மனிதனை மெல்லக் குடிக்கும் மது/
இனித்திடும் முதலில் அழித்திடும் உயிரை/
உணர்வதை உறிஞ்சுகையில் பணமதும் கரையுதே/
கணப்பொழுது மயக்கத்தில் நோய்களின் ஆதிக்கம்
முளையில் கிள்ளாவிடில் மூளையும் சிதையுமே/
முத்தான வாழ்வுக்குள் சொத்தாகச் சோகமே/
ஜன்ஸி கபூர்
மனிதனை மெல்லக் குடிக்கும் மது/
இனித்திடும் முதலில் அழித்திடும் உயிரை/
உணர்வதை உறிஞ்சுகையில் பணமதும் கரையுதே/
கணப்பொழுது மயக்கத்தில் நோய்களின் ஆதிக்கம்
முளையில் கிள்ளாவிடில் மூளையும் சிதையுமே/
முத்தான வாழ்வுக்குள் சொத்தாகச் சோகமே/
ஜன்ஸி கபூர்
தலைமுறை தந்த சொத்தாக/
பண்பாட்டு வாழ்க்கை எனக்குள்/
நல்லறத்தின் நற்பயனால்/
நற்குடியாக வாழ்கிறேன்./
ஜன்ஸி கபூர் - 06.09.2020
இயற்கை எழில் கொஞ்சுகின்ற மலைகளில்/
இசைக்கின்றதே அருவியும் தென்றலில் நசிந்து/
அசைகின்ற விழிகளாய் சிறகடிக்கும் பூச்சிகள்/
அலைகின்றதே மலர்களின் இதழ்களை நுகர்ந்தே/
சந்தனத்தை பிசைகின்ற வானோரத்தில் புன்னகை/
துள்ளி ஓடுகின்ற வெண்மேகங்கள் கண்டே/
அள்ளிச் சொருகுகின்றதே பரவசமும் எனக்குள்ளே/
வெண் தாவணி நழுவுகின்றதோ அருவியில்/
வெட்கத்தில் சிரிக்கிறதே நீரின் துடிப்புக்களும்/
வெடித்திடும் பூக்களின் நறுமணச் சுவையினில்/
உள்ளம் தித்திக்கின்றதே தரிசனங்களின் லயிப்பில்/
உவகையின் ஆளுகையில் கழிகின்றதே பொழுதும்/
ஜன்ஸி கபூர்
தென்னையை வைத்தால் பலன் கண்டு செல்வார்கள்
பனையை நட்டால் பார்த்துவிட்டுச் செல்வார்கள்
நிலத்தடி நீரைப் பதப்படுத்தி நமக்கே/
தலையால் தருமே நுங்காகி இனிக்க/
மடி பூக்கவே பல ஆண்டுகள்/
இடி தாங்கியே மழையும் பூக்கையில்/
கருணைத் துளிகளாய் கற்பக விருட்சமே/
காத்திடுவோம் பாரம்பரியத்தை சந்ததிகளுக்கும் கையளிப்போம்/
ஜன்ஸி கபூர்