் அதிகம் காணப்படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர். சராசரியாக நாளொன்றுக்கு சுமார் 13000 வார்த்தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.