About Me

2014/07/28

நிலா மோனா - 6




நிசப்தத்தின் இம்சையில் - நீ
விட்டுச் செல்லும் மௌனமே
இனி யென் கவிதையாய்!

-----------------------------------------------------------------------------------


வான் விதைக்கும் வைரங்கள் நடுவே
நானும் முத்தாய் - உன்
மார்போரம் அணைந்திடும் தவத்திற்காய்

இருள் தேய்விலும்
காத்திருக்கு முன் நிலா நான்.......

நீயோ.......
எனை ரசிக்காதவனாய்
மேகத்திரைக்குள் மறைகின்றாய்!
------------------------------------------------------------------------------------

அன்பை வருடித் தந்தாய்....
உன்னில் உணர்ந்தேன் தாய்மையையும் தூய்மையையும்!

No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!