2013/04/10
நம் பூமி
சூரியனை யின்னும் கீழ்வான்
விரட்டவேயில்லை
இருந்தும் விடியல் மறுக்கப்பட்ட
கைதிகள் இவர்கள்!
கனவுகளால் நெய்யப்பட்ட
வாழ்க்கைக் கூடாரங்கள்
தரிக்கப்பட்டன அரக்கர்களால்
திட்டமிடப்பட்டு!
இவர்களின் பூமியிலேனோ
விதைக்கப்படாத மனிதாபிமானம்
விட்டுச் செல்கின்றது இறப்புக்களை!
உறக்கத்திற்காக தாழிடப்படும்
விழிகளினி
திறக்கவே போவதில்லை
கண்ணிமைகளை வருடியபடி!
இங்கே
ஆயுத விளைச்சல்களின் அறுவடைகள்
தாராளமாய்
ஊற்றிக் கொண்டிருக்கின்றன
இறப்புக்களை!
மூடிவிடுங்கள் யுத்தக் குழிகளை
பிணங்களால்
ரணமாகாமலிருக்கட்டும் நம் பூமி!
- Jancy Caffoor-
10.04.2013
தளிர்கள் - 6
விளங்கவேயில்லை - உன்
விழிகளில் விலங்கிட்டு
வீழ்த்தினாய் என்னை !
இதுதான் காதலோ!
-----------------------------------------------------------------------------------------
இன்னும் தேடிக் கொண்டுதானிருக்கின்றேன்....
உன்னில் தொலைத்த என்னை!
------------------------------------------------------------------------------------------
தனிமை...............
துணிந்து சொல்லும்
நம்மைவிட்டுச் சென்றோரின்
அன்பை!
------------------------------------------------------------------------------------------
உன் வழிப் பாதைக்காய்
என் விழிப் பார்வைகள்!
நீ..............
உடைத்துச் சென்ற மனசின்
ஒவ்வொரு துண்டுகளும்........
உனைக் காட்டும் கண்ணாடிகளாய்
என்னுள்!
-----------------------------------------------------------------------------------
அழகாய் இருப்பது இறைவன் தந்த வரம்...........!
அந்த அழகினை மேலும் மெருகூட்டுவது நாம் பிறர் மீது வைத்திருக்கும் அன்பேயாகும்!
----------------------------------------------------------------------------------------
ஓர் ஆணிண் அன்பில் பூவாக மலரும் பெண்.........
அவன் அடக்குமுறையில் வீணாய் உதிர்க்கப்படுகின்றாள்......!
ஒவ்வொரு குடும்பத்தின் அத்திவாரமும் ஆணின் கரங்களிலேயே திணிக்கப்படுகின்றது! பெண் மென்மையுணர்ந்து அவள் உணர்வுகளை மதியுங்கள்...
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒளிந்திருக்கும் தாய்மைதான் ஆண்களைச் சுமந்திருக்கும்.
அவன் வருங்கால கருவையும் சுமக்கவிருக்கும்!
-------------------------------------------------------------------------------------------
மனசை கொஞ்சம் திறந்து விடு
உன்னில் நான் காதல் செய்ய வேண்டும்!
உன் கவலையை என்னில் சிந்தி விடு
என் கண்ணீரில் உன் அன்பைக் குலைக்க வேண்டும்!
உன் மகிழ்வை என்னில் பூசி விடு
உன் னுதட்டில் என் புன்னகை பதிக்க வேண்டும்!
உன் விழிகளை லேசாய் மூடி விடு
கனவாய் உன்னில் நான் மூழ்க வேண்டும்!
----------------------------------------------------------------------------------------
காதல் வலி தரும்.!
இருந்தும்...................
நினைவுகளைத் தூவிச் செல்லும் அதன் வழி
அழகானது!
---------------------------------------------------------------------------------------
தாய் கருவறை தந்தாள் தானமாய்......
நீயோ..........
மணவறை தந்தாய் மானசீகமாய்!
மனதுக்குள் இறக்கை கட்டி
பறக்கின்றேன் .......
என் வான் உன்னில்..........!
-----------------------------------------------------------------------------------------
அடி மனதின் ஆழ் நினைவுகளே கனவுகளாக கருக்கட்டப்படுகின்றன.
ஒவ்வொரு கனவுகளும் நனவாக ................
தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சியைத் தானமாக்குங்கள்!
----------------------------------------------------------------------------------------
பூக்களாய் பூத்திருந்தேன்
முகவரி தந்தன தென்றல்........
உன் பாக்களில் வார்த்தைகளானேன்
காதல் இலக்கியமானாய் நீ!......
எதுகையும் மோனையும் நானறியேன்
ஏடறியா என்னிடம் மோதிச் சென்றாய் நீ!.....
இருந்தும்...........
இப்போதெல்லாம் மயங்கி நிற்கின்றேன் - உன்
அருகாமைக் கணங்களின் லயிப்பினில் நசிந்து!
-------------------------------------------------------------------------------------
தொலை தூர வானில்
அலையும் முகிற் காகிதங்களுக்கிடையில்......
விழி திறந்து கிடக்கும் நிலாக் கீறலாய்
ஒளி கசியும் உன் ஞாபகங்கள்...........!
நேற்று வரை நான் நானாகத்தான் இருந்தேன்
இன்றோ.................
என் எதிர்காலத்தின் கைரேகைகளில்
உன்னை பச்சை குத்திக் கொண்டாய்
ஆக்ரோஷமாய்!
இப்பொழுதெல்லாம்.............
என்னுள் ஊடுறுவும் தனிமையில்
கல்லெறிந்து.....
கள்ளமின்றி சிரிக்கின்றாய் காதலுடன்!
உன் வில்லத்தனமும்
குழந்தைத்தனமும்.........
காதலும்...................
என்னுள் முத்தமாகி கசிகையில்
ஏக்கத்துள் வீழ்ந்து தொலைகின்றேன்
பக்கமில்லாத உன் நிழல் தேடி!
------------------------------------------------------------------------------------------
ஒவ்வொரு குடும்பத்தையும் அழகாக உருவாக்குபவள் பெண். அந்தப் பெண்ணைப் பாதுகாப்பது அவளைச் சார்ந்துள்ள ஒவ்வொரு ஆணிணதும் கடமையாகும்.
--------------------------------------------------------------------------------------------
அம்மா............!
அச்சேற்றிக் கொண்டிருக்கின்றேன்
புதுமைப் பெண்களை!
உங்கள் கண்ணீர் ஈரத்தை மறைத்தபடி!
ரோசாவின் வாசங்களால்
சுவாசம் நிறைத்துக் கொண்டிருக்கின்றேன்.......
நீங்கள் சூடியிருக்கும் முட்களை
மறைத்தபடி!
பாசத்தால் வேலியிடப்பட்ட
உங்கள் கருவறைக்குள்
கல்லறை வார்ப்போரோடு பேரம் பேசுகின்றேன்
என் இரத்த உறவென!
நீங்கள் சிரித்திருப்பீர்களா.........
ஓர் துளியைத்தான் இன்னும் தேடிக் கொண்டிருக்கின்றேன்
ஞாபகங்களை குலைத்தபடி!
தாயே..........
தரணியின்று துதிக்கின்றது உங்களை....
நீங்கள் அறையப்பட்டிருக்கும்
சிலுவையை புரிந்து கொள்ளாமல்!
தளிர்கள் - 5
பனித்துளியாய் படர்ந்திருக்கின்றாய்
என்னுள்........................
பரிசுத்தவுன் அன்பே - என்னை
உயிர்ப்பிக்கும் சுவாசமாய் கால முழுதும்!
-----------------------------------------------------------------------------------------
இணையத்தின் வாரிசுகளிவர்கள்.......!
சினக்காதீர்கள் ........
எதிர்காலமே 'சட்' தானென்று
சரித்திரமெழுதும் குடும்பமிதுவோ!
----------------------------------------------------------------------------------------
பூக்களாய் உதிரும் உன்
புன்னகையில்............
காணாமல் போனேனடி அடிக்கடி.......
மழலையின் சுகத்திலே - தினம்
குலைந்துதான் போனேனடி மலரே!
-----------------------------------------------------------------------------------
முத்தம்................!
நமது மொழி!
ஒவ்வொரு இரவும் மீட்டிச் செல்கின்றது
நம்மை!
----------------------------------------------------------------------------------------
என்னுள் விட்டுச் செல்லும்
உன்னை.................
கண்களுக்குள் மறைத்துக் கொள்கின்றேன்
என் பார்வையாய்!
---------------------------------------------------------------------------------------
கனவுகள் கற்றுக் கொடுத்தன காதலை
காதல் கற்றுக் கொடுத்தது வாழ்க்கையை
வாழ்க்கை கற்றுக் கொடுத்தது உன்னை!
நீ கற்றுக் கொடுத்தாய் அன்பை!
------------------------------------------------------------------------------------------
மழைத்தூறல்களாய் மேனி தொட்டாய்
மனசுக்குள் ஈரம் நனைத்தாய்...............
விழியோரம் உன்னை நிறைத்தாய்
பழி சொல்லுமோ ஊர்
நாம் காதலரென்று!!
அப்பிள் சாப்பிட்டால்
இதயம் பலமாகும்!
இதயம் பலமானால் - அதனுள்
ஒளிந்திருக்கும் காதல் உணர்வுகளும்
அழகாகும்!!
மனம் அழகானால் - நாம்
காணும் புறமெல்லாம் நம் ரசனையில்
வீழும்!
ரசனைகள் நம் வசமானால்
இனிமையான கவிதைகள் - நம்
பேனா தொடும்!!!
----------------------------------------------------------------------------------------
வெட்கித்து நிற்கின்றேன்
பட்டாம் பூச்சியின் வருடலாய்
என் மீது விழும் ....
உன் நினைவுகளின் தழுவலில்!
--------------------------------------------------------------------------------------------
கனவுக்குள் முகங் கொடுத்தாய்
அடிக்கடி.............
நானோ
என் மன ஊஞ்சலிலல்லவா உன்னை
ஆட்டிக் கொண்டிருக்கின்றேன்
எப்பொழுதும்!
-----------------------------------------------------------------------------------
உன் கன்னக் கல்வெட்டில்
என்னைப் பொறிக்கின்றேன்
இரகஸியமாய்!
உறவானதும் உரிமையுடன் தந்துவிடு
என்னை....
என் மொத்தப் பக்கங்களெல்லாம் - உன்
முத்தங்களை நிறைத்து!
-----------------------------------------------------------------------------------------
வாழ்க்கை..............!
நம்பிக்கையின் விளை நிலம்!!
எப்பொழுதும்
தன்னம்பிக்கையில் தன்னைப் பிணைத்து
செயலாற்றுவோர்க்கு மட்டும்!!!!
-----------------------------------------------------------------------------------------
நான் நீயாகும் போது..........
நீ .......நானாகும் போது.......
நாமாய் கவிதைகள்
காதல் சொல்லும் பாருக்கு!
------------------------------------------------------------------------------------------
இனிய வார்த்தைகள் நம் வசமானால்........
உலகத்தின் நேச வாசத்தில் நாம்!
துளிகள் - 4
உயிர் தந்தாய் உறவுகள் பிணைந்து.........
உன் ஆத்மாவே என்னுள்ளிறங்கி
கருவாகின்றது நம் குழந்தையாய்!
---------------------------------------------------------------------------------------
உடலின் மேலாடை அழகு
உணர்வின் நீரோடை அன்பு
தவிப்புக்களும் ஏக்கங்களும் நிறைந்த வாழ்வில்
இயற்கை தரும் அழகோ அலாதியானது!
---------------------------------------------------------------------------------------
காமம்............
வாழ்வழகை சிதைக்கும் அகோரம்!
கலை வளர்க்கும் மனிதன் கூட
காமத்தின்மீதுள்ள காதலை.......
சிதைக்கின்றான் உளி முனையில் பதித்து!
இன்றைய உலகின் ஒழுக்கச் சிதைவுக்கு, ஆரோக்கியமற்ற இவ்வாறான சிந்தனைகளே காரணமாய் அமைந்து விடுகின்றது.!
-----------------------------------------------------------------------------------------
துயரமெல்லாம் களைந்து நாம்
துள்ளிப் பள்ளி சென்று
தொட்டு நின்ற வசந்த நாட்களில்..........
நீ பக்கம் வரும் போதெல்லாம்
வெட்கம் தொலைத்து.............
என் மார்போரம் சாய்ந்து எனைத் தாங்கும்
அந்தப் பாசம் இனி வருமோடா.......
--------------------------------------------------------------------------------------
ஏன் வாழ்கின்றோம்..........
எதற்கு வாழ்கின்றோம்..........
எப்படி வாழ்கின்றோம்.........
எங்கே வாழ்கின்றோம்.......
பல கேள்விகளுக்கான விடைகளை நமக்குள் நாம் சேகரிக்கும்போது வாழ்வும் வசந்தத்தின் கூவல்களுடன் தன்னைப் பிணைத்துக் கொள்கின்றது.
"வாழ்க்கை வாழ்வதற்கே"
-------------------------------------------------------------------------------------------
தோல்வி என்பது நாம் விரும்பாததொன்று. எனினும் தோல்வி நம்மைத் தொடலாம் எனும் எதிர்வு கூறலிலும் கூட , ஏதோ தன்னம்பிக்கை கொண்டு வெற்றிக்காக முயற்சிக்கின்றேமே, அந்த முயற்சி எனக்கு ரொம்பப் பிடிக்கும்........
-------------------------------------------------------------------------------------------
நிலவின் மோகனத்தில்
மோகத்தை பிழியும்.......
கவியாய் "காதல்"
------------------------------------------------------------------------------------------
வாழ்க்கைப் பந்தயத்தில்
எழுதிச் செல்லும் தீர்ப்புக்களாய்........
பரவிக் கொண்டிருக்கின்றன - உன்
நினைவுகள்!
---------------------------------------------------------------------------------------
தழுவுகின்றன என்னை நீயாகி.......
கனவுகள் பேசுகின்ற சாரளங்களாய்
சாகாவரம் பெற்றவை
உன்னுடனான "காதல்"
----------------------------------------------------------------------------------------
நாம் ஆராயாமல் அவசரமாய் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளின் இறுதிப் பக்கத்திலும் எஞ்சி நிற்பவை இழப்புக்களும், சோகங்களுமே!
----------------------------------------------------------------------------------------
வாய்ப்பு தானாக வருவதில்லை...
நாமாய் உருவாக்க வேண்டும்!
வாய்ப்பை வாழ்வில் நங்கூரமிடுங்கள்
வெற்றிகள் கரமசைக்கும்
மனமோ..........
மகிழ்வில் சிறகடிக்கும்!
------------------------------------------------------------------------------------------
நம் வாழ்வில்................!
நம்மைக் கடந்து சென்ற வாழ்க்கை .......
வெறும் கனவாகி ஏக்கங்களோடு முற்றுப் பெற்றிருக்கும்!
வருங்காலமோ............!
எதிர்பார்ப்புக்களோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.
------------------------------------------------------------------------------------
நம் வாழ்வில்................!
நம்மைக் கடந்து சென்ற வாழ்க்கை .......
வெறும் கனவாகி ஏக்கங்களோடு முற்றுப் பெற்றிருக்கும்!
வருங்காலமோ............!
எதிர்பார்ப்புக்களோடு போராடிக் கொண்டிருக்கும் ஆசைகளுக்குள் அடங்கிக் கிடக்கும்.
---------------------------------------------------------------------------------------
போராட்டங்களும் போட்டிகளும் - நம்
பிறப்பைக் கூட விட்டு வைக்கவில்லை!
ஒவ்வொரு சரிதத்தையும் புரட்டிப் பார்த்தால்
முயற்சியாளனே............
சாதனையாளனாய் உரத்து சத்தமிடுகின்றான்.....
வாழ்வில் வெற்றிகளைக் குவித்தவாறு!
----------------------------------------------------------------------------------------
காலம் பொன்னானது...............
நாம் அதனை வீணாய் கரைத்து விட்டு
இழப்புக்களால் எம்மை நிரப்பிக் கொண்டிருக்கின்றோம்!
------------------------------------------------------------------------------------
தனிமையை விடக் கொடுமையானது........
அன்பான நட்பின்றி இருத்தலேயாகும்!
-------------------------------------------------------------------------------------------
உண்மையான காதல் ஒருபோதும் தோற்றுப் போவதில்லை.
காலவோட்டத்தின் எதிர்ப்பலைகளில்
வெற்றிக் கரம் நீட்டுகின்றது...............
மகிழ்ச்சிப் பூக்களைத் தூவியவாறு!
Subscribe to:
Posts (Atom)












































