சடசட மழையில் நனைந்த தேகத்தினுள் /
சிலுசிலு காற்றும் அணைக்குதே காதலில் /
படபட வென துடிக்கும் நெஞ்சுக்குள் நீயே/
கலகலக்குதே நினைவும் உன்னை அணைத்தபடி/
ஜன்ஸி கபூர் - 02.09.2020
சடசட மழையில் நனைந்த தேகத்தினுள் /
சிலுசிலு காற்றும் அணைக்குதே காதலில் /
படபட வென துடிக்கும் நெஞ்சுக்குள் நீயே/
கலகலக்குதே நினைவும் உன்னை அணைத்தபடி/
ஜன்ஸி கபூர் - 02.09.2020
கற்கும் கல்வியும் கண்ணியம் காத்திட
சொற்கள் பழக்கும் சொல்வளம் அவரே
அறியாமை நீக்கி அறிவைப் பெற்றிட
நெறியாய் விளங்கி நெடுநாளும் வாழ்த்துவாரே
ஏணியாய் மாறி ஏற்றத்துடன் வாழ்ந்திட
பணி செய்திடும் பண்பாளரும் அவரே
மழையாய் பொழிந்து மனங்களில் நிறைந்து
ஏழையும் வாழ்ந்திட எந்நாளும் உழைப்பாரே
இருள் வாழ்வும் இன்னல்கள் அகற்றிட
அருள் புரிந்திடும் ஆசானும் நிறைவாரே
ஜன்ஸி கபூர் - 01.08.2020
கன்னத்தில் உரசுகின்ற கருங்கூந்தல் வளைவும்
இன்பத்தில் நனைகின்ற கூர்விழி அழகும்
புன்னகைத் தித்திப்பில் கரைந்தே வழிகையில்
வெண் முத்துக்கள் இதழுக்குள் வழுக்குகின்றதோ
மோகத்தை வருடுகின்ற வெண்சங்கு கழுத்தினில்
மெல்லிய வருடலாய் துளிர்க்கின்ற மச்சமும்
அல்லி பிழிந்தெடுத்த அற்புத தேகத்தினுள்
மென் கீற்றாய் வெட்கத்தின் வாசமும்
மின்சாரம் பாய்ச்சுகின்ற மோகனப் புன்னகையில்
என்னிதயம் அடிக்கடி நழுவி வீழ்கிறதே
உந்தன் இமைக்குள் காந்தத்தின் ஈர்ப்போ
உயிரோடு வருடுகின்ற பேரன்பும் நீ
சந்தனம் வழிகின்ற தேகத்தின் துடிப்பினில்
சர்க்கரையாய் மொய்க்கின்றதே மயக்கிடும் விழிகள்
சாய்கின்றாய் தென்றலில் சரிகின்றேன் நானும்
சரமாக்கி சூடுகின்றாய் அன்பை என்னுள்
தொலைகின்றேன் நானும் தனிமையுடைத்து உன்னுலகில்
அலைகின்றாய் எனக்குள் நீங்காத நினைவாக
கலைகின்றதே சோகங்களும் சலங்கைச் சிரிப்பினில்
கனவுகளும் உயிர்க்கின்றதே எனையும் அணைப்பதனால்
காத்திருக்கிறேன் தினமும் காதலும் மொய்த்திருக்க
கசங்கிடாப் பூவே உந்தன் நுதலினில்
எந்தன் ரேகைதனைப் பதித்திடும் நாளுக்காய்
உறைகின்றேன் ஏக்கத்தினில் காலத்தை எதிர்பார்த்தபடியே
ஜன்ஸி கபூர்
முயற்சியும் பயிற்சியும் உயர்வின் படிகளே/
முன்னேற்றம் கண்டிலாம் இலக்கின் பாதையினில்/
கடக்கின்ற மணித்துளிகள் உழைப்பிற்கே தடமானால்/
உடைந்திடுமே தடைகளும் ஊக்கத்தின் விளைவினிலே/
செல்கின்ற பாதைக்குள்ளே தோன்றிடுமே முட்களும்தான்/
வெல்கின்ற எண்ணமிருந்தால் சோர்வில்லா வலிமையெழும்/
தன்னம்பிக்கை தீட்டுகின்ற ஆளுமைப் பாதையினை/
கண்டிலாம் சாதனைகள்தான் ஏற்றத்தின் வாழ்வினிலே/
இறையும் மறையும் இணைந்திருக்கும் ஒழுக்கத்தினில்/
இதயமும் தொழுதிடும் விழுமியப் பயணத்தினில்/
நல்வாழ்வும் நமதாகும் நாடியதோ நலமாகும்/
நல்லவற்றை பெற்றிடவே நாளும் முயன்றிடலாம்/
இன்ப மனநிலையில் உழைத்திடும் ஆசையெழும்/
இவ்வுலக வாழ்க்கைக்குள்ளே வெற்றியின் வாடையே/
தற்பெருமை அழிந்திடுமே பேராற்றல் முகட்டினிலே/
தன்னார்வ நீட்சிக்குள்ளே சிகரமும் தொடுமே
ஜன்ஸி கபூர் - 01.08.2020