About Me

2020/09/01

ஆசான்

கற்கும் கல்வியும் கண்ணியம் காத்திட

சொற்கள் பழக்கும் சொல்வளம் அவரே


அறியாமை நீக்கி அறிவைப் பெற்றிட

நெறியாய் விளங்கி நெடுநாளும் வாழ்த்துவாரே

 

ஏணியாய் மாறி ஏற்றத்துடன் வாழ்ந்திட

பணி செய்திடும் பண்பாளரும் அவரே 


மழையாய் பொழிந்து மனங்களில் நிறைந்து

ஏழையும் வாழ்ந்திட எந்நாளும் உழைப்பாரே


இருள் வாழ்வும் இன்னல்கள் அகற்றிட

அருள் புரிந்திடும் ஆசானும் நிறைவாரே


ஜன்ஸி கபூர் - 01.08.2020



No comments:

Post a Comment

என் கவிதாயினியில் விழி பதித்த உங்களுக்கு நன்றி......
என் பதிவு தொடர்பான உங்கள் விமர்சனங்கள் இன்னும் என் எழுத்துக்களைச் செம்மைப்படுத்தும்!