2014/07/28
நீயாகி
பூக்கள் விரியும் ஒலியில்
உன்
மூச்சுக்காற்றின் பேச்சும்
துல்லியமாய் கேட்கின்றது!
நீ தள்ளிப்போகும்
ஒவ்வொரு சுவட்டிலும் - என்
தவிப்புக்கள்
அனலைத் தேக்கி
உன் னிழலோரம் அலைகின்றது!
என் தவிப்புக்களின் சுமையேற்றம்
உயிர் கொஞ்சம் வருத்த
நாளை - நான்
வருவேன் உன் தாயகம் தேடி!
- Jancy Caffoor-
28.07.2014
மௌனத்தால்
மௌனத்தால்
தினம்
எனைக் கொல்லாதே!
உன் சூரியவிழிப் பார்வையால்
உனக்காய் உருகும்
என் னாவியையும் உலர்த்தாதே!
உன் குறுநகையால்
நானாக்கும் குறுந்தொகையை- இனி
வெறுக்காதே!
என் அன்பே
உயிர்ப்பிச்சை கேட்கின்றேன்
வலி தந்து
என்னிதயம் கொல்லாதே!
- Jancy Caffoor-
28.07.2014
நிலா மோனா - 6
நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!
-----------------------------------------------------------------------------------
வான் விதைக்கும் வைரங்கள் நடுவே
நானும் முத்தாய் - உன்
மார்போரம் அணைந்திடும் தவத்திற்காய்
இருள் தேய்விலும்
காத்திருக்கு முன் நிலா நான்.......
நீயோ.......
எனை ரசிக்காதவனாய்
மேகத்திரைக்குள் மறைகின்றாய்!
------------------------------------------------------------------------------------
அன்பை வருடித் தந்தாய்....
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!
நிலா மோனா - 5
உறவுகள் புரிந்துகொள்ளப்படாதபோது....
உண்மை அன்பு, ஊமைவலிக்குள் தன்னைச் சுருட்டிக் கொள்கின்றது!
அரவணைப்பும், பிரிவும் தீர்மானிக்கப்படுவது தலைவிதியாலல்ல..
அவரவர் மாற்றிக்கொள்ள விரும்பாத முரண்பாட்டுச் சிக்கலால்தான்
மேகங்கள் தீண்டா நிலாப்பெண் நானடா...
இருந்தும்....
உன் ........
விரல்கள் தீண்டும் கவிதையாய்
பிறப்பெடுக்கின்றேன் உன் ஞாபகத்துள் நசிந்தபடி!
---------------------------------------------------------------------------------
காலம் என்பது அழகான காற்றாடி போன்றது!
காலத்தை உரிய விதத்தில் பயன்படுத்துபவனால் மாத்திரமே , அதனை உரிய திசைக்கு வழிப்படுத்த முடியும்!
-----------------------------------------------------------------------------------
தோல்வி என்பது அனுபவங்கள் பெற்றுத் தரும் களமேடை..........
எனவே ........
தோல்வியற்ற வாழ்வு கிடைக்கும்போது நாம் நம் அனுபவங்களை இழந்து விடுகின்றோம்......
----------------------------------------------------------------------------------
இன்பம், துன்பம், ஏக்கம், எதிர்பா்ப்பு,ஏமாற்றம், அன்பு, பாசம், காதல், தோல்வி, இலட்சியம் போன்ற எண்ண வார்ப்புக்களின் கலவைதான் வாழ்க்கை....
இந்த உண்மையை உள்வாங்கும்போது, நாமும் இயல்பாய், சுவாரஸியமாய் நம் வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முடிகின்றது!
Subscribe to:
Posts (Atom)