இருந்தாலும்
காயம் தந்த முள்ளையும்
ஓரப் பார்வையில் விழுத்தி விடுகிறது மனம்
இவ்வாறே வாழ்க்கையும் எப்போதும் எதிர்மறை எண்ணங்களின் ஆக்கிரமிப்பில் அலை மோதுகிறது.
இந்த உலகம் எப்போது உருவாக்கப்பட்டதோ, அன்றே மனித வர்க்கமும் சுயநலம் என்ற வலையை தன்னைச் சுற்றி பின்னத் தொடங்கி விட்டது। வஞ்சகம், பொறாமை, கள்ளம், கபடம் போன்ற நச்சு விதைகளின் இருப்பிடம் அவனது மனமாக மாறி விட்டது। தான், தன் குடும்பம் முதனிலை பெற, அடுத்தவர் தூரமாகினர். ஒவ்வொரு மனிதர்களுக்குள்ளும் பொதுநலம் மறைந்து போனதில் முரண்பாடுகளின் விளைச்சல் அவனது வார்த்தைகள் மூலமாக உருவாகத் தொடங்கிவிட்டது. அழகான குறுகிய கால வாழ்க்கையில் சந்தோசம் துளியளவு கிடைக்காத மன நிலை நிரந்தர சொத்தாக மாறி விட்டது! உள்ளே குமுறி வெளியே சிரிக்கும் நடிகனாக மனிதன் மாறத் தொடங்கி விட்டான். இயந்திரமயமான இவ் உலகம் இன்று இதயம் இல்லாத மனிதன் கையில்!